அரசியல் மாற்றம்

அரசியல் மாற்றம்.

தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ஏற்க அழைக்கிறார்கள்.

பாரளுமன்றத்தைக் கைப் பற்றிய மோடியால் தான் நினைத்த சட்டத்தை அவரால் அதிரடியாக நிறைவேற்ற முடியாமல் ராஜ்யசபா முட்டுக்கட்டை போடுகிறது. ஏனெனில் ராஜ்யசபா உறுப்பினர்கள், மாநிலங்களை ஆளும் மற்றும் ஆண்ட  கட்சியினராக இருப்பதால்தான்.  மோடி மூண்று வருடங்களுக்குப் பொறுமையாக இருந்து மாநிலங்களைக் கைப்பற்றினால் மட்டுமே தான் நினைத்தமாதிரி ஆள முடியும். இல்லாவிட்டால் பதவி ஏற்றும் வீண்தான். இந்திய ஜனநாயக முறையில் சில சமயம் ஏற்படும் சர்வாதிகாரப் போக்கை தவிர்க்க,  இது போன்ற பல வழிமுறைகள் சட்டமாக்கப் பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய  234 சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது பாதிப்பேரின் ஆதரவு வேண்டும். அதில்  ஒரு முப்பது கண்ணியமானவர்களை மந்திரியாக்க வேண்டும்  என்றால், 150 நேர்மையான உறுப்பினர்களின் நிபந்தனை அற்ற ஆதரவு வேண்டும். மேலும்   40 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் வேண்டும். ஆட்சி கவிழ்ந்து விடாது என நிலைத்திருக்க  லோக்கல் பாடியிலும் உறுப்பினர்கள் வேண்டும்.  அது மட்டுமில்லாமல் தமிழகத்தின்   கீழ்க்கண்டுள்ள பல்வேறு பிரிவுகளிலும் (Local body) உள்ள ஒவ்வொரு வார்டிலும்  குறைந்தது முப்பது சதவீத மக்களின் ஆதரவு  இருந்தால் தான்  எங்கும் நேர்மை எதிலும் நேர்மை  என ஆள முடியும்.

முனிசிபல் கார்ப்ரேசன் ................      10  
 முனிசிபல்                      ...................            125 
பஞ்சாயத்து யூனியன்    ....................     385 
நகரப் பஞ்சாயத்துகள்   ...................       561 
கிராமப் பஞ்சாயத்துகள்  ......... ........12,618

மொத்தம்  உள்ள 13699 இடங்களில்  தலைமைப் பதவி ஏற்க உத்தமர்கள் தேவை. இன்னும் வாரியத்தலமைகள் இருக்கின்றன. இவர்களைத் தேர்ந்தெடுக்கப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள்  என சுமார் இரண்டு இலட்சம்  பேர் நல்லவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஊழல் செய்யும் அதிகாரியை, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட   உடனடியாகக்  பதவியிலிருந்தும், கட்சியிலிருந்து தூக்கி எறிய முடியும். இப்பொழுது தெரிகிறதா?. ஒவ்வொரு கட்சியின் மதிப்பும், உழைப்பும், தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ளப் படும் பாடும். நாலாயிரம் கோடி எல்லாம் இவர்கள் பங்கிட்டால் ஆளுக்கு வெறும்  20,000 ரூபாய் கூடக் கிடைக்காது. யோசித்துப் பாருங்கள் உங்கள் தொகுதிக் கவுன்சிலர் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என்று. ஆனால்  உண்மையில்   சராசரியாக ஆளுக்கு ரூ 2,00,000க்கு மேல் சம்பாதிக்கிறார்கள் என்றால்  40,000 கோடியை சாப்பிடுகிறார்கள்  என்று தானே அர்த்தம்.

இப்பொழுது ஏன் சினிமாத்துறையினர்  அரசியலுக்கு வரமுடிகிறது என்பது விளங்கியிருக்கும்.. சினிமாதான் அத்தனை  வார்டுகளையும் மக்களையும், முன்பு நேரடியாகவும், தற்காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் மூலமாகவும்  சென்றடைகிறது. அதனால்தான் தொலைக்காட்சிப் பெட்டியை இலவசமாக வழங்கி விட்டு, தொலைக்காட்சி சேனல் ஆரம்பித்து  அதன் மூலம் மக்களைத் தன்வசமாக்க முயன்றனர். அடுத்தக் கட்டமாக  இண்டர் நெட் வந்ததால் அதுவே லேப்டாப்பாக மாறியது. 

திடீர் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு  கண்ணியமான,  மக்களுக்காகப் பாடுபடக் கூடிய, திரைத்துறை பிரபலத்தின் பின்னனி தேவை. அல்லது  பெரிய ஜாதிப் பின்னனி தேவை. எம்ஜிஆரின் வழிமுறை சினிமாதான். அவரால்தான் திமுகக்கு அதிகமாகத் தொண்டர்கள்  வந்தனர்.  அவருடைய கொடைத் தன்மையும், நேர்மையாளன் என்ற திரைத் தோற்றமும்தான், அவருக்கு பெண் ரசிகர்களையும் ஒரளவுக்கு ஆண் ரசிகர்களையும் சேர்த்தது. திமுகவின் தமிழும் குறிப்பிடும் அளவிற்கு தொண்டர்களை ஈர்த்தது. பின்னர் அதிலிருந்து அதிமுகக்குச் சேர்ந்தனர், அதனால் முழு ஆதரவுடன் எம்ஜிஆர் வந்தார்.  ஆனால் அவராலும் தனது மந்திரிகளை ஒரு அளவுக்கு மேல்  கட்டுப்படுத்த முடியவில்லை.

 கேஜ்ரிவால் தனி ஒருவனாக வந்தார் என்றால் அவர் அண்ணாஹசாரே என்ற "பிரபலத்தின்" மீது சவாரி செய்து அவரை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தார். ஆனால் தற்பொழுது நல்ல மந்திரிகள் இல்லாததால் தடுமாறுகிறார். மேலும் டெல்லி ஒரு சிறிய, படித்தவர்கள் நிறைந்த மாநிலம் என்பதால் அவர் பயணம் தொடர்கிறது.. ஜெயலலிதா , கருணாநிதி ஆகியோர் முறையே எம்ஜிஆர், அண்ணா என்ற பிரபலங்கள் மீது சவாரி செய்து வந்தவர்கள்.

விஜய்காந்த் தனது திரைப் பிரபலத்தால் முன் வந்தார். அவரிடம் ஆரம்பத்தில் முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை  ஆனாலும் தனக்களிக்கப் பட்ட கணிசமான   வாய்ப்பை அவர் பயன் படுத்திக் கொள்ளவில்லை. அவரிடம் ஒரு சரியான கட்டமைப்பு  இல்லை. அவருக்கு அரசியல் நிர்வாகத்திறமை(அடிதடி) இருந்தும், நேர்மையாளர்கள் பற்றாக் குறை. தமிழ்நாட்டின் சாபக் கேடே நேர்மையாளர் பற்றாக் குறைதான்.

ராமதாஸ், கிருஷ்ணசாமி, திருமாவளவன், ஆகியோர் ஜாதீயப் பின்னனி கொண்டவர்கள்.   

இதற்கிடையில் சகாயத்தை அவரின் விருப்பத்திற்கு மாறாக அரசியலில் இழுப்பது அவருக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் அல்லது உமா சங்கரைப் போல் பைத்தியமாக மாற்றி விடுவார்கள், என்பதை இந்த மக்கள் உணர மாட்டார்கள். அவர் மூலம் தொகுதிக்கு ஐயாயிரம் ஒட்டு கிடைக்கும் என்றால் அவரை எப்படியும் அரசியல் கட்சிகள் இழுக்கப் பார்ப்பார்கள். அதுவே ஆளும் கட்சியாக இருந்தால் அவரை  பதவி விலக நிர்பந்தம் கொடுத்து சீட்டும் கொடுத்து நிற்க வைத்து அந்த ஓட்டு வங்கியை இந்தத் தேர்தலுக்குப் பயன் படுத்திவிட்டு அவரது பெயருக்குக் களங்கம் கற்பித்து  ஐந்து வருடத்தில் அந்த ஓட்டு வங்கியை செல்லாததாக மாற்றி விடுவார்கள். அல்லது அவரைக் களத்திலிருந்து  சுத்தமாக அப்புறப்படுத்தப் பார்ப்பார்கள். ஆகவே வாய்ப்பு குறைவு.

மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மாற்று வழிகளைப் பார்ப் போம்.

தமிழக மக்கள் அடிமைப் புத்தியுடனும் ஒரு வகை ஈகோவுடன் இருக்கிறார்கள் . தான் தேர்ந்தெடுத்து விட்டவன் ஒரு போதும் தப்பு செய்யமாட்டான் என்றும், அப்படியே தவறு செய்தாலும், அவன் செய்து விட்டான் என ஒப்புக் கொண்டால், தன்னுடைய தேர்வு தப்பென்று கருதப்படும் என்ற ஈகோவுடனே சாகும் வரைக்கும் அவன் நல்லவன், வல்லவன் எனக் கூறிக்கொண்டே இருந்து விட்டு, தனது வாரிசுகளையும் பலி கொடுக்கிறான். அரசியல் வாதிக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?.  அவன் கோடிக்கணக்கில் ஊழல் செய்தாலும், தனது இனத்தையே அழித்தாலும் அவனையே தலைவன் என்று ஏற்றுக் கொள்ளும் செம்மறியாடுகள். முன்னால் செல்லும் ஆடு ரயிலில் விழுந்து அடிபட்டாலும் தானும் விழுந்து மடியும் மனநிலை மாறாத வரை மாற்றம் இல்லை.

கூட்டணி என்பது கொள்ளைக்கு நாமே இடம் கொடுக்கிறோம் என அர்த்தம். நேர்மை இங்க்கே பிளாக் மெயில் செய்யப் படும். இப்படி பட்ட சூழ்நிலையில் எங்கே இவன் விரக்தியில் ஓட்டுப் போடாமல்,  யோசித்து யோசித்து வன்முறையில் இறங்கி விடுவானோ என்று பயந்து O49  என்றொரு, விழிப்புணர்ச்சியை மழுங்க வைக்கும்   உபாயம் வைத்துள்ளனர்.  அதில் குத்தியவுடன் தேர்தலை  வெற்றியுடன் சந்தித்த திருப்தி ஏற்பட்டு விடும் இந்த அடி முட்டாள்களுக்கு. இனி   வாய்ப்புள்ள மாற்றங்களைப் பார்ப்போம்.

1)மாநிலம் முழுமைக்குமான கட்டமைப்புடன் கூடிய ஒரு அமைப்பினால் தான் திடீர் அரசியல் மாற்றம் ஏற்படுத்த முடியும். ஆனால் அது நேர்மையானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. 

2)சகாயம் கூறியது போல் அரசு அதிகாரிகளும், மக்களும்  நேர்மையானவர்களாக மாறவேண்டும். 

3)அரசியலில் நேர்மையை கொண்டுவர ஒரு எளிய வழி, மக்கள் முன் வந்து தவற்றை தைரியமாகத் தட்டிக் கேட்க வேண்டும். ஆகவில்லை என்றால் தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கையிலும் துணிந்து இறங்க வேண்டும். 

4)படித்தத்  திறமையான, எதையும் தியாகம் செய்யக் கூடிய ஆயிரம் பேர்  தியாக உணர்வுடனும் உறுதியுடனும் இணைந்து இயக்கமாக செயல் பட வேண்டும். அநியாயங்களை தட்டிக் கேட்க ட்ராபிக் ராமசாமி போல் முன் வந்தால், ரமணா ஸ்டைல்தான்.

5) தேர்ந்தெடுத்தவர்கள் சரியில்லை என்றால்  இனி அவர்களை ஒரு போதும் அரசியலுக்கு வர விடாதீர்கள். வேரடி மண்ணோடு (கவுன்சிலர்  பதவி வரை) ஒழித்து விடுங்கள். இப்பொழுதுள்ள காங்கிரஸ், இரண்டு திமுக ஆகியவை பிடிக்கவில்லை என்றால் அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி விட்டு, விஜய்காந்தைத் தேர்ந்தெடுங்கள், அவர் சரியில்லை என்றால் அண்புமணியைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் சரியில்லை என்றால் மீண்டும் பழையவர்களைத் தேடாதீர்கள்.  ஜனதாக் கட்சி இருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. சரியாக ஆண்டால்  மீண்டும் ஆட்சியைக் கொடுங்கள் இல்லாவிட்டால் நிரந்தரமாக வீட்டுக்கு விரட்டி விடுங்கள். இன்னொரு வாய்ப்பு தரலாம்  என கனவிலும்  எண்ணி விடாதீர்கள். தமிழகத்தை ஆள்வதற்கு நேர்மை தேவை என்பதை வாக்குகளால் உணர்த்துங்கள்.

ஒரு அமெரிக்கனைப் போல் இருங்கள்.சாதாரண குடிமக்கள் நாம் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால்  நம்மை ஆள்பவன் ஒழுக்கமுள்ளவனாக இருக்க வேண்டும். ஒரு ஜனாதிபதியை உள்ளாடை விஷயத்தில் பொது மன்னிப்பு கேட்க வைத்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.


மேலும் படிக்க...!

கிஸ்ஸும் பிஸ்ஸும்


கிஸ்ஸும் பிஸ்ஸும்

ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ்ஸடிக்கிறததையும் கிஸ்ஸடிக்கிறதையும் ஒப்பிட்டுப் பேசுகிறவர்களுக்கு அறிவே இல்லையா? அல்லது எதுகைக்கும் மோனைக்கும் ஆசைப் பட்டு ஏடாகூடமா பேசித் தொலையிறானுகளா? எச்சிலும் மூத்திரமும் ஒன்றாகுமா?


1) பிஸ்ஸடிப்பது பற்றி  பிறந்ததிலிருந்து  போதிக்கப்படுவது,  அதை ஒருவனுக்கு போராட்டம் செய்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை  என்பதை இந்த மரமண்டைகளுக்கு எப்படி புரிய வைப்பது . ஒருவன் அவஸ்தையினால், தன்மானத்தை இழந்து, வெட்கங் கெட்டுதான் பொது இடத்தில் பிஸ்ஸடிக்கிறான்.

2) பிஸ்ஸடிப்பதற்கு  சம்பந்த பட்ட ஆள் மட்டும்  சட்டத்தை மீறினால் போதும், ஆனால் பொது இடத்தில் அனுமதி இல்லாமல் கிஸ்ஸடிக்க இரண்டு  மாறுபட்ட பாலின வெட்கங் கெட்ட நாதாரிகள் தேவை.

3) பொது இடத்தில் முத்தம் கொடுக்கக் கூடாது என்பதை சிறு வயதிலிருந்து போதிக்கிறோம். அதிலும் சிறு குழந்தைகளை கண்டவர்கள் கிஸ்ஸடிக்க அனுமதிக்காதீர்கள் என்றுதான் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. அதிலும் பெண் குழந்தைகளுக்கு, தங்கள் மீது மற்றவர்கள் கை படக் கூடாத இடங்கள் பற்றி சொல்லிக் கொடுங்கடான்னா கிஸ்ஸடிக்கலாம்ங்கிறானுக இவர்களை எதைக் கொண்டு அடிப்பது.

4) கிஸ்ஸடிப்பதை எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும் தள்ளிப் போடலாம். பிஸ்ஸடிப்பதை தள்ளிப் போட முடியாது. ரோட்ல பிஸ்ஸடிக்க கூடாதுன்னு சொல்வதற்கு முன் சரியான வசதிகள் செய்துதராமல் சொல்ல முடியாது. போலீஸ் வந்து பிடிச்சிட்டு போயிருவாங்கன்னு சொன்னா, வீணாகப் போவதை போலீஸ் பிடிச்சிட்டு போனாப் போகட்டும் என்பான். மீறீச் சொன்னால்  எனக்கு அவசரம், நீ வேண்டுமென்றால் கையில் பிடித்துக் கொள்கிறாயா என்று நியாமான கேள்வி கேட்பானுக

5) பிஸ்ஸடிப்பதற்கு அவசியம் கட்டிடம் கட்டி விட வேண்டும். கட்டிடம் இல்லாத குறையினால் மன்னித்து விடலாம் ஆனால் கிஸ்ஸடிப்பதற்கு கட்டிடமா? கேட்டாலும் கேட்பானுக ..மாமாப்   பயலுக..

