tag:blogger.com,1999:blog-36551024170346764672024-03-14T02:41:37.965+05:30சந்துருவின் வலைப்பூஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-18044606529336742082015-12-24T04:24:00.000+05:302015-12-24T05:18:21.883+05:30அரசியல் மாற்றம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">அரசியல் மாற்றம்.</div><div style="text-align: justify;"><br />
தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ஏற்க அழைக்கிறார்கள்.<br />
<br />
</div><div style="text-align: justify;">பாரளுமன்றத்தைக் கைப் பற்றிய மோடியால் தான் நினைத்த சட்டத்தை அவரால் அதிரடியாக நிறைவேற்ற முடியாமல் ராஜ்யசபா முட்டுக்கட்டை போடுகிறது. ஏனெனில் ராஜ்யசபா உறுப்பினர்கள், மாநிலங்களை ஆளும் மற்றும் ஆண்ட கட்சியினராக இருப்பதால்தான். மோடி மூண்று வருடங்களுக்குப் பொறுமையாக இருந்து மாநிலங்களைக் கைப்பற்றினால் மட்டுமே தான் நினைத்தமாதிரி ஆள முடியும். இல்லாவிட்டால் பதவி ஏற்றும் வீண்தான். இந்திய ஜனநாயக முறையில் சில சமயம் ஏற்படும் சர்வாதிகாரப் போக்கை தவிர்க்க, இது போன்ற பல வழிமுறைகள் சட்டமாக்கப் பட்டுள்ளன.<br />
<span class="fullpost"><br />
<br />
<div style="text-align: justify;">தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய 234 சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது பாதிப்பேரின் ஆதரவு வேண்டும். அதில் ஒரு முப்பது கண்ணியமானவர்களை மந்திரியாக்க வேண்டும் என்றால், 150 நேர்மையான உறுப்பினர்களின் நிபந்தனை அற்ற ஆதரவு வேண்டும். மேலும் 40 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் வேண்டும். ஆட்சி கவிழ்ந்து விடாது என நிலைத்திருக்க லோக்கல் பாடியிலும் உறுப்பினர்கள் வேண்டும். அது மட்டுமில்லாமல் தமிழகத்தின் கீழ்க்கண்டுள்ள பல்வேறு பிரிவுகளிலும் (Local body) உள்ள ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது முப்பது சதவீத மக்களின் ஆதரவு இருந்தால் தான் எங்கும் நேர்மை எதிலும் நேர்மை என ஆள முடியும். <br />
<br />
</div><div style="text-align: justify;">முனிசிபல் கார்ப்ரேசன்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>................ 10 </div><div style="text-align: justify;"> முனிசிபல்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> ................... 125 </div><div style="text-align: justify;">பஞ்சாயத்து யூனியன்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> .................... 385 </div><div style="text-align: justify;">நகரப் பஞ்சாயத்துகள்<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span> ................... 561 </div><div style="text-align: justify;">கிராமப் பஞ்சாயத்துகள் .........<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>........12,618<br />
<br />
</div><div style="text-align: justify;">மொத்தம் உள்ள 13699 இடங்களில் தலைமைப் பதவி ஏற்க உத்தமர்கள் தேவை. இன்னும் வாரியத்தலமைகள் இருக்கின்றன. இவர்களைத் தேர்ந்தெடுக்கப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என சுமார் இரண்டு இலட்சம் பேர் நல்லவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஊழல் செய்யும் அதிகாரியை, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட உடனடியாகக் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்து தூக்கி எறிய முடியும். இப்பொழுது தெரிகிறதா?. ஒவ்வொரு கட்சியின் மதிப்பும், உழைப்பும், தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ளப் படும் பாடும். நாலாயிரம் கோடி எல்லாம் இவர்கள் பங்கிட்டால் ஆளுக்கு வெறும் 20,000 ரூபாய் கூடக் கிடைக்காது. யோசித்துப் பாருங்கள் உங்கள் தொகுதிக் கவுன்சிலர் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என்று. ஆனால் உண்மையில் சராசரியாக ஆளுக்கு ரூ 2,00,000க்கு மேல் சம்பாதிக்கிறார்கள் என்றால் 40,000 கோடியை சாப்பிடுகிறார்கள் என்று தானே அர்த்தம்.<br />
<br />
</div><div style="text-align: justify;">இப்பொழுது ஏன் சினிமாத்துறையினர் அரசியலுக்கு வரமுடிகிறது என்பது விளங்கியிருக்கும்.. சினிமாதான் அத்தனை வார்டுகளையும் மக்களையும், முன்பு நேரடியாகவும், தற்காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் மூலமாகவும் சென்றடைகிறது. அதனால்தான் தொலைக்காட்சிப் பெட்டியை இலவசமாக வழங்கி விட்டு, தொலைக்காட்சி சேனல் ஆரம்பித்து அதன் மூலம் மக்களைத் தன்வசமாக்க முயன்றனர். அடுத்தக் கட்டமாக இண்டர் நெட் வந்ததால் அதுவே லேப்டாப்பாக மாறியது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">திடீர் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு கண்ணியமான, மக்களுக்காகப் பாடுபடக் கூடிய, திரைத்துறை பிரபலத்தின் பின்னனி தேவை. அல்லது பெரிய ஜாதிப் பின்னனி தேவை. எம்ஜிஆரின் வழிமுறை சினிமாதான். அவரால்தான் திமுகக்கு அதிகமாகத் தொண்டர்கள் வந்தனர். அவருடைய கொடைத் தன்மையும், நேர்மையாளன் என்ற திரைத் தோற்றமும்தான், அவருக்கு பெண் ரசிகர்களையும் ஒரளவுக்கு ஆண் ரசிகர்களையும் சேர்த்தது. திமுகவின் தமிழும் குறிப்பிடும் அளவிற்கு தொண்டர்களை ஈர்த்தது. பின்னர் அதிலிருந்து அதிமுகக்குச் சேர்ந்தனர், அதனால் முழு ஆதரவுடன் எம்ஜிஆர் வந்தார். ஆனால் அவராலும் தனது மந்திரிகளை ஒரு அளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை.<br />
<br />
கேஜ்ரிவால் தனி ஒருவனாக வந்தார் என்றால் அவர் அண்ணாஹசாரே என்ற "பிரபலத்தின்" மீது சவாரி செய்து அவரை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தார். ஆனால் தற்பொழுது நல்ல மந்திரிகள் இல்லாததால் தடுமாறுகிறார். மேலும் டெல்லி ஒரு சிறிய, படித்தவர்கள் நிறைந்த மாநிலம் என்பதால் அவர் பயணம் தொடர்கிறது.. ஜெயலலிதா , கருணாநிதி ஆகியோர் முறையே எம்ஜிஆர், அண்ணா என்ற பிரபலங்கள் மீது சவாரி செய்து வந்தவர்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">விஜய்காந்த் தனது திரைப் பிரபலத்தால் முன் வந்தார். அவரிடம் ஆரம்பத்தில் முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை ஆனாலும் தனக்களிக்கப் பட்ட கணிசமான வாய்ப்பை அவர் பயன் படுத்திக் கொள்ளவில்லை. அவரிடம் ஒரு சரியான கட்டமைப்பு இல்லை. அவருக்கு அரசியல் நிர்வாகத்திறமை(அடிதடி) இருந்தும், நேர்மையாளர்கள் பற்றாக் குறை. தமிழ்நாட்டின் சாபக் கேடே நேர்மையாளர் பற்றாக் குறைதான்.</div><div style="text-align: justify;"><br />
ராமதாஸ், கிருஷ்ணசாமி, திருமாவளவன், ஆகியோர் ஜாதீயப் பின்னனி கொண்டவர்கள். </div><div style="text-align: justify;"><br />
இதற்கிடையில் சகாயத்தை அவரின் விருப்பத்திற்கு மாறாக அரசியலில் இழுப்பது அவருக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் அல்லது உமா சங்கரைப் போல் பைத்தியமாக மாற்றி விடுவார்கள், என்பதை இந்த மக்கள் உணர மாட்டார்கள். அவர் மூலம் தொகுதிக்கு ஐயாயிரம் ஒட்டு கிடைக்கும் என்றால் அவரை எப்படியும் அரசியல் கட்சிகள் இழுக்கப் பார்ப்பார்கள். அதுவே ஆளும் கட்சியாக இருந்தால் அவரை பதவி விலக நிர்பந்தம் கொடுத்து சீட்டும் கொடுத்து நிற்க வைத்து அந்த ஓட்டு வங்கியை இந்தத் தேர்தலுக்குப் பயன் படுத்திவிட்டு அவரது பெயருக்குக் களங்கம் கற்பித்து ஐந்து வருடத்தில் அந்த ஓட்டு வங்கியை செல்லாததாக மாற்றி விடுவார்கள். அல்லது அவரைக் களத்திலிருந்து சுத்தமாக அப்புறப்படுத்தப் பார்ப்பார்கள். ஆகவே வாய்ப்பு குறைவு.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மாற்று வழிகளைப் பார்ப் போம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தமிழக மக்கள் அடிமைப் புத்தியுடனும் ஒரு வகை ஈகோவுடன் இருக்கிறார்கள் . தான் தேர்ந்தெடுத்து விட்டவன் ஒரு போதும் தப்பு செய்யமாட்டான் என்றும், அப்படியே தவறு செய்தாலும், அவன் செய்து விட்டான் என ஒப்புக் கொண்டால், தன்னுடைய தேர்வு தப்பென்று கருதப்படும் என்ற ஈகோவுடனே சாகும் வரைக்கும் அவன் நல்லவன், வல்லவன் எனக் கூறிக்கொண்டே இருந்து விட்டு, தனது வாரிசுகளையும் பலி கொடுக்கிறான். அரசியல் வாதிக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?. அவன் கோடிக்கணக்கில் ஊழல் செய்தாலும், தனது இனத்தையே அழித்தாலும் அவனையே தலைவன் என்று ஏற்றுக் கொள்ளும் செம்மறியாடுகள். முன்னால் செல்லும் ஆடு ரயிலில் விழுந்து அடிபட்டாலும் தானும் விழுந்து மடியும் மனநிலை மாறாத வரை மாற்றம் இல்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கூட்டணி என்பது கொள்ளைக்கு நாமே இடம் கொடுக்கிறோம் என அர்த்தம். நேர்மை இங்க்கே பிளாக் மெயில் செய்யப் படும். இப்படி பட்ட சூழ்நிலையில் எங்கே இவன் விரக்தியில் ஓட்டுப் போடாமல், யோசித்து யோசித்து வன்முறையில் இறங்கி விடுவானோ என்று பயந்து O49 என்றொரு, விழிப்புணர்ச்சியை மழுங்க வைக்கும் உபாயம் வைத்துள்ளனர். அதில் குத்தியவுடன் தேர்தலை வெற்றியுடன் சந்தித்த திருப்தி ஏற்பட்டு விடும் இந்த அடி முட்டாள்களுக்கு. இனி வாய்ப்புள்ள மாற்றங்களைப் பார்ப்போம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">1)மாநிலம் முழுமைக்குமான கட்டமைப்புடன் கூடிய ஒரு அமைப்பினால் தான் திடீர் அரசியல் மாற்றம் ஏற்படுத்த முடியும். ஆனால் அது நேர்மையானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">2)சகாயம் கூறியது போல் அரசு அதிகாரிகளும், மக்களும் நேர்மையானவர்களாக மாறவேண்டும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">3)அரசியலில் நேர்மையை கொண்டுவர ஒரு எளிய வழி, மக்கள் முன் வந்து தவற்றை தைரியமாகத் தட்டிக் கேட்க வேண்டும். ஆகவில்லை என்றால் தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கையிலும் துணிந்து இறங்க வேண்டும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">4)படித்தத் திறமையான, எதையும் தியாகம் செய்யக் கூடிய ஆயிரம் பேர் தியாக உணர்வுடனும் உறுதியுடனும் இணைந்து இயக்கமாக செயல் பட வேண்டும். அநியாயங்களை தட்டிக் கேட்க ட்ராபிக் ராமசாமி போல் முன் வந்தால், ரமணா ஸ்டைல்தான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">5) தேர்ந்தெடுத்தவர்கள் சரியில்லை என்றால் இனி அவர்களை ஒரு போதும் அரசியலுக்கு வர விடாதீர்கள். வேரடி மண்ணோடு (கவுன்சிலர் பதவி வரை) ஒழித்து விடுங்கள். இப்பொழுதுள்ள காங்கிரஸ், இரண்டு திமுக ஆகியவை பிடிக்கவில்லை என்றால் அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி விட்டு, விஜய்காந்தைத் தேர்ந்தெடுங்கள், அவர் சரியில்லை என்றால் அண்புமணியைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் சரியில்லை என்றால் மீண்டும் பழையவர்களைத் தேடாதீர்கள். ஜனதாக் கட்சி இருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. சரியாக ஆண்டால் மீண்டும் ஆட்சியைக் கொடுங்கள் இல்லாவிட்டால் நிரந்தரமாக வீட்டுக்கு விரட்டி விடுங்கள். இன்னொரு வாய்ப்பு தரலாம் என கனவிலும் எண்ணி விடாதீர்கள். தமிழகத்தை ஆள்வதற்கு நேர்மை தேவை என்பதை வாக்குகளால் உணர்த்துங்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒரு அமெரிக்கனைப் போல் இருங்கள்.சாதாரண குடிமக்கள் நாம் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நம்மை ஆள்பவன் ஒழுக்கமுள்ளவனாக இருக்க வேண்டும். ஒரு ஜனாதிபதியை உள்ளாடை விஷயத்தில் பொது மன்னிப்பு கேட்க வைத்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div></div></span></div>Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-40861754462753742422014-12-22T19:20:00.000+05:302014-12-25T01:06:08.903+05:30கிஸ்ஸும் பிஸ்ஸும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிஸ்ஸும் பிஸ்ஸும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ்ஸடிக்கிறததையும் கிஸ்ஸடிக்கிறதையும் ஒப்பிட்டுப் பேசுகிறவர்களுக்கு அறிவே இல்லையா? அல்லது எதுகைக்கும் மோனைக்கும் ஆசைப் பட்டு ஏடாகூடமா பேசித் தொலையிறானுகளா? எச்சிலும் மூத்திரமும் ஒன்றாகுமா?</div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span><br />
<div style="text-align: justify;">
<span class="fullpost">1) பிஸ்ஸடிப்பது பற்றி பிறந்ததிலிருந்து போதிக்கப்படுவது, அதை ஒருவனுக்கு போராட்டம் செய்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை இந்த மரமண்டைகளுக்கு எப்படி புரிய வைப்பது . ஒருவன் அவஸ்தையினால், தன்மானத்தை இழந்து, வெட்கங் கெட்டுதான் பொது இடத்தில் பிஸ்ஸடிக்கிறான்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">2) பிஸ்ஸடிப்பதற்கு சம்பந்த பட்ட ஆள் மட்டும் சட்டத்தை மீறினால் போதும், ஆனால் பொது இடத்தில் அனுமதி இல்லாமல் கிஸ்ஸடிக்க இரண்டு மாறுபட்ட பாலின வெட்கங் கெட்ட நாதாரிகள் தேவை.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">3) பொது இடத்தில் முத்தம் கொடுக்கக் கூடாது என்பதை சிறு வயதிலிருந்து போதிக்கிறோம். அதிலும் சிறு குழந்தைகளை கண்டவர்கள் கிஸ்ஸடிக்க அனுமதிக்காதீர்கள் என்றுதான் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. அதிலும் பெண் குழந்தைகளுக்கு, தங்கள் மீது மற்றவர்கள் கை படக் கூடாத இடங்கள் பற்றி சொல்லிக் கொடுங்கடான்னா கிஸ்ஸடிக்கலாம்ங்கிறானுக இவர்களை எதைக் கொண்டு அடிப்பது.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">4) கிஸ்ஸடிப்பதை எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும் தள்ளிப் போடலாம். பிஸ்ஸடிப்பதை தள்ளிப் போட முடியாது. ரோட்ல பிஸ்ஸடிக்க கூடாதுன்னு சொல்வதற்கு முன் சரியான வசதிகள் செய்துதராமல் சொல்ல முடியாது. போலீஸ் வந்து பிடிச்சிட்டு போயிருவாங்கன்னு சொன்னா, வீணாகப் போவதை போலீஸ் பிடிச்சிட்டு போனாப் போகட்டும் என்பான். மீறீச் சொன்னால் எனக்கு அவசரம், நீ வேண்டுமென்றால் கையில் பிடித்துக் கொள்கிறாயா என்று நியாமான கேள்வி கேட்பானுக</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">5) பிஸ்ஸடிப்பதற்கு அவசியம் கட்டிடம் கட்டி விட வேண்டும். கட்டிடம் இல்லாத குறையினால் மன்னித்து விடலாம் ஆனால் கிஸ்ஸடிப்பதற்கு கட்டிடமா? கேட்டாலும் கேட்பானுக ..மாமாப் பயலுக..