பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிய உதவும் அறிவியல் தொடர்.
சந்ததி நிலைத்து இப்புவியில் வாழ்ந்து பூமியை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஏற்பாட்டின் ஒரு அங்கம் தான் ஆணும் ,பெண்ணும் என்ற பிரிவு மற்றும் அவர்களுக்கு இடையேயான காமம் என்ற ஈர்ப்பும்.

ஆணும் பெண்ணும் வெவ்வேறு கண்டங்களில், வெவ்வேறு சூழலில் பிறந்து, கலந்து திறமையான வாரிசை உருவாக்கமுடியும் என்பதற்கான இந்த ஏற்பாட்டிற்காகத்தான் உயிரும் அதனுள் உயிரின் பிரிவுமாகிய ஆண், பெண் ஏற்பட்டது.
மன்னிக்கவும், நீண்ட இடைவெளிக்குப் பின் 13 ஆம் பாகத்தோடு வந்துள்ளேன். காரணங்கள் பல

1 வேளைப் பளு.
2. எனது போட்டோ ஷாப்பில் ஆள் இல்லை.
3. எனது பிளாக்கிற்கு கூட ஹாக்கர்ஸ் பிரச்னை. ஹாக்கர்களின் முயற்சியின் பலனாக கூடுதல் செக்யூரிட்டி ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை. அதில் செல்போன் மெஸேஜ்க்காக பலமணி நேரக் காத்திருப்பு அதனால் ஏற்பட்ட மனத்தளர்ச்சி.
4.செர்விக்கல் ஸ்பாண்டிலிட்டிஸ்
5. கரண்ட் கட்
6 கம்ப்யூட்டரில் வைரஸ்

இவைகளின் காரணமாக இதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது. மற்றும் சென்ற பதிவில் இட்ட ஓட்டெடுப்பின் முடிவிற்குப் பின் தொடர்வோம் எனவும் பொறுத்திருந்தேன். ஓட்டெடுப்பின் புள்ளி விவரமும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. என்ன வருத்தமென்றால் கூகுளின் புன்னியத்தில் ஏற்பட்ட இந்த மாதிரியான வலைத்தள வசதிகளினால் சில சாதிக்க முடியாத காரியங்களை கூட சாதிக்கலாம் என்பது ஏனோ தமிழர்களுக்குப் புரியவில்லை. கடந்த ஒரு மாதத்தில் சுமார் ஆயிரம் பேர் எனது முந்தைய பதிவை படித்திருந்தும் 15 பேர்தான் ஓட்டெடுப்பில் கலந்து கொண்டனர். மக்களது அனுபவங்களினால் ஏற்படும் நன்மை தீமைகளை பகிர்ந்து கொள்வதற்கான (Data exchange) சிறந்த தளம் இதை விட ஒன்று கிடைக்குமா? கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் தான் மூட நம்பிக்கை, பிடி வாதம் ஆகியவை ஒழியும். முன்னேற்றம் ஏற்படும். ஆகவே எந்த ஓட்டெடுப்பாக இருந்தாலும் இனிமேல் தவறாது கலந்து கொண்டு உங்கள்து கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். இனித் தொடர்வோம்............சென்ற பதிவில் ......

//ஒரே தலைமுறையிலும் கூட கடைசியாக (Latest ) பிறந்த பிறவிகள் ஆளுமை,மற்றும் நிலைத்து வாழும் பண்பு ஆகியவற்றில் சிறந்து இருப்பதைக் காணலாம் இதையெல்லாம் தமிழ்மக்கள் கண்டறிந்து உள்ளனர் என்பதற்கு பழமொழிகள் சான்றுகளாக உள்ளன.

மூத்தது மோழை, இளையது காளை.
என்ற பழமொழியை ஆராய்ந்தால் டார்வினின் கூற்றில் உள்ள உண்மை புரியும். ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதரர்களில் மூத்தவர்களை விட இளையவர்கள் திறமையாக செயல்படுவதை காணலாம். அதாவது நிலைத்து வாழும் பண்புகளான ”ஏறி மிதித்துச் செல்லும் திறன்” அதிகமாக காணப் படும். இது அப்பிறவிகளின் தோற்றக்கால இடைவெளியில் பெற்றோர்களின் அனுபவம் கூடுவதால் அதன் பலன் இளைய பிறவிகளுக்கு அதிகமாக கிடைப்பதால் இருக்கலாம். அது பற்றி பின்னர் பார்ப்போம். //


என்று சென்ற பதிவில் பதிந்தேன். அதுமட்டுமில்லாமல் அதற்கு ஒரு ஓட்டெடுப்பும் ஏற்பாடு செய்தேன் அதன் முடிவுகளுக்காக ஒரு மாதம் காத்திருந்தேன். நான் எதிர்பார்த்தது போல்தான் ஓட்டெடுப்பின் முடிவும் 80% என்னுடைய கருத்துக்கு வலிமை சேர்த்தது. அதற்கு நாட்டாமை கூட சில சந்தேகங்களை கீழ்க் கண்டவாறு எழுப்பியிருந்தார்.