6) ரோட்ல கிஸ் அடிச்சா, முதல்ல வேடிக்கை பார்ப்பானுங்க, அப்புறம் உதவிக்கு வருவானுங்க, அப்புறம் வலிமையுள்ளவனுக்குதான் கிஸ்ஸடிக்க உரிமைன்னுவானுக. சட்டத்தை மீறுவானுக  பரவாயில்லையா? வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள போட்ட கதைதான். ரோட்டில் தாராளமா கிஸ்ஸடியுங்க பாயைப் போட்டு சல்லாபியுங்க அது உங்கள் உரிமை. ஆனால் வலிமையுள்ளவனுகளும் பொறுக்கிகளும் ஒரு கோஷ்டியா ரோட்டில் அலையறானுக என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் .ஆனால் அவனுக சத்தியமா பிஸ்ஸடிப்பதில் பங்குக்கு வரமாட்டானுக.

7) பொது இடத்தில் ஒரு பெண் கிஸ்ஸடிக்கிறதுக்கு உடன்படுகிறாள் என்றால் அந்த வெட்கம் கெட்டவளை, எந்த ஆண்மகனாலும் எளிதில் அடைய முடியும் என்பதை அவள் நிரூபிப்பதாகத்தான் எல்லா சமூகமும் காலம் காலமாக கணித்து வைத்திருக்கிறது. இதில் ஆணுக்கு எந்த கேவலமும் கிடையாது, பெண்ணுக்குத்தான் பாதிப்பாக இருக்கலாம் அல்லது வருமானத்திற்கு வழியாக இருக்கலாம்.

8) சில பெண்கள் இதை ஆதரிக்கலாம், ஆதரிப்பவர்களை பெண்புத்தி பின் புத்தி என்று ஒதுக்கி வைத்து விடலாம். ஏனெனில் பெண்களுக்கான சுதந்திரம் எதுவரை போகும் என்பதை அவர்கள் கேட்கும் ஆடையின் உரிமையை "Femen" என்று அடித்து கூகுள் இமேஜில் தேடிப்பாருங்கள். பெரும்பாலும் பெண்களுக்கான சுதந்திரம் என்பது, ஆணின் கடுமையான பாதுகாப்பின் பின்னணி இருந்தால் தான் கிடைக்கும். தெருவில் போகும் போதே தன் மனைவியின் மீது மற்றவன் கண் பார்வை கூடப் படக்கூடாது என்ற பதைபதைப்போடு செல்பவன்தான் பெண் மீது அக்கறை கொண்ட இன்றையச் சமூகத்தை சேர்ந்த ஆண். அடுத்தவன் முறைத்துப் பார்ப்பதை குற்றம் சொல்லி மேல்நாட்டை உதாரணத்துக்கு இழுக்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் இப்பத்தானே பொது இடத்தில் கிஸ்ஸடிக்க கேட்கிறீர்கள். அவனுடைய கலாச்சாரத்தை அடைவதற்கு இன்னும் 30 வருடங்களாவது ஆகும்.  ஏனெனில் அவன் செக்ஸில் 12 வயதிலயே முதிர்ச்சி அடைகிறான். 13 வயதில் பெண்பிள்ளைகள் கர்ப்பமானாலும் கண்டு கொள்ள மாட்டான். கற்புக்காக பூட்டு செய்து ஓய்ந்து, கை விட்டவன். ஆகவே அவனுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்க அதுக்கு லாயக்கு படமாட்டீங்க.

9) இதை, ரோட்டில் முத்தமிடுவதை ஆண்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் ஒன்று அவர்களிடம் இந்த சமூகத்தில் அக்கறை இல்லை என்று பொருள்.அல்லது பெண்களைப் வெறும் பொருளாக மதிக்கும் சோஷலிசக் கொள்கையாளராக இருக்க வேண்டும். அதிலும் வயதான ஆண்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கு பெண்கள் மீது மரியாதை இருக்காது, பெண் குழந்தைகள் இருக்காது. மேலும் அவர்கள் தங்களது இளமை இமேஜை நிலை நிறுத்த ஆதரிக்கிறமாதிரி எழுதலாம். அல்லது சிலரின் வக்கிர புத்திக்கு தீனியாக  ஆதரிக்கலாம்.  அந்தமாதிரி வக்கிரம் பிடித்தவர்கள் சிலர் ஒழுக்க சீலர்கள் மாதிரி பிஸ்ஸடிப்பதை கேடயமாக கொண்டு இதை மறைமுகமாக ஆதரிப்பார்கள். இவர்கள்தான் பிஸ்ஸடிப்பதையும் கிஸ்ஸடிப்பதையும் முடிச்சுப் போட்டு தங்களுக்கு ஏற்படும் அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள்.

10) ஒருவர் கிஸ்ஸடிப்பதற்கு ஏற்கனவே தெரிந்தவராகவும், மனதுக்கும், பார்வைக்கும், வயதுக்கும், பிடித்தவராகவும், ஆர்வமும் நேரமும் ஒத்துப் போனால் தான் கிஸ்ஸடிக்க முடியும். இதில் 25 வயதுக்கு மேலுள்ள பெண்கள் திருமணமானவர்கள் அவர்களை கணவன்மார்கள் பொது இடத்தில் முத்தம் கொடுக்க அனுமதிக்க மாட்டாரகள். அந்தவகையில் பார்த்தால் முத்தமிடத் துடிப்பவர்கள் 13 வயதிலிருந்து 25 வயது உள்ளவர்கள்தான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெண்ணினத்தில் 5 சதவீதம் பேரும் ஆண்களில் 25 சதவீதம்பேரும் தான் தயராக உள்ளனர். ஆகவே நிகழ்தகவு விதியின் படி போட்டு பார்த்தால் ரோட்டில் செல்பவர்களில் ஐம்பதாயிரத்தில் இருவர்  கூட தேற மாட்டார்கள்  என்பதுதான்  கணக்கு. அவர்களால்  சமூகத்திற்காக இதை தள்ளிப் போட்டு மறைவான இடத்திற்கு போக முடியும். ஆனால் இதை ஆதரிக்கும் போது பாலியல் தொழில் வளர வாய்ப்புள்ளது. வாயின் மூலம் பரவக் கூடிய எய்ட்ஸ், எபோலா போன்ற நோய்களுக்கு கொண்டாட்டம்தான். அவன் பொது இடத்தில் தண்ணி அடிக்கிறான்னு இங்க தண்ணி அடிக்க ஆரம்பிச்சானுக நிறுத்தத் தெரியல, முடியல. இனி கிஸ்ஸடிக்க ஆரம்பிச்சானுகன்னா  எங்க போய் முட்டுவானுகளோ?.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். போங்கடா போய் பெண் குழந்தைகளுக்கு மற்றவர்கள் கை படக்கூடாத இடங்களைப் பற்றியும், பட்டால் எவனாயிருந்தாலும் அறைவதற்கும் சொல்லிக் கொடுங்கள். அதை விடுத்து கண்டவனுக வாயில வாயை வைக்க சொல்லிக் கொடுக்காதீர்கள் நாளைக்கு வீடு தேடி வருவானுக. பரவாயில்லையா?







மேலும் படிக்க...!
முந்தைய பாகம்
கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது?

அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய அரியணைகள், கட்டில் மெத்தை, மற்றும் சிறப்புப் பொருட்கள் கொண்டு அலங்கரிப் படுகிறது. விருந்தினரை உபசரிக்க விருந்து தடபுடலாக தயாரிக்கப் படுகிறது. சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்கப் படுகின்ற அந்த நபர் பத்து மாதம் அதே அரண்மனையில் தங்க வேண்டும் என்பது அவசியமானதால் அதற்கும் வசதியாக ஏற்பாடுகள் செய்யப் படுகிறது. இந்த ஏற்பாடுகளுக்குதான் அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கிறது. 

சுயம்வரத்திற்காக இளவரசியை அழைத்து வந்து சரியான ராஜாவை தேர்ந்தெடுக்க, அரியணையில் அமர்த்தி காத்திருக்க வைத்திருக்கிறார்கள். அரசர்கள் (விந்தணுக்கள்) நான்கு நாள் வரை காத்திருக்க முடியுமாம். ஏற்கனவே அங்கு வந்து காத்திருக்கும் அரசர்களில். சரியான நபர் கிடைக்காத பட்சத்தில் வரப்போகும் சிறந்த அரசனுக்காக இளவரசி ஓரிரு நாள் காத்திருக்கலாம், அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் உயிரை விட்டுவிடுவாள். அதனால் சுயம்வர நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது. தயாரித்து வைத்த, கெட்டுப் போன உணவு வகைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை அரண்மனை யிலிருந்து வெளியேற்றி அரண்மனையை மீண்டும் ஒரு சுயம்வர தேதிக்காக மேற்ப் பூச்சு பூசி, கழுவி, தயாரிப்பது போன்றதுதான் மாதவிடாய்.

கர்ப்ப பையில் கருமுட்டை தங்குவதற்காக ஏற்படுத்தப் பட்ட ரத்தம், முட்டை மற்றும் சளி போன்றவற்றை கழுவி சுத்தம் செய்ய 12 நாட்களாகி விடுகிறது. அடுத்த இரண்டு நாட்களில், கர்ப்பபை சுவற்றில் சளி போன்ற மேற்ப்பூச்சு கொடுத்து இரத்த நாளங்களை சரி செய்து வைக்கிறது. அதன் பின்னர், கரு முட்டையை அழைத்து, கர்ப்ப பையில் காத்திருக்க வைக்கிறது. முட்டை அங்கு  சுமார் ஒரிரு நாட்கள் வரைதான் உயிர்ப்புடன் இருக்கும். அதாவது மாதவிடாய் தொடங்கிய ஏழாவது நாளில் இருந்து பதினைந்தாவது நாள் வரைதான் கர்ப்பத்துக்கு உகந்த நாட்கள். அதற்குள் ஒரு குறிப்பிட்ட ஓரிரு நாட்களில் முட்டையுடன் கலக்கும் ஏதோ ஒரு விந்தணுவே கர்ப்பத்தை ஏற்படுத்தும்.

மாதவிடாய் சுழற்சியைப் பொறுத்து, முட்டை கருவுறும் நாள் மாறுபடுவதால் சற்றேக் குறைய அதாவது மாதவிடாய் நாளிலிருந்து ஏழாவது நாளிலிருந்து பதினேழாவது நாள் வரைக்கும் உள்ள “அந்த பத்து நாட்கள்” தான் கலவிக்கும், குழந்தை பெறுவதற்கும் முக்கியமான நாட்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ளது 28 நாட்கள் சுழற்சி உடையவர் களுக்கானது. ஆண்கள் ஒருநாள் விட்டு, மறுநாள் கலவி கொண்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆதலால் 10,12,14,16 ஆகிய நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள்.


                                      


மேலும் இப்பொழுதெல்லாம் பத்து நாட்கள் “முயற்சிக்க”  வேண்டியதில்லை. ஒரு ஐந்து நாட்களாவது முயற்சிக்க வேண்டும் சில பெண்கள் தெர்மா மீட்டர் மூலம் தனக்கு எந்த நாளில் முட்டை தயாராகி உள்ளது என்பதை அறிந்து கொள்வார்கள். முட்டையின் வளர்ச்சி முழுமையடைந்து கருப்பைக்கு வரும் பொழுது பெண்களின் உடல் வெப்ப நிலை சற்று கூடியிருக்கும் அந்த வெப்ப நிலையை நுட்பமாக அறிந்து அன்று கலவி செய்தால் பலன் கிடைக்கும். முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் பெண்களின் உடல் வெப்பம் 0.4°F லிருந்து 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர்  ஒன்றினால் , உங்கள் உடல் வெப்பத்தை அட்டவணைப் படுத்தி,  "அந்த நாளை" கண்டு பிடிக்கலாம். 

முட்டை முழுமை அடையும் போது சுரக்கும் ஒரு வித ஹார்மோனை (ப்ரொஜெஸ்ட்ரோன்) அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் தயார் செய்யப்பட்ட மருத்துவ கிட் கொண்டு செய்யப்படும் பரிசோதனையின் மூலம் அந்த நாளை கண்டுபிடித்து கலவியில் ஈடுபட்டால் பலன் ஏற்படும். 

மாதவிடாய் என்பது ஒரு ஒழுங்கான இடைவெளியில், இருக்க வேண்டும். அது முறையே 27,28,29,30, நாட்கள் என்ற முறையில் தனி நபரை பொறுத்து மாறுபட்டாலும் அவரவருக்கு குறிப்பிட்ட சுழற்சி. மாறாமல் இருக்க வேண்டும். 

கருமுட்டையின் வளர்ச்சிக்கும் சந்திரனின் (நிலவின் வளர்ச்சி) பிறைக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்கள் என்பது (99 சதவீதம்) பெண்களில் பெரும்பாண்மையினருக்கு ஒத்து வருவதால் அதை வைத்தே கணக்கிடப் படுகிறது. கரு முட்டைக்கும் சந்திரனுக்கும் உள்ள ஒற்றுமையை இவ்வாறு விளக்கலாம். அமாவாசை நாளிலிருந்து சந்திரனைப் போல் கருமுட்டை படிப்படியாக வளர்ந்து பௌர்னமியன்று முழுமை அடைந்து பின்னர் படிப்படியாக தேய்ந்து அமாவசையன்று முட்டை சந்திரனைப் போல் முழுமையாக மறைந்து விடுவதாகக் கொள்ளலாம்.

முன்பெல்லாம் திருமணத்திற்கு, மணப் பெண்ணின் மாதவிடாய் தேதியைக் கேட்டுதான் நாள் குறிப்பார்கள். அது போல் சாந்தி முகூர்த்தத்திற்கும் ஏற்ற நாள் குறிப்பார்கள். ஆனால் இப்பொழுது அதெல்லாம் மூட நம்பிக்கையாக போய்விட்டது. மாதவிடாய் தேதியை ஒருவாரம், பத்து நாட்கள் என்றாலும் தள்ளி வைக்க மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். அங்கு ஆரம்பிக்கும் ஒழுங்கீனமும், பின்னாளில் பாதிப்பை ஏற்படுத்தும் அன்பதை அறியாமல் செய்கிறார்கள்.  

இந்த மாதவிடாய் சுழற்சியின் ஒழுங்கு முறையில் தான் 90 சதவீதம் குழந்தைப் பேறு உள்ளது. ஃபல்லோபியன் ட்யூப்பில் அடைப்பு இல்லாமல், கர்ப்பப் பையில் குறையில்லாமல், முறையான கலவி இருக்கும் பட்சத்தில் குழந்தை பெறுவதில் ஒரு சிக்கலும் இல்லை. முதன் முதலில் உருவாகும் குழந்தைகளை கருவிலே கலைத்தால் அதுவே பின்னர் கருவுறுவதில் சிக்கலை உருவாக்கலாம்.

பெண்மையின் மூலம்தான் இனவிருத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. முதலில் இனவிருத்திக்கான ஏற்பாடு பெண் குழந்தையாக இருக்கும் பொழுது 1:2,000,000 என்று ஆரம்பித்து, பருவம் எய்தும் போது 1:5,00,000 மாறி, பின்னர் மாதவிடாய் காலத்தில் 1:500 என்றாகி முடிவில் இயற்கையாக 1:60 என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆனாலும் மனிதன் செயற்கையாக அதை நாம் இருவர் நமக்கிருவர் (1:1) என்ற நிலைக்கு தக்கவைத்துக் கொண்டான்.

முப்பது வயதில் திருமணமாகிவிட்டால்  நான்கு ஆண்டுகளில் 91% பேருக்கு குழந்தை பிறந்து விடுகிறது..

முப்பத்தைந்து  வயதில் திருமணமானால் நான்கு ஆண்டுகளில் 84% தான்  பேருக்கு குழந்தை பிறக்கிறது.

நாற்பது வயதில் திருமணமானால் நான்கு ஆண்டுகளில் 64% பேருக்கு  தான் குழந்தை பிறக்கிறது..

ஆகவே பெண்கள் தங்களது முதல் குழந்தையை 32 வயதிற்குள் பெற்று விட வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நாட்களை கடத்தினால் நாட்கள் மட்டுமல்ல வருடங்கள் கூட நொடியில் கரைந்து விடும்.

திருமணமாகி இரண்டு வருடம் வரை குழந்தைக்காக காத்திருக்கலாம். அதற்கு மேல் அதை வாழ்க்கையின் பிரதானமான விஷயமாக எடுத்துக் கொண்டு முயற்சிக்க வேண்டும். ஆண்களின் பிரயத்தனம் என்ன மாதிரி என்பதைப் பார்ப்போம்.



மேலும் படிக்க...!
சமஸ்கிருதம்   எப்படி உருவானது ?  (பாகம் 4)

தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாருக்கும் தெரியாது. அதன் தோற்றத்தைப்  பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். கல்ப ஆரம்பத்தில் பிரமதேவர், தேவர்களுக்குச் சொன்ன பிரமநூலை, இந்திரன் நூறாயிரம் கிரந்தங்களாகச் சுருக்கிக் கூறினான் என்றும் அதனை மாயன் என்னும் மகரிஷி  இன்னும் சுருக்கமாக மக்களுக்கு அருளினான் எனவும் கூறுவர். அதனால் இந்திரன்  மூலமாக பிரம்மன்  அருளியதை, மாயன் தமிழர்களுக்கு அருளியதாகவும் அதுதான் "ஐயிந்திறம்" எனப்படும் நூல் எனக் கூறுகிறார்கள்.