</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">6) ரோட்ல கிஸ் அடிச்சா, முதல்ல வேடிக்கை பார்ப்பானுங்க, அப்புறம் உதவிக்கு வருவானுங்க, அப்புறம் வலிமையுள்ளவனுக்குதான் கிஸ்ஸடிக்க உரிமைன்னுவானுக. சட்டத்தை மீறுவானுக பரவாயில்லையா? வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள போட்ட கதைதான். ரோட்டில் தாராளமா கிஸ்ஸடியுங்க பாயைப் போட்டு சல்லாபியுங்க அது உங்கள் உரிமை. ஆனால் வலிமையுள்ளவனுகளும் பொறுக்கிகளும் ஒரு கோஷ்டியா ரோட்டில் அலையறானுக என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் .ஆனால் அவனுக சத்தியமா பிஸ்ஸடிப்பதில் பங்குக்கு வரமாட்டானுக.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">7) பொது இடத்தில் ஒரு பெண் கிஸ்ஸடிக்கிறதுக்கு உடன்படுகிறாள் என்றால் அந்த வெட்கம் கெட்டவளை, எந்த ஆண்மகனாலும் எளிதில் அடைய முடியும் என்பதை அவள் நிரூபிப்பதாகத்தான் எல்லா சமூகமும் காலம் காலமாக கணித்து வைத்திருக்கிறது. இதில் ஆணுக்கு எந்த கேவலமும் கிடையாது, பெண்ணுக்குத்தான் பாதிப்பாக இருக்கலாம் அல்லது வருமானத்திற்கு வழியாக இருக்கலாம்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">8) சில பெண்கள் இதை ஆதரிக்கலாம், ஆதரிப்பவர்களை பெண்புத்தி பின் புத்தி என்று ஒதுக்கி வைத்து விடலாம். ஏனெனில் பெண்களுக்கான சுதந்திரம் எதுவரை போகும் என்பதை அவர்கள் கேட்கும் ஆடையின் உரிமையை "Femen" என்று அடித்து கூகுள் இமேஜில் தேடிப்பாருங்கள். பெரும்பாலும் பெண்களுக்கான சுதந்திரம் என்பது, ஆணின் கடுமையான பாதுகாப்பின் பின்னணி இருந்தால் தான் கிடைக்கும். தெருவில் போகும் போதே தன் மனைவியின் மீது மற்றவன் கண் பார்வை கூடப் படக்கூடாது என்ற பதைபதைப்போடு செல்பவன்தான் பெண் மீது அக்கறை கொண்ட இன்றையச் சமூகத்தை சேர்ந்த ஆண். அடுத்தவன் முறைத்துப் பார்ப்பதை குற்றம் சொல்லி மேல்நாட்டை உதாரணத்துக்கு இழுக்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் இப்பத்தானே பொது இடத்தில் கிஸ்ஸடிக்க கேட்கிறீர்கள். அவனுடைய கலாச்சாரத்தை அடைவதற்கு இன்னும் 30 வருடங்களாவது ஆகும். ஏனெனில் அவன் செக்ஸில் 12 வயதிலயே முதிர்ச்சி அடைகிறான். 13 வயதில் பெண்பிள்ளைகள் கர்ப்பமானாலும் கண்டு கொள்ள மாட்டான். கற்புக்காக பூட்டு செய்து ஓய்ந்து, கை விட்டவன். ஆகவே அவனுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்க அதுக்கு லாயக்கு படமாட்டீங்க.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">9) இதை, ரோட்டில் முத்தமிடுவதை ஆண்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் ஒன்று அவர்களிடம் இந்த சமூகத்தில் அக்கறை இல்லை என்று பொருள்.அல்லது பெண்களைப் வெறும் பொருளாக மதிக்கும் சோஷலிசக் கொள்கையாளராக இருக்க வேண்டும். அதிலும் வயதான ஆண்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கு பெண்கள் மீது மரியாதை இருக்காது, பெண் குழந்தைகள் இருக்காது. மேலும் அவர்கள் தங்களது இளமை இமேஜை நிலை நிறுத்த ஆதரிக்கிறமாதிரி எழுதலாம். அல்லது சிலரின் வக்கிர புத்திக்கு தீனியாக ஆதரிக்கலாம். அந்தமாதிரி வக்கிரம் பிடித்தவர்கள் சிலர் ஒழுக்க சீலர்கள் மாதிரி பிஸ்ஸடிப்பதை கேடயமாக கொண்டு இதை மறைமுகமாக ஆதரிப்பார்கள். இவர்கள்தான் பிஸ்ஸடிப்பதையும் கிஸ்ஸடிப்பதையும் முடிச்சுப் போட்டு தங்களுக்கு ஏற்படும் அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">10) ஒருவர் கிஸ்ஸடிப்பதற்கு ஏற்கனவே தெரிந்தவராகவும், மனதுக்கும், பார்வைக்கும், வயதுக்கும், பிடித்தவராகவும், ஆர்வமும் நேரமும் ஒத்துப் போனால் தான் கிஸ்ஸடிக்க முடியும். இதில் 25 வயதுக்கு மேலுள்ள பெண்கள் திருமணமானவர்கள் அவர்களை கணவன்மார்கள் பொது இடத்தில் முத்தம் கொடுக்க அனுமதிக்க மாட்டாரகள். </span>அந்தவகையில் பார்த்தால் முத்தமிடத் துடிப்பவர்கள் 13 வயதிலிருந்து 25 வயது உள்ளவர்கள்தான். கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெண்ணினத்தில் 5 சதவீதம் பேரும் ஆண்களில் 25 சதவீதம்பேரும் தான் தயராக உள்ளனர். ஆகவே நிகழ்தகவு விதியின் படி போட்டு பார்த்தால் ரோட்டில் செல்பவர்களில் ஐம்பதாயிரத்தில் இருவர் கூட தேற மாட்டார்கள் என்பதுதான் கணக்கு. அவர்களால் சமூகத்திற்காக இதை தள்ளிப் போட்டு மறைவான இடத்திற்கு போக முடியும். ஆனால் இதை ஆதரிக்கும் போது பாலியல் தொழில் வளர வாய்ப்புள்ளது. வாயின் மூலம் பரவக் கூடிய எய்ட்ஸ், எபோலா போன்ற நோய்களுக்கு கொண்டாட்டம்தான். அவன் பொது இடத்தில் தண்ணி அடிக்கிறான்னு இங்க தண்ணி அடிக்க ஆரம்பிச்சானுக நிறுத்தத் தெரியல, முடியல. இனி கிஸ்ஸடிக்க ஆரம்பிச்சானுகன்னா எங்க போய் முட்டுவானுகளோ?.</div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். போங்கடா போய் பெண் குழந்தைகளுக்கு மற்றவர்கள் கை படக்கூடாத இடங்களைப் பற்றியும், பட்டால் எவனாயிருந்தாலும் அறைவதற்கும் சொல்லிக் கொடுங்கள். அதை விடுத்து கண்டவனுக வாயில வாயை வைக்க சொல்லிக் கொடுக்காதீர்கள் நாளைக்கு வீடு தேடி வருவானுக. பரவாயில்லையா?</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
</div>
</div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-16132723335613300042014-12-12T00:01:00.000+05:302014-12-12T01:11:21.711+05:30உயிரும் உயிரின் பிரிவும் பாகம்19<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.ae/2014/02/18.html" target="_blank">முந்தைய பாகம்</a><br />
கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய அரியணைகள், கட்டில் மெத்தை, மற்றும் சிறப்புப் பொருட்கள் கொண்டு அலங்கரிப் படுகிறது. விருந்தினரை உபசரிக்க விருந்து தடபுடலாக தயாரிக்கப் படுகிறது. சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்கப் படுகின்ற அந்த நபர் பத்து மாதம் அதே அரண்மனையில் தங்க வேண்டும் என்பது அவசியமானதால் அதற்கும் வசதியாக ஏற்பாடுகள் செய்யப் படுகிறது. இந்த ஏற்பாடுகளுக்குதான் அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுயம்வரத்திற்காக இளவரசியை அழைத்து வந்து சரியான ராஜாவை தேர்ந்தெடுக்க, அரியணையில் அமர்த்தி காத்திருக்க வைத்திருக்கிறார்கள். அரசர்கள் (விந்தணுக்கள்) நான்கு நாள் வரை காத்திருக்க முடியுமாம். ஏற்கனவே அங்கு வந்து காத்திருக்கும் அரசர்களில். சரியான நபர் கிடைக்காத பட்சத்தில் வரப்போகும் சிறந்த அரசனுக்காக இளவரசி ஓரிரு நாள் காத்திருக்கலாம், அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் உயிரை விட்டுவிடுவாள். அதனால் சுயம்வர நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது. தயாரித்து வைத்த, கெட்டுப் போன உணவு வகைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை அரண்மனை யிலிருந்து வெளியேற்றி அரண்மனையை மீண்டும் ஒரு சுயம்வர தேதிக்காக மேற்ப் பூச்சு பூசி, கழுவி, தயாரிப்பது போன்றதுதான் மாதவிடாய்.</div>
<br />
<div style="text-align: justify;">
கர்ப்ப பையில் கருமுட்டை தங்குவதற்காக ஏற்படுத்தப் பட்ட ரத்தம், முட்டை மற்றும் சளி போன்றவற்றை கழுவி சுத்தம் செய்ய 12 நாட்களாகி விடுகிறது. அடுத்த இரண்டு நாட்களில், கர்ப்பபை சுவற்றில் சளி போன்ற மேற்ப்பூச்சு கொடுத்து இரத்த நாளங்களை சரி செய்து வைக்கிறது. அதன் பின்னர், கரு முட்டையை அழைத்து, கர்ப்ப பையில் காத்திருக்க வைக்கிறது. முட்டை அங்கு சுமார் ஒரிரு நாட்கள் வரைதான் உயிர்ப்புடன் இருக்கும். அதாவது மாதவிடாய் தொடங்கிய ஏழாவது நாளில் இருந்து பதினைந்தாவது நாள் வரைதான் கர்ப்பத்துக்கு உகந்த நாட்கள். அதற்குள் ஒரு குறிப்பிட்ட ஓரிரு நாட்களில் முட்டையுடன் கலக்கும் ஏதோ ஒரு விந்தணுவே கர்ப்பத்தை ஏற்படுத்தும்.</div>
<span class="fullpost">
</span>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<span class="fullpost">
<div style="text-align: justify;">
மாதவிடாய் சுழற்சியைப் பொறுத்து, முட்டை கருவுறும் நாள் மாறுபடுவதால் சற்றேக் குறைய அதாவது மாதவிடாய் நாளிலிருந்து ஏழாவது நாளிலிருந்து பதினேழாவது நாள் வரைக்கும் உள்ள “அந்த பத்து நாட்கள்” தான் கலவிக்கும், குழந்தை பெறுவதற்கும் முக்கியமான நாட்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ளது 28 நாட்கள் சுழற்சி உடையவர் களுக்கானது. ஆண்கள் ஒருநாள் விட்டு, மறுநாள் கலவி கொண்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆதலால் 10,12,14,16 ஆகிய நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span class="fullpost"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRSXA09PZAHQ-MkkAR3Cu4Hh4NWXcszme3GQIawN0f8CwRSFy42J4YyljX3GwhdKABgCg_FsgYBHMqS6XOJw5SdyEOYsurahQxQfdS9QJHsG0w2000n37nr-81KilYNyEElb7gwntVg-kC/s1600/Ovulation+calculator.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRSXA09PZAHQ-MkkAR3Cu4Hh4NWXcszme3GQIawN0f8CwRSFy42J4YyljX3GwhdKABgCg_FsgYBHMqS6XOJw5SdyEOYsurahQxQfdS9QJHsG0w2000n37nr-81KilYNyEElb7gwntVg-kC/s1600/Ovulation+calculator.jpg" height="287" width="320" /></a></span></div>
<br />
<span class="fullpost"></span><br />
<div style="text-align: justify;">
<span class="fullpost">மேலும் இப்பொழுதெல்லாம் பத்து நாட்கள் “முயற்சிக்க” வேண்டியதில்லை. ஒரு ஐந்து நாட்களாவது முயற்சிக்க வேண்டும் சில பெண்கள் தெர்மா மீட்டர் மூலம் தனக்கு எந்த நாளில் முட்டை தயாராகி உள்ளது என்பதை அறிந்து கொள்வார்கள். முட்டையின் வளர்ச்சி முழுமையடைந்து கருப்பைக்கு வரும் பொழுது பெண்களின் உடல் வெப்ப நிலை சற்று கூடியிருக்கும் அந்த வெப்ப நிலையை நுட்பமாக அறிந்து அன்று கலவி செய்தால் பலன் கிடைக்கும். முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் பெண்களின் உடல் வெப்பம் 0.4°F லிருந்து 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் ஒன்றினால் , உங்கள் உடல் வெப்பத்தை அட்டவணைப் படுத்தி, "அந்த நாளை" கண்டு பிடிக்கலாம். </span><br />
<span class="fullpost"><br /></span></div>
<span class="fullpost">
</span>
<div style="text-align: justify;">
<span class="fullpost">முட்டை முழுமை அடையும் போது சுரக்கும் ஒரு வித ஹார்மோனை (ப்ரொஜெஸ்ட்ரோன்) அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் தயார் செய்யப்பட்ட மருத்துவ கிட் கொண்டு செய்யப்படும் பரிசோதனையின் மூலம் அந்த நாளை கண்டுபிடித்து கலவியில் ஈடுபட்டால் பலன் ஏற்படும். </span></div>
<span class="fullpost">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாதவிடாய் என்பது ஒரு ஒழுங்கான இடைவெளியில், இருக்க வேண்டும். அது முறையே 27,28,29,30, நாட்கள் என்ற முறையில் தனி நபரை பொறுத்து மாறுபட்டாலும் அவரவருக்கு குறிப்பிட்ட சுழற்சி. மாறாமல் இருக்க வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருமுட்டையின் வளர்ச்சிக்கும் சந்திரனின் (நிலவின் வளர்ச்சி) பிறைக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்கள் என்பது (99 சதவீதம்) பெண்களில் பெரும்பாண்மையினருக்கு ஒத்து வருவதால் அதை வைத்தே கணக்கிடப் படுகிறது. கரு முட்டைக்கும் சந்திரனுக்கும் உள்ள ஒற்றுமையை இவ்வாறு விளக்கலாம். அமாவாசை நாளிலிருந்து சந்திரனைப் போல் கருமுட்டை படிப்படியாக வளர்ந்து பௌர்னமியன்று முழுமை அடைந்து பின்னர் படிப்படியாக தேய்ந்து அமாவசையன்று முட்டை சந்திரனைப் போல் முழுமையாக மறைந்து விடுவதாகக் கொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்பெல்லாம் திருமணத்திற்கு, மணப் பெண்ணின் மாதவிடாய் தேதியைக் கேட்டுதான் நாள் குறிப்பார்கள். அது போல் சாந்தி முகூர்த்தத்திற்கும் ஏற்ற நாள் குறிப்பார்கள். ஆனால் இப்பொழுது அதெல்லாம் மூட நம்பிக்கையாக போய்விட்டது. மாதவிடாய் தேதியை ஒருவாரம், பத்து நாட்கள் என்றாலும் தள்ளி வைக்க மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். அங்கு ஆரம்பிக்கும் ஒழுங்கீனமும், பின்னாளில் பாதிப்பை ஏற்படுத்தும் அன்பதை அறியாமல் செய்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த மாதவிடாய் சுழற்சியின் ஒழுங்கு முறையில் தான் 90 சதவீதம் குழந்தைப் பேறு உள்ளது. ஃபல்லோபியன் ட்யூப்பில் அடைப்பு இல்லாமல், கர்ப்பப் பையில் குறையில்லாமல், முறையான கலவி இருக்கும் பட்சத்தில் குழந்தை பெறுவதில் ஒரு சிக்கலும் இல்லை. முதன் முதலில் உருவாகும் குழந்தைகளை கருவிலே கலைத்தால் அதுவே பின்னர் கருவுறுவதில் சிக்கலை உருவாக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்மையின் மூலம்தான் இனவிருத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. முதலில் இனவிருத்திக்கான ஏற்பாடு பெண் குழந்தையாக இருக்கும் பொழுது 1:2,000,000 என்று ஆரம்பித்து, பருவம் எய்தும் போது 1:5,00,000 மாறி, பின்னர் மாதவிடாய் காலத்தில் 1:500 என்றாகி முடிவில் இயற்கையாக 1:60 என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆனாலும் மனிதன் செயற்கையாக அதை நாம் இருவர் நமக்கிருவர் (1:1) என்ற நிலைக்கு தக்கவைத்துக் கொண்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முப்பது வயதில் திருமணமாகிவிட்டால் நான்கு ஆண்டுகளில் 91% பேருக்கு குழந்தை பிறந்து விடுகிறது..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முப்பத்தைந்து வயதில் திருமணமானால் நான்கு ஆண்டுகளில் 84% தான் பேருக்கு குழந்தை பிறக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாற்பது வயதில் திருமணமானால் நான்கு ஆண்டுகளில் 64% பேருக்கு தான் குழந்தை பிறக்கிறது..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே பெண்கள் தங்களது முதல் குழந்தையை 32 வயதிற்குள் பெற்று விட வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நாட்களை கடத்தினால் நாட்கள் மட்டுமல்ல வருடங்கள் கூட நொடியில் கரைந்து விடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருமணமாகி இரண்டு வருடம் வரை குழந்தைக்காக காத்திருக்கலாம். அதற்கு மேல் அதை வாழ்க்கையின் பிரதானமான விஷயமாக எடுத்துக் கொண்டு முயற்சிக்க வேண்டும். ஆண்களின் பிரயத்தனம் என்ன மாதிரி என்பதைப் பார்ப்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.ae/2014/03/20.html" target="_blank">தொடரும்........... </a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-87594524107937875872014-11-17T12:39:00.001+05:302014-11-17T17:36:29.760+05:30சமஸ்கிருதம் எப்படி உருவானது ?.4<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமஸ்கிருதம் எப்படி உருவானது ? (பாகம் 4)<br />
<br />
தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாருக்கும் தெரியாது. அதன் தோற்றத்தைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். கல்ப ஆரம்பத்தில் பிரமதேவர், தேவர்களுக்குச் சொன்ன பிரமநூலை, இந்திரன் நூறாயிரம் கிரந்தங்களாகச் சுருக்கிக் கூறினான் என்றும் அதனை மாயன் என்னும் மகரிஷி இன்னும் சுருக்கமாக மக்களுக்கு அருளினான் எனவும் கூறுவர். அதனால் இந்திரன் மூலமாக பிரம்மன் அருளியதை, மாயன் தமிழர்களுக்கு அருளியதாகவும் அதுதான் "<span style="color: red;"><b>ஐயிந்திறம்</b></span>" எனப்படும் நூல் எனக் கூறுகிறார்கள்.<br />
<span class="fullpost"><br />
வேறொரு வரலாறும் உள்ளது. இந்நூலானது தொல்காப்பியரால் முதல் தமிழ்ச் சங்கத்தில் பாண்டிய வேந்தன் முன் அரங்கேற்றப் பட்டதால் வேந்தன் நூல் எனவும், வேந்தனை இந்திரன் என்று கூறப்படுவது மரபு என்பதால் இந்திரன் நூல் என்பர். இந்திரனின் யானை ஐராவதம் என அழைக்கப் படுவது போல் இந்திரனின் நூல் "ஐயிந்திறம்" என்றழைக்கப் படுகிறது.<br />
<br />
ஐயிந்திறத்தைப் பற்றி எந்த ஆராய்ச்சியாளராவது இதுவரைக்கும் சரியான விளக்கம் அளித்துள்ளனரா என்பது சந்தேகம்தான். அது வாஸ்து சாஸ்திரம் பற்றியது என்ற வகையில் சிலர் சம்பந்தம் இல்லாமல் விளக்கமளித் திருக்கிறார்கள். இன்னும் சிலரோ பொத்தாம் பொதுவாக அது தர்க்கம் மற்றும் பேச்சுக் கலை பற்றியது என்கிறார்கள். ஐந்திறம் குறித்தான செய்திகளும் அதன் தொல்காப்பியத் தொடர்புகளும் இன்றளவும் வாத எதிர் வாதங்களுக்குத் தான் இடமளித்துள்ளன.<br />
<br />
பிற்காலத்தில் தோன்றிய வடமொழியில் உள்ள சில குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் ஐந்திறம் ஒரு வடமொழி இலக்கண நூல் என்று ஐயுருகின்றனர். ஆனால் தமிழில் தொல்காப்பியப் பாயிரம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் , திருக்குறள் போன்றவற்றில் உள்ள குறிப்புகள் மற்றும் வடமொழி நூற்களின் குறிப்புகள் மூலம் உறுதியாக இது தமிழில் இயற்றப்பட்டதற்கான தெளிவுகள் பெறலாம் அதில் தமிழ், மொழி என்று அடிக்கடி வருவதாலுமிது தமிழுக்கானதுதான். மேலும் ஐந்திறம் பற்றிய குறிப்பை வால்மீகியும், கம்பரும் மட்டுமில்லாமல் வட மொழிப் புலவர்களும் பயன் படுத்தியுள்ளனர். <br />
<br />
நான் ஏற்கனவே கூறியது போல் உலகில் எல்லோரும் பயன் படுத்தும் வகையில் பொதுத்தளமாக சமஸ்கிருதத்தையும், அந்த சமஸ்கிருதத்தை உருவாக்கி அதில் தமிழ் மூலமாக புலமை பெறுவதற்கான வழிமுறையாக ஐயிந்திறத்தையும் தமிழன் உருவாக்கி இருக்க வேண்டும். ஏனெனில் ஐயிந்திறம் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டாலும் அதன் நுட்பமும் பயன்பாடும் இந்தியா முழுவதும் உள்ள பேரறிஞர்களால் அறியப்பட்டு உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு நூல், மற்ற மொழியினாராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்றால் அது ஒரு கருவியாக அதாவது ஒரு டூலாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் எல்லா மொழியினரும் அதைப் பயன் ப்டுத்தி உள்ளனர். சமஸ்கிருதம் இந்தியா முழுவதும் எளிதாக வழக்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டதும் அதானால்தான். இந்நூல் கொண்டு தொகுத்து வைக்கப் பட்ட நூல்களுள் பன்னாட்டுப் பேரறிஞர்களின் கருத்துக்களும் கலை நுணுக்கங்களும் கொண்ட ,காலந்தொறும் புதுமைப் படுத்தப் பட்ட தொகுதிகள் கொண்ட களஞ்சியமாக சமஸ்கிருதம் கருதப் பட்டது,<br />
<br />
அக்காலத்தின் விக்கிபீடியாவாக போற்றப்பட்டிருக்க வேண்டும்.. அதற்கான மொழியாக சமஸ்கிருதத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அந்த மொழிக்கான அல்காரிதம் தான் ஐயிந்திறத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும். பன்மொழியாளர்க்கும் பயன்படல் வேண்டி தமிழிலுள்ள எல்லா படைப்புகளும் இதிகாசங்கள் உடபட சமஸ்கிருதத்திற்கு மாற்றப்பட்டன. அவ்வாறு மாற்றப் படுவதற்கு தமிழகத்தில் அமைந்த பேரறிஞர் கூட்டத்தைச் ‘சங்கம்’ என்றும், வேந்தனூலை ‘இந்திரனூல்’ என்னும் பொருளில் ஐந்திறம் என்றும் வழங்கலாயினர். <br />
<br />
இன்றைய வடமொழியறிஞர்களும் ஆய்வாளர்களும் பாணினி முதலானோருக்கு முன் ஐந்திரமென்னும் வியாகரண நூல் இருந்ததாகவும் அது பற்றிச் சிற்சில குறிப்புக்கள் கிடைப்பனவாகவும் கூறிப் பாணினிக்குப் பின் அந்நூல் வழக்கொழிந்திருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். இவ் ஐந்திரநூலைப் பாணினி எண்ணாயிரங் கிரந்தங்களில் அடக்கினான் என ஹொய்-லி (Hoei-Li) என்னும் சீன அறிஞர் கூறியுள்ளார். <br />
<br />
இனி தைத்திரீய ஆரண்யகத்தில் காணப்படும் ஒலிநூற் குறிப்புக்கள் சிலவும், சாந்தோக்கிய உபநிடதத்தில் வரும் குறியீடுகள் சிலவும், ஐதரேயப் பிராமணத்தில் உள்ளன சிலவும், ஐந்திற வழக்குகளே எனவும், வேதகற்ப சூத்திரங்களிலும் இவ்வழக்குகள் வந்துள்ளன எனவும், தைத்திரீயப் பிராதிசாக்கியம், காத்தியாயனப் பிராதி சாக்கியம், பாணினீயம், பதஞ்சலி மாபாடியம் என்பன ஐந்திர இலக்கண மரபினை எடுத்தாண்ட நூல்கள் எனவும், இக்குறிப்புக்களால் ஐந்திரமென்னும் பெயருடையதோர் இலக்கணத் தொகுதி இருந்தமை உறுதியாதல் புலனாகும் எனவும் ‘டாக்டர் பர்னல்’ என்னும் பேரறிஞர் ஆராய்ந்து விளக்கியுள்ளார். <br />
<br />
மொழி ஆராய்ச்சியாளர் ஏ சி பர்னல் ஐயிந்திறம் பற்றி குறிப்பிடும் எடுத்துக்காட்டுகளுள் தலையாயவை இரண்டு. ஒன்று பெளத்த இலக்கியமாகிய 'அவதான சாதகத்தில்' புத்தரின் தலைமாணாக்கருள் ஒருவராகிய சாரிபுத்தன் தமிழ்நாட்டில் தன் பிள்ளைப் பருவத்தில் 'அய்ந்திறம் கற்றான்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகும். இதனை விளக்கும் சக்கரவர்த்தி நயினார், 'அய்ந்திறம்' என்பதற்கு உலகாய்தம் எனப் பொருளுரைத்தார் <br />
இதனை விளக்கும் வகையில் அறிஞர் பர்னல் தரும் மற்றொரு சான்று பாணினி பற்றியதாகும். காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய கதாசரிதசாகரம் எனும் நூலிலிருந்து தரும் எடுத்துக்காட்டு அதுவாகும்.<br />
<br />
கதாசரிதசாகரம் எனும் நூலிலில் 'சமஸ்கிருத இலக்கண ஆசிரியராகிய பாணினி ஒரு காலத்தில் அறிவிலியாக இருந்தார் என்றும், அதனால் வரரு சிகாத்தியாயனார் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் என்றும், அப்படி விலக்கப்பட்ட பாணினி சிவனை நோக்கித் தவம் இருந்தார் என்றும், சிவன் அருளைப் பெற்றபின் மீண்டும் குருகுலத்திற்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும் ஏழுநாட்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும் தன் அருள்பெற்ற பாணினி தோற்றதனால் ஆத்திரமுற்ற சிவன் குருகுலம் பின்பற்றிய ஐயிந்திர நூல்களை எல்லாம் அழித்தான்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.சமஸ்கிருதப் புலமைக்கு ஐயிந்திறம் மிகவும் அவ்சியமான நூல் என்பது இதனால் அறிய வருகிறது.<br />
<br />
ஏசி பர்னால் அயிந்திறம் பற்றி நிறைய கூறியிருந்தாலும் அஃது என்னென்ன பொருள்பற்றி ஆராய்ந்து அமைக்கப் பெற்றதென மொழி ஆய்வாளர் பர்னல் விளக்கவில்லை. அவரால் விளக்க முடியவில்லை என்பதன் காரணம் அதை ஒரு இலக்கண நூல் என்ற கற்பிதத்தில் கடைசி வரை ஆராய்ந்ததால்தான். அவரது ஆராய்ச்சியின் முடிவுகளால் ஐயிந்திறம் என்பது ஒரு சமஸ்கிருத மொழி மாற்றத்திற்கான ஒருவகை இலக்கணம் தான் என்பதை அறியலாம்.. அது ஒரு மொழி மாற்றத்திற்கான மென்பொருள் கொண்டது என்ற உண்மை அறியாமல் ஆராயும் போது ஏதும் விளங்காதது இயல்புதானே.<br />
<br />
ஆனாலும் இதில் சில குழுவினர் ஐயிந்திறத்தை அழிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தன என்பது தெரிகிறது. ஏற்கனவே சிலப்பதிகார கூற்றின் படி நான்மறையாளர்கள் எனப்படும் அந்தணர்கள் ஐயிந்திற நூலை அழகர்மலையில் உள்ள பாறைப் பிளவில் மறைத்து வைக்கப் பட்டதாகவும் அறிகிறோம். நான்மறையாளர்கள் ஒரு வேளை உண்மையிலே மறைத்து வைத்து விட்டனரா. இவ்வாறு ஐயிந்திறம் நூலின் பரவல் அறிஞர்களின் அறிவு சார்ந்த எல்லை மீறி பாமரனுக்கும் கிட்டும் வகை ஏற்பட்டதால், அதன் எல்லையை குறுக்குவதற்காகவும், அதற்கு ஒரு தெய்வீகத்தன்மையை ஏற்படுத்தவும் , ஐயிந்திறத்தை அழிப்பதற்கும் ஒரு பிரிவு தயாராகிவிட்டனர் போலும்.<br />
<br />
உதாரணத்திற்கு ஐயிந்திறம் நூல் எதற்காக இயற்றப் பட்டது என்று ஐயிந்திறத்தில் 42 வது பாடலில் கூறப்பட்டுள்ளது. அப்பாடலின் பொருளைக் காண்போம்<br />
மொழிமுதல் ஒலி ஓம் முறையின் உணர்த்தி<br />
விழுமிய பொருளை விளக்கிச் செறித்தே<br />
செழுந்தமிழ் மூலம் ஐந்தியல் கோலம்<br />
முழுமை விளக்கும் ஐந்திற நூலே (42)<br />
<br />
"மொழிமுதல் ஒலி ஓம் முறையின்" இந்த வரியின் அர்த்தம் கொண்டு பார்க்கும் போது ஒலி ஓம் முறை என்பது சமஸ்கிருதம் தவிர வேறெதுமாக இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் "செழுந்தமிழ் மூலம் ஐந்தியல் கோலம்" என்பது "தமிழைக் கொண்டு உருவாக்கப் படும் படைப்பு" என்பது தெளிவு<br />
இதனை தமிழறிஞர்களும், கணித வல்லுனர்களும், மொழி ஆராய்ச்சியாளர்களும் கலந்து ஆய்வு செய்தால் அதன் உண்மைத் தன்மையை கண்டறியலாம். <br />
<br />
நான் மேலோட்டமாக படித்தவரை எனது அறிவுக்கு எட்டியவரை அது அனேகமாக தமிழை சமஸ்கிருதமாக மாற்றுவதற்கான கோடிங் ஆகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் அதில் உள்ள வார்த்தைகளில் 30 சதவீதம் பெரும் பாலும், "தமிழ், மொழி, குறில் நெடில், ஒலி,ஓசை, ஓம், இலக்கணம், எழுத்து, தமிழ், எட்டு, எட்டெட்டு, ஐந்து, எண்ணெண், இலக்கணம் , எண்கள்" பற்றிய வார்த்தைகள்தான் அதிகமாக உள்ளது எனத் தெளிவாகத் தெரிகிறது. ஐந்திறத்தில் ஆங்காங்கே தமிழின் எழுத்துக்கள் பற்றியும், குறில், நெடில் போன்ற விளக்கங்களும், கணிதக் குறியீடுகள் எட்டின் அடுக்குகள், அறுபத்திநான்கு, மற்றும் ஐந்து என்று வருகிறது. தமிழ்மொழியை சமஸ்கிருதமாக மாற்றுவதற்கு, எட்டை அடிப்படையாக கொண்ட ஒருவிதமான வாய்ப்பாடு பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.<br />
<br />
உதாரணத்துக்கு ஒரு பாடல்.<br />
<br />
எண்எண் கலையால் இலங்குறும் மொழியாய்ப்<br />
பண்ஒலி ஓசைப் பெரு நிலை ஓங்கிக்<br />
குறி நிலை மாறாக் குறிப்புறும் கலைதிகழ்<br />
அறிவியல் விளக்கும் அருந்தமிழ் மொழியே (107)<br />
<br />
"எண்எண் கலையால் இலங்குறும் மொழியாய்" என்பதைஇவ்வாறு "எண்களின் கலையால் உருவாக்கப் பட்ட மொழியாய்" என அர்த்தம் கொள்ளமுடிகிறது. ஐயிந்திறத்தின் ஒவ்வொரு பாடலிலும் தமிழ்,மொழி ஓசை, ஒலி,ஓம் என்ற வார்த்தைகள் வருவதால் அது தமிழை பேசுவதற்கோ அல்லது பாடுவதற்கோ மட்டுமான மற்றொரு மொழியாக மாற்றுவதற்கான இலக்கணத்தைப் பற்றியதாகும் எனச் சந்தேகம் எழுகிறது. அதை யாரெல்லாம் படிக்கலாம் என்பதை முதலில் வரையறுத்து விடுகிறார்கள். ஆயகலை அறுபத்தி நான்கினும், தமிழ் மொழியிலும் தேர்ந்தவர்கள் மட்டும் படிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆகவே தமிழும், மற்ற பிராந்திய மொழியில் ஏதாவதொரு மொழி கற்றவரும் ஐயிந்திறத்தின் துணை கொண்டு தங்கள் படைப்புகளை சமஸ்கிருதத்திற்கு மாற்றலாம் அல்லது சமஸ்கிருதத்தில் உள்ள படைப்புகளை தங்கள் மொழிக்கு மாற்றலாம். <br />
<br />
<a href="http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1527" target="_blank">http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1527 </a><br />
<br />
கி.மு. எட்டாம் நூற்றாண்டில் பிராமணங்கள், ஆரண்யங்கள், தர்மசாத்திரங்கள் முதலான வைதிக இலக்கியங்கள் ஐயிந்திறத்தின் உதவியால் சமஸ்கிருதத்தில் தோன்றின. இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக எதிராக ஓர் அறிவுப் புரட்சியும் தோன்றியது. அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடுமுழுவதும் கொண்டு சென்றது. அவ் அமைப்பின் மூலவர் எண்ணியக் கோட்பாட்டினை அறிந்தவராகிய கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய ஐய்ந்திர மரபிலிருந்து சமஸ்கிருதத்தின் பரவல் கிளைத்தது. வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும், எண்ணியத்தின் கூடுதல் அடிப்படை. இவ் எண்ணியம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆசீவகத்தோடு இணைந்தது.<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" target="_blank"> ஆசீவகத்தில்</a> இணந்தவர்கள் எண்ணியல் கோட்பாடு கொண்டு அதாவது அயிந்திறத்தின் துணை கொண்டு சமஸ்கிருதத்தை முற்றிலும் தேர்ந்ததால் தமிழகத்தின் சித்தர்களுக்கு இணையானவர்களாக கருதப் படுவார்கள்.<br />
<br />
மேலும் பானம்பாரனார், தொல் காப்பியரை 'முந்துநூல் கண்டு முறைப் பட எண்ணிப் புலம் தொகுத்தவராகப்' புகழ்கின்றார். இங்கு சொல்லப்படும் 'முந்துநூல்' என்பதில் தொல்காப்பியரின் இலக்கணப் புலமையும் அடங்கிவிடும். அதனால் அய்ந்திரம் என்பதை நாம் இலக்கண நூலாகக் கருதவேண்டியது இல்லை. "நான்மறை முற்றிய அதங் கோட்டாசான்" என்ற தொடர்கூட ஆய்வுக்குரியதாகிறது. இங்கு தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நான்மறையில் தெளிந்தவர் அதங்கோட்டாசான் என்றால் முதன் முதலில் நான்மறை தமிழில்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. இந்நான்மறை என்பது நச்சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெளடிகம், தலவகாரம், சாமவேதம் என்பதாகும்.<br />
<br />
பனம்பாரனாரின் பாயிரம், அரிய கருத்துப் புதையலின் திறவுகோலாகும். அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங் கோட்டாசானுக்குத் தொல்காப்பியர், "மயக்கம்தராத மரபினை உடைய தமிழ் எழுத்துமுறையினைக் காட்டினார்" எனக் குறிப்பது மிகுந்த கவனத்துடன் ஆராயத் தக்கதாகும். வேதத்தில் வல்ல அதங்கோட்டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்துமுறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? ஏனெனில் தமிழை ஒரு புதிய தளத்திற்கு (சமஸ்கிருத மாற்றத்திற்கு) எடுத்துச் செல்வதால் அதைப் பற்றிய விளக்கம் தேவைப் பட்டிருக்கலாம். <br />
<br />
கம்பரும் தனது ராமாயணத்தில் அனுமனைப் பற்றிக் கூறும்போது இது பற்றி கூறுகிறார்.<br />
<br />
"இயைந்தன இயைந்தன இனைய கூறலும்<br />
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்<br />
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்<br />
நயந்தெரி காவலர் இருவர் நண்ணினர்"<br />
<br />