அதாவது ”ஏறி மிதித்துச் செல்லும் திறன்” என்றால் நேர்மைக்கு புறம்பாக செயல்படுவார்கள் என்கிறீர்களா? ஆம் இதில் சில உண்மைகளை ஒத்துக் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பாக காரியம் ஆற்றுவதில், குறுக்குவழிகள் நேர்மைக்கு புறம்பானதாக இருக்கலாம் அல்லது தெரியலாம்.

அறிவுள்ள பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்கிறீர்களா? இதுவும் முரன்பாடாகத் தெரியுதே

இதில் ஏதும் முரன்பாடு இல்லை முன்னேறிய சமுதாயத்தில் பிறக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுள்ளவர்களாக இருப்பதில்லையா?


ஆனாலும் இந்த ஆண்,பெண் பிரிப்பில் ஒரு தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது ஏதோ ஒரு சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஒரே பாலினமாக அமைந்து விட 50% வாய்ப்புள்ளதே? இதற்கான தீர்வு என்ன?

இதை பல விதமாக சமாளிக்கிறது மனித இனம். ஒரு பெண் பிறக்கும் போதே தனது முட்டைப் பையின் இரு பிரிவுகளிலும் தலா ஒரு மில்லியன் (1,000,000) முட்டையின் கருக்களோடுதான் (முழு வளர்ச்சி அடையாத முட்டைகள்) பிறக்கிறாள். மனித இனத்திற்கு ஏதாவது ஒரு காலத்தில் தேவைப் படும் போது பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாடாக இருக்கலாம்.



பருவம் எய்தும் போது, அதில் ஐந்தில் ஒரு பங்குதான் அதாவது சுமார் (2,00,000 +2,00,000 ) மிஞ்சியிருக்கின்றன. மற்றவை ஒருவித நடைமுறையை பின்பற்றி அழிக்கப்படுகின்றன. பெண்ணிற்கு கருத்தரிக்கும் காலம் சுமார் 13 வயதிலிருந்து 53 வயது வரை உள்ள மாதவிடாய் காலம்தான். இந்த சுமார் 40 வருடங்களில் 400 முட்டைகள் மட்டுமே இனவிருத்திக்கு தயார் படுத்தப்படுகிறது. முட்டையின் அளவோ கண்களால் பார்த்தறிய முடியாத அளவுக்கு மிகவும் சிறியது( .02mm) .முட்டை எப்படி உருவாகுகிறது எப்பொழுது உருவாகுகிறது என்பது இதுநாள் வரை மர்மமாக இருந்தது. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளார் வேறெரு ஆப்ரேஷன் செய்யும் பொழுது தற்செயலாக முட்டை உருவாவதை தனது கேமிராவில் பிடிக்க நேர்ந்து அவைதான் கீழ்க்கண்ட படங்கள் .வைரமுத்து கூறியதைப் போல் தண்ணீர்க் குடத்தில் பிறக்கின்றோமோ
மேற்கொண்டு விவரமறிய

குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் 400 முட்டைகள் தவிர மற்றவை எல்லாம் முழுமையடையாமல் மாதாந்திர தவணை முறையில் அழிக்கப் படுகிறது . மிச்சம் உள்ள முட்டைகளும் மாதவிடாய் நிற்கும் (மெனோபாஸ் ) காலத்தில் முற்றிலும் அழிக்கப் படுகிறது. குழந்தைகளை வரிசையாக இடைவெளி இல்லாமல் பெற்றுக் கொண்டால் ஒரு பெண் அதிகபட்சமாக 60 (இரட்டைக் குழந்தைகளையும் சேர்த்து ) குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஆதலால் குசேலர் 27 குழந்தை பெற்றுக் கொண்டது பெரிய ஆச்சரியமல்ல. ஏனென்றால் ஒரு ரஷ்யப் பெண் 27 பிரசவத்தில் 69 குழந்தைகள் பெற்றதாக கின்னஸ் ஆவணப்படி தகவல் உள்ளது.
தமிழ்நாட்டில் 16 குழந்தைகள் பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து கெளரவித்த வரலாறும் தமிழனுக்கு உண்டு. சில பெரிசுகள் இந்த விஷயம் தெரியாமல் மனிதன் (குசேலரால்) 27 குழந்தைகள் பெற்றுக் கொண்டதை நம்ப முடியவில்லை எனக் கூறுவாரகள். அதற்கு சில விஷயம் தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகளும் விசில் போடுதுக..
பெண்மையின் மூலம் தான் இனவிருத்தி கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.முதலில் இனவிருத்திக்கான ஏற்பாடு குழந்தையாக இருக்கும் பொழுது 1:2,000,000 என்று ஆரம்பித்து, பருவம் எய்தும் போது 1:5,00,000 மாறி, பின்னர் மாதவிடாய் காலத்தில் 1:400 என்றாகி முடிவில் இயற்கையாக 1:60 என்ற நிலைக்கு வந்து விட்டது. 
ஆனால் மனிதன் செயற்கையாக அதை நாம் இருவர் நமக்கிருவர் (1:2) என்ற நிலைக்கு தக்கவைத்துக் கொண்டான்.
இனவிருத்தி விஷயத்தில் ஆணை பொறுத்த வரையில் இயற்கை அளப்பறிய சக்தியை கொடுத்துள்ளது. ஒரு ஆண் ஒருமுறை வெளியேற்றும் 2மிலி முதல் 3மிலி (ஒரு டீஸ்பூன் அளவுள்ள ) விந்து திரவத்தில் சற்றேறக் குறைய 40 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பெண்ணின் ஒரு முட்டையை கருவுறச் செய்யமுடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சராசரி குடும்பஸ்தனாகிய ஆண் தன் வாழ்நாளில் 20 வயதில் ஒரு நாளைக்கு 5 முறையில் ஆரம்பித்து 50 வயதில் ஒரு முறை என்ற அளவில் வந்து அனேகமாக 70 வயது வரை மனைவி அனுமதித்தால் செக்ஸை வைத்துக் கொள்கிறான்.