வேறொரு வரலாறும் உள்ளது. இந்நூலானது தொல்காப்பியரால் முதல் தமிழ்ச் சங்கத்தில் பாண்டிய வேந்தன் முன் அரங்கேற்றப் பட்டதால் வேந்தன் நூல் எனவும், வேந்தனை  இந்திரன் என்று கூறப்படுவது மரபு என்பதால் இந்திரன் நூல் என்பர். இந்திரனின் யானை ஐராவதம் என அழைக்கப் படுவது போல் இந்திரனின் நூல் "ஐயிந்திறம்" என்றழைக்கப் படுகிறது.

ஐயிந்திறத்தைப் பற்றி எந்த ஆராய்ச்சியாளராவது இதுவரைக்கும் சரியான விளக்கம் அளித்துள்ளனரா என்பது சந்தேகம்தான். அது வாஸ்து சாஸ்திரம் பற்றியது என்ற வகையில் சிலர் சம்பந்தம் இல்லாமல் விளக்கமளித் திருக்கிறார்கள். இன்னும் சிலரோ பொத்தாம் பொதுவாக அது தர்க்கம் மற்றும் பேச்சுக் கலை பற்றியது என்கிறார்கள். ஐந்திறம் குறித்தான செய்திகளும் அதன் தொல்காப்பியத் தொடர்புகளும் இன்றளவும் வாத எதிர் வாதங்களுக்குத் தான் இடமளித்துள்ளன.

பிற்காலத்தில் தோன்றிய வடமொழியில் உள்ள சில குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் ஐந்திறம் ஒரு வடமொழி இலக்கண நூல் என்று ஐயுருகின்றனர். ஆனால் தமிழில் தொல்காப்பியப் பாயிரம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் , திருக்குறள் போன்றவற்றில் உள்ள குறிப்புகள் மற்றும் வடமொழி நூற்களின் குறிப்புகள் மூலம் உறுதியாக இது தமிழில் இயற்றப்பட்டதற்கான தெளிவுகள் பெறலாம் அதில் தமிழ், மொழி என்று அடிக்கடி வருவதாலுமிது தமிழுக்கானதுதான். மேலும் ஐந்திறம் பற்றிய குறிப்பை வால்மீகியும், கம்பரும் மட்டுமில்லாமல் வட மொழிப் புலவர்களும் பயன் படுத்தியுள்ளனர்.

நான் ஏற்கனவே கூறியது போல் உலகில் எல்லோரும் பயன் படுத்தும் வகையில் பொதுத்தளமாக சமஸ்கிருதத்தையும், அந்த சமஸ்கிருதத்தை  உருவாக்கி அதில் தமிழ் மூலமாக  புலமை பெறுவதற்கான  வழிமுறையாக ஐயிந்திறத்தையும் தமிழன் உருவாக்கி இருக்க வேண்டும். ஏனெனில் ஐயிந்திறம் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டாலும் அதன் நுட்பமும் பயன்பாடும் இந்தியா முழுவதும் உள்ள பேரறிஞர்களால் அறியப்பட்டு உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு நூல், மற்ற மொழியினாராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்றால் அது ஒரு கருவியாக அதாவது ஒரு டூலாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் எல்லா மொழியினரும் அதைப் பயன் ப்டுத்தி உள்ளனர். சமஸ்கிருதம் இந்தியா முழுவதும் எளிதாக வழக்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டதும் அதானால்தான். இந்நூல் கொண்டு  தொகுத்து வைக்கப் பட்ட நூல்களுள் பன்னாட்டுப் பேரறிஞர்களின் கருத்துக்களும் கலை நுணுக்கங்களும் கொண்ட ,காலந்தொறும் புதுமைப் படுத்தப் பட்ட தொகுதிகள் கொண்ட  களஞ்சியமாக சமஸ்கிருதம் கருதப் பட்டது,

அக்காலத்தின் விக்கிபீடியாவாக போற்றப்பட்டிருக்க வேண்டும்.. அதற்கான மொழியாக சமஸ்கிருதத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அந்த மொழிக்கான அல்காரிதம் தான் ஐயிந்திறத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும்.  பன்மொழியாளர்க்கும் பயன்படல் வேண்டி தமிழிலுள்ள எல்லா படைப்புகளும் இதிகாசங்கள் உடபட சமஸ்கிருதத்திற்கு  மாற்றப்பட்டன. அவ்வாறு மாற்றப் படுவதற்கு தமிழகத்தில் அமைந்த பேரறிஞர் கூட்டத்தைச் ‘சங்கம்’ என்றும், வேந்தனூலை ‘இந்திரனூல்’ என்னும் பொருளில் ஐந்திறம் என்றும்  வழங்கலாயினர்.

இன்றைய வடமொழியறிஞர்களும் ஆய்வாளர்களும் பாணினி முதலானோருக்கு முன் ஐந்திரமென்னும் வியாகரண நூல்  இருந்ததாகவும் அது பற்றிச் சிற்சில குறிப்புக்கள் கிடைப்பனவாகவும் கூறிப் பாணினிக்குப் பின் அந்நூல் வழக்கொழிந்திருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். இவ் ஐந்திரநூலைப் பாணினி எண்ணாயிரங் கிரந்தங்களில் அடக்கினான் என ஹொய்-லி (Hoei-Li) என்னும் சீன அறிஞர் கூறியுள்ளார்.

இனி தைத்திரீய ஆரண்யகத்தில் காணப்படும் ஒலிநூற் குறிப்புக்கள் சிலவும், சாந்தோக்கிய உபநிடதத்தில் வரும் குறியீடுகள் சிலவும், ஐதரேயப் பிராமணத்தில் உள்ளன சிலவும், ஐந்திற வழக்குகளே எனவும், வேதகற்ப சூத்திரங்களிலும் இவ்வழக்குகள் வந்துள்ளன எனவும், தைத்திரீயப் பிராதிசாக்கியம், காத்தியாயனப் பிராதி சாக்கியம், பாணினீயம், பதஞ்சலி மாபாடியம் என்பன ஐந்திர இலக்கண மரபினை எடுத்தாண்ட நூல்கள் எனவும், இக்குறிப்புக்களால் ஐந்திரமென்னும் பெயருடையதோர் இலக்கணத் தொகுதி இருந்தமை உறுதியாதல் புலனாகும் எனவும் ‘டாக்டர் பர்னல்’ என்னும் பேரறிஞர் ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

மொழி ஆராய்ச்சியாளர் ஏ சி பர்னல் ஐயிந்திறம் பற்றி குறிப்பிடும் எடுத்துக்காட்டுகளுள் தலையாயவை இரண்டு. ஒன்று பெளத்த இலக்கியமாகிய 'அவதான சாதகத்தில்' புத்தரின் தலைமாணாக்கருள் ஒருவராகிய சாரிபுத்தன் தமிழ்நாட்டில் தன் பிள்ளைப் பருவத்தில் 'அய்ந்திறம் கற்றான்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகும். இதனை விளக்கும் சக்கரவர்த்தி நயினார், 'அய்ந்திறம்' என்பதற்கு உலகாய்தம் எனப் பொருளுரைத்தார்
இதனை விளக்கும் வகையில் அறிஞர் பர்னல் தரும் மற்றொரு சான்று பாணினி பற்றியதாகும். காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய கதாசரிதசாகரம் எனும் நூலிலிருந்து தரும் எடுத்துக்காட்டு அதுவாகும்.

கதாசரிதசாகரம் எனும் நூலிலில் 'சமஸ்கிருத இலக்கண ஆசிரியராகிய பாணினி ஒரு காலத்தில் அறிவிலியாக இருந்தார் என்றும், அதனால் வரரு சிகாத்தியாயனார் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் என்றும், அப்படி விலக்கப்பட்ட பாணினி சிவனை நோக்கித் தவம் இருந்தார் என்றும், சிவன் அருளைப் பெற்றபின் மீண்டும் குருகுலத்திற்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும் ஏழுநாட்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும் தன் அருள்பெற்ற பாணினி தோற்றதனால் ஆத்திரமுற்ற சிவன் குருகுலம் பின்பற்றிய ஐயிந்திர நூல்களை எல்லாம் அழித்தான்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.சமஸ்கிருதப் புலமைக்கு ஐயிந்திறம் மிகவும் அவ்சியமான நூல் என்பது இதனால் அறிய வருகிறது.

ஏசி பர்னால் அயிந்திறம் பற்றி நிறைய கூறியிருந்தாலும் அஃது என்னென்ன பொருள்பற்றி ஆராய்ந்து அமைக்கப் பெற்றதென மொழி ஆய்வாளர் பர்னல் விளக்கவில்லை. அவரால் விளக்க முடியவில்லை என்பதன் காரணம் அதை ஒரு  இலக்கண நூல் என்ற கற்பிதத்தில் கடைசி வரை ஆராய்ந்ததால்தான். அவரது ஆராய்ச்சியின் முடிவுகளால் ஐயிந்திறம் என்பது ஒரு சமஸ்கிருத மொழி மாற்றத்திற்கான ஒருவகை இலக்கணம் தான் என்பதை அறியலாம்.. அது ஒரு மொழி மாற்றத்திற்கான மென்பொருள் கொண்டது என்ற உண்மை அறியாமல் ஆராயும் போது ஏதும் விளங்காதது இயல்புதானே.

ஆனாலும் இதில் சில குழுவினர் ஐயிந்திறத்தை அழிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தன என்பது தெரிகிறது. ஏற்கனவே சிலப்பதிகார கூற்றின் படி நான்மறையாளர்கள் எனப்படும் அந்தணர்கள்  ஐயிந்திற நூலை அழகர்மலையில் உள்ள பாறைப் பிளவில் மறைத்து வைக்கப் பட்டதாகவும் அறிகிறோம். நான்மறையாளர்கள் ஒரு வேளை உண்மையிலே மறைத்து வைத்து விட்டனரா. இவ்வாறு ஐயிந்திறம் நூலின் பரவல் அறிஞர்களின் அறிவு சார்ந்த எல்லை மீறி பாமரனுக்கும் கிட்டும் வகை ஏற்பட்டதால், அதன் எல்லையை குறுக்குவதற்காகவும், அதற்கு ஒரு தெய்வீகத்தன்மையை ஏற்படுத்தவும் , ஐயிந்திறத்தை அழிப்பதற்கும் ஒரு பிரிவு தயாராகிவிட்டனர் போலும்.

உதாரணத்திற்கு ஐயிந்திறம் நூல் எதற்காக இயற்றப் பட்டது என்று ஐயிந்திறத்தில் 42 வது பாடலில் கூறப்பட்டுள்ளது. அப்பாடலின் பொருளைக் காண்போம்
மொழிமுதல் ஒலி ஓம் முறையின் உணர்த்தி
விழுமிய பொருளை விளக்கிச் செறித்தே
செழுந்தமிழ் மூலம் ஐந்தியல் கோலம்
முழுமை விளக்கும் ஐந்திற நூலே (42)

"மொழிமுதல் ஒலி ஓம் முறையின்" இந்த வரியின் அர்த்தம் கொண்டு பார்க்கும் போது ஒலி ஓம் முறை என்பது சமஸ்கிருதம் தவிர வேறெதுமாக இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் "செழுந்தமிழ் மூலம் ஐந்தியல் கோலம்" என்பது "தமிழைக் கொண்டு உருவாக்கப் படும் படைப்பு" என்பது தெளிவு
இதனை தமிழறிஞர்களும், கணித வல்லுனர்களும், மொழி ஆராய்ச்சியாளர்களும் கலந்து ஆய்வு செய்தால் அதன் உண்மைத் தன்மையை கண்டறியலாம்.

நான் மேலோட்டமாக படித்தவரை  எனது அறிவுக்கு எட்டியவரை அது அனேகமாக தமிழை சமஸ்கிருதமாக மாற்றுவதற்கான கோடிங் ஆகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் அதில் உள்ள வார்த்தைகளில் 30 சதவீதம் பெரும் பாலும், "தமிழ், மொழி, குறில் நெடில், ஒலி,ஓசை, ஓம், இலக்கணம், எழுத்து, தமிழ், எட்டு, எட்டெட்டு, ஐந்து, எண்ணெண், இலக்கணம் , எண்கள்" பற்றிய வார்த்தைகள்தான் அதிகமாக உள்ளது  எனத் தெளிவாகத் தெரிகிறது. ஐந்திறத்தில் ஆங்காங்கே தமிழின் எழுத்துக்கள் பற்றியும், குறில், நெடில் போன்ற விளக்கங்களும், கணிதக் குறியீடுகள் எட்டின் அடுக்குகள், அறுபத்திநான்கு, மற்றும் ஐந்து என்று வருகிறது. தமிழ்மொழியை சமஸ்கிருதமாக மாற்றுவதற்கு, எட்டை அடிப்படையாக கொண்ட ஒருவிதமான வாய்ப்பாடு பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.

உதாரணத்துக்கு ஒரு பாடல்.

எண்எண் கலையால் இலங்குறும் மொழியாய்ப்
பண்ஒலி ஓசைப் பெரு நிலை ஓங்கிக்
குறி நிலை மாறாக் குறிப்புறும் கலைதிகழ்
அறிவியல் விளக்கும் அருந்தமிழ் மொழியே (107)

"எண்எண் கலையால் இலங்குறும் மொழியாய்" என்பதைஇவ்வாறு "எண்களின் கலையால் உருவாக்கப் பட்ட மொழியாய்" என அர்த்தம் கொள்ளமுடிகிறது. ஐயிந்திறத்தின் ஒவ்வொரு பாடலிலும் தமிழ்,மொழி ஓசை, ஒலி,ஓம் என்ற வார்த்தைகள் வருவதால் அது தமிழை பேசுவதற்கோ அல்லது பாடுவதற்கோ மட்டுமான மற்றொரு மொழியாக மாற்றுவதற்கான இலக்கணத்தைப் பற்றியதாகும் எனச் சந்தேகம் எழுகிறது. அதை யாரெல்லாம் படிக்கலாம் என்பதை முதலில் வரையறுத்து விடுகிறார்கள். ஆயகலை அறுபத்தி நான்கினும், தமிழ் மொழியிலும் தேர்ந்தவர்கள் மட்டும் படிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆகவே தமிழும், மற்ற பிராந்திய மொழியில் ஏதாவதொரு மொழி கற்றவரும் ஐயிந்திறத்தின் துணை கொண்டு தங்கள் படைப்புகளை சமஸ்கிருதத்திற்கு மாற்றலாம் அல்லது சமஸ்கிருதத்தில் உள்ள படைப்புகளை தங்கள் மொழிக்கு மாற்றலாம்.

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1527

கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பிராமணங்கள், ஆரண்யங்கள், தர்மசாத்திரங்கள் முதலான வைதிக இலக்கியங்கள் ஐயிந்திறத்தின் உதவியால் சமஸ்கிருதத்தில் தோன்றின. இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக எதிராக  ஓர் அறிவுப் புரட்சியும் தோன்றியது. அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடுமுழுவதும் கொண்டு சென்றது. அவ் அமைப்பின் மூலவர் எண்ணியக் கோட்பாட்டினை அறிந்தவராகிய கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய ஐய்ந்திர மரபிலிருந்து சமஸ்கிருதத்தின் பரவல் கிளைத்தது. வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும், எண்ணியத்தின் கூடுதல் அடிப்படை. இவ் எண்ணியம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆசீவகத்தோடு இணைந்தது. ஆசீவகத்தில் இணந்தவர்கள் எண்ணியல் கோட்பாடு கொண்டு அதாவது அயிந்திறத்தின் துணை கொண்டு சமஸ்கிருதத்தை முற்றிலும் தேர்ந்ததால்  தமிழகத்தின் சித்தர்களுக்கு இணையானவர்களாக கருதப் படுவார்கள்.

மேலும் பானம்பாரனார், தொல் காப்பியரை 'முந்துநூல் கண்டு முறைப் பட எண்ணிப் புலம் தொகுத்தவராகப்' புகழ்கின்றார். இங்கு சொல்லப்படும் 'முந்துநூல்' என்பதில் தொல்காப்பியரின் இலக்கணப் புலமையும் அடங்கிவிடும். அதனால் அய்ந்திரம் என்பதை நாம் இலக்கண நூலாகக் கருதவேண்டியது இல்லை. "நான்மறை முற்றிய அதங் கோட்டாசான்" என்ற தொடர்கூட ஆய்வுக்குரியதாகிறது. இங்கு தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நான்மறையில் தெளிந்தவர் அதங்கோட்டாசான் என்றால் முதன் முதலில் நான்மறை தமிழில்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. இந்நான்மறை என்பது நச்சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமவேதம் என்பதாகும்.