என்று கம்பன் கூறுவான். (யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம், 42). இங்கே அயிந்திரம் நிறைந்தவன் என்று அனுமனைக் கூறுவதால் பேசத் தெரிந்தவன் என்ற பொருளே எல்லாத் தமிழறிஞராலும் உணரப் படுகிறது. "எப்படிச் சொன்னால் குரங்கின வீரர்கள் கேட்பார்கள்" என்று தெரிந்த அனுமன் தன் அதிகாரிகளான மயிந்தனையும் துமிந்தனையும் அனுப்பி, வீடணனை விடுவித்து, இராமனிடம் சேர்ப்பிக்கிறான். இங்கு "அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்" என்று சொல்வது, "பேசும் மொழி இலக்கணத்தை" நன்கு அறிந்ததால் ஏவலிடும் முறை அறிந்து ஏவினான் என்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும். அக்காலத்தில் அனுமன் சமஸ்கிருதத்தில் வித்தியாசமாக சொல்லியிருக்கலாம்.<br />
<br />
கம்பன் ஐந்திறம் என்கிறார். வால்மீகியோ அதையே நுண்ம வியாகரனம் என்கிறார் அதாவது நுண்மையான இலக்கணம் என்கிறார். அவர்காலத்தில் அது புதிதாக நுட்பமாக இருந்திருக்கலாம். கம்பர், வில்லிபுத்தூரார் ஆகியோர் ஐந்திறம் அறிந்திருக்க வேண்டும் . அதனால்தான் அவர்களால் அவ்வளவு பெரிய காவியங்களை தமிழில் மறுபடியும் மீட்டெடுத்து படைக்க முடிந்தது.<br />
<br />
ஐந்திறம் அறிந்தவர்கள் என்று வரலாறு குறிப்பிடுவதில் தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகியோரும் அடங்குவர் . அதனால்தான் இருவரும் ஐந்திறம் பற்றி குறிப்பிடுகின்றனர். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் ஐந்திறம் அறிந்திருப்பதாக இளங்கோவடிகள் குறிப்பால் உணர்த்துகிறார். காடு காண் காதையில் கவுந்தி கூற்றாகக் கீழ்க் கண்ட உரையாடலை இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார்<br />
<br />
"திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்,<br />
பெருமால் கெடுக்கும் பிலமுண்டு; ஆங்கு<br />
விண்ணோ ரேத்தும் வியத்தகு மரபிற்<br />
புண்ணிய சரவணம் பவகா ரணியொ<br />
டிட்ட சித்தி யெனும்பெயர் போகி<br />
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை<br />
முட்டாச் சிறப்பின் மூன்றுள; ஆங்குப்<br />
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்<br />
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்;<br />
நலம்புரி கொள்கை நான்மறை யாள<br />
பிலம்புக வேண்டும் பெற்றிஈங் கில்லை<br />
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்<br />
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்<br />
வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்<br />
கியாவது முண்டோ எய்தா அரும்பொருள்"<br />
<br />
"அழகர்மலைக்கு செல்வீராயின் அங்குள்ள புண்ணிய சரவணபொய்கையில் இறங்கினால் விண்ணவர் கோமான் விழுநூல் என்னும் ஐயிந்திறம் கிடைக்கப் பெறுவர்" என்பதற்கு கவுந்தி அடிகள், "நான்மறையாளர் பிலத்தினுள் (குழி அல்லது குகை/பிளவு), ஐந்திரத்தை வைத்து மறைத்தாலும் தமிழ் நூலான ஐந்திரத்தை அறிவதற்கு பிலத்தினுள் புக வேண்டியதில்லை, கொல்லாமை நோன்புடன் வாய்மை வழியில் செல்வோருக்கு கிடைக்காத நூலும் உண்டோ" என்கிறார். கவுந்தியடிகள் போன்ற சமணர்கள் வேறு ஏதோ வகையில் ஐயிந்திறம் அறிந்திருந்தனர் என்பது உணர்த்தப்படுகிறது. இளங்கோவடிகள் காலத்தில் வாழ்ந்த சமணர்கள் ஐந்திறத்தை அறிந்திருந்தார்கள் என்பதும் தெளிவு.<br />
<br />
சமணர்கள்தான் தமிழில் உள்ள அனைத்து நூற்களையும் ஐயிந்திறம் கொண்டு சமஸ்கிருதத்திற்கு மாற்றியவர்களாக இருப்பார்கள். தமிழ் இலக்கியத்தில் சமணர்களுக்கும், புத்தப் பிக்குகளுக்கும் பெரும் பங்குண்டு என்பதை நினைவு கூற வேண்டும். சமனர்கள் மூலமாக சமஸ்கிருதம் இந்தியா முழுவதும் பரவியிருக்க வேண்டும்.<br />
<br />
ஐந்திர நூல் இலக்கண நூற்றொகுப்பு, தமிழ்நாட்டில் முறையாக ஏற்புச் செய்யப்பட வில்லை என்பது விந்தையாகவும் விளங்க முடியாததாகவும் இருக்கிறது. ஆனால் எப்படியோ வடவர்கள் மத்தியிலும் அறிஞர்கள் மத்தியிலும் பயன்பாட்டிற்கு இருந்தது. அதை உருவாக்கியவர்கள் தமிழராயினும் ஐயிந்திறத்தோடு அவர்களது தொடர்பு குறுகிய காலத்தில் அறுபட்டுப் போனதை வரலாற்றை உற்று நோக்கினால அறியலாம். அதைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிகை அதிகமாகும் பொழுது ஏதோ ஒரு வகையில் அயிந்திறம் அழிக்கப் பட்டிருக்கிறது அல்லது மறைக்கப் பட்டிருக்கிறது.பின்னர் அது ஒரு எலைட் குரூப்பினாரால் மட்டும் ஆதரிக்கப் பட்டு வளர்ந்தது.<br />
<br />
அதனால், சிறிது சிறிதாக அந்நூல் பொதுமக்கள் பயன்பாட்டினின்றும் புலவர் ஏற்பினின்றும் விலக்கப் பட்டு பின்னர் அந்த ஐயிந்திறம் திருமால் குன்றம் எனும் அழகர் மலையில் நான்மறையாளரால் பாறைப் பிளவில் மறைத்து வைக்கப் பட்டது என்று சிலப்பதிகாரத்தால் அறியப்படுகிறது. ஒரு வேளை அது பயன் பாட்டிற்கு வந்த சிலகாலங்களிலே தமிழினத்திற்கு ஏதனும் பேரழிவு ஏற்பட்டிருக்கலாம். அதனால் அதன் சிறப்பும் பயனும் பின்னர் உணரப் படவில்லை போலும்.<br />
<br />
அது சரி சமஸ்கிருதம் ஏன் செத்த மொழியாகிவிட்டது? தமிழ்ச் சங்கத்தின் மறைவும், தமிழ்ப் புரவலர்களும், காவலர்களுமாகிய தமிழ் மன்னர்களின் மறைவினாலும், தமிழ்ப் புலவர்களின் ஆர்வமின்மையினாலும், வறுமையினாலும் தமிழ் மொழி வெறும் பேச்சு வழக்கில் மட்டும் உயிர் வாழ்ந்தது அவ்வாறிருக்கும் போது அதை ஒட்டிய சமஸ்கிருதமும் அழிவதில் வியப்பேதுமில்லை. தமிழ்ப் புலவர்களின் பரவலை ஒட்டியும் அவர்களின் பயன்பாட்டினாலும் வளர்ந்த மொழியாகையால் அவர்களின் மறைவுக்கு பின் சமஸ்கிருதமும் மெல்ல மெல்ல வளர்ச்சி இல்லாமல், அந்தணர்களால் தத்து எடுக்கப் பட்டு அவர்கள் மத்தியில் மட்டும் இருக்கிறது. <br />
<br />
ஐயிந்திறம் இன்று வரை மர்மமாக இருப்பதாலும் அந்த கோடிங் மிகவும் சிக்கலானதாக இருந்ததாலும் நாளடைவில் கோடிங் வித்தகர்கள் தொடர்ந்து உருவாகாததாலும் சமஸ்கிருதத்தின் வளர்ச்சி நின்றுவிட்டது. உதாரணத்திற்கு இன்று தமிழில் யாப்பிலக்கணம் வழக்கொழிந்ததால் வெண்பா எழுதும் வித்தகர்கள் இல்லாததால் மரபுக் கவிதை மரணித்துக் கொண்டிருப்பது போல் சமஸ்கிருதம் மரணித்து விட்டது.<br />
<br />
தமிழ் மொழிக்கான அங்கீகாரம் இந்தியாவில் உரியமுறையில் கிடைத்துள்ளதா என்றால் நிச்சயமாக கிடையாது. தமிழ் மொழிக்கான ஆராய்ச்சியும், நிலவியல் முறையில் முழுமையாக நடைபெறவில்லை. ஏனெனில் தமிழுக்கு எதிரிகள் உலகில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் இருக்கின்றனர். கண்ட நாதாரிகள் எல்லாம் தமிழைப் பழிப்பதை பல்லிளித்து வேடிக்கை பார்த்துக் கொண்டு சிலை வைத்து மகிழ்கிறான்.<br />
<br />
பிறமதத்தவர் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ தமிழுக்கு (இந்துமதத்திற்கு) எதிரியாகத்தான் இருக்கிறார்கள். இந்தியாவை ஆக்ரமித்தவர்கள் இந்துமதத்தை ஒழிக்கும் முயற்சியில், தமிழையும் சேர்த்து அழித்தனர். தமிழின் தொண்மைக்கு எதிரிகள், வடமொழியாளர் அனைவருமே, ஏனெனில் அவரவருக்கு அவரது மொழிதான் முக்கியம். அதிலும் இந்தியாவின் தென் முனையில் இருக்கும் ஒரு சிறு குழுவினரின் மொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருப்பதில் பெரும்பாலான இந்தியருக்கு ஏற்புடைமை இல்லை. ஆதலால் தமிழை சிறுமைப் படுத்தும் முயற்சியில்தான் ஈடுபடுவார்கள்.<br />
<br />
மத்திய அரசு தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக எந்த துரும்பையும் எடுத்துப் போடவில்லை. ஆனால் துவாரகையின் பழமை பற்றிய ஆராய்ச்சிக்கு பலகோடிகளை செலவழிக்கின்றனர். தமிழ்நாட்டில் பதவிக்கு வரும் அரசுகளும் தமிழ் பற்றிய அக்கறை கொள்வதில்லை. தமிழ்மொழியின் செம்மொழித் தகுதியை ஏற்க மறுக்கும் அன்டை மாநிலங்களும் தமிழைப் பொறுத்தவரை எதிரிகளாகிவிட்டனர். தமிழின் தொண்மைக்கு ஆதாரங்களை அண்டை மாநிலங்களிலிருந்து எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாட்டுக்கு உள்ளேயே எதிரிகள் திராவிடன் என்ற பெயரில் இருக்கின்றனர். தமிழின் தொண்மைகளை அவர்களை அறியாமலே அழிப்பதில் உறுதியாக இருக்கின்றனர்.ஒரு மொழிக்கு இத்தனை எதிரிகளா?.ஆனால் இத்தனையும் மீறி எத்திசையும் புகழ் மணக்குது எங்கள் சங்கத்தமிழ்.<br />
<br />
இந்தியா முழுவதும் பரவலான அதிகாரம் கொண்டிருந்த மிஷனரிகளின் வழி வந்த கால்டுவெல்லின் மொழி ஆய்வு ஓரளவிற்கு கருத்தில் கொள்ளத் தக்கது. இவரைப் போலவே மிஷனரி சேவைக்கு வந்த வீரமாமுனிவர், போப்பையர், ராபர்ட் டி நொபிலி, சீகன்பால்க் போன்றவர்கள் மொழி ஆய்வு, சொல்லாய்வுகளுக்கு வரவில்லை. மாறாக, அவர்கள் இலக்கியம் படைப்பதிலும், அச்சுப்பணியிலும், முக்கியமாக மொழி பெயர்ப்பிலும் ஈடுபாடு காட்டினார்கள்.<br />
<br />
சமஸ்கிருதத்திற்கும் மூலமொழி, தமிழ் மொழிதான் என்ற புதிய கருத்து தமிழ் நாட்டிலுள்ள ஒரு சமூகத்தினரை புரவலர் என்ற நிலையிலிருந்து எதிரிகளாக மாற்றிவிடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் சமஸ்கிருதத்தை தேவபாஷையாக கருதுபவர்களுக்கு ஐயிந்திறத்தின் மீது தீரா வெறுப்பு ஏற்படும் என்பது இயற்கைதானே. நண்பன் துரோகியானால் அவன்தான் வலிமையான எதிரியாக உருவாகி விடுவான். அதனால்தான் ஐந்திறம் அழிக்கப் பட்டது அல்லது மறைக்கப் பட்டது. ஆனால் சூரியனை எத்தனை கைகள் சேர்ந்தாலும் மறைக்க முடியாது என்பது போல் தமிழின் பெருமையை யாராலும் மறைக்க முடியாது.<br />
<br />
நாகரீகத்தின் வளர்ச்சி மற்றும் பரவலை கண்டுபிடிக்க இந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வேர்ச்சொல், அடிச்சொல் என்று மொழியையும் வார்த்தைகளையும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. நாகரீகத்தின் வளர்ச்சி மற்றும் பரவல் பற்றி மொழி ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் எப்பொழுதுமே தவறாகத்தான் இருந்திருக்கிறது என வரலாறு நிரூபித்து இருக்கிறது. நவீன தொழில் நுட்பமாகிய மரபணு ஆராய்ச்சிகள் ஒவ்வொரு குடும்பத்தை பற்றியும் கூட மிகத்துல்லியமாக எடுத்துரைக்கும் போது இன்னும் வேர்ச்சொல் அடிச்சொல் ஆகியவற்றை கட்டிக் கொண்டு அழுவது ஏன் எனத்தெரியவில்லை.<br />
<br />
இந்தோனஷியா, ஜாவா, பாலி, சுமத்ரா ஆகிய தீவுகளில் மகாபாரதம் மற்றும் இராமாயணம் மக்களின் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்துள்ளதைப் பார்க்கும் போது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தமிழோடும் இதிகாசங்களோடும் அங்கு சென்றதாகத்தான் இருக்கமுடியும். இதிகாசங்களின் மூலமும் தமிழாகத்தான் இருக்கமுடியும். காலத்தின் போக்கில் கிடைக்கும் வரலாற்றின் அறுபட்ட சங்கிலித் துண்டுகள்தான் முழுமையான வரலாற்றைத் தரும் அதுவரை அதிகப்பட்சமாக மூளையைப் பயன்படுத்தி வரலாற்றின் அறுபட்ட சங்கிலித் துண்டுகளை உருவாக்குவோம். நன்றி.<br />
தொடர் முற்றியது.<br />
<br />
<br />
இத் தொடருக்கு கீழ்க்கண்ட தளங்கள் உதவியாக இருந்தது.<br />
தொல்காப்பியம் இருக்குவேதத்திற்கு முந்தையது! - முனைவர் க. நெடுஞ்செழியன்<br />
http://thiruneri.blogspot.in/2010/09/blog-post_54.html<br />
ஹிந்து மதத்தின் புகழ் பற்றி<br />
http://www.hinduwisdom.info/Pacific.htm#Articles:<br />
மாமுனி மயன்<br />
http://en.wikipedia.org/wiki/Mamuni_Mayan<br />
ஐயிந்திறம்<br />
http://en.wikipedia.org/wiki/Aintiram<br />
மயன்<br />
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D<br />
வேதகாலத்துக்கு பிந்தியதே தொல்காப்பியம். <br />
http://www.tamilauthors.com/01/144.html<br />
குமரிக்கண்டம் <br />
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D<br />
</span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-6390521565959762242014-11-15T15:15:00.000+05:302014-12-08T20:46:15.895+05:30 சமஸ்கிருதம் எப்படி உருவானது ?.3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
சமஸ்கிருதம் எப்படி உருவானது? பாகம்-3<br />
<br />
உலகில் ஆதிகாலத்திலயே சங்கம் வைத்து மொழி வளர்த்தவன் தமிழன் ஒருவனே. சங்கம் வைத்து அப்பம், பணியாரம் தின்று விட்டு செல்லவில்லை. உண்மையான பொறி பறக்கும் சூடான வாத, விவாதங்களுடன் தங்கள் புதுமையான படைப்புகளை அரங்கேற்றினார்கள். தமிழுக்கு இலக்கணம் சொன்ன தொல்காப்பியரே தனது நூலையே முதற்சங்கத்தில் அரங்கேற்றும் முன் அரங்கோட்டத்தாசன், மற்றும் பானம்பரனார் முன்னிலையில் படாதபாடு பட்டுவிட்டார்.<br />
<br />
உண்மையான புலவர்களைத் தவிர வேறு யாரும் உட்கார முடியாத தேவலோக சிற்பி மயன் தயாரித்தளித்த சங்கப் பலகையும் தரக் கட்டுப் பாட்டில் அடங்கும். இங்கே அரங்கேற்றுதல் என்பது கடுமையான தர மதிப்பீட்டிற்கு பின்தான் நிகழ்ந்துள்ளது என்பது தெரிகிறது.தருமி போல் யாரும் எழுதிக் கொடுத்ததை கொண்டு வந்தால் மானங்கெட்டு மரியாதை இழந்து விடுவார்கள். திறமை இல்லாதவர்கள் எளிதில் பேரோ புகழோ பெறமுடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. புலவர்களின் படைப்புகள் சங்கத்தில் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பது மர்மமாக இருக்கிறது. ஒருவேளை ஓலைச் சுவடிகளாகவோ, வாய்ப் பாட்டாகவோ சங்கத்தில் உள்ளவர்களால் பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு வழிமுறை பின்பற்றப் பட்டிருக்க வேண்டும்.<br />
<span class="fullpost"><br />தமிழ்மக்களுக்கு இயற்கை அவ்வப்பொழுது ஒரு பெரும் சவாலாகவே இருந்துள்ளது. கடற்கோள், சுனாமி, பூகம்பம் ஆகியவற்றால் தமிழினத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வரலாறும், தமிழ் நூற்களும் தெரிவிக்கின்றது. பெரும் நிலப்பரப்புகள் கடலுக்கடியில் மறைந்தன. ஆனாலும் தமிழன் சளைக்காது மூன்று நிலப்பரப்பில் இடம் மாறி நிலைகொண்டாலும் , மக்கள் அழிந்தாலும் சங்கம் வைத்து மொழி ஆராய்ச்சியை விடாது செய்தான். ஃபீனீக்ஸ் பறவை போல் தமிழன் முற்றிலும் அழிந்து புதிதாக மூன்று முறை உயிர்த்தெழந்த வரலாறு உள்ளது.மூன்று சங்கங்களே அதற்கு சான்று.<br />
<br />
தமிழனது தமிழ்ச் சங்கத்தில் என்ன நடக்கிறது என்ற ஆர்வம் உலகெங்கும் இல்லை என்றாலும் இந்தியா முழுமைக்கும் இருந்திருக்கும். அதனால்தான் சங்கம் வைத்து பாதுகாப்பதை ஒரு தலையாய கடமையாகக் கொண்டான். அவ்வாறு போற்றிப் பாதுகாக்கப் பட்ட சங்கத்தில் இயற்றப் பட்ட நூற்களுக்கு இயற்கை பேரழிவிலிருந்து பாதுகாப்பு அழிப்பதற்கான ஏற்பாடுதான் சமஸ்கிருதம். இலக்கியங்களை பாடலாக மக்கள் மனதில் ஏற்றிவிட்டால் அழிவில்லை என்ற கருத்தில் தோன்றியதுதான் சமஸ்கிருதம்.<br />
<br />
