இறவாமை ( IMMORTALITY). பாகம் 2

இறவாமை ( IMMORTALITY). பாகம் 1

யாராவது நீண்ட ஆயுளைப் பற்றி பேச ஆரம்பித்தால் நமக்கு நமட்டுச் சிரிப்புடன் பல கேள்விகள் எழும், இவருக்கு வயது என்ன நூறா என்று கேட்பார்கள். பஸ்ஸை தவற விட்டவர்கள் அடுத்த பஸ் வரும் வரை ஏன் அந்த பஸ்ஸை தவற விட்டோம் என அலசலாம் அல்லவா. அது போன்ற அலசல்தான் இது.

நிகழ்காலத்தில் 138 வருடங்கள் வாழ்ந்தாக கூறப் படுபவர் ஹபீப் மியான் என்ற ரஹீம்கான் என்பவராவர். இவரது ஆதாரங்களின் படி இவரது பிறந்த தேதி 20 மே மாதம் 1878 ஆம் வருடம் என அறியப் படுகிறது.



இவர் ஆங்கிலேயே ஆட்சியின், இந்திய இசைக் குழுவில் பணியாற்றி, இவரது ஆயுள் முழுமைக்கும் ஓய்வூதியம் பெற்று வந்தது குறிப்பிடத் தக்கது. இவர் கடந்த 2ந் தேதி ஆகஸ்ட் 2006ஆம் வருடம் இறந்ததாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர் தனது கடைசி 50 வருடங்களை கண்பார்வை இன்றி கழித்தார். அவரது தொழில் இசைக் கருவி கிளாரினெட் (துளைக்கருவி) வாசிப்பது ஆகும். (3)அவரது உணவுப் பழக்கங்களில் ஏதும் தனிச் சிறப்பு இல்லை. ஆனால் சராசரியாக ஒரு நாளைக்கு 15 டீ குடிப்பாராம்.(4)
அவருக்கு ஜெய்ப்பூர் மக்கள் 137 வது வயதிலே ஒரு வாழ்த்துப் பத்திரம் வாசித்து அளித்தார்கள்.

137 வது வயதிலே ஒரு வாழ்த்துப் பத்திரம்

அடுத்ததாக உலகிலேயே ஜீன் கால்மெண்ட் என்ற பெண் ஒருவர்தான் நீண்ட ஆயுளுடன் 122 வருடங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது.ஒரு ஐம்பது பேர்கள் 114 வயது வரை வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது.( அதில் 90% பேர்கள் பெண்கள்)

ஜீன் கால்மெண்ட்


பஸ்டர் மார்டின். பிரான்சில் 1906. பிறந்தவர் வயது 104. இவர் ஒரு ஓட்டப் பந்தய வீரர். இன்றும்ஒரு குழாய் ரிப்பேர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு 17 மக்கள். 97வது வயதில் வி ஆர் எஸ்ஸில் வந்துவிட்டு வாழ்க்கை போரடிக்கவே மீண்டும் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.


பஸ்டர் மார்டின்

இவருடைய நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன?

இவர்தான் உலகத்திலேயே வயதான மராத்தான் சாம்பியன். முதியோருக்கான 5 கிலோமீட்டர் , 10 கிலோமீட்டர், அரை மராத்தான் போட்டிகளில் இவருடைய சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப் படவில்லை. இன்றும் முதியோருக்கான போட்டிகளில் கலந்து கொண்டு ஓடுகிறார். லண்டன் மராத்தானுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது பழைய செய்தி. ஆயுளின் ரகசியம் ஏதுமில்லை என்கிறார். இவருடைய ஆரோக்கியத்தை சோதனை செய்த மருத்துவர்கள் இன்னும் 20 வருடத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.

தமிழ் நாட்டில் 128 வயது வரை ஒரு பெண்மணி வாழ்ந்ததாக செய்தி நாளிதழில் பார்த்திருக்கேன். அது போல் ஆடவர் ஒருவர் 115 வயது வரை வாழ்ந்ததாகவும் பிறந்த வருடத்திற்கான ஆதாரமில்லாத தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. அவர் ஒரு பேட்டியின் போது அவரது முக்கிய பழக்கங்களில் இரண்டைக் குறிப்பிட்டிருந்தார். அது டீயும், பீடியும் என்பதுதான் விஷேசம் . தற்பொழுது ராமேஸ்வரத்தில் ஒரு மீன்கடையில் மீன் வெட்டும் வேலை செய்பவர் ஒருவருக்கு 102 வயதாகிறதாம். எங்கள் குடும்பத்தில் எனக்கு தெரிந்த வகையில் தாய் வழிப் பாட்டியும், தகப்பன் வழி பாட்டியும் முறையே 100 ,92 வருடங்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் உணவுப் பழக்கங்களில் முக்கியமாக குறிப்பிடும் விஷயம் ஏதுமில்லை, சராசரி உணவுதான்.