. http://www.netdoctor.co.uk/menshealth/facts/semenandsperm.htm

இது சம்பந்தமாக ஒரு சுவாரசியமான தகவல் உள்ளது. அதிகமான குழந்தைகளுக்கு தகப்பன் என்ற பெயர் மோலே இஸ்மாயில் என்ற மொராக்கோவின் மன்னரையே சேரும் . அவரது 40 வருட தாம்பத்ய வாழ்வில் 889 குழந்தைகளுக்குதான் தகப்பனாக முடிந்ததாம். மன்னிக்கவும் எத்தனை மனைவிகள் என்ற விபரம் மற்றும் குழந்தை பெறாத மனைவிகள் எத்தனை என்ற விவரம் தற்சமயம் கையில் இல்லை. 
 
http://en.wikipedia.org/wiki/Ismail_Ibn_Sharif

ஆணும் பெண்னுமாகப் பிரிவதில் அவை எந்த வழிமுறைகளை பின்பற்றி ஒரு சமத்துவத்தை எட்டுகிறது என்பதை அறிவதுதான் என்னுடைய இந்தக் கட்டுரையின் முக்கியமான நோக்கம்.முதலில் எண்ணிக்கையில் ஒரு சமத்துவத்தை எட்டி விட முயற்சி செய்தது. ஆனாலும் அதற்கிடையில் ஆண்மையையும் பெண்மையும் எடை போட்டு அதிலும் ஒரு சமத்துவத்தை எப்படி எட்டுகிறது என்பதை அடுத்தபதிவில் காண்போம்.

 மனிதனுக்கு அறிவு வந்த நாளிலிருந்து பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவதற்கு என்றைக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்தது . மக்கள் எப்படி அறிந்தனர் என்பதையும் தமிழர்களிடம் அதற்கான வழிமுறைகள் என்ன இருந்தது என்பதையும் அடுத்த பதிவில் கண்போம்.

என்னுடைய உயிரும் உயிரின் பிரிவும் தொடரின் வரிசையான பதிவுகளின் சுட்டிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 1)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 2)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 3)
 உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 4)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 5)

உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 7)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 8)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 9)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம்10)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 11)
உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 12)
தொடர்வோம்.....................

8 comments:

இந்துமதி.சி.பா said...

அருமை. அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்

Guna Pollachi said...

நல்ல பதிவு

நாட்டாமை said...

//ஆனாலும் இந்த ஆண்,பெண் பிரிப்பில் ஒரு தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது ஏதோ ஒரு சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஒரே பாலினமாக அமைந்து விட 50% வாய்ப்புள்ளதே? இதற்கான தீர்வு என்ன?//

உண்மையிலே கணிதம் இணைந்த அருமையான கேள்வி. ஆனால் இதற்கான பதில் இந்த பதிவில் இல்லையே?

Anonymous said...

நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

புகழன் said...

நல்ல பதிவு. நேற்றும் இன்றும் இத்தொடரின் முதலிலிருந்து படித்து தற்போதுதான் முடித்தேன். (26 ஜூலை 2011, காலை 11.04)

மிக அற்புதமாக பல சிக்கலான விஷயங்களுக்கு விடை கிடைப்பதுபோல் உள்ளது உங்கள் தொடர்.
ஆனாலும் இதில் பல சந்தேகங்களும் வினாக்களும் எழுகின்றன.

முழுமையாக தொடரை முடித்த பின் வினாக்களைக் கேட்கலாம் என்றிருக்கிறேன். ஏனெனில் இத்தொடரைப் படித்துக் கொண்டிருக்கும் போதே ஆரம்பப் பகுதிகளில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு அடுத்தடுத்த தொடர்களில் விடை கிடைத்தது. அதுபோல் இனிவரும் தொடர்களில் விடை கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.

நல்ல முயற்சி தொடர்ந்து தொடரை விரைவில் முடிக்கவும்.

Chandru said...

இந்துமதி,குணா பொள்ளாச்சி, நாட்டாமை,Reverie,வலையகம்,புகழன் ஆகிய அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மதியின் வலையில் said...

உங்களின் அனைத்துக் கட்டுரைகளும் அருமை.

Chandru said...

மதியின் வலையில், உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

top