தமிழன் அக்காலத்தில் விக்கிபீடியாவிற்கு இணையான பொதுத்தளம் ஒன்றை கண்டுபிடித்திருக்க வேண்டும். தமிழனுடைய சங்கத்தமிழ் நூல்களும். மற்ற மொழியினரும் இயற்றும் நூல்களையும் பொதுவாக ஏற்றி வைக்கும் ஒரு தளம்(சமஸ்கிருதம்) ஒன்றை தமிழன் கண்டறிந்து இருக்க வேண்டும். அது இந்தியா முழுமைக்கும் பரவியிருக்க வேண்டும். அதன் பின்னர் அந்த தளத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் ஊறு ஏற்பட்டிருக்க வேண்டும், அல்லது அதன் பின் தமிழன் கடற்கோளால் அழிந்து, தான் இயற்றிய தளம் பற்றிய தகவல் ஏதுமின்றி புதிய இடத்தில், மிஞ்சிய தமிழர்கள் நிலை கொண்டிருக்க வேண்டும்.<br />
<br />
பொதுத்தளத்திற்கான ஏற்பாடு பற்றிய தகவல் அடுத்ததலைமுறைக்கு கொண்டு செல்லப்படாமல் முற்றிலுமான தகவல் தொடர்பு அழிந்திருக்கலாம். இந்த இடத்தில், தமிழனிடம் உள்ள மர்ம நூல் ஒன்றைப் பற்றி கூறுவது சாலச் சிறந்தாகும். அப்படி ஒரு நூல் தமிழனிடம் இருந்தது என்பதற்கான சான்று தமிழனை விட வட இந்தியர்களிடம் அதிகம் காணப்படுகிறது.அதன் பெருமை பற்றி பலகதைகளும் உள்ளன.ஆனால் ஒரு கால கட்டத்தில் அந்தணர்கள் அழிக்க முற்பட்ட அந்நூலைப் பற்றி உலக மொழி ஆராய்ச்சியாளர்கள் வியந்து கொண்டிருக்கின்றனர். அந்தணர்கள் ஏன் அதை அழிக்க முற்பட வேண்டும். தமிழ் நாட்டில் மட்டுமில்லாது வட இந்தியாவிலும் அந்த நூலை அழிக்க ஒரு பெரிய போராட்டம் நடந்ததாக வரலாறு உள்ளது.<br />
<br />
அதில் கூறியுள்ள கலைகள் மற்றும் இயல்களின் வகைகள் எண்ணிலடங்காது. அவைகளின் பட்டியல் விக்கிபீடியாவை மிஞ்சும் வகையில் ஆச்சரியத்தை வரவழைக்கும். கிட்டத்தட்ட அந்நூல் முழுவதுமே அப்படி ஒரு பட்டியலாகவே தெரிகிறது. அந்நூல் பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. தமிழர்கள் அது பற்றி அறிவார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றிய குறிப்புகள் அதில் அடங்கி இருந்தாலும், அது எதைப் பற்றியது என்று உறுதியாக இது வரையிலும் யாருக்கும் தெரியாது. பாடப் புத்தகங்களில் அது பற்றிய குறிப்புகள் கிடையாது. அந்நூலைப் பற்றிய குறிப்புகள் இதிகாசங்களில் கூட உள்ளதால் அது மிகவும் பழமையான நூல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வடமொழி நூல்களிலும் அந்நூல் பற்றிய குறிப்புகள் காணப் படுகிறது. தமிழனைத் தவிர மற்றெல்லோரும் அறிந்திருக்கின்றனர் அது என்ன நூல்? யோசித்து வையுங்கள், அந்நூலைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்<br />
<br /><a href="http://chandroosblog.blogspot.in/2014/11/4.html" target="_blank">தொடரும்........................</a><br />
</span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-14182589520651614612014-11-02T07:48:00.000+05:302014-12-07T18:11:16.519+05:30சமஸ்கிருதம் எப்படி உருவானது ?.பாகம் 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
சமஸ்கிருதம் எப்படி உருவானது?<br />
<br />
எனது முந்தைய பதிவுகளான <a href="http://chandroosblog.blogspot.in/2014/09/blog-post.html">தமிழ் இந்து சமஸ்கிருதம்</a> மற்றும் <a href="http://chandroosblog.blogspot.in/2014/09/1.html">சமஸ்கிருதம் எனும் பாஷை எப்படி உருவானது?</a>என்னும் பதிவுகளை படித்துவிட்டு தொடர்ந்தால் தொடர்ச்சி கிடைக்கும் சில சந்தேகங்கள் வராது.எல்லா மொழிகளுக்கும் அடிப்படை தமிழும் சமஸ்கிருதமும் என்ற அடிப்படை கொண்டு படித்தால் புரியும். சமஸ்கிருதத்தில் ஐரோப்பிய வாடை இல்லை ஆனால் ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருத வாடை இருக்கும்.<br />
<br />
மறை மொழி எவ்வாறு பல இடங்களில் பயன் படுத்தப் படுகிறது எனப் பார்த்தோம். கல்வி இலக்கியம் என்று வரும் பொழுதும் மறை மொழி தேவைப் படுகிறது. உதாரணமாக சாமுத்ரிகா லட்சனம், காம சூத்திரம், பெண்வசியம், மனோவியல், வைத்தியம், ராஜதந்திரம், ஜோதிடம், பில்லி சூனியம், மாந்திரீகம் என்பது தமிழில் ஏராளமாக உள்ளது. அவற்றை எல்லாம் ரகசியமாக தங்களுக்கான வட்டத்துக்குள் வைத்துக் கொண்டனர். மந்திரமோ தந்திரமோ எல்லாவற்றையும் வெளிப்படையாக எல்லோரும் அறியும்படி எழுதி வைக்க முடியாது. மேலும் இயற்றிய இலக்கியப் படைப்புகள் எல்லைதாண்டி செல்ல வேண்டும் என்பதோடு கடற்கோள்,மற்றும் இயற்கை பேரழிவுகளிலிருந்து தான் மட்டும் தப்பி பிழைத்தால் போதாது தனது இல்க்கியங்களும் காக்கப் படவேண்டும்.என்பதில் தமிழன் உறுதியாக இருந்தான்<br />
<br />
இந்த இக்கட்டான நிலையில் ரகசிய மொழியின் அவசியம் தேவைப் படுகிறது. பாட்டின் அழியாத்தன்மைக்கு ஏற்பட்டதுதான் யாப்பிலக்கணம் பாட்டுக்கே ஒரு சிக்கலான யாப்பிலக்கணம் கண்டு அறிந்த தமிழன் கண்டிப்பாக எல்லைதாண்டி பன்மொழியாளருக்கு பயன்படும் விதமாகவும் பத்திரப் படுத்தவும் ஒரு ஏற்பாடு செய்யாமலிருப்பானா?. அதற்காக உருவானதுதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதம் என்றாலே "சமைக்கப் பட்டது" என்று பொருளுண்டு. தமிழ் மொழியில் இருந்து சமைக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். <br />
<br />
<span class="fullpost">ஒரு பொருள் குறித்த பல சொற்களும், பலபொருள் குறிக்கும் ஒற்றைச் சொற்களும் தமிழில் ஏராளம் .சொல்லப் போகும் விஷயத்தைக் கேட்டு மயக்கம் போட்டு விடாதீர்கள். உதாரணத்திற்கு தமிழில் யானையை பற்றி குறிக்க சுமாராக நூற்றிஎழுபது (170) சொற்கள் உள்ளது. அவற்றில் சாம்பிளுக்கு சில. 1யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம். உங்களுக்கு சந்தேகம் என்றால் கீழ்க்கண்ட தளத்தில்<br />
<br />
<a href="http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/" target="_blank">http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/ </a><br />
அல்லது<br />
<a href="http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/" target="_blank">http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ </a> இதில் 'யானை' என்று கொடுத்துப் பாருங்கள்.<br />
<br />
இதைவிடவா ஒரு மொழிக்கு பரிபூர்ண நிலை வேண்டும். இவ்வாறு ஒரு மொழி பரிபூர்ண நிலையை எட்டி விட்டால், அதன் அடுத்த நிலை தோன்றும் அதனால்தான் மிதமிஞ்சிய தமிழாக, தமிழின் ரகசிய மொழியாக சமஸ்கிருதம் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். இதைத்தான் வள்ளுவர் நிறைமொழி மாந்தரின் பெருமையாக கூறுகிறார் ஆங்கிலத்தில் இது போன்ற பரிபூர்ண நிலைதான் வார்த்தைச் சுருக்கம். உதாரணம் DVD, RAM, TV, VCR, CEO, MD, MLA, MP . இது போல் ஏராளமாக கூறலாம். <br />
<br />
வெளிநாட்டினர் மின்காந்த அலைபரப்பிகள் (Transmitters) கண்டுபிடித்த ஆரம்ப காலத்தில் பேச்சை ஒலிபரப்பும் தொழில்நுட்பம் அறியப் படாத காலத்தில், அப்பொழுது உள்ள வசதிக்கு தகுந்தவாறு செய்திகளை அனுப்ப "மோர்ஸ் கோட்" உருவானது. இது மற்ற மொழிகளை போல் பல எழுத்துக்கள் கொண்டதல்ல, குறில், நெடில் என்ற இரண்டே இரண்டு விதமான ஒலிக் குறியீடுகள் மட்டும் கொண்டு உருவாக்கப் பட்ட ஒரு மொழிதான். இது கேட்பதற்கான ஒரு மொழி. இது போல் ஒன்றை ஆதிவாசிகளும் உபயோகித்து செய்தியை பரிமாறிக் கொண்டனர். <br />
<br />
இப்பொழுதும் தந்தி அனுப்புவதற்கு மோர்ஸ் கோட் தான் பயன்படுகிறது. மேலும் கண்ணிழந்தவர்களுக்கான பிரெய்லியும் அதே போன்ற வித்தியாசமான எழுத்துரு மட்டும் கொண்ட, பெரும்பாலும் படிப்பதற்கு மட்டுமான மொழியாகும். அது போல் எழுதுவதற்கும் படிப்பதற்குமான ஷார்ட் ஹேண்ட் எனச் சொல்லப்படும் குறுக்கெழுத்தும் ஒரு விதமான மறைமொழிதான். செவிட்டூமையர்களுக்கான சைகை மொழியில் எழுத்தும், பேச்சும் கிடையாது. அமெரிக்காவில் ஒரு கிராமத்தில் 60 சதவீத மக்கள் செவிடராக மாறியதால் அங்கு சைகை மொழியே பிரதானமாகி விட்டது ஒருகாலத்தில்.</span><br />
<span class="fullpost"><a href="http://en.wikipedia.org/wiki/Martha's_Vineyard_Sign_Language">http://en.wikipedia.org/wiki/Martha's_Vineyard_Sign_Language</a><br />
<br />
சமஸ்கிருதம் உருவாக்கப் பட்ட காலத்தில் கேட்பதற்கும் பாடுவதற்கும் மட்டுமான மொழியாகத்தான் இருந்திருக்கிறது. வெகுகாலமாக அதற்கு எழுத்துரு கிடையாது, ஆகவே படிப்பதற்கும் எழுதுவதற்கும், பேசுவதற்கும் பயன்படாமல் இருந்தது. ஆனால் தற்காலத்தில் தனித்தியங்க முற்பட்டதால், தேவை கருதி வடமொழியின் எழுத்துக்களை பயன் படுத்திக் கொள்கிறது. <br />
<br />
இன்றளவும் மறை மொழிகளின் தேவை எல்லா இடங்களிலும் இருந்து கொன்டே இருக்கிறது. கணினியுடன் நாம் தகவல் பரிமாறிக் கொள்கிறோம். அதற்கு அடிப்படையாக நாம் கணினியுடன் உரையாட ஒரு மொழி அல்ல, பலமொழிகளைப் பயன்படுத்துகிறோம். </span><br />
<span class="fullpost"><br /></span>
<span class="fullpost">கணினியுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் பொழுது என்ன நடக்கிறது. நமக்குத் தெரிந்த மொழி ஆங்கிலமோ தமிழோ எந்த மொழியானாலும் நாம் அந்த மொழியில் கீ போர்ட் உடன் தகவல் பரிமாறிக் கொள்கிறோம். கீபோர்ட், விண்டோஸ்7 உடன் (Operating System) ஓஎஸ் கட்டளைகளால் உறவாடுகிறது. விண்டோஸ்7 "அசெம்பிளி லாங்க்வேஜ்"(Assembly Language ) ஐ பயன்படுத்தி பயாஸ் (BIOS)உடன் உறவாடுகிறது. பயாஸோ, மைக்ரோ புராஸசருடன் தொடர்பு கொள்ள "மெஷின் கோட்" (Machine Code) ஐ பயன்படுத்துகிறது.<br />
<br />
இந்த "மெஷின் கோட்" என்பது </span>இண்டெல் ப்ராஸசரை பொறுத்தவரை இரண்டே இரண்டு எழுத்துக்களும்(0,1), இருநூற்றி ஐம்பத்திஆறு(256) வார்த்தை(கட்டளை)களும் கொண்ட ஒரு மொழிதான். இன்றளவில் கணினி மூலம் அதிசயங்களை நிகழ்த்தி உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் மொழி அதுதான்.<br />
<span class="fullpost">
<br />
அசெம்பிளி லாங்க்வேஜ் உடன் உறவாட பலவிதமான மொழிகள் உள்ளன. அவற்றில் சில பேசிக், கோபால், ஃபோர்ட்ரான், சி, ஜாவா, ஆரக்கிள், பிஹச்பி, ஆன்றாய்ட் போன்று பல மொழிகள் உள்ளன. புதிய மொழியின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது இது போன்ற மொழிகளின் அட்டவணை மிகப் பெரியதாகி விட்டது. தெரிந்தே ஆக வேண்டுமென்றால் கீழே கிளிக் செய்யவும்.</span><br />
<span class="fullpost"><br /></span><span class="fullpost"><a href="http://en.wikipedia.org/wiki/List_of_programming_languages_by_type#Machine_languages.">http://en.wikipedia.org/wiki/List_of_programming_languages_by_type#Machine_languages.</a></span><br />
<span class="fullpost"><br />
உலகின் எந்த மொழியிலும் இல்லாத யாப்பிலக்கணமே தமிழின் முறையான பரினாம வளர்ச்சியின் உச்சத்தை பறைசாற்றும். ஏனெனில் யாரும் நினைத்துக் கூட பார்க்கமுடியாத, கற்பனைக்கும் எட்டாத யாப்பிலக்கணத்தை படைத்தது மட்டுமில்லாமல் அதில் படித்துத் தேர்ந்து "த"கரத்தில் பாடவா?, "க"கரத்தில் பாடவா ? "கை" போட்டு பாடவா? "பூ " போட்டு பாடவா?, சிலேடையில் பாடவா? அறம் பாடி அழிக்கவா? கலம்பகம் பாடி காலத்திற்கும் அழியாத கல்(சொல்)லறை கட்டவா? இசைப்பாட்டு பாடுகிறாயா அல்லது காதை இழக்கிறாயா?, என்று மொழி மீது கொண்ட நம்பிக்கையில் உயிரையும் கூட பணயம் வைத்து "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று சவால் விட்டவன் அல்லவா?. <br />
<a href="http://chandroosblog.blogspot.in/2010/04/blog-post.html" target="_blank">http://chandroosblog.blogspot.in/2010/04/blog-post.html</a> <br />
<br />
வரலாற்றின் "காட்சிப்பிழை" மயக்கத்தில் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ் தோன்றியது என்று சொல்பவர்களிடம், எந்தக் காலத்தில் சமஸ்கிருதம் தோன்றியது, எங்கே வாழ்ந்த மக்கள் அதைப் பேசினார்கள் என்பதற்கெல்லாம் சான்றுகள் இருக்காது. இருந்தால் அதைக் கொடுக்கட்டும். ஒரு மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் பேசுகிற, எழுதுகிற மொழியாக இருக்க வேண்டும். அதில் தொடர்ந்து இலக்கியங்கள் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியொரு மொழியாக சமஸ்கிருதம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் கி.பி. 150 க்குப் பிறகுதான் சமஸ்கிருதக் கல்வெட்டுகளே கிடைக்கின்றன. அசோகரின் கல்வெட்டுகள்கூட சமஸ்கிருதத்தில் இல்லை. சமஸ்கிருதத்தில் அரசாங்கத்தில் சில செய்திகளை மக்களுக்கும் பகைவர்களுக்கும் தெரியாமல் எழுதி வைப்பார்கள். இப்படி சமஸ்கிருதத்தை உருவாக்கி அதை ஒரு மொழியாகச் செம்மைப் படுத்தித் தந்தவர்களும் தமிழர்கள்தான். "வேதத்தை தொகுத்து எழுதியவர் வியாசர்' என்கிறார்கள். வியாசர் என்பதே தமிழ்ச் சொல்தான். ஆக, சமஸ்கிருதம் என்பது தமிழ் மூலத்திலிருந்து பிறந்த மொழி என்பதில் எந்த ஐயமும் இல்லை.''<br />
<br />
ரிக்வேதத்தை எடுத்துக் கொண்டால், அதில் சாதி வேறுபாடுகளைப் பற்றியோ, கடவுளர்களாக இன்று பிரபலம் அடைந்திருக்கிற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை. ரிக் வேதத்தில் வாயு, சோமன், அக்னி, வருணன் என்று சொல்லப்படுகிற கடவுளர்கள் அத்தனை பேருமே தமிழ் மூலத்தில்தான் இருக்கிறார்கள். மேலும் வேதங்கள் ஒருவரால் எழுதப்பட்டதல்ல; பதினைந்துக்கும் குறையாதவர்களால் எழுதப் பட்டிருக்கின்றன. இந்தப் பெயர்களை ஆராய்ந்தால், "கணியன்' "கனாதன்', "பரத்துவாசன்' என்று பன்னிரண்டு தமிழ்ப் பெயர்கள். இப்படித் தமிழின் தொன்மையைப் பற்றி நிறுவிக் கொண்டே போகலாம்.<br />
<br />
ஒரு புதிய மொழியை உருவாக்க அதிக அறிவோ, காலமோ தேவையில்லை. இருக்கும் மொழிக்கு ஒரு அல்காரிதம் தயார் செய்து என்கிரிப்ட் மற்றும் டிகிரிப்ட் செய்ய தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ ஒரு கோடிங் தயார் செய்தால் போதும் ஒரு புதிய மொழி, பழைய மொழியின் அத்தனை வார்த்தைகளுடனும், சிறப்புத் தன்மைகளுடனும் ஒரு நொடியில் உருவாக்கிவிடலாம். புதிய எழுத்துருவை உருவாக்குவதுதான் சிரமம். அது போன்று உருவாக்கப் பட்டதுதான் எழுத்துரு இல்லாத சமஸ்கிருதம்.<br />
<br />
உதாரணமாக "கதகமிகழ்" பாஷைக்கு தமிழ்மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் முன் 'க' வை சேர்ப்பதும் அழிப்பதும்தான் கோடிங். எடுத்துக் காட்டாக "கோடிங்" என்பதை "ககோகடிகங்" என்று எழுதுவதாகும். ககரத்திற்கு பதிலாக உயிர்மெயெழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்தையும் பயன்படுத்தினால் வெவ்வேறு புதிய மொழியை உருவாக்கலாம். உதாரணத்திற்கு அதே "கோடிங்" என்பதை "சகோசடிசங்" "பகோபடிபங்" என எழுதி இரு மொழிகள் உருவாக்கலாம். "ழ்மித" பாஷைக்கு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை திருப்பி போடுவதுதான் கோடிங்<br />
<br />