எந்த இனம்? எந்த நாடு?

(WHO)உலக சுகாதார அமைப்பின் தகவல்படி ஜப்பானில் வாழ்பவர்கள்தான் மற்ற எந்த நாட்டவரையும் விட ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ்கிறார்களாம். அவர்களின் (DALE (Disability Adjusted Life Years )அதாவது நோயில் படுத்த காலத்தை தவிர்த்து) கணக்குப்படி உலகிலேயே அதிக சராசரி ஆயுள் கொண்ட நாடு ஜப்பான் ஆகும். அதன் மக்களின் சராசரி ஆயுள் 74.5 வருடங்களாகும். அடுத்து வருவது முறையே ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்வீடன், இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், ஸ்விட்சர்லாந்து, மொனாகோ, ஆண்டோரா. இதில் இந்தியா 139 வது இடத்தில் 64.7 வருடங்களுடன் உள்ளது. (எனகென்னவோ இது சற்று மிகைப் படுத்த்ப் பட்டதாக தெரிகிறது. 56 க்கு மேல் இருக்காது.)

ஆனால் எல்லா நாடுகளிலும் பெண்களின் சராசரி ஆண்களை விட 5 லிருந்து 10 வரை அதிகமாக உள்ளது. ரஷ்யாவில் இந்த வித்தியாசம் அதிகமாக 10 வருடங்கள் உள்ளது. இந்தியாவில் இது 5 க்குள்தான் இருக்கிறது.

பொதுவாக ஆண்கள் பெண்களை விட அதிகப் பிரச்சினைகளை (Risk) வாழ்க்கையில் சந்திப்பதால் அவர்களின் ஆயுளில் குறைவு ஏற்படலாம். ஆனாலும் இந்த ரஷ்யப் பெண்கள் விவகாரம் அதை மறுஆய்வு செய்ய வைக்கிறது. இதை வைத்துப் பார்க்கும் பொழுது குடும்ப அமைப்பில் யாருக்கு பாசமும் ஈடுபாடும் அதிகம் இருக்கிறதோ அவர்கள் நீண்ட ஆயுள் உள்ளவராக இருக்கிறார் என்று கூட வைத்துக் கொள்ளலாம்(5). அல்லது தெய்வ நம்பிக்கை 5 வருடங்களைத் தருகிறது எனலாம். அல்லது தொட்டனைத் தூறும் மணற்கேணியோ என்பதற்கிணங்க உயிரைத் தோண்டத் தோண்ட(அதாவது உற்பத்தி செய்ய செய்ய) உயிர் ஊறுகிறதோ?

எந்தநாட்டின் மக்கள் அதிக ஆயுள் உள்ளவராக இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் பூகோள அமைப்பின் முக்கியத்துவம் ஏதும் பங்கு வகிக்கிறதா எனக் கண்டு கொள்ளலாம். அந்த வகையில் பார்த்தால் ஜப்பான் நாட்டினர் நீண்ட ஆயுளுடன் இருப்பது தெரியவருகிறது. தனி நபர் சராசரி ஆயுள் இங்கு அதிகம். 100 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடும் அதுதான். அதே இனமான மங்கோலியர்களாகிய பர்மியர்கள், கொரியர்கள், சீனர்கள் எல்லோருக்கும் இந்த பண்பு இல்லாததால் இது முற்றிலும் இடம் சார்ந்த விஷயம்தான் என்பது புலனாகுகிறது.

ஆக இடத்தில் என்ன இருக்கிறது.

ஜப்பான் ஒரு தீவுக்கூட்டமாக இருப்பதால், உணவு கடல் சார்ந்த உணவாகத்தான் இருக்கமுடியும். நீச்சல் ஒரு அவசியத் தேவை. எரிமலைகள் அதிகம் உள்ள நாடு என்பதால் புது மண்ணு, புது நாத்து, புது நெல்லு என இது ஒரு காரணமாக இருக்குமோ.(6)

சரி ”வயதாவது” என்றால் என்ன?