பனம்பாரனாரின் பாயிரம், அரிய கருத்துப் புதையலின் திறவுகோலாகும். அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங் கோட்டாசானுக்குத் தொல்காப்பியர், "மயக்கம்தராத மரபினை உடைய தமிழ் எழுத்துமுறையினைக் காட்டினார்" எனக் குறிப்பது மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாகும். வேதத்தில் வல்ல அதங்கோட்டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்துமுறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? ஏனெனில் தமிழை ஒரு புதிய தளத்திற்கு (சமஸ்கிருத மாற்றத்திற்கு) எடுத்துச் செல்வதால் அதைப் பற்றிய விளக்கம் தேவைப் பட்டிருக்கலாம்.

கம்பரும் தனது ராமாயணத்தில் அனுமனைப் பற்றிக் கூறும்போது இது பற்றி கூறுகிறார்.

"இயைந்தன இயைந்தன இனைய கூறலும்
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்
நயந்தெரி காவலர் இருவர் நண்ணினர்"

என்று கம்பன் கூறுவான். (யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம், 42). இங்கே அயிந்திரம் நிறைந்தவன் என்று அனுமனைக் கூறுவதால் பேசத் தெரிந்தவன் என்ற பொருளே எல்லாத் தமிழறிஞராலும் உணரப் படுகிறது. "எப்படிச் சொன்னால் குரங்கின வீரர்கள் கேட்பார்கள்" என்று தெரிந்த அனுமன் தன் அதிகாரிகளான மயிந்தனையும் துமிந்தனையும் அனுப்பி, வீடணனை விடுவித்து, இராமனிடம் சேர்ப்பிக்கிறான். இங்கு "அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்" என்று சொல்வது, "பேசும் மொழி இலக்கணத்தை" நன்கு அறிந்ததால் ஏவலிடும் முறை அறிந்து ஏவினான் என்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும்.  அக்காலத்தில் அனுமன் சமஸ்கிருதத்தில் வித்தியாசமாக சொல்லியிருக்கலாம்.

கம்பன் ஐந்திறம் என்கிறார். வால்மீகியோ அதையே நுண்ம வியாகரனம் என்கிறார் அதாவது நுண்மையான இலக்கணம் என்கிறார். அவர்காலத்தில் அது புதிதாக நுட்பமாக இருந்திருக்கலாம். கம்பர், வில்லிபுத்தூரார் ஆகியோர்  ஐந்திறம் அறிந்திருக்க வேண்டும் . அதனால்தான் அவர்களால் அவ்வளவு பெரிய காவியங்களை தமிழில் மறுபடியும் மீட்டெடுத்து படைக்க முடிந்தது.

ஐந்திறம் அறிந்தவர்கள் என்று வரலாறு குறிப்பிடுவதில் தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகியோரும் அடங்குவர் . அதனால்தான் இருவரும் ஐந்திறம் பற்றி குறிப்பிடுகின்றனர். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் ஐந்திறம் அறிந்திருப்பதாக இளங்கோவடிகள் குறிப்பால் உணர்த்துகிறார். காடு காண் காதையில் கவுந்தி கூற்றாகக் கீழ்க் கண்ட உரையாடலை இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார்

"திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்,
பெருமால் கெடுக்கும் பிலமுண்டு; ஆங்கு
விண்ணோ ரேத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியொ
டிட்ட சித்தி யெனும்பெயர் போகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள; ஆங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்;
நலம்புரி கொள்கை நான்மறை யாள
பிலம்புக வேண்டும் பெற்றிஈங் கில்லை
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்
வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்
கியாவது முண்டோ எய்தா அரும்பொருள்"

"அழகர்மலைக்கு செல்வீராயின் அங்குள்ள புண்ணிய சரவணபொய்கையில் இறங்கினால் விண்ணவர் கோமான் விழுநூல் என்னும் ஐயிந்திறம் கிடைக்கப் பெறுவர்" என்பதற்கு கவுந்தி அடிகள், "நான்மறையாளர் பிலத்தினுள் (குழி அல்லது குகை/பிளவு), ஐந்திரத்தை வைத்து மறைத்தாலும் தமிழ் நூலான ஐந்திரத்தை அறிவதற்கு பிலத்தினுள் புக வேண்டியதில்லை, கொல்லாமை நோன்புடன் வாய்மை வழியில் செல்வோருக்கு கிடைக்காத நூலும் உண்டோ" என்கிறார். கவுந்தியடிகள் போன்ற சமணர்கள் வேறு ஏதோ வகையில் ஐயிந்திறம் அறிந்திருந்தனர் என்பது உணர்த்தப்படுகிறது. இளங்கோவடிகள் காலத்தில் வாழ்ந்த சமணர்கள் ஐந்திறத்தை அறிந்திருந்தார்கள் என்பதும் தெளிவு.

சமணர்கள்தான் தமிழில் உள்ள அனைத்து நூற்களையும் ஐயிந்திறம் கொண்டு சமஸ்கிருதத்திற்கு மாற்றியவர்களாக இருப்பார்கள். தமிழ் இலக்கியத்தில் சமணர்களுக்கும், புத்தப் பிக்குகளுக்கும் பெரும் பங்குண்டு என்பதை நினைவு கூற வேண்டும். சமனர்கள் மூலமாக சமஸ்கிருதம் இந்தியா முழுவதும் பரவியிருக்க வேண்டும்.

ஐந்திர நூல் இலக்கண நூற்றொகுப்பு, தமிழ்நாட்டில் முறையாக ஏற்புச் செய்யப்பட வில்லை என்பது விந்தையாகவும் விளங்க முடியாததாகவும்  இருக்கிறது. ஆனால் எப்படியோ வடவர்கள் மத்தியிலும் அறிஞர்கள் மத்தியிலும் பயன்பாட்டிற்கு இருந்தது. அதை உருவாக்கியவர்கள் தமிழராயினும் ஐயிந்திறத்தோடு அவர்களது தொடர்பு  குறுகிய காலத்தில் அறுபட்டுப் போனதை வரலாற்றை உற்று நோக்கினால அறியலாம். அதைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிகை அதிகமாகும் பொழுது ஏதோ ஒரு வகையில் அயிந்திறம் அழிக்கப் பட்டிருக்கிறது அல்லது மறைக்கப் பட்டிருக்கிறது.பின்னர் அது ஒரு எலைட் குரூப்பினாரால் மட்டும் ஆதரிக்கப் பட்டு வளர்ந்தது.

அதனால், சிறிது சிறிதாக அந்நூல் பொதுமக்கள் பயன்பாட்டினின்றும் புலவர் ஏற்பினின்றும் விலக்கப் பட்டு பின்னர் அந்த ஐயிந்திறம் திருமால் குன்றம் எனும் அழகர் மலையில் நான்மறையாளரால் பாறைப் பிளவில் மறைத்து வைக்கப் பட்டது என்று சிலப்பதிகாரத்தால் அறியப்படுகிறது. ஒரு வேளை அது பயன் பாட்டிற்கு வந்த சிலகாலங்களிலே தமிழினத்திற்கு ஏதனும் பேரழிவு ஏற்பட்டிருக்கலாம். அதனால் அதன் சிறப்பும் பயனும் பின்னர் உணரப் படவில்லை போலும்.

அது சரி சமஸ்கிருதம் ஏன் செத்த மொழியாகிவிட்டது? தமிழ்ச் சங்கத்தின் மறைவும், தமிழ்ப் புரவலர்களும், காவலர்களுமாகிய தமிழ் மன்னர்களின் மறைவினாலும், தமிழ்ப் புலவர்களின் ஆர்வமின்மையினாலும், வறுமையினாலும் தமிழ் மொழி வெறும் பேச்சு வழக்கில் மட்டும் உயிர் வாழ்ந்தது அவ்வாறிருக்கும் போது அதை ஒட்டிய சமஸ்கிருதமும் அழிவதில் வியப்பேதுமில்லை. தமிழ்ப் புலவர்களின் பரவலை ஒட்டியும் அவர்களின் பயன்பாட்டினாலும் வளர்ந்த மொழியாகையால் அவர்களின் மறைவுக்கு பின் சமஸ்கிருதமும் மெல்ல மெல்ல வளர்ச்சி இல்லாமல், அந்தணர்களால் தத்து எடுக்கப் பட்டு அவர்கள் மத்தியில் மட்டும் இருக்கிறது.

ஐயிந்திறம் இன்று வரை மர்மமாக இருப்பதாலும் அந்த கோடிங் மிகவும் சிக்கலானதாக இருந்ததாலும் நாளடைவில் கோடிங் வித்தகர்கள் தொடர்ந்து உருவாகாததாலும் சமஸ்கிருதத்தின் வளர்ச்சி நின்றுவிட்டது. உதாரணத்திற்கு இன்று தமிழில் யாப்பிலக்கணம் வழக்கொழிந்ததால் வெண்பா எழுதும் வித்தகர்கள் இல்லாததால் மரபுக் கவிதை மரணித்துக் கொண்டிருப்பது போல் சமஸ்கிருதம் மரணித்து விட்டது.

தமிழ் மொழிக்கான அங்கீகாரம் இந்தியாவில் உரியமுறையில் கிடைத்துள்ளதா என்றால் நிச்சயமாக கிடையாது. தமிழ் மொழிக்கான ஆராய்ச்சியும், நிலவியல் முறையில் முழுமையாக நடைபெறவில்லை. ஏனெனில் தமிழுக்கு எதிரிகள் உலகில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் இருக்கின்றனர். கண்ட நாதாரிகள் எல்லாம் தமிழைப் பழிப்பதை  பல்லிளித்து வேடிக்கை பார்த்துக் கொண்டு சிலை வைத்து மகிழ்கிறான்.

பிறமதத்தவர் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ தமிழுக்கு (இந்துமதத்திற்கு) எதிரியாகத்தான் இருக்கிறார்கள். இந்தியாவை ஆக்ரமித்தவர்கள் இந்துமதத்தை ஒழிக்கும் முயற்சியில், தமிழையும் சேர்த்து அழித்தனர். தமிழின் தொண்மைக்கு எதிரிகள், வடமொழியாளர் அனைவருமே, ஏனெனில் அவரவருக்கு அவரது மொழிதான் முக்கியம். அதிலும் இந்தியாவின் தென் முனையில் இருக்கும் ஒரு சிறு குழுவினரின் மொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருப்பதில் பெரும்பாலான இந்தியருக்கு ஏற்புடைமை இல்லை. ஆதலால் தமிழை சிறுமைப் படுத்தும் முயற்சியில்தான் ஈடுபடுவார்கள்.

மத்திய அரசு தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக எந்த துரும்பையும் எடுத்துப் போடவில்லை. ஆனால் துவாரகையின் பழமை பற்றிய ஆராய்ச்சிக்கு பலகோடிகளை செலவழிக்கின்றனர். தமிழ்நாட்டில் பதவிக்கு வரும் அரசுகளும் தமிழ் பற்றிய அக்கறை கொள்வதில்லை. தமிழ்மொழியின் செம்மொழித் தகுதியை ஏற்க மறுக்கும் அன்டை மாநிலங்களும் தமிழைப் பொறுத்தவரை எதிரிகளாகிவிட்டனர். தமிழின் தொண்மைக்கு ஆதாரங்களை அண்டை மாநிலங்களிலிருந்து எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாட்டுக்கு உள்ளேயே எதிரிகள் திராவிடன் என்ற பெயரில் இருக்கின்றனர். தமிழின் தொண்மைகளை அவர்களை அறியாமலே அழிப்பதில் உறுதியாக இருக்கின்றனர்.ஒரு மொழிக்கு இத்தனை எதிரிகளா?.ஆனால் இத்தனையும் மீறி எத்திசையும் புகழ் மணக்குது எங்கள் சங்கத்தமிழ்.

இந்தியா முழுவதும் பரவலான அதிகாரம் கொண்டிருந்த  மிஷனரிகளின் வழி வந்த கால்டுவெல்லின் மொழி ஆய்வு ஓரளவிற்கு கருத்தில் கொள்ளத் தக்கது. இவரைப் போலவே மிஷனரி சேவைக்கு வந்த வீரமாமுனிவர், போப்பையர், ராபர்ட் டி நொபிலி, சீகன்பால்க் போன்றவர்கள் மொழி ஆய்வு, சொல்லாய்வுகளுக்கு வரவில்லை. மாறாக, அவர்கள் இலக்கியம் படைப்பதிலும், அச்சுப்பணியிலும், முக்கியமாக மொழி பெயர்ப்பிலும் ஈடுபாடு காட்டினார்கள்.

சமஸ்கிருதத்திற்கும் மூலமொழி, தமிழ் மொழிதான் என்ற புதிய கருத்து தமிழ் நாட்டிலுள்ள ஒரு சமூகத்தினரை புரவலர் என்ற நிலையிலிருந்து எதிரிகளாக மாற்றிவிடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் சமஸ்கிருதத்தை தேவபாஷையாக கருதுபவர்களுக்கு ஐயிந்திறத்தின் மீது தீரா வெறுப்பு ஏற்படும் என்பது இயற்கைதானே. நண்பன் துரோகியானால் அவன்தான் வலிமையான எதிரியாக உருவாகி விடுவான். அதனால்தான் ஐந்திறம் அழிக்கப் பட்டது அல்லது மறைக்கப் பட்டது. ஆனால் சூரியனை எத்தனை கைகள் சேர்ந்தாலும் மறைக்க முடியாது என்பது போல் தமிழின் பெருமையை யாராலும் மறைக்க முடியாது.

நாகரீகத்தின் வளர்ச்சி மற்றும் பரவலை கண்டுபிடிக்க இந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வேர்ச்சொல், அடிச்சொல் என்று மொழியையும் வார்த்தைகளையும்  பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. நாகரீகத்தின் வளர்ச்சி மற்றும்  பரவல் பற்றி மொழி ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் எப்பொழுதுமே தவறாகத்தான் இருந்திருக்கிறது என வரலாறு நிரூபித்து இருக்கிறது. நவீன தொழில் நுட்பமாகிய மரபணு ஆராய்ச்சிகள் ஒவ்வொரு குடும்பத்தை பற்றியும் கூட மிகத்துல்லியமாக எடுத்துரைக்கும் போது இன்னும் வேர்ச்சொல் அடிச்சொல் ஆகியவற்றை கட்டிக் கொண்டு அழுவது ஏன் எனத்தெரியவில்லை.

இந்தோனஷியா, ஜாவா, பாலி, சுமத்ரா ஆகிய தீவுகளில் மகாபாரதம் மற்றும் இராமாயணம் மக்களின் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்துள்ளதைப் பார்க்கும் போது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தமிழோடும் இதிகாசங்களோடும் அங்கு சென்றதாகத்தான் இருக்கமுடியும். இதிகாசங்களின் மூலமும் தமிழாகத்தான் இருக்கமுடியும்.  காலத்தின் போக்கில் கிடைக்கும் வரலாற்றின் அறுபட்ட சங்கிலித் துண்டுகள்தான் முழுமையான வரலாற்றைத் தரும் அதுவரை அதிகப்பட்சமாக மூளையைப் பயன்படுத்தி வரலாற்றின் அறுபட்ட சங்கிலித் துண்டுகளை உருவாக்குவோம். நன்றி.
தொடர் முற்றியது.


இத் தொடருக்கு கீழ்க்கண்ட தளங்கள் உதவியாக இருந்தது.
தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது! - முனைவர் க. நெடுஞ்செழியன்
http://thiruneri.blogspot.in/2010/09/blog-post_54.html
ஹிந்து மதத்தின் புகழ் பற்றி
http://www.hinduwisdom.info/Pacific.htm#Articles:
மாமுனி மயன்
http://en.wikipedia.org/wiki/Mamuni_Mayan
ஐயிந்திறம்
http://en.wikipedia.org/wiki/Aintiram
மயன்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
வேதகாலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம்.
http://www.tamilauthors.com/01/144.html
குமரிக்கண்டம்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

மேலும் படிக்க...!

சமஸ்கிருதம்   எப்படி உருவானது? பாகம்-3

உலகில் ஆதிகாலத்திலயே சங்கம் வைத்து மொழி வளர்த்தவன் தமிழன் ஒருவனே. சங்கம் வைத்து அப்பம், பணியாரம் தின்று விட்டு செல்லவில்லை. உண்மையான பொறி பறக்கும் சூடான வாத, விவாதங்களுடன் தங்கள் புதுமையான படைப்புகளை அரங்கேற்றினார்கள். தமிழுக்கு இலக்கணம் சொன்ன தொல்காப்பியரே தனது நூலையே முதற்சங்கத்தில் அரங்கேற்றும் முன் அரங்கோட்டத்தாசன், மற்றும் பானம்பரனார் முன்னிலையில் படாதபாடு பட்டுவிட்டார்.