இதெல்லாம் எளிய சிறுபிள்ளைகளின் விளையாட்டு. இது ஒரு சாம்பிளுக்குத்தான் சொல்கிறேன் இதையே சங்கம் வைத்து யோசித்தால் ஆயிரம் வழிகள் கிடைக்கும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மானியர்கள் வயர்லெஸில் அனுப்பும் ஒவ்வொரு கட்டளைக்கும் ஒரு புதிய மொழியை உருவாக்கி அனுப்பினார்கள். ஏனெனில் அது இடைமறிக்கப் பட்டால் அதிலுள்ள செய்தி அம்பலமாகிவிடும். அதை டிகோட் செய்வதற்கே இங்கிலாந்து காரர்களுக்கு தாவு தீர்ந்து விட்டது.<br />
<br />
அது போல் தமிழன் உருவாக்கிய மொழிதான் சமஸ்கிருதம். அதன் கோடிங் முறை பற்றி இது வரை யாரும் யோசிக்காததால் அதன் ரகசியம் அம்பலம் ஆகவில்லை போலும். காலங்கள் கழியும் போது கோடிங் மறந்து விட்டிருக்கலாம் அல்லது மறைக்கப் பட்டிருக்கலாம்.. காலத்தின் போக்கில் அதுவரை என்கிரிப்ட் செய்யப் பட்ட வார்த்தைகளுடன் மட்டும் சுத்தமாக இருந்தது. பின்னர் என்கிரிப்ட் செய்யப்படாத (தமிழ்) வார்த்தைகளும் கலந்து விட்டது. ஆனால் தமிழன் உருவாக்கிய சமஸ்கிருதத்திற்கு அந்த கோடிங் நிச்சயமாக இவ்வளவு சுலபமாக இருக்காது. <br />
<br />
தமிழன் இயற்றிய யாப்பிலக்கணத்தையே கம்ப்யூட்டருக்கு போதித்து இது நாள்வரை ஒரு கவிதை எழுத வைக்க முடிய வில்லை. ஏனெனில் கணினிக்கு சொற்குற்றம், பொருட்குற்றம் தெரியாது. புரிய வைக்க முடியுமா என்பது ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ்க்கு பெரும் சவாலாக உள்ள விஷயம். தமிழிலும், கம்ப்யூட்டரிலும் வித்தகரான சுஜாதாவே தன் வாழ்நாளில் மிகவும் கஷ்டப் பட்டு ஒரே ஒரு (வெண்பா)கவிதை எழுதியதாக கூறியுள்ளார். கவிதை எழுதத் தேவையான தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்ற வாய்ப்பாட்டை நினைத்தால் எவ்வளவு பெரிய அறிவு ஜீவிக்கும் வெண்பா கனவில் வந்து கூட பயமுறுத்தும். அப்படி இருக்கும் போது ஒரு ரகசிய பாஷைக்கு தயாரிக்கப் பட்ட கோடிங் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். யாப்பிலக்கணம் ஒரு ஆய்வு கீழே கிளிக் செய்யவும்.</span><br />
<span class="fullpost"><br />
<a href="http://chandroosblog.blogspot.in/2010/04/tcp-ip.html" target="_blank">http://chandroosblog.blogspot.in/2010/04/tcp-ip.htm</a></span><br />
<br />
<span class="fullpost">தொடர கீழே கிளிக் செய்யவும்.<br />
<br />
</span><br />
<span class="fullpost"><a href="http://chandroosblog.blogspot.in/2014/11/3.html" target="_blank">தொடரும்..........................</a></span><br />
<span class="fullpost"> <br />
</span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-66921102368089882842014-09-24T11:31:00.000+05:302014-12-07T17:49:35.091+05:30சமஸ்கிருதம் எப்படி உருவானது ?.பாகம்1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சமஸ்கிருதம் எப்படி உருவானது ?.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து</div>
<div style="text-align: justify;">
மறைமொழி காட்டி விடும்.</div>
<div style="text-align: justify;">
<br />
என்கிறார் வள்ளுவர். இக்குறளின் பொருள் மிகவும் வெளிப்படை. "பரிபூர்ண நிலையடைந்த மொழியை உருவாக்கிய, முன்னோரின் பெருமையானது, அவர்கள் வாழுமிடத்து வழங்கப்படும் மறைமொழி கொண்டு அறியப்படும்" என்கிறார். மறைமொழி என்பதில் குழப்பம் ஏதுமில்லை. அது மறைத்து வைக்கப்பட்ட மொழி அல்லது ஒரு சங்கேத மொழி. மறை என்ற வேர்ச் சொல்லின் அர்த்தம் "ஒளித்து வை" என்பதாகும். குறளுக்கு விளக்கம் சொன்ன அனைவரும் மறைமொழி என்பதற்கு மந்திரம் என்கின்றனர். மந்திரம்’ என்ற சொல் தொல்காப்பியத்திலும் பயன்படுத்தப் படுகிறது.</div>
<div style="text-align: justify;">
“நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்</div>
<div style="text-align: justify;">
மறைமொழிதானே மந்திரம் என்ப” (பொரு- 480)</div>
<div style="text-align: justify;">
இதன் பொருள் :”நிறைந்த மொழியையுடைய மாந்தர்,</div>
<div style="text-align: justify;">
தமதாணையால் சொல்லப்பட்ட மறைந்த சொல் மந்திரமாகும்”. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மந்திரம் என்றாலே, மறைவாகவும், மூடி மறைத்தும் இருப்பது.</div>
<div style="text-align: justify;">
அதன் பொருள் வெளிப்படையாகத் தெரியாது. சிலர் மறை என்பதற்கு ஒழுக்கம் பற்றி கூறுவர் ஆனால் ஒழுக்கத்திற்கு அடைமொழியாக "மொழி" வராது மறைநூல் என்று வந்தால் கூட ஒழுக்கம் சம்பந்தப் பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம். "நீத்தார் பெருமை"யில் கூறுவதால் முன்னோர்கள் பற்றியும் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டிய மொழிப் பாதுகாப்பும், மொழியுணர்வும் பற்றி வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவர் தன்னுடைய தமிழ்மொழியைத்தான் நிறைமொழிக்கு உதாரணமாகக் கொண்டு விளக்கம் சொல்லி இருப்பார். அப்படி என்றால் தமிழ்நிலத்துக்குப் பெருமையாக ஒரு மறைமொழி இருக்க வேண்டுமல்லவா. அது வேறென்ன சமஸ்கிருதம் தான்.</div>
<br />
<div style="text-align: justify;">
சமஸ்கிருதத்தின் சுவடு பாரதத்தை தவிர வேறெங்கும் காணப்படவில்லை என்பதாலும், (அப்படியே இருந்தாலும் அது பாரதத்தில் இருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்பதை மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.) தமிழின் சமகால மொழியாக இருப்பதாலும், தமிழும் சமஸ்கிருதமும் இரட்டைமொழி போல் இருப்பதாலும் , மேலும் ஒரு தீபகற்பத்தில் இவ்வளவு சிறப்பாக இரண்டு மொழிகள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருப்பதாலும், சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்ட இனமோ குழுவோ இந்தியாவில் அறியப் படவில்லை என்பதாலும், பன்னெடுங்காலத்திற்கு (ஐயாயிரம் ஆண்டுகளுக்கு) முன்பே இரண்டு மொழிகளும் பொதுவான வார்த்தைகளை அதிகம் கொண்டிருப்பதாலும், அதில் தமிழ் மட்டும் இயற்கை மொழியாக இருப்பதாலும், மற்றொன்று செயற்கையாக இருப்பதாலும் அம்மொழி ரகசியத்திற்காகவும், புனிதத்திற்காகவும் தமிழனால் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். இராமாயண காலத்திலேயே தமிழுடன் சமஸ்கிருதம் இருந்தாக அறியப் படுகிறது, தமிழில் மட்டுமே உள்ள மொழி மற்றும் மண் சார்ந்த பழமொழிகள் சமஸ்கிருதத்தில் இருப்பதால் சமஸ்கிருதத்தையும் தமிழையும் படைத்தவன் ஒரே இனமாகத்தான் இருக்கமுடியும். தமிழில் இருந்து சமைக்கப் பட்ட மொழி என்பதால் சமஸ்கிருதம் எனப்பட்டது.</div>
<span class="fullpost">
</span>
<br />
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<span class="fullpost">
</span>
<br />
<div style="text-align: justify;">
<span class="fullpost">உலகளவில் தமிழ் பரவி இருக்கும் போது சமஸ்கிருதம் ஏன் தமிழோடு பரவில்லை என்பதன் காரணம் தற்பொழுது விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். தமிழன் உலகம் முழுவதும் பரவும் பொழுது சமஸ்கிருதம் படைக்கப் படவில்லை. அது தமிழகத்தில் நிலைகொண்ட தமிழனால் பிற்காலத்தில் அதாவது முதற்ச் சங்ககாலத்திற்கு பின் படைக்கப் பட்டதால் அது இந்தியாவை தாண்ட முடியவில்லை இந்திய தீபகற்பத்தில், இந்திய தொல்பொருள் துறையினால் கண்டு பிடிக்கப்பட்ட மிகவும் பழமையான கல்வெட்டுகளில் ஐம்பத்தைந்து சதவீதத்திற்கு மேல் தமிழில்தான் உள்ளது. ஏனெனில் சமஸ்கிருதத்திற்கு எழுத்துரு கிடையாது. மேலும் அது பேச்சு வழக்கிலும் இல்லை. இந்த ஒரு சான்றினால் தமிழ் ஒன்றுதான் இந்தியா முழுமையும் கோலோச்சியது என்பது மட்டுமில்லாமல் மிகவும் பழமையானது என்கிற உண்மையை தெரிந்து கொள்ளலாம். </span></div>
<span class="fullpost">
</span>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<span class="fullpost">
<div style="text-align: justify;">
தமிழ் என்பது இயல்பாக, இயற்கையாக தோன்றியது. மொழிகளுக்கெல்லாம் மூலமாகிய ஆதி மொழியாக விளங்கியது என்பதில் ஐயம் ஏதுமில்லை. எதியோப்பியாவில், ஹங்கேரியில், கொரியாவில், ஜப்பானில் தென் அமெரிக்காவில் என்று உலகின் எட்டுதிக்குகளிலும் காணப்படும் தமிழின் கலப்பு, உணர்த்தும் செய்தி என்னவென்றால் உலகமொழிகளின் தாய், தமிழ்தான் என்பதாகும். ஆகவே தமிழன் "சமைத்த" மொழிதான் சமஸ்கிருதமும்.</div>
<div style="text-align: justify;">
<br />
அதையேதான் விக்கி சொல்கிறது.</div>
<div style="text-align: justify;">
The Sanskrit verbal adjective sáṃskṛta- may be translated as "put together, constructed, well or completely formed; refined, adorned, highly elaborated". It is derived from the root saṃ-skar- "to put together, compose, arrange, prepare",[6] where saṃ- "together" (as English same) and (s)kar- "group" (transitive verb). (cf. Norwegian 'sammen skjær', Afrikaans 'saamskaar')</div>
</span><br />
<span style="text-align: justify;"><br /></span>
<span style="text-align: justify;">The term in the generic meaning of "made ready, prepared, completed, finished" is found in the Rigveda. Also in Vedic Sanskrit, as nominalised neuter saṃskṛtám, it means "preparation, prepared place" and thus "ritual enclosure, place for a sacrifice".</span><br />
<span class="fullpost">
</span>
<br />
<div style="text-align: justify;">
As a term for "refined or elaborated speech" the adjective appears only in Epic and Classical Sanskrit, in the Manusmriti and in the Mahabharata. The language referred to as saṃskṛta "the cultured language" has by definition always been a "sacred" and "sophisticated" language, used for religious and learned discourse in ancient India, and contrasted with the languages spoken by the people, prākṛta- "natural, artless, normal, ordinary".</div>
<span class="fullpost">
</span>
<br />
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<span class="fullpost">
</span>
<br />
<div style="text-align: justify;">
<span class="fullpost"> சமஸ்கிருத பேரறிஞர் ஹெச். ஹெச்.இங்கல்ஸ், "சமஸ்கிருதம் ஒரு உருவாக்கப்பட்ட, செயற்கையான மொழிதான்" என்று ஆதாரத்தோடு நிரூபிக்கிறார்.</span></div>
<span class="fullpost">
</span>
<div style="text-align: justify;">
<span class="fullpost">The eminent sanskritist, Daniel H.H. Ingalls describes some peculiar characteristics of the Sanskrit language. He refers to the enormous vocabulary of Sanskrit, and also of the presence of a larger choice of synonyms in Sanskrit than any other language he knew of.Ingalls argues that Sanskrit is not a natural language, but an 'artificial' language. By 'artificial', he explains he means it was learned after some other Indian language had been learned by simple conditioning. Ingalls writes: 'Every Indian, one may suppose, grew up learning in a natural way the language of his mother and his playmates.</span></div>
<span class="fullpost">
</span><br />
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Sanskrit" style="text-align: justify;" target="_blank"> http://en.wikipedia.org/wiki/Sanskrit</a><br />
<span class="fullpost"></span><br />
<div style="text-align: justify;">
The oldest dated Tamil inscription written in the Tamil-Brahmi script has been found in Palani in Southern India, scientifically dated to 540 BCE - the oldest known Brahmi inscriptions on the Indian sub-continent.[29] More than 55% of the epigraphical inscriptions (about 55,000) found by the Archaeological Survey of India are in the Tamil language.[30] Tamil language inscriptions written c. 1st century BC and 2nd century AD have been discovered in Egypt, Sri Lanka and Thailand.[31] The two earliest manuscripts from India,[32][33] to be acknowledged and registered by UNESCO Memory of the World register in 1997 and 2005 were in Tamil.[34] Tamil is used as a sacred language of Ayyavazhi and in Tamil Hindu traditions of Shaivism and Vaishnavism. According to a 2001 survey, there were 1,863 newspapers published in Tamil, of which 353 were dailies.</div>
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Tamil_language" style="text-align: justify;" target="_blank">http://en.wikipedia.org/wiki/Tamil_language</a><br />
<span class="fullpost">
</span>
<br />
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<span class="fullpost">
</span>
<br />
<div style="text-align: justify;">
<span class="fullpost">இராமாயணத்தில் அனுமன் சீதையிடம், தான் ராவணனின் மாயை அல்ல உண்மையான ராமனின் தூதுவன் தான் என்பதை வழக்கமான, சீதைக்கும் அனுமனுக்கும் தெரிந்த தேவ பாஷையில் பேசாமல், மனித பாஷையில் அதாவது தமிழில் பேசி உணர வைத்ததாக வால்மீகி கூறுகிறார். ஒரு வேளை ராவணன் சீதையிடம் தமிழில் பேசமாட்டானோ?. ஆகவே தேவபாஷை என்பது முக்கியமானவர்கள் கற்றுத்தேற வேண்டிய மொழி என்பதும் மக்கள் </span></div>
<span class="fullpost">
</span>
<div style="text-align: justify;">
வழக்கில் இருந்த மொழி தமிழ் என்பதும் தெரிகிறது.</div>
<br />
<a href="http://thamizhan-thiravidana.blogspot.in/2011/09/69.html" style="text-align: justify;" target="_blank">http://thamizhan-thiravidana.blogspot.in/2011/09/69.html.</a><br />
<span class="fullpost"></span><br />
<div style="text-align: justify;">
</div>
<span class="fullpost">
</span>
<span style="text-align: justify;">அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் ரகசிய மொழியின் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அது சமூக நன்மைக்காகவும் இருக்கலாம், சுயலாபத்திற்காகவும் இருக்கலாம். இன்றும் கூட நண்பர்களுக்குள் நான்கு பேர் கூடி விட்டால் அதில் இரண்டு பேர் கோஷ்டி சேர்ந்து கொண்டு ரகசியமாகப் பேசி மற்ற இருவரை குழப்புவார்கள் அல்லது கலாய்ப்பார்கள். புரியாதவர்கள் மொக்கையாய், முட்டாளாய் உணருவார்கள். அதுமட்டுமில்லாமல் பெரியவர்கள் கூடி சில விஷயங்களில் முடிவெடுக்கும் போது சிறுவர்கள் மற்றும் தகுதி இல்லாதவர்களின் தலையீடு இல்லாமல் இருக்கவும் ரகசிய பாஷை தேவைப் படுகிறது.</span><br />