ஆராய்ச்சியாளார்கள் இது பற்றி ஆய்ந்து பலவிதமான கொள்கைகள் சொன்னாலும் இரண்டு கொள்கைகள் மட்டுமே ஓரளவுக்கு ஒத்து வருகிறது. நமது ஜீனுக்குள் செல்களில் பதிந்து வைக்கப் பட்டுள்ள பலதரப் பட்ட உயிரியியல் கடிகாரங்களின் மூலம் நமது ஆயுள் முடிவு செய்யப் படுகிறது என்று ஒருபிரிவினரும், நாம்வாழும் காலத்தில் ஏற்படும் செல்களின் இழப்பும் தேய்மானமும், அதனால் சேரும் அசுத்த, நச்சுப் பொருட்களின் அதிகரிப்பும் ஆயுளைக் குறைக்கிறது என்று ஒரு பிரிவினரும் கூறுகின்றனர்.

யார் ஆரோக்கியமானவர்கள்

உலகில் வடகிழக்கு ஆசியர்கள்தான் அதாவது (ஈரான் அதை ஒட்டியுள்ள வடக்குப் பகுதிகள் தான்) வடகிழக்குப் பகுதியும் அதை ஒட்டியுள்ள நாட்டின் மக்கள்தான் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்பதாக அறியப் படுகிறது.. “ஆமாம் பெரிய பாக்தாத் பேரழகி” என்பார்களே ஞாபகம் வருகிறதா?. ஆனாலும் அழகு ஆரோக்கியம் இவை இரண்டுக்கும் நீண்ட ஆயுளுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் ஜெர்மானியர்கள் உருவத்தில் பெரியவர்களாக இருக்கிறார்கள், அவர்களின் சராசரி உயரம் ஆறடி . எல்லா மிருகங்களும் கண்டு அஞ்சும், சிங்கம் எவ்வளவுதான் அழகாகவும் கம்பீரமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலும் அதற்கு ஆயுள் என்னமோ அற்பம் தான் அதாவது 25 வயதுக்குள்தான்.

மிகக் குறைந்த ஆயுள் உள்ளவைகளின் பொதுவான தன்மைகள் என்று பார்க்கும் போது அவைகளின் இதயத்துடிப்பில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மிக அதிகமாக இதயத்துடிப்பு இருந்தால் அவைகளின் ஆயுள் குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆயுள் இதயத்துடிப்பிற்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது.(7)

(நேர் விகிதம் என்றால் ஒன்று கூடினால் மற்றொன்றும் கூடும், எதிர் விகிதம் என்றால் ஒன்று கூடினால் மற்றொன்று குறையும்.)

மெலிந்த உடலா கனத்த உடலா?

இங்கும் உறுதியான முடிவை எட்டமுடியவில்லை. ஒல்லியான தேகம் கொண்ட நாய் 15 வருடங்கள்தான் வாழ்கிறது ஆனால் கனத்த உடலமைப்பு கொண்ட யானை 60 வருடங்கள் வாழ்கினறன. மனிதரில் ஒல்லியானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பது போல் தோன்றினாலும் சராசரி உடலமைப்பு உள்ளவர்களையும் ஒல்லியானவர் பட்டியலில் சேர்த்துவிடுவதால் கணக்கீட்டில் அந்த தவறு ஏற்படுகிறது. மெலிந்த உடலமைப்பு உள்ள நன்பர் ஒருவர் தினமும் நடைப் பழக்கமும் உள்ளவர் திடீரென்று ஒரு நாள் மாரடைப்பில் இறந்து விட்டார். அவருக்கு வயது 54, எடையோ 56 கிலோ தான். இன்னுமொரு நன்பர் 60 வயதில் 105 கிலோ எடையுடன் நடப்பதற்கே சிரமப் படுகிறவர் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறார். ஆனாலும் நீண்ட ஆயுள் என்பது சராசரி உடலமைப்பை விட கூடும் எடைக்கு, எதிர்விகிதத்தில் உள்ளது என்பதையும் கஷ்டப் பட்டு ஒத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.(8)

உடற்பயிற்சி நீண்ட ஆயுளுக்கு உதவிடுமா?