உண்மையான  புலவர்களைத் தவிர  வேறு யாரும் உட்கார முடியாத தேவலோக சிற்பி மயன் தயாரித்தளித்த சங்கப் பலகையும் தரக் கட்டுப் பாட்டில் அடங்கும். இங்கே அரங்கேற்றுதல் என்பது கடுமையான தர மதிப்பீட்டிற்கு பின்தான் நிகழ்ந்துள்ளது என்பது தெரிகிறது.தருமி போல் யாரும் எழுதிக் கொடுத்ததை கொண்டு வந்தால் மானங்கெட்டு மரியாதை இழந்து விடுவார்கள். திறமை இல்லாதவர்கள் எளிதில் பேரோ புகழோ பெறமுடியாது என்பது  உள்ளங்கை நெல்லிக்கனி. புலவர்களின் படைப்புகள் சங்கத்தில் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பது மர்மமாக இருக்கிறது. ஒருவேளை ஓலைச் சுவடிகளாகவோ, வாய்ப் பாட்டாகவோ சங்கத்தில் உள்ளவர்களால் பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு வழிமுறை பின்பற்றப் பட்டிருக்க வேண்டும்.

தமிழ்மக்களுக்கு இயற்கை அவ்வப்பொழுது ஒரு பெரும் சவாலாகவே இருந்துள்ளது.  கடற்கோள், சுனாமி, பூகம்பம் ஆகியவற்றால் தமிழினத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வரலாறும், தமிழ் நூற்களும் தெரிவிக்கின்றது. பெரும் நிலப்பரப்புகள் கடலுக்கடியில் மறைந்தன. ஆனாலும் தமிழன் சளைக்காது மூன்று நிலப்பரப்பில் இடம் மாறி நிலைகொண்டாலும் , மக்கள் அழிந்தாலும் சங்கம் வைத்து மொழி ஆராய்ச்சியை விடாது செய்தான். ஃபீனீக்ஸ் பறவை போல் தமிழன் முற்றிலும் அழிந்து  புதிதாக மூன்று முறை உயிர்த்தெழந்த வரலாறு உள்ளது.மூன்று சங்கங்களே அதற்கு சான்று.

தமிழனது தமிழ்ச் சங்கத்தில் என்ன நடக்கிறது என்ற ஆர்வம் உலகெங்கும் இல்லை என்றாலும் இந்தியா முழுமைக்கும் இருந்திருக்கும். அதனால்தான் சங்கம் வைத்து பாதுகாப்பதை ஒரு தலையாய கடமையாகக் கொண்டான். அவ்வாறு போற்றிப் பாதுகாக்கப் பட்ட சங்கத்தில் இயற்றப் பட்ட நூற்களுக்கு இயற்கை பேரழிவிலிருந்து பாதுகாப்பு அழிப்பதற்கான ஏற்பாடுதான் சமஸ்கிருதம். இலக்கியங்களை பாடலாக மக்கள் மனதில் ஏற்றிவிட்டால் அழிவில்லை என்ற கருத்தில் தோன்றியதுதான் சமஸ்கிருதம்.

தமிழன் அக்காலத்தில் விக்கிபீடியாவிற்கு இணையான பொதுத்தளம் ஒன்றை கண்டுபிடித்திருக்க வேண்டும். தமிழனுடைய சங்கத்தமிழ் நூல்களும். மற்ற மொழியினரும் இயற்றும் நூல்களையும் பொதுவாக ஏற்றி வைக்கும் ஒரு தளம்(சமஸ்கிருதம்) ஒன்றை தமிழன் கண்டறிந்து இருக்க வேண்டும். அது இந்தியா முழுமைக்கும் பரவியிருக்க வேண்டும். அதன் பின்னர் அந்த தளத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் ஊறு ஏற்பட்டிருக்க வேண்டும், அல்லது அதன் பின் தமிழன் கடற்கோளால் அழிந்து, தான் இயற்றிய தளம் பற்றிய தகவல் ஏதுமின்றி புதிய இடத்தில், மிஞ்சிய தமிழர்கள் நிலை கொண்டிருக்க வேண்டும்.

பொதுத்தளத்திற்கான ஏற்பாடு பற்றிய தகவல் அடுத்ததலைமுறைக்கு கொண்டு செல்லப்படாமல் முற்றிலுமான தகவல் தொடர்பு அழிந்திருக்கலாம். இந்த இடத்தில், தமிழனிடம் உள்ள மர்ம நூல் ஒன்றைப் பற்றி கூறுவது சாலச் சிறந்தாகும். அப்படி ஒரு நூல் தமிழனிடம் இருந்தது என்பதற்கான சான்று தமிழனை விட வட இந்தியர்களிடம் அதிகம் காணப்படுகிறது.அதன் பெருமை பற்றி பலகதைகளும் உள்ளன.ஆனால் ஒரு கால கட்டத்தில்  அந்தணர்கள் அழிக்க முற்பட்ட  அந்நூலைப் பற்றி உலக மொழி ஆராய்ச்சியாளர்கள் வியந்து கொண்டிருக்கின்றனர். அந்தணர்கள் ஏன் அதை அழிக்க முற்பட வேண்டும். தமிழ் நாட்டில் மட்டுமில்லாது வட இந்தியாவிலும் அந்த நூலை அழிக்க ஒரு பெரிய போராட்டம் நடந்ததாக வரலாறு உள்ளது.

அதில் கூறியுள்ள கலைகள் மற்றும் இயல்களின் வகைகள் எண்ணிலடங்காது. அவைகளின் பட்டியல் விக்கிபீடியாவை மிஞ்சும் வகையில் ஆச்சரியத்தை வரவழைக்கும். கிட்டத்தட்ட அந்நூல் முழுவதுமே அப்படி ஒரு பட்டியலாகவே தெரிகிறது. அந்நூல் பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. தமிழர்கள் அது பற்றி அறிவார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றிய குறிப்புகள் அதில் அடங்கி இருந்தாலும், அது எதைப் பற்றியது என்று உறுதியாக இது வரையிலும் யாருக்கும் தெரியாது. பாடப் புத்தகங்களில் அது பற்றிய குறிப்புகள் கிடையாது. அந்நூலைப் பற்றிய குறிப்புகள் இதிகாசங்களில் கூட உள்ளதால் அது மிகவும் பழமையான நூல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வடமொழி நூல்களிலும் அந்நூல் பற்றிய குறிப்புகள் காணப் படுகிறது. தமிழனைத் தவிர மற்றெல்லோரும் அறிந்திருக்கின்றனர் அது என்ன நூல்? யோசித்து வையுங்கள், அந்நூலைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

தொடரும்........................

மேலும் படிக்க...!

சமஸ்கிருதம்  எப்படி உருவானது?

எனது முந்தைய பதிவுகளான தமிழ் இந்து சமஸ்கிருதம் மற்றும் சமஸ்கிருதம் எனும்  பாஷை எப்படி உருவானது?என்னும் பதிவுகளை படித்துவிட்டு தொடர்ந்தால் தொடர்ச்சி கிடைக்கும் சில சந்தேகங்கள் வராது.எல்லா மொழிகளுக்கும் அடிப்படை தமிழும் சமஸ்கிருதமும் என்ற அடிப்படை கொண்டு படித்தால் புரியும். சமஸ்கிருதத்தில் ஐரோப்பிய வாடை இல்லை ஆனால் ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருத வாடை இருக்கும்.

மறை மொழி எவ்வாறு பல இடங்களில் பயன் படுத்தப் படுகிறது எனப் பார்த்தோம். கல்வி இலக்கியம் என்று வரும் பொழுதும் மறை மொழி தேவைப் படுகிறது. உதாரணமாக சாமுத்ரிகா லட்சனம், காம சூத்திரம், பெண்வசியம், மனோவியல், வைத்தியம், ராஜதந்திரம், ஜோதிடம், பில்லி சூனியம், மாந்திரீகம் என்பது தமிழில் ஏராளமாக உள்ளது. அவற்றை எல்லாம் ரகசியமாக தங்களுக்கான வட்டத்துக்குள் வைத்துக் கொண்டனர். மந்திரமோ தந்திரமோ எல்லாவற்றையும் வெளிப்படையாக எல்லோரும் அறியும்படி எழுதி வைக்க முடியாது. மேலும் இயற்றிய இலக்கியப் படைப்புகள் எல்லைதாண்டி செல்ல வேண்டும் என்பதோடு கடற்கோள்,மற்றும் இயற்கை பேரழிவுகளிலிருந்து தான் மட்டும் தப்பி பிழைத்தால் போதாது தனது இல்க்கியங்களும் காக்கப் படவேண்டும்.என்பதில் தமிழன் உறுதியாக இருந்தான்

இந்த இக்கட்டான நிலையில் ரகசிய மொழியின் அவசியம் தேவைப் படுகிறது. பாட்டின் அழியாத்தன்மைக்கு ஏற்பட்டதுதான் யாப்பிலக்கணம் பாட்டுக்கே ஒரு சிக்கலான யாப்பிலக்கணம் கண்டு அறிந்த தமிழன் கண்டிப்பாக எல்லைதாண்டி பன்மொழியாளருக்கு பயன்படும் விதமாகவும்  பத்திரப் படுத்தவும்  ஒரு ஏற்பாடு செய்யாமலிருப்பானா?. அதற்காக உருவானதுதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதம் என்றாலே "சமைக்கப் பட்டது" என்று பொருளுண்டு. தமிழ் மொழியில் இருந்து சமைக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம்.

ஒரு பொருள் குறித்த பல சொற்களும், பலபொருள் குறிக்கும் ஒற்றைச் சொற்களும் தமிழில் ஏராளம் .சொல்லப் போகும் விஷயத்தைக் கேட்டு மயக்கம் போட்டு விடாதீர்கள். உதாரணத்திற்கு தமிழில் யானையை பற்றி குறிக்க சுமாராக நூற்றிஎழுபது (170) சொற்கள் உள்ளது. அவற்றில் சாம்பிளுக்கு சில. 1யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம். உங்களுக்கு சந்தேகம் என்றால் கீழ்க்கண்ட தளத்தில்

http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/
அல்லது
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/  இதில் 'யானை' என்று கொடுத்துப் பாருங்கள்.

இதைவிடவா ஒரு மொழிக்கு பரிபூர்ண நிலை வேண்டும். இவ்வாறு ஒரு மொழி பரிபூர்ண நிலையை எட்டி விட்டால், அதன் அடுத்த நிலை தோன்றும் அதனால்தான் மிதமிஞ்சிய தமிழாக, தமிழின் ரகசிய மொழியாக சமஸ்கிருதம் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். இதைத்தான் வள்ளுவர் நிறைமொழி மாந்தரின் பெருமையாக கூறுகிறார் ஆங்கிலத்தில் இது போன்ற பரிபூர்ண நிலைதான் வார்த்தைச் சுருக்கம். உதாரணம் DVD, RAM, TV, VCR, CEO, MD, MLA, MP . இது போல் ஏராளமாக கூறலாம்.

வெளிநாட்டினர் மின்காந்த அலைபரப்பிகள் (Transmitters) கண்டுபிடித்த ஆரம்ப காலத்தில் பேச்சை ஒலிபரப்பும் தொழில்நுட்பம் அறியப் படாத காலத்தில், அப்பொழுது உள்ள வசதிக்கு தகுந்தவாறு செய்திகளை அனுப்ப "மோர்ஸ் கோட்" உருவானது. இது மற்ற மொழிகளை போல் பல எழுத்துக்கள் கொண்டதல்ல, குறில், நெடில் என்ற இரண்டே இரண்டு விதமான ஒலிக் குறியீடுகள் மட்டும் கொண்டு உருவாக்கப் பட்ட ஒரு மொழிதான். இது கேட்பதற்கான ஒரு மொழி. இது போல் ஒன்றை ஆதிவாசிகளும் உபயோகித்து செய்தியை பரிமாறிக் கொண்டனர்.

இப்பொழுதும் தந்தி அனுப்புவதற்கு மோர்ஸ் கோட் தான் பயன்படுகிறது. மேலும் கண்ணிழந்தவர்களுக்கான பிரெய்லியும் அதே போன்ற வித்தியாசமான எழுத்துரு மட்டும் கொண்ட, பெரும்பாலும் படிப்பதற்கு மட்டுமான மொழியாகும். அது போல் எழுதுவதற்கும் படிப்பதற்குமான ஷார்ட் ஹேண்ட் எனச் சொல்லப்படும் குறுக்கெழுத்தும் ஒரு விதமான மறைமொழிதான். செவிட்டூமையர்களுக்கான சைகை மொழியில் எழுத்தும், பேச்சும் கிடையாது. அமெரிக்காவில் ஒரு கிராமத்தில் 60 சதவீத மக்கள் செவிடராக மாறியதால் அங்கு சைகை மொழியே பிரதானமாகி விட்டது ஒருகாலத்தில்.

http://en.wikipedia.org/wiki/Martha's_Vineyard_Sign_Language

சமஸ்கிருதம் உருவாக்கப் பட்ட காலத்தில் கேட்பதற்கும் பாடுவதற்கும் மட்டுமான மொழியாகத்தான் இருந்திருக்கிறது. வெகுகாலமாக அதற்கு எழுத்துரு கிடையாது, ஆகவே படிப்பதற்கும் எழுதுவதற்கும், பேசுவதற்கும் பயன்படாமல் இருந்தது. ஆனால் தற்காலத்தில் தனித்தியங்க முற்பட்டதால், தேவை கருதி வடமொழியின் எழுத்துக்களை பயன் படுத்திக் கொள்கிறது.

இன்றளவும் மறை மொழிகளின் தேவை எல்லா இடங்களிலும் இருந்து கொன்டே இருக்கிறது. கணினியுடன் நாம் தகவல் பரிமாறிக் கொள்கிறோம். அதற்கு அடிப்படையாக நாம் கணினியுடன் உரையாட ஒரு மொழி அல்ல, பலமொழிகளைப் பயன்படுத்துகிறோம். 


கணினியுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் பொழுது என்ன நடக்கிறது. நமக்குத் தெரிந்த மொழி ஆங்கிலமோ தமிழோ எந்த மொழியானாலும் நாம் அந்த மொழியில்  கீ போர்ட் உடன் தகவல் பரிமாறிக் கொள்கிறோம். கீபோர்ட், விண்டோஸ்7 உடன் (Operating System) ஓஎஸ் கட்டளைகளால் உறவாடுகிறது. விண்டோஸ்7 "அசெம்பிளி லாங்க்வேஜ்"(Assembly Language ) ஐ பயன்படுத்தி பயாஸ் (BIOS)உடன் உறவாடுகிறது. பயாஸோ, மைக்ரோ புராஸசருடன் தொடர்பு கொள்ள "மெஷின் கோட்" (Machine Code) ஐ பயன்படுத்துகிறது.

இந்த "மெஷின் கோட்" என்பது 
இண்டெல் ப்ராஸசரை பொறுத்தவரை இரண்டே இரண்டு எழுத்துக்களும்(0,1), இருநூற்றி ஐம்பத்திஆறு(256) வார்த்தை(கட்டளை)களும் கொண்ட ஒரு மொழிதான். இன்றளவில் கணினி மூலம் அதிசயங்களை நிகழ்த்தி உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் மொழி அதுதான்.

அசெம்பிளி லாங்க்வேஜ் உடன் உறவாட பலவிதமான மொழிகள் உள்ளன. அவற்றில் சில பேசிக், கோபால், ஃபோர்ட்ரான், சி, ஜாவா, ஆரக்கிள், பிஹச்பி, ஆன்றாய்ட் போன்று பல மொழிகள் உள்ளன. புதிய மொழியின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது இது போன்ற மொழிகளின் அட்டவணை மிகப் பெரியதாகி விட்டது. தெரிந்தே ஆக வேண்டுமென்றால் கீழே கிளிக் செய்யவும்.


http://en.wikipedia.org/wiki/List_of_programming_languages_by_type#Machine_languages.