<br />
<span class="fullpost"></span>
<br />
<div style="text-align: justify;">
மகாபாரதத்தில் ஒரு கட்டத்தில், அரக்குமாளிகையின் நோக்கத்தை புரிந்து கொண்ட பீஷ்மர், பாண்டவர்களை காப்பாற்றுவதற்காக விதுரனிடம் அத்தகவலை சொல்லி, தருமனிடம் போய் சொல்லச் சொல்கிறார். விதுரனும் தருமனிடம் வந்து தனிமையில் சொல்ல நினைக்கும் போது சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அப்பொழுது அவர்கள் இருவர் மட்டும் அறிந்த ரகசிய பாஷையில் தகவலைச் சொல்வதாக கேள்விப் பட்டிருக்கிறேன். ரகசிய மொழியின் அவசியம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே தேவைப் பட்டிருக்கிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
இப்பொழுதும் தமிழ் நாட்டில் ஐம்பது வயதிற்கு மேற்ப் பட்டவர்களுக்கு "கதகமிகழ்" பாஷை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால் இந்தமாதிரி பாஷைகளுக்கு எழுத்துருவம் தேவையில்லை என்பதுதான் முக்கியமான ஒற்றுமை. இவ்வளவு ஏன்? எங்கள் வீட்டில் கூட ஒரு ரகசிய பாஷை உள்ளது. எங்கள் குடும்பத்தினர் மட்டும் பேசிக் கொள்வோம். எனது மகளும் மகனும் பேசினால் சமயத்தில் எங்களுக்கே புரியாது. (டிகோடிங் லேட்டாகும்)</div>
<span class="fullpost">
</span>
<br />
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<span class="fullpost">
</span>
<br />
<div style="text-align: justify;">
<span class="fullpost">நானும் எனது நண்பனும் (வனராஜ்) அப்பொழுதான் "ஹாம்" லைசென்ஸ் (1972)வாங்கியிருந்தோம். ஏற்கனவே ஹாம்களுக்கென்று சில குறியீடுகள் இருக்கும். அதனால் அதை ஒட்டி ஒரு பாஷையை உருவாக்கிக் கொண்டோம். நானும் நண்பனும் (சந்தேகமில்லாமல் அறிவு ஜீவிகள்தான்) அக்காலத்தில் அதாவது எழுபதுகளில், எங்களிருவருக்கான பாஷையில் பெண்களைப் பற்றிய கமெண்ட்களை மிக சகஜமாக பஸ்ஸின் நெருக்கத்தில் கூட அவர்கள் அறியாதவாறு பேசிக் கொள்வோம். அதில் சில முக்கியமான வார்த்தைகளைக் கூறுகிறேன் பின் பற்ற முடிகிறதா என்று பாருங்கள். டிஎக்ஸ், ஒய்யெல், பிஎஸ், கேங்க், புஷ்புல், பைடேங்க், ஆரெஸ்டி புரிகிறதா?. இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு எழுத்துருவையும் உருவாக்கி கடிதமெல்லாம் எழுதிக் கொண்டோம். அது பழைய கதை. தற்கால சினிமாவிலும் அந்த நுட்பம் பயன்படுத்தப் பட்டிருப்பதை காணலாம். ஃப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய் "ழ்மித ஷைபா" பேசுவார். "ல்தகா யய்செ யாசைஆ குக்ருஇ" என்பார்.</span></div>
<span class="fullpost">
</span>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<span class="fullpost">
<div style="text-align: justify;">
நண்பர்கள் குழுமியிருக்கும் போது ஒரு நண்பர் இன்னொருவருக்கு திடீரென்று "குட்மானிங்" சொல்வார்கள் அதற்கு அர்த்தம் "ஜிப்பை மூடுடா இடியட் " என்று அர்த்தம். இது போன்ற சில ரகசிய குறியீடுகள் ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் இருக்கும். மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் மாட்டின் விலையை தங்கள் விரல்களால் பேசிக் கொள்வார்கள். இதனால் விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும் "விலை வைக்கும் " போக்கு தவிர்க்கப் படுகிறது. வியாபாரிகளும் ஒரு வித குறியீடுகளை தங்களது வியாபாரத்தில் பின் பற்றுகின்றனர். ஒரு பொருளின் அசல்விலையை குறியீடுகளால் குறித்திருப்பார்கள். வாடிக்கையாளரைப் பொறுத்து குறியீட்டைப் பார்த்து லாபத்தை வைத்துக் கொள்வார்கள். இப்பொழுதெல்லாம் நிலையான லாபம் போதும் என்பதால் பார்கோட், மற்றும் க்யூ கோட் போன்ற மெஷின்கள் மட்டும் பேசிக் கொள்ளும் மொழி முறைகளும் கையாளப் படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக அறிவாளிகளுக்கு, நடைமுறையில் உள்ள ஒரு மொழி தவிர்த்து தன்னைப் போன்றவர்கள் வட்டத்தில் மற்றவர்களுக்கு புரியாமல் புதிராகப் பேசி மகிழ, சன்டையிட, ரகசியங்களை பரிமாறிக் கொள்ள, தொழிலை பாதுகாக்க ஒரு மொழி மிகமிக அவசியமாகத் தேவைப் படுகிறது. தமிழ்ப் புலவர்கள் சாமானியனுக்கு புரியாமல் தங்களுக்குள் அடிக்கடி பாடியே சன்டையிட்டுக் கொண்டவர்கள் அல்லவா? இன்றும் தமிழில் உள்ள பாடலுக்கு பொருளுரை இல்லாமல் அர்த்தம் கொள்வது இயலாத காரியமாகத்தானே இருக்கிறது. </div>
</span><br />
<br />
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.in/2014/11/2.html" target="_blank">தொடரும்..................</a></div>
<br />
<div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
</div>
</div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-45078746676081594272014-09-07T09:43:00.001+05:302014-12-07T17:37:53.758+05:30தமிழன் இந்துமதம் சமஸ்கிருதம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br />
ஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெயர் இருப்பதை மறந்து விட்டு திராவிடன் திராவிடன் என்று எவனோ கூறியதை மனதில் ஏற்றுக் கொண்டு இன்னும் தெளிவுக்கு வராமல், ஆரிய சித்தாந்தத்தில் முழ்கியிருக்கும் அரை வேக்காடுகளுக்கு சமர்ப்பனம் இந்தக் கட்டுரை.</div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
காட்சிப் பிழை:</span><br />
<div style="text-align: justify;">
<span class="fullpost">முதலில் அடிப்படையான சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்வோம். 35எம்.எம் திரைப்படச் சுருளில் ஒரு செகண்ட் ஓடுவதற்கு 24 நிலைச் சட்டங்கள் (ஸ்டில் ஃப்ரேம்கள்) இருந்தால்தான் நிகழ்வின் செயல், வித்தியாசமில்லாமல் தெரியும். உதாரணமாக ஒருவர் ஆடையை மாட்டுவது போல் எடுத்தால் முழுச் சுருளையும் முன்னேற்ற திசையில் (பார்வர்ட் டைரக்சனில்,24fps) பார்த்தால்தான் உண்மை தெரியும். அதை விடுத்து பின்னேற்ற திசையில் (ரிவர்ஸ் டைரக்சனில்) பார்த்தால் ஆடையை கழட்டுவது போல் தெரியும். அவ்வாறு எடுக்கப் பட்டவைகளின் கலவைதான் கீழுள்ள தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="https://www.youtube.com/watch?v=_RW7cQs_I-8" target="_blank">https://www.youtube.com/watch?v=_RW7cQs_I-8 </a></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">அது மட்டுமல்லாமல் அதிலுள்ள ஒரு குறிப்பிட்ட ஃப்ரேமை வைத்து அவர் ஆடையை கழட்டுகிறாரா அல்லது மாட்டுகிறாரா எனச் சொல்லவே முடியாது. அது போல் வரலாற்றின் குறிப்பிட்ட நிலைத் தகவலை வைத்து இப்படித்தான் தப்பாக கற்பிதம் செய்து, ஒவ்வொரு கால கட்டத்திலும் யாராவது ஒருவர், மக்களை அறிந்தோ அறியாமலோ முட்டாளாக்கினார்கள். அந்த வகையில் அறியாமல் செய்த அரை வேக்காடுகளில் முதண்மையானவர் பெரியார். </span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">ஆனால் அறிந்தே செய்வதற்கு, மெக்காலேவால் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டவர் மாக்ஸ்முல்லர். இந்தியாவிலிருந்து ஐரோப்பா சென்றவனை எதிர்த்திசையில் ஆராய்ந்து பார்த்தால் அங்கிருந்து வந்தவ (ஆரிய) னாகத்தான் தெரிவான். அதுவே அவனது மதத்தை பரப்புவதற்கு சாதகமாக இருந்ததால் வரலாறாக மாற்றி விட்டான். ஆனால் ஒன்றை மறந்து விட்டான். மனிதனின் உடம்பிலுள்ள டிஎன்ஏ எனப்படும் சிறு துகள்களின் மூலம் தனி மனித வரலாறு மட்டுமின்றி, ஒட்டு மொத்த மனிதகுலத்தின் வரலாற்றையே அறிய முடியும் என்பதை. அதே மாக்ஸ்முல்லர் தன் வாழ்நாளின் கடைசிக் காலங்களில் உலகத்தில் கடவுளால் முழுமையாக படைக்கப் பட்ட நாடு இந்தியா என்றும். மதங்களுக்கெல்லாம் தாய் மதம் இந்துமதம் என்றும், தத்துவ பேரறிஞர்கள் நிறைந்த நாடு இந்தியா என்றும், தலை சிறந்த காவியம் மகாபாரதம் என்றும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">"If I were to look over the whole world to find out the country most richly endowed with all the wealth, power, and beauty that nature can bestow – in some parts a very paradise on earth – I should point to India............................................................." </span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="http://en.wikipedia.org/wiki/Max_M%C3%BCller" target="_blank">http://en.wikipedia.org/wiki/Max_M%C3%BCller </a></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">இந்தியாவிற்கு வந்தவுடன் இந்துமத தொண்மையில் ஆச்சரியமும், இந்துமதத்தின் அறிவியலில் வியப்பும் அடைந்த சில ஆங்கில கவர்னர்களும், ஐரோப்பிய அறிவியலாரும் தங்களுடன் எப்பொழுதும் சில மொழி பெயர்ப்பாளர்களையும் ஓவியர்களையும் ஐரோப்பாவில் இருந்தே அழைத்து வந்து இங்குள்ள அறிவியல் பொக்கிஷங்களை நகல் எடுத்தனர். சிலரோ தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந்து மூலத்தையே அள்ளிச் சென்றனர். உ.ம்-வீரமாமுனிவர்(1710), யுவான் சுவாங்(660). தங்களால் மொழி பெயர்க்க முடிந்தவற்றை எல்லாம் அக்காலத்தில் கிரேக்க மொழியிலும் ஆங்கிலத்திலும், சீன மொழியிலும் மொழி பெயர்த்து நூற்களாக்கி தங்கள் நாட்டின் நூலகத்தில் அடுக்கி வைத்துக் கொண்டனர். ஆங்கிலேயர்களே தமிழின் ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்தனர்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"> ''According to Xuanzang's biography he returned with, "over six hundred Mahayana and Hinayana texts, seven statues of the Buddha and more than a hundred sarira relics''.(விக்கி)</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">''Max Müller wrote both scholarly and popular works on the subject of Indology and the Sacred Books of the East, a 50-volume set of English translations, was prepared under his direction.''</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">ஐரோப்பியர்கள் இங்கு வந்து பொருட் கொள்ளை மட்டுமின்றி அறிவுக் கொள்ளையும் நடத்திவிட்டு இங்கிருப்பவனை முட்டாளாக்கி விட்டார்கள். யோசித்துப் பாருங்கள், மேற்கத்திய அறிவியலின் வயது கடந்த ஆயிரம் வருடங்களுக்கு முந்தியதுதான். அப்பொழுதுதான் அவர்களின் இந்திய பிரவேசம் நிகழ்ந்தது என்பது வரலாற்றுச் சான்றாகும். கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்தினுடன் கொசுறாக இலக்கிய, அறிவியற் கொள்ளையும் நடந்தது. அது மட்டு மில்லாமல் நமது மதத்தின் தொண்மையை அழித்து, வரலாற்றை மாற்றி அமைத்தனர். இருபதாயிர வருட பழமை கொண்ட இந்து மதத்தின் வரலாற்றை நான்காயிர வருடங்களுக்குள் முடக்கினர். </span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">இருபதாயிர வருட பழமை கொண்டதா இந்து மதம்?</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"> ஏன் இருக்க முடியாது?. ஒரு தனி மனிதனின் வரலாறு எப்படி, அவன் பிறந்தது முதல் கணக்கிடப்படுகிறதோ அது போன்றே ஒரு மதத்தின் வரலாறும் அம்மக்கள் தோன்றியதிலிருந்து கணக்கிடப் பட வேண்டியதாகும். மதம் என்றால் என்னவென்று அறியாதவர்களின் உளறல்தான் வளைத் தளமெங்கும் காணப் பெறுகிறது. மதம் என்பது இயற்கையின் தேர்வு. ஒரு குழுமத்தின் வாழும் முறையாகும். அம்முறைக்கு பின்னர் மக்கள் இட்ட பெயர் மதம். மதம் தோன்றிய காலத்தில் சமூக அமைப்பிற்காகவும். சமூக பாதுகாப்பிற்காகவும் சட்டதிட்டங்கள் இயற்றப் பட்டன. </span>ஜாதி என்பது தொழில். இந்தியாவில் சமூக பாதுகாப்பிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாததால் பொழுதுபோக்கிலும், கொண்டாட்டங்களிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.</div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">அதில் வாழ்பவர்களை விட வாழும் இடத்தின் மண், மரம், காற்று, சூழல், மொழி ஆகியவற்றின் பங்களிப்பு அதிகம், ஏனெனில் அவைதான் நிலைத்து நிற்பவை. ஒருவன் பிறக்கும் போதிலிருந்து இறக்கும் வரை எல்லாச் செயல்களிலும் மதத்தின் தலையீடு இருக்கின்றது. உதாரணமாக இந்து மதத்தில் ஒருவன் பிறக்கும் முன்பிருந்து, அதாவது அவனது தாய் தந்தையரின் சாந்தி முகூர்த்தம் தொட்டு, வளைகாப்பிலிருந்து, பிறக்கும் நேரம் குறிக்கப்படுதல் என ஆரம்பித்து, சேனைப்பால் ஊற்றுவதிலிருந்து, கடைசியில் பால் ஊற்றுவதுவரை மட்டும் இன்றி அமாவாசை, திதி என்று இறந்த பின்பும் அவனை அறியாமலே தொடர்கிறது. </span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">ஆகவே மதம் என்பது மண்ணிற்கு சொந்தமானது. (மண்ணை மாற்றினால் மதத்தை மாற்றலாம்.) அதில் கடவுளின் பங்கு மிகக் குறைந்த சதவீதம்தான். அதுமட்டுமில்லால் இந்து மதம் என்பது மைய அதிகாரம் கொண்ட சர்வாதிகார மதமும் அல்ல. முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகளால் ஆளப்படும் மதமும் அல்ல. அவர்களுக்கு யாரும் கட்டளை பிறப்பிக்க முடியாது. முற்றிலும் சுதந்திரமானது. (Open source) அதனால்தான் அது மதங்களுக்கெல்லாம் தாய் மதமாக விளங்குகிறது. புத்தம், ஜைனம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கெல்லாம் மூலமாக விளங்குகிறது. இதை உணராமல் இன்று கடவுளை மட்டும் முன்னிறுத்தி மதத்தைப் பரப்புவதும், துவேசிப்பதும் நடை பெறுகிறது. மதம் மாறுகிறேன் என்று தனக்கும் இந்த மண்ணிற்கும் துளியும் சம்பந்தமில்லாத சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக ஆங்கில மொழியைப் பின்பற்றுவதால் குளுமையான வரவேற்புக்கு பதிலாக, பைத்தியக்காரத்தனமாக சூடான (Warm welcome) வரவேற்பை அளிக்கிறார்கள். கேட்டால் அவனது பாணியில் பேச வேண்டுமாம்.