உடற்பயிற்சி உதவிடுமா என்றும் கூற முடிய வில்லை.ஏனென்றால் இது உன்மையாக இருக்கும் பட்சத்தில் விளையாட்டு வீரர்களும் உடற் பயிற்சியாளர்களும் தான் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும். ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு ஹாக்கி விளையாட்டு வீரர் மாரடைப்பால் இறந்த தகவல் செய்திதாளில் வந்துள்ளது. விளையாட்டு வீரர் தினசரி சாதாரண மனிதனைக் காட்டிலும் தீவிர பயிற்சி உள்ளவர் அவருக்கே இந்த நிலைமையா?. அதிலும் குறிப்பாக நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சி, அப்படியானால் நீச்சல் வீரர்கள் நீண்டஆயுளுடன் இருக்கவேண்டும். அனால் அதை உறுதிப் படுத்தும் தகவல்கள் இல்லை. ஆனால் நடப்பதில்(Walking) சில நன்மைகள் இருப்பதை எனது நடைமுறை வாழ்க்கையில் கண்டுள்ளேன். உங்களது ஆயுள், நீங்கள் நடக்கும் தூரத்திற்கு நேர்விகிதத்தில் உள்ளது.(9) ஆகவே முடிந்த பொழுதெல்லாம் நடக்க முயற்சி செய்யுங்கள்.

நொறுங்கத் தின்றால் நூறு வயதா?

ஆமாம் இதில் உன்மை இருக்கிறது. நாய்களைப் பொறுத்தவரை இது 100/100 உன்மைதான். நாய்களுக்கு பற்கள் விழுந்து விட்டால் விரைவில் மரணத்தை தழுவுகின்றன. சரியாக மெல்லாமல் விழுங்கபடும் அதனுடைய கடினமான உணவு அதற்கு ஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தி மரணத்துக்கு வழி வகுக்கிறது. முதலைகள் அப்படியே சாப்பிட்டாலும் ஆயுள் என்னவோ கெட்டி. அவற்றை விதி விலக்காக கொள்வோம். அது போல் தான் மனிதனுக்கும் வயதான காலத்தில் சரியாக மெல்லப்படாத உணவால் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டு அதுவே எமனாக மாறி ஆயுளைக் குறைக்கிறது. கண்பார்வைக் குறைபாடும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். இப்பொழுது பற்கள் கட்டப்படுவதாலும் கண்பார்வை எளிதாக சரி செய்யப் படுவதாலும் தான் மனிதனின் சராசரி வயது கடந்த நூற்றாண்டில் 35 ஆக இருந்தது இப்பொழுது 60 ஆக கூடியுள்ளது.

புராணங்கள் என்ன சொல்கிறது.

புராணங்களில் ஆயுள் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒருமாதிரி சொல்லப்பட்டாலும் கூட கலியுகத்தை பொறுத்தவரை புராண சம்பந்தப் பட்ட வானியல் கணித முறையில் உள்ள ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை நாம் கணக்கீட்டிற்கு தகுந்த ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். ஜோதிடமும் புராணகாலத்தைச் சேர்ந்தது தான் என்றாலும் அறிவியலாக அதை கணக்கில் கொள்வதில் தவறேதும் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கிரகமும் திசை நடத்தும் காலம் என்று உள்ளது. எல்லாக் கிரகங்களின் திசைக் காலத்தை கூட்டினால் ஒரு மனிதனது அதிகபட்ச ஆயுள் தெரிந்துவிடும்.

சூரியன்           06 வருடங்கள்
சந்திரன்          10 ,,
செவ்வாய்      07 ,,
இராகு              18 ,,
குரு                  16 ,,
சனி                  19 ,,
புதன்                17 ,,
கேது                 07 ,,
சுக்கிரன்          20 ,,

ஆக மொத்தம் 120 வருடங்கள்.

ஜோதிடமும் மனிதனுக்கு அதிக பட்ச ஆயுளாக 120 வருடங்களைக் குறிக்கிறது. அதுவும் இன்றளவில் சரியாகத்தான் இருக்கிறது. மனிதனது அதிகபட்ச ஆயுளை 2000 வருடங்களுக்கு முன்னதாகவே இந்தியன் வரையறுத்து உள்ள நேர்த்தியை பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்த இடத்தில் அதைச் சொல்லாமல் விட்டால் அது இந்தியனுக்குச் செய்யும் துரோகம் ஆகிவிடும்.

................................தொடரும்., இறவாமை ( IMMORTALITY). பாகம் 3

5 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல அலசல்

bogan said...

கிரேட்.

Unknown said...

அடுத்த பதிவை(பாகத்தை) விரைவில் பதிவிடுங்கள் ஆவலுடன் காத்திருக்கோம்

Scribbles of Mani said...

எப்படி மாமா இப்படி எல்லாம் யோசிக்க முடியுது ?

Chandru said...

சிபி செந்தில்குமார்
போகன்
சதாசிவம்
Scribbles of Mani

ஆகிய அணைவருடைய வருகைக்கும் பதிவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நேரமில்லாமையால் அடுத்துஅடுத்து விரைவில் பதிய முடியவில்லை. விரைவில் பதிகிறேன்.

top