உலகின் எந்த மொழியிலும் இல்லாத யாப்பிலக்கணமே தமிழின் முறையான பரினாம வளர்ச்சியின் உச்சத்தை பறைசாற்றும். ஏனெனில் யாரும் நினைத்துக் கூட பார்க்கமுடியாத, கற்பனைக்கும் எட்டாத யாப்பிலக்கணத்தை படைத்தது மட்டுமில்லாமல் அதில் படித்துத் தேர்ந்து "த"கரத்தில் பாடவா?, "க"கரத்தில் பாடவா ? "கை" போட்டு பாடவா? "பூ " போட்டு பாடவா?, சிலேடையில் பாடவா? அறம் பாடி அழிக்கவா? கலம்பகம் பாடி காலத்திற்கும் அழியாத கல்(சொல்)லறை கட்டவா? இசைப்பாட்டு பாடுகிறாயா அல்லது காதை இழக்கிறாயா?, என்று மொழி மீது கொண்ட நம்பிக்கையில் உயிரையும் கூட பணயம் வைத்து "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று சவால் விட்டவன் அல்லவா?.
http://chandroosblog.blogspot.in/2010/04/blog-post.html

வரலாற்றின் "காட்சிப்பிழை" மயக்கத்தில் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ் தோன்றியது என்று சொல்பவர்களிடம், எந்தக் காலத்தில் சமஸ்கிருதம் தோன்றியது, எங்கே வாழ்ந்த மக்கள் அதைப் பேசினார்கள் என்பதற்கெல்லாம் சான்றுகள் இருக்காது. இருந்தால் அதைக் கொடுக்கட்டும். ஒரு மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் பேசுகிற, எழுதுகிற மொழியாக இருக்க வேண்டும். அதில் தொடர்ந்து இலக்கியங்கள் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியொரு மொழியாக சமஸ்கிருதம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் கி.பி. 150 க்குப் பிறகுதான் சமஸ்கிருதக் கல்வெட்டுகளே கிடைக்கின்றன. அசோகரின் கல்வெட்டுகள்கூட சமஸ்கிருதத்தில் இல்லை. சமஸ்கிருதத்தில் அரசாங்கத்தில் சில செய்திகளை மக்களுக்கும் பகைவர்களுக்கும் தெரியாமல் எழுதி வைப்பார்கள். இப்படி சமஸ்கிருதத்தை உருவாக்கி அதை ஒரு மொழியாகச் செம்மைப் படுத்தித் தந்தவர்களும் தமிழர்கள்தான். "வேதத்தை தொகுத்து எழுதியவர் வியாசர்' என்கிறார்கள். வியாசர் என்பதே தமிழ்ச் சொல்தான். ஆக, சமஸ்கிருதம் என்பது தமிழ் மூலத்திலிருந்து பிறந்த மொழி என்பதில் எந்த ஐயமும் இல்லை.''

ரிக்வேதத்தை எடுத்துக் கொண்டால், அதில் சாதி வேறுபாடுகளைப் பற்றியோ, கடவுளர்களாக இன்று பிரபலம் அடைந்திருக்கிற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை. ரிக் வேதத்தில் வாயு, சோமன், அக்னி, வருணன் என்று சொல்லப்படுகிற கடவுளர்கள் அத்தனை பேருமே தமிழ் மூலத்தில்தான் இருக்கிறார்கள். மேலும் வேதங்கள் ஒருவரால் எழுதப்பட்டதல்ல; பதினைந்துக்கும் குறையாதவர்களால் எழுதப் பட்டிருக்கின்றன. இந்தப் பெயர்களை ஆராய்ந்தால், "கணியன்' "கனாதன்', "பரத்துவாசன்' என்று பன்னிரண்டு தமிழ்ப் பெயர்கள். இப்படித் தமிழின் தொன்மையைப் பற்றி நிறுவிக் கொண்டே போகலாம்.

ஒரு புதிய மொழியை உருவாக்க அதிக அறிவோ, காலமோ தேவையில்லை. இருக்கும் மொழிக்கு ஒரு அல்காரிதம் தயார் செய்து என்கிரிப்ட் மற்றும் டிகிரிப்ட் செய்ய தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ ஒரு கோடிங் தயார் செய்தால் போதும் ஒரு புதிய மொழி, பழைய மொழியின் அத்தனை வார்த்தைகளுடனும், சிறப்புத் தன்மைகளுடனும் ஒரு நொடியில் உருவாக்கிவிடலாம். புதிய எழுத்துருவை உருவாக்குவதுதான் சிரமம். அது போன்று உருவாக்கப் பட்டதுதான் எழுத்துரு இல்லாத சமஸ்கிருதம்.

உதாரணமாக "கதகமிகழ்" பாஷைக்கு தமிழ்மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் முன் 'க' வை சேர்ப்பதும் அழிப்பதும்தான் கோடிங். எடுத்துக் காட்டாக "கோடிங்" என்பதை "ககோகடிகங்" என்று எழுதுவதாகும். ககரத்திற்கு பதிலாக உயிர்மெயெழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்தையும் பயன்படுத்தினால் வெவ்வேறு புதிய மொழியை உருவாக்கலாம். உதாரணத்திற்கு அதே "கோடிங்" என்பதை "சகோசடிசங்" "பகோபடிபங்" என எழுதி இரு மொழிகள் உருவாக்கலாம். "ழ்மித" பாஷைக்கு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை திருப்பி போடுவதுதான் கோடிங்

இதெல்லாம் எளிய சிறுபிள்ளைகளின் விளையாட்டு. இது ஒரு சாம்பிளுக்குத்தான் சொல்கிறேன் இதையே சங்கம் வைத்து யோசித்தால் ஆயிரம் வழிகள் கிடைக்கும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மானியர்கள் வயர்லெஸில் அனுப்பும் ஒவ்வொரு கட்டளைக்கும் ஒரு புதிய மொழியை உருவாக்கி அனுப்பினார்கள். ஏனெனில் அது இடைமறிக்கப் பட்டால் அதிலுள்ள செய்தி அம்பலமாகிவிடும். அதை டிகோட் செய்வதற்கே இங்கிலாந்து காரர்களுக்கு தாவு தீர்ந்து விட்டது.

அது போல் தமிழன் உருவாக்கிய மொழிதான் சமஸ்கிருதம். அதன் கோடிங் முறை பற்றி இது வரை யாரும் யோசிக்காததால் அதன் ரகசியம் அம்பலம் ஆகவில்லை போலும். காலங்கள் கழியும் போது கோடிங் மறந்து விட்டிருக்கலாம் அல்லது மறைக்கப் பட்டிருக்கலாம்.. காலத்தின் போக்கில் அதுவரை என்கிரிப்ட் செய்யப் பட்ட வார்த்தைகளுடன் மட்டும் சுத்தமாக இருந்தது. பின்னர் என்கிரிப்ட் செய்யப்படாத (தமிழ்) வார்த்தைகளும் கலந்து விட்டது. ஆனால் தமிழன் உருவாக்கிய சமஸ்கிருதத்திற்கு அந்த கோடிங் நிச்சயமாக இவ்வளவு சுலபமாக இருக்காது.

தமிழன் இயற்றிய யாப்பிலக்கணத்தையே கம்ப்யூட்டருக்கு போதித்து இது நாள்வரை ஒரு கவிதை எழுத வைக்க முடிய வில்லை. ஏனெனில் கணினிக்கு சொற்குற்றம், பொருட்குற்றம் தெரியாது. புரிய வைக்க முடியுமா என்பது ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ்க்கு பெரும் சவாலாக உள்ள விஷயம். தமிழிலும், கம்ப்யூட்டரிலும் வித்தகரான சுஜாதாவே தன் வாழ்நாளில் மிகவும் கஷ்டப் பட்டு ஒரே ஒரு (வெண்பா)கவிதை எழுதியதாக கூறியுள்ளார். கவிதை எழுதத் தேவையான தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்ற வாய்ப்பாட்டை நினைத்தால் எவ்வளவு பெரிய அறிவு ஜீவிக்கும் வெண்பா கனவில் வந்து கூட பயமுறுத்தும். அப்படி இருக்கும் போது ஒரு ரகசிய பாஷைக்கு தயாரிக்கப் பட்ட கோடிங் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். யாப்பிலக்கணம் ஒரு ஆய்வு கீழே கிளிக் செய்யவும்.


http://chandroosblog.blogspot.in/2010/04/tcp-ip.htm


தொடர கீழே கிளிக் செய்யவும்.


தொடரும்..........................


மேலும் படிக்க...!
சமஸ்கிருதம்   எப்படி உருவானது ?.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

என்கிறார் வள்ளுவர். இக்குறளின் பொருள் மிகவும் வெளிப்படை. "பரிபூர்ண நிலையடைந்த மொழியை உருவாக்கிய, முன்னோரின்  பெருமையானது, அவர்கள் வாழுமிடத்து வழங்கப்படும் மறைமொழி கொண்டு அறியப்படும்" என்கிறார். மறைமொழி என்பதில் குழப்பம் ஏதுமில்லை. அது மறைத்து வைக்கப்பட்ட மொழி அல்லது ஒரு சங்கேத மொழி. மறை என்ற வேர்ச் சொல்லின் அர்த்தம் "ஒளித்து வை" என்பதாகும்.  குறளுக்கு விளக்கம் சொன்ன அனைவரும் மறைமொழி என்பதற்கு மந்திரம் என்கின்றனர். மந்திரம்’ என்ற சொல் தொல்காப்பியத்திலும் பயன்படுத்தப் படுகிறது.
“நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழிதானே மந்திரம் என்ப” (பொரு- 480)
இதன் பொருள் :”நிறைந்த மொழியையுடைய மாந்தர்,
தமதாணையால் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாகும்”.

மந்திரம் என்றாலே, மறைவாகவும், மூடி மறைத்தும் இருப்பது.
அதன் பொருள் வெளிப்படையாகத் தெரியாது. சிலர் மறை என்பதற்கு ஒழுக்கம் பற்றி கூறுவர் ஆனால் ஒழுக்கத்திற்கு அடைமொழியாக "மொழி" வராது மறைநூல் என்று வந்தால் கூட ஒழுக்கம் சம்பந்தப் பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம்.  "நீத்தார் பெருமை"யில் கூறுவதால் முன்னோர்கள் பற்றியும் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டிய மொழிப் பாதுகாப்பும், மொழியுணர்வும் பற்றி வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவர் தன்னுடைய தமிழ்மொழியைத்தான்  நிறைமொழிக்கு உதாரணமாகக் கொண்டு விளக்கம் சொல்லி இருப்பார். அப்படி என்றால் தமிழ்நிலத்துக்குப் பெருமையாக  ஒரு மறைமொழி இருக்க வேண்டுமல்லவா. அது வேறென்ன  சமஸ்கிருதம் தான்.

சமஸ்கிருதத்தின் சுவடு பாரதத்தை தவிர வேறெங்கும்  காணப்படவில்லை என்பதாலும், (அப்படியே இருந்தாலும் அது பாரதத்தில் இருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்பதை மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.) தமிழின் சமகால மொழியாக இருப்பதாலும், தமிழும் சமஸ்கிருதமும் இரட்டைமொழி போல் இருப்பதாலும் , மேலும் ஒரு தீபகற்பத்தில் இவ்வளவு சிறப்பாக இரண்டு மொழிகள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருப்பதாலும், சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்ட இனமோ குழுவோ இந்தியாவில் அறியப் படவில்லை என்பதாலும், பன்னெடுங்காலத்திற்கு (ஐயாயிரம் ஆண்டுகளுக்கு) முன்பே இரண்டு மொழிகளும் பொதுவான வார்த்தைகளை அதிகம் கொண்டிருப்பதாலும், அதில் தமிழ் மட்டும் இயற்கை மொழியாக இருப்பதாலும், மற்றொன்று செயற்கையாக இருப்பதாலும் அம்மொழி ரகசியத்திற்காகவும், புனிதத்திற்காகவும் தமிழனால் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். இராமாயண காலத்திலேயே தமிழுடன் சமஸ்கிருதம் இருந்தாக அறியப் படுகிறது, தமிழில் மட்டுமே உள்ள மொழி மற்றும் மண் சார்ந்த பழமொழிகள் சமஸ்கிருதத்தில் இருப்பதால் சமஸ்கிருதத்தையும் தமிழையும் படைத்தவன்  ஒரே இனமாகத்தான் இருக்கமுடியும். தமிழில் இருந்து சமைக்கப் பட்ட மொழி என்பதால் சமஸ்கிருதம் எனப்பட்டது.



உலகளவில் தமிழ் பரவி இருக்கும் போது சமஸ்கிருதம் ஏன் தமிழோடு பரவில்லை என்பதன் காரணம் தற்பொழுது விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். தமிழன் உலகம் முழுவதும் பரவும் பொழுது சமஸ்கிருதம் படைக்கப் படவில்லை. அது தமிழகத்தில் நிலைகொண்ட தமிழனால் பிற்காலத்தில் அதாவது முதற்ச் சங்ககாலத்திற்கு பின்  படைக்கப் பட்டதால் அது இந்தியாவை தாண்ட முடியவில்லை இந்திய தீபகற்பத்தில்,  இந்திய தொல்பொருள் துறையினால் கண்டு பிடிக்கப்பட்ட மிகவும்  பழமையான கல்வெட்டுகளில் ஐம்பத்தைந்து சதவீதத்திற்கு மேல் தமிழில்தான் உள்ளது. ஏனெனில் சமஸ்கிருதத்திற்கு எழுத்துரு கிடையாது. மேலும் அது பேச்சு வழக்கிலும் இல்லை. இந்த ஒரு சான்றினால் தமிழ் ஒன்றுதான் இந்தியா முழுமையும் கோலோச்சியது என்பது மட்டுமில்லாமல் மிகவும் பழமையானது என்கிற உண்மையை தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் என்பது இயல்பாக,  இயற்கையாக தோன்றியது.  மொழிகளுக்கெல்லாம் மூலமாகிய ஆதி மொழியாக விளங்கியது என்பதில் ஐயம் ஏதுமில்லை. எதியோப்பியாவில், ஹங்கேரியில், கொரியாவில், ஜப்பானில் தென் அமெரிக்காவில் என்று உலகின் எட்டுதிக்குகளிலும் காணப்படும் தமிழின் கலப்பு, உணர்த்தும் செய்தி என்னவென்றால் உலகமொழிகளின் தாய், தமிழ்தான் என்பதாகும். ஆகவே தமிழன் "சமைத்த" மொழிதான் சமஸ்கிருதமும்.

அதையேதான் விக்கி சொல்கிறது.
The Sanskrit verbal adjective sáṃskṛta- may be translated as "put together, constructed, well or completely formed; refined, adorned, highly elaborated". It is derived from the root saṃ-skar- "to put together, compose, arrange, prepare",[6] where saṃ- "together" (as English same) and (s)kar- "group" (transitive verb). (cf. Norwegian 'sammen skjær', Afrikaans 'saamskaar')


The term in the generic meaning of "made ready, prepared, completed, finished" is found in the Rigveda. Also in Vedic Sanskrit, as nominalised neuter saṃskṛtám, it means "preparation, prepared place" and thus "ritual enclosure, place for a sacrifice".

As a term for "refined or elaborated speech" the adjective appears only in Epic and Classical Sanskrit, in the Manusmriti and in the Mahabharata. The language referred to as saṃskṛta "the cultured language" has by definition always been a "sacred" and "sophisticated" language, used for religious and learned discourse in ancient India, and contrasted with the languages spoken by the people, prākṛta- "natural, artless, normal, ordinary".



 சமஸ்கிருத பேரறிஞர் ஹெச். ஹெச்.இங்கல்ஸ், "சமஸ்கிருதம் ஒரு உருவாக்கப்பட்ட, செயற்கையான மொழிதான்" என்று ஆதாரத்தோடு நிரூபிக்கிறார்.
The eminent sanskritist, Daniel H.H. Ingalls describes some peculiar characteristics of the Sanskrit language. He refers to the enormous vocabulary of Sanskrit, and also of the presence of a larger choice of synonyms in Sanskrit than any other language he knew of.Ingalls  argues  that Sanskrit is not a natural language, but an 'artificial' language. By 'artificial', he explains he means it was learned after some other Indian language had been learned by simple conditioning. Ingalls writes: 'Every Indian, one may suppose, grew up learning in a natural way the language of his mother and his playmates.


 http://en.wikipedia.org/wiki/Sanskrit

The oldest dated Tamil inscription written in the Tamil-Brahmi script has been found in Palani in Southern India, scientifically dated to 540 BCE - the oldest known Brahmi inscriptions on the Indian sub-continent.[29] More than 55% of the epigraphical inscriptions (about 55,000) found by the Archaeological Survey of India are in the Tamil language.[30] Tamil language inscriptions written c. 1st century BC and 2nd century AD have been discovered in Egypt, Sri Lanka and Thailand.[31] The two earliest manuscripts from India,[32][33] to be acknowledged and registered by UNESCO Memory of the World register in 1997 and 2005 were in Tamil.[34] Tamil is used as a sacred language of Ayyavazhi and in Tamil Hindu traditions of Shaivism and Vaishnavism. According to a 2001 survey, there were 1,863 newspapers published in Tamil, of which 353 were dailies.

http://en.wikipedia.org/wiki/Tamil_language



இராமாயணத்தில் அனுமன் சீதையிடம், தான் ராவணனின் மாயை அல்ல உண்மையான ராமனின் தூதுவன் தான் என்பதை வழக்கமான, சீதைக்கும் அனுமனுக்கும் தெரிந்த தேவ பாஷையில் பேசாமல், மனித பாஷையில் அதாவது தமிழில் பேசி உணர வைத்ததாக வால்மீகி கூறுகிறார். ஒரு வேளை ராவணன் சீதையிடம் தமிழில் பேசமாட்டானோ?. ஆகவே தேவபாஷை என்பது முக்கியமானவர்கள் கற்றுத்தேற வேண்டிய மொழி என்பதும் மக்கள் 
வழக்கில் இருந்த மொழி தமிழ் என்பதும் தெரிகிறது.

http://thamizhan-thiravidana.blogspot.in/2011/09/69.html.

அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் ரகசிய மொழியின் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அது சமூக நன்மைக்காகவும் இருக்கலாம், சுயலாபத்திற்காகவும் இருக்கலாம். இன்றும் கூட நண்பர்களுக்குள் நான்கு பேர் கூடி விட்டால் அதில் இரண்டு பேர் கோஷ்டி சேர்ந்து கொண்டு ரகசியமாகப் பேசி மற்ற இருவரை  குழப்புவார்கள் அல்லது கலாய்ப்பார்கள். புரியாதவர்கள் மொக்கையாய், முட்டாளாய் உணருவார்கள்.  அதுமட்டுமில்லாமல் பெரியவர்கள் கூடி சில விஷயங்களில் முடிவெடுக்கும் போது சிறுவர்கள் மற்றும் தகுதி இல்லாதவர்களின் தலையீடு இல்லாமல் இருக்கவும் ரகசிய பாஷை தேவைப் படுகிறது.


மகாபாரதத்தில் ஒரு கட்டத்தில், அரக்குமாளிகையின்  நோக்கத்தை புரிந்து கொண்ட பீஷ்மர், பாண்டவர்களை காப்பாற்றுவதற்காக விதுரனிடம் அத்தகவலை சொல்லி, தருமனிடம் போய் சொல்லச் சொல்கிறார். விதுரனும் தருமனிடம் வந்து  தனிமையில் சொல்ல நினைக்கும் போது சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அப்பொழுது அவர்கள் இருவர் மட்டும் அறிந்த ரகசிய பாஷையில் தகவலைச் சொல்வதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.  ரகசிய மொழியின்  அவசியம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே தேவைப் பட்டிருக்கிறது.

இப்பொழுதும் தமிழ் நாட்டில் ஐம்பது வயதிற்கு மேற்ப் பட்டவர்களுக்கு "கதகமிகழ்" பாஷை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால் இந்தமாதிரி பாஷைகளுக்கு எழுத்துருவம் தேவையில்லை என்பதுதான் முக்கியமான ஒற்றுமை. இவ்வளவு ஏன்? எங்கள் வீட்டில் கூட ஒரு ரகசிய பாஷை உள்ளது. எங்கள் குடும்பத்தினர் மட்டும் பேசிக் கொள்வோம். எனது மகளும் மகனும் பேசினால் சமயத்தில் எங்களுக்கே புரியாது. (டிகோடிங் லேட்டாகும்)



நானும் எனது நண்பனும் (வனராஜ்)  அப்பொழுதான் "ஹாம்" லைசென்ஸ் (1972)வாங்கியிருந்தோம். ஏற்கனவே ஹாம்களுக்கென்று சில குறியீடுகள் இருக்கும். அதனால் அதை ஒட்டி ஒரு பாஷையை உருவாக்கிக் கொண்டோம். நானும் நண்பனும் (சந்தேகமில்லாமல் அறிவு ஜீவிகள்தான்) அக்காலத்தில் அதாவது எழுபதுகளில், எங்களிருவருக்கான  பாஷையில் பெண்களைப் பற்றிய கமெண்ட்களை மிக சகஜமாக பஸ்ஸின் நெருக்கத்தில் கூட அவர்கள் அறியாதவாறு பேசிக் கொள்வோம்.    அதில் சில முக்கியமான வார்த்தைகளைக் கூறுகிறேன் பின் பற்ற முடிகிறதா என்று பாருங்கள். டிஎக்ஸ், ஒய்யெல், பிஎஸ், கேங்க், புஷ்புல், பைடேங்க், ஆரெஸ்டி புரிகிறதா?. இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு எழுத்துருவையும் உருவாக்கி கடிதமெல்லாம் எழுதிக் கொண்டோம். அது பழைய கதை. தற்கால சினிமாவிலும் அந்த நுட்பம் பயன்படுத்தப் பட்டிருப்பதை காணலாம்.  ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் "ழ்மித ஷைபா" பேசுவார். "ல்தகா யய்செ  யாசைஆ  குக்ருஇ" என்பார்.

நண்பர்கள் குழுமியிருக்கும் போது ஒரு நண்பர் இன்னொருவருக்கு திடீரென்று "குட்மானிங்" சொல்வார்கள் அதற்கு அர்த்தம் "ஜிப்பை மூடுடா இடியட் " என்று அர்த்தம். இது போன்ற சில ரகசிய குறியீடுகள் ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் இருக்கும். மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் மாட்டின் விலையை தங்கள் விரல்களால் பேசிக் கொள்வார்கள். இதனால் விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும்  "விலை வைக்கும் " போக்கு தவிர்க்கப் படுகிறது. வியாபாரிகளும் ஒரு வித குறியீடுகளை தங்களது வியாபாரத்தில் பின் பற்றுகின்றனர். ஒரு பொருளின் அசல்விலையை குறியீடுகளால் குறித்திருப்பார்கள். வாடிக்கையாளரைப் பொறுத்து குறியீட்டைப் பார்த்து  லாபத்தை வைத்துக் கொள்வார்கள். இப்பொழுதெல்லாம் நிலையான லாபம் போதும் என்பதால் பார்கோட், மற்றும் க்யூ கோட்  போன்ற மெஷின்கள் மட்டும் பேசிக் கொள்ளும் மொழி முறைகளும் கையாளப் படுகின்றது.

ஆக அறிவாளிகளுக்கு, நடைமுறையில் உள்ள ஒரு மொழி தவிர்த்து தன்னைப் போன்றவர்கள் வட்டத்தில் மற்றவர்களுக்கு புரியாமல் புதிராகப் பேசி மகிழ, சன்டையிட, ரகசியங்களை பரிமாறிக் கொள்ள, தொழிலை பாதுகாக்க ஒரு மொழி மிகமிக அவசியமாகத் தேவைப் படுகிறது. தமிழ்ப் புலவர்கள் சாமானியனுக்கு புரியாமல் தங்களுக்குள் அடிக்கடி பாடியே சன்டையிட்டுக் கொண்டவர்கள் அல்லவா?  இன்றும் தமிழில் உள்ள பாடலுக்கு  பொருளுரை இல்லாமல் அர்த்தம் கொள்வது இயலாத காரியமாகத்தானே இருக்கிறது. 





மேலும் படிக்க...!

ஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய  பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெயர் இருப்பதை மறந்து விட்டு திராவிடன் திராவிடன் என்று எவனோ கூறியதை மனதில் ஏற்றுக் கொண்டு இன்னும் தெளிவுக்கு வராமல், ஆரிய சித்தாந்தத்தில் முழ்கியிருக்கும்  அரை வேக்காடுகளுக்கு சமர்ப்பனம்  இந்தக் கட்டுரை.

 காட்சிப் பிழை:

முதலில் அடிப்படையான சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வோம். 35எம்.எம் திரைப்படச் சுருளில் ஒரு செகண்ட் ஓடுவதற்கு 24 நிலைச் சட்டங்கள் (ஸ்டில் ஃப்ரேம்கள்) இருந்தால்தான் நிகழ்வின் செயல், வித்தியாசமில்லாமல் தெரியும். உதாரணமாக ஒருவர் ஆடையை மாட்டுவது போல் எடுத்தால் முழுச் சுருளையும் முன்னேற்ற திசையில் (பார்வர்ட் டைரக்சனில்,24fps) பார்த்தால்தான் உண்மை தெரியும். அதை விடுத்து பின்னேற்ற திசையில் (ரிவர்ஸ் டைரக்சனில்) பார்த்தால் ஆடையை கழட்டுவது போல் தெரியும். அவ்வாறு எடுக்கப் பட்டவைகளின் கலவைதான் கீழுள்ள தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.


அது மட்டுமல்லாமல் அதிலுள்ள ஒரு குறிப்பிட்ட  ஃப்ரேமை வைத்து அவர் ஆடையை கழட்டுகிறாரா அல்லது மாட்டுகிறாரா எனச் சொல்லவே முடியாது. அது போல் வரலாற்றின் குறிப்பிட்ட நிலைத் தகவலை வைத்து இப்படித்தான் தப்பாக கற்பிதம் செய்து, ஒவ்வொரு கால கட்டத்திலும்  யாராவது ஒருவர், மக்களை அறிந்தோ அறியாமலோ முட்டாளாக்கினார்கள். அந்த வகையில் அறியாமல் செய்த  அரை வேக்காடுகளில் முதண்மையானவர் பெரியார். 

ஆனால் அறிந்தே செய்வதற்கு,  மெக்காலேவால் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டவர்  மாக்ஸ்முல்லர். இந்தியாவிலிருந்து ஐரோப்பா சென்றவனை எதிர்த்திசையில் ஆராய்ந்து பார்த்தால் அங்கிருந்து வந்தவ (ஆரிய) னாகத்தான் தெரிவான். அதுவே அவனது மதத்தை பரப்புவதற்கு  சாதகமாக இருந்ததால் வரலாறாக மாற்றி விட்டான்.  ஆனால் ஒன்றை மறந்து விட்டான். மனிதனின் உடம்பிலுள்ள டிஎன்ஏ எனப்படும் சிறு துகள்களின் மூலம் தனி மனித வரலாறு மட்டுமின்றி, ஒட்டு மொத்த மனிதகுலத்தின் வரலாற்றையே அறிய முடியும் என்பதை. அதே மாக்ஸ்முல்லர் தன் வாழ்நாளின் கடைசிக் காலங்களில் உலகத்தில் கடவுளால் முழுமையாக படைக்கப் பட்ட  நாடு இந்தியா என்றும். மதங்களுக்கெல்லாம் தாய்  மதம் இந்துமதம் என்றும், தத்துவ பேரறிஞர்கள் நிறைந்த நாடு இந்தியா என்றும், தலை சிறந்த காவியம் மகாபாரதம் என்றும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார்.

"If I were to look over the whole world to find out the country most richly endowed with all the wealth, power, and beauty that nature can bestow – in some parts a very paradise on earth – I should point to India............................................................."  


இந்தியாவிற்கு வந்தவுடன் இந்துமத தொண்மையில் ஆச்சரியமும், இந்துமதத்தின் அறிவியலில் வியப்பும் அடைந்த  சில ஆங்கில கவர்னர்களும், ஐரோப்பிய அறிவியலாரும் தங்களுடன் எப்பொழுதும் சில மொழி பெயர்ப்பாளர்களையும் ஓவியர்களையும் ஐரோப்பாவில் இருந்தே அழைத்து வந்து இங்குள்ள அறிவியல் பொக்கிஷங்களை நகல் எடுத்தனர். சிலரோ தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந்து மூலத்தையே அள்ளிச் சென்றனர். உ.ம்-வீரமாமுனிவர்(1710), யுவான் சுவாங்(660). தங்களால்  மொழி பெயர்க்க முடிந்தவற்றை எல்லாம் அக்காலத்தில் கிரேக்க மொழியிலும் ஆங்கிலத்திலும், சீன மொழியிலும் மொழி பெயர்த்து நூற்களாக்கி தங்கள் நாட்டின் நூலகத்தில் அடுக்கி வைத்துக் கொண்டனர். ஆங்கிலேயர்களே தமிழின் ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்தனர்.

 ''According to Xuanzang's biography he returned  with, "over six hundred Mahayana and Hinayana texts, seven statues of the Buddha and more than a hundred sarira relics''.(விக்கி)

''Max Müller wrote both scholarly and popular works on the subject of Indology and the Sacred Books of the East, a 50-volume set of English translations, was prepared under his direction.''

ஐரோப்பியர்கள் இங்கு வந்து பொருட் கொள்ளை மட்டுமின்றி அறிவுக் கொள்ளையும் நடத்திவிட்டு இங்கிருப்பவனை முட்டாளாக்கி விட்டார்கள். யோசித்துப் பாருங்கள், மேற்கத்திய அறிவியலின் வயது கடந்த ஆயிரம் வருடங்களுக்கு முந்தியதுதான். அப்பொழுதுதான் அவர்களின் இந்திய பிரவேசம் நிகழ்ந்தது என்பது வரலாற்றுச் சான்றாகும். கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்தினுடன் கொசுறாக இலக்கிய, அறிவியற் கொள்ளையும் நடந்தது. அது மட்டு மில்லாமல் நமது மதத்தின் தொண்மையை அழித்து, வரலாற்றை மாற்றி அமைத்தனர். இருபதாயிர வருட பழமை கொண்ட இந்து மதத்தின் வரலாற்றை நான்காயிர வருடங்களுக்குள் முடக்கினர். 

இருபதாயிர வருட பழமை கொண்டதா இந்து மதம்?

 ஏன் இருக்க முடியாது?. ஒரு தனி மனிதனின் வரலாறு எப்படி, அவன் பிறந்தது முதல் கணக்கிடப்படுகிறதோ அது போன்றே ஒரு மதத்தின் வரலாறும் அம்மக்கள் தோன்றியதிலிருந்து கணக்கிடப் பட வேண்டியதாகும். மதம் என்றால்  என்னவென்று அறியாதவர்களின் உளறல்தான் வளைத் தளமெங்கும் காணப் பெறுகிறது. மதம் என்பது இயற்கையின் தேர்வு. ஒரு குழுமத்தின் வாழும் முறையாகும். அம்முறைக்கு பின்னர் மக்கள் இட்ட பெயர் மதம். மதம் தோன்றிய காலத்தில் சமூக அமைப்பிற்காகவும். சமூக பாதுகாப்பிற்காகவும் சட்டதிட்டங்கள் இயற்றப் பட்டன. ஜாதி என்பது தொழில். இந்தியாவில் சமூக பாதுகாப்பிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாததால் பொழுதுபோக்கிலும், கொண்டாட்டங்களிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
அதில் வாழ்பவர்களை விட வாழும் இடத்தின் மண், மரம், காற்று, சூழல், மொழி ஆகியவற்றின் பங்களிப்பு அதிகம், ஏனெனில் அவைதான் நிலைத்து நிற்பவை. ஒருவன் பிறக்கும் போதிலிருந்து இறக்கும் வரை எல்லாச் செயல்களிலும் மதத்தின் தலையீடு இருக்கின்றது. உதாரணமாக இந்து மதத்தில் ஒருவன் பிறக்கும் முன்பிருந்து, அதாவது அவனது தாய் தந்தையரின் சாந்தி முகூர்த்தம்  தொட்டு, வளைகாப்பிலிருந்து, பிறக்கும் நேரம் குறிக்கப்படுதல் என ஆரம்பித்து, சேனைப்பால் ஊற்றுவதிலிருந்து, கடைசியில் பால் ஊற்றுவதுவரை மட்டும் இன்றி  அமாவாசை, திதி என்று இறந்த பின்பும் அவனை அறியாமலே தொடர்கிறது. 

ஆகவே மதம் என்பது மண்ணிற்கு சொந்தமானது. (மண்ணை மாற்றினால் மதத்தை மாற்றலாம்.) அதில் கடவுளின் பங்கு  மிகக் குறைந்த  சதவீதம்தான். அதுமட்டுமில்லால் இந்து மதம் என்பது  மைய அதிகாரம் கொண்ட சர்வாதிகார மதமும் அல்ல. முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகளால் ஆளப்படும் மதமும் அல்ல. அவர்களுக்கு யாரும் கட்டளை பிறப்பிக்க முடியாது. முற்றிலும் சுதந்திரமானது. (Open source) அதனால்தான் அது மதங்களுக்கெல்லாம் தாய் மதமாக விளங்குகிறது. புத்தம், ஜைனம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கெல்லாம் மூலமாக விளங்குகிறது. இதை உணராமல் இன்று கடவுளை மட்டும் முன்னிறுத்தி மதத்தைப் பரப்புவதும், துவேசிப்பதும் நடை பெறுகிறது. மதம் மாறுகிறேன் என்று தனக்கும் இந்த மண்ணிற்கும் துளியும் சம்பந்தமில்லாத சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக ஆங்கில மொழியைப் பின்பற்றுவதால் குளுமையான வரவேற்புக்கு பதிலாக, பைத்தியக்காரத்தனமாக சூடான (Warm welcome) வரவேற்பை அளிக்கிறார்கள். கேட்டால் அவனது பாணியில் பேச வேண்டுமாம்.மொழியை மாற்றும் போதே இவ்வளவு பைத்தியக்காரத் தனம் என்றால் மதம் மாறும் போது கேட்கவே வேண்டாம்.

இன்றைய மனித இனத்தில், ஆப்பிரிக்காவை ( Out of Africa) தவிர்த்து உள்ள 95 சதவீத மனித இனத்தின், மூதாதையர் தமிழர்தான் என நிரூபிக்கப் பட்டுள்ளது. (தமிழனின் முன்னோடியும் ஆப்ரிக்கா தானே என வாதிடலாம். ஆனால் இங்கு  மனித இனம் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்தான் தமிழ் மண்ணிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளது ) மனித இனம் 50,000 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் இருந்துதான்   கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளது என்ற உண்மையை பல் வேறுபட்ட நேஷனல் ஜியோகிராபி, டிஸ்கவரி, பிபிசி போன்ற குழுமங்களாலும் ஸ்டீபன் ஓப்பன்கியுமர் என்ற  தனி நபர்களாலும் மேற்க் கொள்ளப் பட்ட ஜெனிட்டிக் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றதை முதலில் அறிந்து கொண்டு, நமது தமிழ்ப் பகுத்தறிவுகள் புதிய வியூகம் அமைத்துக் கொண்டு வரட்டும்.


 இந்த உண்மையை  தமிழ்ப் பகுத்தறிவுகளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏற்றுக் கொண்டால் இத்தனை காலங்களாகக் கட்டிய ஆரிய பகுத்தறிவு மணற் கோட்டைகள் தகர்ந்து விடுமே, வெட்டவெளியில் வரலாற்றின் அகதிகளாக அலைய நேரிடுமே, பாமரன் கூட பார்த்துச் சிரிப்பானே, இல்லாத ஆரியனும் இரவில் வந்து தூக்கத்தைக் கலைப்பானே என்ற எண்ணத்துடன் அத்தனை கொள்கைகளையும் மாற்ற வேண்டியதிருக்கும். பின்னர்  அந்த மூஞ்சியை எப்படி அவர்களால் வெளிக்காட்ட முடியும் எனத் தெரியவில்லை. ஜெனிடிக் அறிவியல் இந்த தமிழ்ப் பகுத்தறிவுவாதிகளின் மூஞ்சியில் காறித் துப்பியுள்ளது. ஏனெனில் தமிழ்ப் பகுத்தறிவுகளின் பள்ளிக்கூடங்களின் முதல் வார்த்தையே ஆரியம் தானே. இனிமேல் எவனாவது ஆரியம் பேசினால் காறித் துப்பாவிட்டாலும் பரவாயில்லை கைகொட்டி சிரியுங்கள், அப்பொழுதான் சக தமிழனின் மானம் காக்கப் படும், அறியாமை நீக்கப் படும்.

நேஷனல் ஜியாகிராபியின் ஜெனிடிக் பரவல் பற்றிய படம்.

"கல் தோன்றா மண் தோன்றா காலத்து  வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" தமிழன் என்பதில் மிகைப்படுத்தல் ஏதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகிவிட்டது. தமிழனைப் பற்றி அறிய தமிழனை, தமிழை, அவனது இலக்கியத்தை வரலாற்றை  முதலில் புரிந்து கொள்ள வேண்டும். விக்கியும், கூகுளும் தமிழைப் பொறுத்தவரை அரைகுறைதான். ஏனெனில் ஏற்றப் பட்ட தகவல்கள்தான் கிடைக்கின்றன். தமிழ்மொழி 2008 ல் 264 மொழிகள் கொண்ட விக்கிபீடியாவில் தமிழ் 15,000 கட்டுரைகளுடன் 67 வது இடத்தில் இருந்தது. தெலுங்கு 39 வது இடத்தில் இருந்தது. இன்றைய நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் அது போதாது. அத்தளங்களுக்கு தகவல் ஏற்றுவதும் சரியான தமிழனாக இருந்தால்தான் உண்மையான தகவலைப் பெறமுடியும். தகவல் ஏற்றுவதற்கு ஆட்களும் இல்லை அக்கறையும் இல்லை.  உள்ளுரிலே எதிரிகளிருக்கும் போது உண்மையை எவ்வாறு உரைக்கமுடியும்.

அவ்வளவு தூரம் வரலாற்றை ஆய்வு செய்ய அக்கறையும், அறிவும் இல்லை என்றால் குறைந்தது ஒரு முவாயிரம் வருடங்களுக்கு முன்னுள்ள தகவலை வைத்தாவது தர்க்க ரீதியாக யோசித்தாலே தெரியும் தமிழன் இந்துவாகத்தான் இருந்திருக்கிறான். சங்ககால இலக்கியத்தில் இருந்து தெரிவது என்னவென்றால் கடந்த பத்தாயிரம் வருடங்களாக தமிழன் இந்துவாகத்தான் இருந்திருக்கிறான்.

ஜெனிட்டிக் ஆராய்ச்சியின் முடிவுகளோ 75,000 வருடங்களாக இந்திய தென் தீபகற்பத்தில் தமிழன் இருந்திருக்கின்றான் எனத் தெரிவிக்கிறது. ஏனென்றால் 75,000 வருடங்களுக்கு முன் சுமத்ரா தீவில் நிகழ்ந்த டோபா எரிமலை வெடிப்பிற்கும், சங்ககால இலக்கியங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் முப்புரம் எரிப்பிற்கும், (திரிபுரம் எரித்த விரிசடையன்)  அதன் விளைவாக இந்தியா, தென் மேற்கு, மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதும்  படர்ந்த மூன்று மீட்டர் உயர சாம்பலுக்கும், உடலெங்கும் சாம்பலை பூசிய ஈசனுக்கும்  தமிழக ஆன்மீக (விபூதி) சாம்பலுக்கும்   சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. 

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பத்திஒன்பது நாடுகள் இருந்துள்ளது. (நாற்பத்தொன்பது இல்லை என்றாலும் ஏழு என்றாவது வைத்துக் கொள்ளலாம் அல்லவா?.) மற்றும்  பஃறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. என்றும், குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது என்றும் நமது பழந்தமிழ் நூல்கள் மூலம் அறியமுடிகிறது. எயிதென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4000 இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முதுகுறுகு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டதாக அறிகிறோம். இந்த மாதிரியான ஆராய்ச்சிகளை வட இந்தியர்கள் எதிர்க்கிறார்கள். தமிழக அரசும் அக்கறை கொள்வதில்லை.

 சங்ககால பாடல்களில் தமிழன் குறிப்பிடும்  பஃறுளியாறு உட்பட்ட பெரும் நிலப்பரப்பு  ஆகியவை அழிந்து மிச்சம் உள்ள நிலப்பரப்பே இன்றுள்ள தமிழகம் என அறியும் பொழுது கடற்கோளால் அழிந்தது எவ்வளவு என்பதும், எவ்வளவு காலத்திற்கும் முன்பு என்பதும் அதனால் மனித இனத்திற்கு ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதும் இது வரை கணக்கிட முடியவில்லை. மக்களையும் அவர்களது இலக்கிய படைப்புகளையும் கடல் விழுங்கி விட்டது. கிடைத்த தகவல்களை வைத்து எழுதப் படும் வரலாறும் தற்காலிக மானதாகத்தான் இருக்கும். ஒரு திரைப் படத்தின் ஏழெட்டு ஸ்டில்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய அந்த  திரைப் படத்தின்   முழுக்கதையும் கற்பனையில்  எழுதினால் எப்படி இருக்குமோ அது போல்தான் வரலாறும் இருக்கும்.
கூறு கெட்டவர்கள் இருவர் ஒரு திரைப்படத்திற்குச் சென்றனராம் முதலில் அந்த ஜெமினி இரட்டையர்கள் குழலூதுவதைப் பார்த்துவிட்டு  உறங்கத் தொடங்கியவர்கள் கடைசியில் அதே இரட்டையர்கள் குழலூதி முடிப்பதை பார்த்து, எழுந்தார்களாம். அவர்களிடம்  கதை கேட்டால் இரண்டுமணி நேரமாக இரு சிறுவர்கள் குழலூவதுதான் கதை என்பார்கள். அது போன்றதுதான் அரைகுறையாளர்கள் எழுதும் வரலாறும் இருக்கும்.   கீழுள்ள தளத்தை படிக்கும் முறை அறிந்து படித்தால் உலக மனித இனத்தின் வரலாற்றைப் பற்றிய முழுமையான  விளக்கம் கிடைக்கும்.  


மனித இனத்தின் வரலாறு மேற்கண்ட தளத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த ஆராய்ச்சியில் தமிழ்,  சமஸ்கிருத மொழி இலக்கிய ஆராய்ச்சியும்,வரலாற்று ஆராய்ச்சியும் கலந்து இருந்தால் முழுமையான ஆராய்ச்சியாக இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள தளம். கிழக்கு ஆசியா முழுவதும் தமிழனின் ஜீன்தான் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் இந்த அரைகுறைகள் தைமூரின் படையெடுப்பால் அங்கிருந்து ஜீன் இங்கு கலந்தாக நம்பிக்கொண்டு இருக்கின்றனர். கொரியா, ஜப்பான் மொழிகளில்  தமிழ் வார்த்தைகளின் கலப்பின் மர்ம முடிச்சு அவிழ்ந்து விட்டது.


ஆங்கில மாதங்களின் பெயர்களின் மூலம்  லத்தீன் என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் அந்த  லத்தீன் பெயர்களின் மூலத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் மிகுந்த சம்பந்தம் இருப்பதைக் காணலாம். உதாரணத்திற்கு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்  என்பதை முறையே சப்தம், அஷ்டம், நவம், தசம் என்பதிலிருந்து வந்தவைதான் என்று சொல்வதற்கு பெரிய மொழி ஆராய்ச்சி தேவை இல்லை. ஆங்கிலமாதங்களின் வரிசை மாறி இருப்பதற்கு பெரிய வரலாறு உள்ளது அது தனிக்கதை .இந்தியாவின் வானியல் தான் உலகெங்கும் பரவியுள்ளது  என்பதும் பரவியமுறையும் கீழுள்ள தளத்தில் காணலாம்.


ஆப்ரிக்காவின் காமரூனின் மொழியும் கிட்டதட்ட தமிழ்தான். ஹங்கேரி மொழியில் 30 சதவீதம் தமிழ் வார்த்தைகள் இருப்பதின் காரணமும் தெரிந்து விட்டது. இந்தோனேஷியா, பாலி, சுமத்ரா  ஆகிய தீவுகளில் இராமாயணமும் மகாபாரதமும் மிக நுணுக்கமான தகவல்களுடன் பரவி உள்ள விதம், இதிகாசங்களின் மூலமே, தமிழும் தமிழனும்தான் என்பதைக் கூறுகிறது. 


இதன் முடிவுகளால் அறியப்படுவது என்னவென்றால் உலகின் எல்லா மதங்களுக்கும்  அடிப்படை இந்துமதம் தான். உடனே இந்து என்ற பெயர்க் காராணத்தை  ஆராயக்கூடாது. பெயர் எதுவாக இருந்தால் என்ன, மதம் என்பது இருந்திருக்கிறது. எவனும் தனக்குதானே பெயர் சூட்டிக் கொள்வதில்லை. என்னதான் பெயர் சூட்டிக் கொண்டாலும் அடுத்தவன் வைக்கும் பெயர்தான் சில சமயம் நிலைக்கும். உதாரணமாக சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி என்பதெல்லாம் அடுத்தவர் வைத்த பெயர்தான்.  ஏனெனில் பெயரின் தேவையும் அடுத்தவர்களுக்காக ஏற்பட்டதுதான். உதாரணமாக தனித் தீவில் தன்னந்தனியாக சகல அதிகாரங்களோடு திரிபவனுக்கு எதற்கு பெயர்?. இந்திய தீபகற்பத்தில் ஏகபோகமாக பல்லாண்டுகாலம்  இருந்த மதத்திற்கு எதற்கு பெயர்?. அதிலும் மதுரை நகரில் பலருக்கு சொந்தப் பெயரை விட அடுத்தவன் வைத்த பெயர்தான் விளங்குகிறது. ஆக பெயரைப் பற்றிய வரலாற்றை ஆராய்வது எந்த வகையிலும் உதவாது.

இந்து என்றால் ஒருவன் பாரத் என்கிறான், ஒருவன் சிந்து என்கிறான், ஒருவன் இண்டிஸ் என்கிறான், ஒருவன் ஹிந்து என்கிறான் , வக்கிரம்  பிடித்தவனோ இந்து என்றால் திருடன் என்கிறான். அட இவ்வளவு ஏன் தமிழனின் பெயர் தமிழனே அல்ல தமிழ் என்ற பெயரே தமிழில் இல்லை என்பார்கள். 

சங்ககால இலக்கியங்கள் சுமார் 3000 வருடங்களுக்கு முந்தியது என்பதற்கு தரவுகள் தேவை இல்லை. சங்ககால தமிழ் இலக்கியங்களில் மகாபாரதம் மற்றும் இராமாயணக் குறிப்புகள் உள்ளதை  அறியும் பொழுது இதிகாசங்களின் காலம் சங்ககாலத்திற்கும் மிகப் பழமையானது எனத் தெரிய வருகிறது. அதாவது சுமார் 5000 வருடங்களுக்கும் மேலான பழமையானது என வைத்துக் கொள்ளலாம். புறநானூற்றுப் பாடல் ஒன்றிலுள்ள இராமாயண குறிப்பை இங்கே காணலாம். அவசியம் இதைப் படியுங்கள். பாடலுக்கு பரிசளித்த மன்னனின் கொடையையும், அதை  அனுபவிக்கத் தெரியாமல் பரிதவிக்கும் தனது சுற்றத்திற்கு, உவமானமாக ஒரு நுணுக்கமான இராமாயணக் காட்சியை விவரிக்கும் விதம் அருமை.  இந்தக் காலத்தில் உரைநடை பாணியில் உவமானம் சொன்னாலும் புரியாமல் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு உயிரை வாங்கும் " கோவில் புலவர்"களும் இருக்கும் போது  அந்த பரிசளித்த மன்னனை நினைத்தால் புல்லரிக்கிறது.


இந்துமதத்தின் காலத்தை இன்னொரு முறையிலும் கணக்கிடலாம். அதாவது இதிகாசங்களில் உள்ள குறிப்புகளை கொண்டு அதன் காலம் சுமார் 7000 வருடங்களுக்கு முந்தியது என அறிவியல் கூறுகிறது. ஏனெனில் இதிகாசங்களில் இராமர் பிறந்தது, பட்டாபிஷேகம் செய்தது, மற்றும் அனைவரின் பிறந்த நேரமும் (ஜாதகமும்) உள்ளது. அது போல்  மகாபாரத கதை நாயகர்கள் பிறந்தது , போர் நடந்தது போன்ற  ஒவ்வொரு நிகழ்வும் கோள்களின் நிலையைக் கொண்டு குறிப்பிடப் பட்டுள்ளது. கோள்களின் நிலையைக் கொண்டு காலத்தை அறியும் இன்றைய நவீன மென்பொருள் கொண்டு  கணக்கிடும் போது, அவைகளும் சுமார் 7000 வருடங்களுக்கு முந்தியது எனக் காட்டுகிறது.

The planetary positions on 16th October 5561 B.C., the date of commencement of the Mahabharat War, have been calculated and known [Dating of the Mahabharat, by Dr. P.V. Vartak]. Therefore, calculating further backwards for the astral  combination noted above, the date  concludes to be 4th December 7323 B.C. On this date, Saturn was at 205 deg., Jupiter at 94 deg., Mars between 283 and 298 deg., Rahu at 179 deg. and Sun at 2 degrees. 4th Dec. 7323 therefore is the date of birth of Rama, when the aforementioned 4 planets exalted. Venus is always within 47 degrees from the Sun, and might be in Pisces in an exalted state. Thus Rama's date is confirmed. 



ஏழாயிரம் வருடங்களுக்கு முன் கோள்களைப் பற்றிய அறிவுடன் அதிலும் ராகு கேது மற்றும் திதி(ராமநவமி) ஆகியவை பற்றிய தெள்ளிய அறிவுடன்  அவ்வளவு முன்னேறிய சமூகம் அங்கே நிலவி இருக்கும் என்றால் ,  அந்த நிலைக்கு அச்சமூகம் வளர எடுத்துக் கொண்ட காலத்தின் அளவு சுமார் 10000 வருடங்களுக்கு மேலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மகாபாரதத்தில் தமிழனைப் பற்றிய குறிப்புகளும் காணப் படுகிறது. கடைச் சங்கம் தோன்றி 3000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதென்றால் முதற்சங்கம், இடைச் சங்கம் ஆகியவை சுமாராக 10000 வருடங்களில் தோன்றியவையாக இருக்க முடியும். ஆகவே இந்துமதம் 20,000 வருடங்கள் பழமையானது என்பதில் சந்தேகம் இல்லை.

 சமஸ்கிருதம்  எனும் தேவ பாஷை எப்படி உருவானது ?. 
அடுத்த பதிவில் பார்ப் போம்.(கீழே கிளிக் செய்யவும்)

மேலும் படிக்க...!
top