மொழியை மாற்றும் போதே இவ்வளவு பைத்தியக்காரத் தனம் என்றால் மதம் மாறும் போது கேட்கவே வேண்டாம்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">இன்றைய மனித இனத்தில், ஆப்பிரிக்காவை ( Out of Africa) தவிர்த்து உள்ள 95 சதவீத மனித இனத்தின், மூதாதையர் தமிழர்தான் என நிரூபிக்கப் பட்டுள்ளது. (தமிழனின் முன்னோடியும் ஆப்ரிக்கா தானே என வாதிடலாம். ஆனால் இங்கு மனித இனம் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்தான் தமிழ் மண்ணிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளது ) மனித இனம் 50,000 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் இருந்துதான் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளது என்ற உண்மையை பல் வேறுபட்ட நேஷனல் ஜியோகிராபி, டிஸ்கவரி, பிபிசி போன்ற குழுமங்களாலும் ஸ்டீபன் ஓப்பன்கியுமர் என்ற தனி நபர்களாலும் மேற்க் கொள்ளப் பட்ட ஜெனிட்டிக் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றதை முதலில் அறிந்து கொண்டு, நமது தமிழ்ப் பகுத்தறிவுகள் புதிய வியூகம் அமைத்துக் கொண்டு வரட்டும்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="http://en.wikipedia.org/wiki/Recent_African_origin_of_modern_humans">http://en.wikipedia.org/wiki/Recent_African_origin_of_modern_humans</a></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"> இந்த உண்மையை தமிழ்ப் பகுத்தறிவுகளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏற்றுக் கொண்டால் இத்தனை காலங்களாகக் கட்டிய ஆரிய பகுத்தறிவு மணற் கோட்டைகள் தகர்ந்து விடுமே, வெட்டவெளியில் வரலாற்றின் அகதிகளாக அலைய நேரிடுமே, பாமரன் கூட பார்த்துச் சிரிப்பானே, இல்லாத ஆரியனும் இரவில் வந்து தூக்கத்தைக் கலைப்பானே என்ற எண்ணத்துடன் அத்தனை கொள்கைகளையும் மாற்ற வேண்டியதிருக்கும். பின்னர் அந்த மூஞ்சியை எப்படி அவர்களால் வெளிக்காட்ட முடியும் எனத் தெரியவில்லை. ஜெனிடிக் அறிவியல் இந்த தமிழ்ப் பகுத்தறிவுவாதிகளின் மூஞ்சியில் காறித் துப்பியுள்ளது. ஏனெனில் தமிழ்ப் பகுத்தறிவுகளின் பள்ளிக்கூடங்களின் முதல் வார்த்தையே ஆரியம் தானே. இனிமேல் எவனாவது ஆரியம் பேசினால் காறித் துப்பாவிட்டாலும் பரவாயில்லை கைகொட்டி சிரியுங்கள், அப்பொழுதான் சக தமிழனின் மானம் காக்கப் படும், அறியாமை நீக்கப் படும்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8yDuWZGjTYcqeI0dG6nYrq53FwtA9w1CThQ8hweElmeDx94inu_yTm3kPZHH5IQ1e5UGmeK6MDervp_paJknf0mTQ87owILe906EyoMIPkakT6_IRBDYghg75U8aR-HDDvMbIsvyEBmft/s1600/Geno+Project+Human+Migration+Map_print.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8yDuWZGjTYcqeI0dG6nYrq53FwtA9w1CThQ8hweElmeDx94inu_yTm3kPZHH5IQ1e5UGmeK6MDervp_paJknf0mTQ87owILe906EyoMIPkakT6_IRBDYghg75U8aR-HDDvMbIsvyEBmft/s1600/Geno+Project+Human+Migration+Map_print.jpg" height="456" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நேஷனல் ஜியாகிராபியின் ஜெனிடிக் பரவல் பற்றிய படம்.</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">"கல் தோன்றா மண் தோன்றா காலத்து வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" தமிழன் என்பதில் மிகைப்படுத்தல் ஏதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகிவிட்டது. தமிழனைப் பற்றி அறிய தமிழனை, தமிழை, அவனது இலக்கியத்தை வரலாற்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். விக்கியும், கூகுளும் தமிழைப் பொறுத்தவரை அரைகுறைதான். ஏனெனில் ஏற்றப் பட்ட தகவல்கள்தான் கிடைக்கின்றன். தமிழ்மொழி 2008 ல் 264 மொழிகள் கொண்ட விக்கிபீடியாவில் தமிழ் 15,000 கட்டுரைகளுடன் 67 வது இடத்தில் இருந்தது. தெலுங்கு 39 வது இடத்தில் இருந்தது. இன்றைய நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் அது போதாது. அத்தளங்களுக்கு தகவல் ஏற்றுவதும் சரியான தமிழனாக இருந்தால்தான் உண்மையான தகவலைப் பெறமுடியும். தகவல் ஏற்றுவதற்கு ஆட்களும் இல்லை அக்கறையும் இல்லை. உள்ளுரிலே எதிரிகளிருக்கும் போது உண்மையை எவ்வாறு உரைக்கமுடியும்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">அவ்வளவு தூரம் வரலாற்றை ஆய்வு செய்ய அக்கறையும், அறிவும் இல்லை என்றால் குறைந்தது ஒரு முவாயிரம் வருடங்களுக்கு முன்னுள்ள தகவலை வைத்தாவது தர்க்க ரீதியாக யோசித்தாலே தெரியும் தமிழன் இந்துவாகத்தான் இருந்திருக்கிறான். சங்ககால இலக்கியத்தில் இருந்து தெரிவது என்னவென்றால் கடந்த பத்தாயிரம் வருடங்களாக தமிழன் இந்துவாகத்தான் இருந்திருக்கிறான்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">ஜெனிட்டிக் ஆராய்ச்சியின் முடிவுகளோ 75,000 வருடங்களாக இந்திய தென் தீபகற்பத்தில் தமிழன் இருந்திருக்கின்றான் எனத் தெரிவிக்கிறது. ஏனென்றால் 75,000 வருடங்களுக்கு முன் சுமத்ரா தீவில் நிகழ்ந்த டோபா எரிமலை வெடிப்பிற்கும், சங்ககால இலக்கியங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் முப்புரம் எரிப்பிற்கும், (திரிபுரம் எரித்த விரிசடையன்) அதன் விளைவாக இந்தியா, தென் மேற்கு, மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதும் படர்ந்த மூன்று மீட்டர் உயர சாம்பலுக்கும், உடலெங்கும் சாம்பலை பூசிய ஈசனுக்கும் தமிழக ஆன்மீக (விபூதி) சாம்பலுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. </span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பத்திஒன்பது நாடுகள் இருந்துள்ளது. (நாற்பத்தொன்பது இல்லை என்றாலும் ஏழு என்றாவது வைத்துக் கொள்ளலாம் அல்லவா?.) மற்றும் பஃறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. என்றும், குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது என்றும் நமது பழந்தமிழ் நூல்கள் மூலம் அறியமுடிகிறது. எயிதென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4000 இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முதுகுறுகு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டதாக அறிகிறோம். இந்த மாதிரியான ஆராய்ச்சிகளை வட இந்தியர்கள் எதிர்க்கிறார்கள். தமிழக அரசும் அக்கறை கொள்வதில்லை.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"> சங்ககால பாடல்களில் தமிழன் குறிப்பிடும் பஃறுளியாறு உட்பட்ட பெரும் நிலப்பரப்பு ஆகியவை அழிந்து மிச்சம் உள்ள நிலப்பரப்பே இன்றுள்ள தமிழகம் என அறியும் பொழுது கடற்கோளால் அழிந்தது எவ்வளவு என்பதும், எவ்வளவு காலத்திற்கும் முன்பு என்பதும் அதனால் மனித இனத்திற்கு ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதும் இது வரை கணக்கிட முடியவில்லை. மக்களையும் அவர்களது இலக்கிய படைப்புகளையும் கடல் விழுங்கி விட்டது. கிடைத்த தகவல்களை வைத்து எழுதப் படும் வரலாறும் தற்காலிக மானதாகத்தான் இருக்கும். ஒரு திரைப் படத்தின் ஏழெட்டு ஸ்டில்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய அந்த திரைப் படத்தின் முழுக்கதையும் கற்பனையில் எழுதினால் எப்படி இருக்குமோ அது போல்தான் வரலாறும் இருக்கும்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">கூறு கெட்டவர்கள் இருவர் ஒரு திரைப்படத்திற்குச் சென்றனராம் முதலில் அந்த ஜெமினி இரட்டையர்கள் குழலூதுவதைப் பார்த்துவிட்டு உறங்கத் தொடங்கியவர்கள் கடைசியில் அதே இரட்டையர்கள் குழலூதி முடிப்பதை பார்த்து, எழுந்தார்களாம். அவர்களிடம் கதை கேட்டால் இரண்டுமணி நேரமாக இரு சிறுவர்கள் குழலூவதுதான் கதை என்பார்கள். அது போன்றதுதான் அரைகுறையாளர்கள் எழுதும் வரலாறும் இருக்கும். கீழுள்ள தளத்தை படிக்கும் முறை அறிந்து படித்தால் உலக மனித இனத்தின் வரலாற்றைப் பற்றிய முழுமையான விளக்கம் கிடைக்கும். </span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="http://www.bradshawfoundation.com/journey">http://www.bradshawfoundation.com/journey</a>/</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">மனித இனத்தின் வரலாறு மேற்கண்ட தளத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த ஆராய்ச்சியில் தமிழ், சமஸ்கிருத மொழி இலக்கிய ஆராய்ச்சியும்,வரலாற்று ஆராய்ச்சியும் கலந்து இருந்தால் முழுமையான ஆராய்ச்சியாக இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள தளம். கிழக்கு ஆசியா முழுவதும் தமிழனின் ஜீன்தான் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. ஆனால் இந்த அரைகுறைகள் தைமூரின் படையெடுப்பால் அங்கிருந்து ஜீன் இங்கு கலந்தாக நம்பிக்கொண்டு இருக்கின்றனர். கொரியா, ஜப்பான் மொழிகளில் தமிழ் வார்த்தைகளின் கலப்பின் மர்ம முடிச்சு அவிழ்ந்து விட்டது.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="http://thamizhan-thiravidana.blogspot.in/2010/11/blog-post_18.html" target="_blank">http://thamizhan-thiravidana.blogspot.in/2010/11/blog-post_18.html </a></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">ஆங்கில மாதங்களின் பெயர்களின் மூலம் லத்தீன் என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் அந்த லத்தீன் பெயர்களின் மூலத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் மிகுந்த சம்பந்தம் இருப்பதைக் காணலாம். உதாரணத்திற்கு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்பதை முறையே சப்தம், அஷ்டம், நவம், தசம் என்பதிலிருந்து வந்தவைதான் என்று சொல்வதற்கு பெரிய மொழி ஆராய்ச்சி தேவை இல்லை. ஆங்கிலமாதங்களின் வரிசை மாறி இருப்பதற்கு பெரிய வரலாறு உள்ளது அது தனிக்கதை .இந்தியாவின் வானியல் தான் உலகெங்கும் பரவியுள்ளது என்பதும் பரவியமுறையும் கீழுள்ள தளத்தில் காணலாம்.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="http://chandroosblog.blogspot.in/2012/01/blog-post_28.html" target="_blank">http://chandroosblog.blogspot.in/2012/01/blog-post_28.html </a></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">ஆப்ரிக்காவின் காமரூனின் மொழியும் கிட்டதட்ட தமிழ்தான். ஹங்கேரி மொழியில் 30 சதவீதம் தமிழ் வார்த்தைகள் இருப்பதின் காரணமும் தெரிந்து விட்டது. இந்தோனேஷியா, பாலி, சுமத்ரா ஆகிய தீவுகளில் இராமாயணமும் மகாபாரதமும் மிக நுணுக்கமான தகவல்களுடன் பரவி உள்ள விதம், இதிகாசங்களின் மூலமே, தமிழும் தமிழனும்தான் என்பதைக் கூறுகிறது. </span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="https://www.youtube.com/watch?v=vWyAYGlFZjk">https://www.youtube.com/watch?v=vWyAYGlFZjk</a><span id="goog_1490095974"></span><span id="goog_1490095975"></span><a href="https://www.blogger.com/"></a></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">இதன் முடிவுகளால் அறியப்படுவது என்னவென்றால் உலகின் எல்லா மதங்களுக்கும் அடிப்படை இந்துமதம் தான். உடனே இந்து என்ற பெயர்க் காராணத்தை ஆராயக்கூடாது. பெயர் எதுவாக இருந்தால் என்ன, மதம் என்பது இருந்திருக்கிறது. எவனும் தனக்குதானே பெயர் சூட்டிக் கொள்வதில்லை. என்னதான் பெயர் சூட்டிக் கொண்டாலும் அடுத்தவன் வைக்கும் பெயர்தான் சில சமயம் நிலைக்கும். உதாரணமாக சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி என்பதெல்லாம் அடுத்தவர் வைத்த பெயர்தான். ஏனெனில் பெயரின் தேவையும் அடுத்தவர்களுக்காக ஏற்பட்டதுதான். உதாரணமாக தனித் தீவில் தன்னந்தனியாக சகல அதிகாரங்களோடு திரிபவனுக்கு எதற்கு பெயர்?. இந்திய தீபகற்பத்தில் ஏகபோகமாக பல்லாண்டுகாலம் இருந்த மதத்திற்கு எதற்கு பெயர்?. அதிலும் மதுரை நகரில் பலருக்கு சொந்தப் பெயரை விட அடுத்தவன் வைத்த பெயர்தான் விளங்குகிறது. ஆக பெயரைப் பற்றிய வரலாற்றை ஆராய்வது எந்த வகையிலும் உதவாது.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">இந்து என்றால் ஒருவன் பாரத் என்கிறான், ஒருவன் சிந்து என்கிறான், ஒருவன் இண்டிஸ் என்கிறான், ஒருவன் ஹிந்து என்கிறான் , வக்கிரம் பிடித்தவனோ இந்து என்றால் திருடன் என்கிறான். அட இவ்வளவு ஏன் தமிழனின் பெயர் தமிழனே அல்ல தமிழ் என்ற பெயரே தமிழில் இல்லை என்பார்கள். </span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">சங்ககால இலக்கியங்கள் சுமார் 3000 வருடங்களுக்கு முந்தியது என்பதற்கு தரவுகள் தேவை இல்லை. சங்ககால தமிழ் இலக்கியங்களில் மகாபாரதம் மற்றும் இராமாயணக் குறிப்புகள் உள்ளதை அறியும் பொழுது இதிகாசங்களின் காலம் சங்ககாலத்திற்கும் மிகப் பழமையானது எனத் தெரிய வருகிறது. அதாவது சுமார் 5000 வருடங்களுக்கும் மேலான பழமையானது என வைத்துக் கொள்ளலாம். புறநானூற்றுப் பாடல் ஒன்றிலுள்ள இராமாயண குறிப்பை இங்கே காணலாம். அவசியம் இதைப் படியுங்கள். பாடலுக்கு பரிசளித்த மன்னனின் கொடையையும், அதை அனுபவிக்கத் தெரியாமல் பரிதவிக்கும் தனது சுற்றத்திற்கு, உவமானமாக ஒரு நுணுக்கமான இராமாயணக் காட்சியை விவரிக்கும் விதம் அருமை. இந்தக் காலத்தில் உரைநடை பாணியில் உவமானம் சொன்னாலும் புரியாமல் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு உயிரை வாங்கும் " கோவில் புலவர்"களும் இருக்கும் போது அந்த பரிசளித்த மன்னனை நினைத்தால் புல்லரிக்கிறது.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="http://www.yarl.com/forum3/index.php?showtopic=28325">http://www.yarl.com/forum3/index.php?showtopic=28325</a></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">இந்துமதத்தின் காலத்தை இன்னொரு முறையிலும் கணக்கிடலாம். அதாவது இதிகாசங்களில் உள்ள குறிப்புகளை கொண்டு அதன் காலம் சுமார் 7000 வருடங்களுக்கு முந்தியது என அறிவியல் கூறுகிறது. ஏனெனில் இதிகாசங்களில் இராமர் பிறந்தது, பட்டாபிஷேகம் செய்தது, மற்றும் அனைவரின் பிறந்த நேரமும் (ஜாதகமும்) உள்ளது. அது போல் மகாபாரத கதை நாயகர்கள் பிறந்தது , போர் நடந்தது போன்ற ஒவ்வொரு நிகழ்வும் கோள்களின் நிலையைக் கொண்டு குறிப்பிடப் பட்டுள்ளது. கோள்களின் நிலையைக் கொண்டு காலத்தை அறியும் இன்றைய நவீன மென்பொருள் கொண்டு கணக்கிடும் போது, அவைகளும் சுமார் 7000 வருடங்களுக்கு முந்தியது எனக் காட்டுகிறது.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">The planetary positions on 16th October 5561 B.C., the date of commencement of the Mahabharat War, have been calculated and known [Dating of the Mahabharat, by Dr. P.V. Vartak]. Therefore, calculating further backwards for the astral combination noted above, the date concludes to be 4th December 7323 B.C. On this date, Saturn was at 205 deg., Jupiter at 94 deg., Mars between 283 and 298 deg., Rahu at 179 deg. and Sun at 2 degrees. 4th Dec. 7323 therefore is the date of birth of Rama, when the aforementioned 4 planets exalted. Venus is always within 47 degrees from the Sun, and might be in Pisces in an exalted state. Thus Rama's date is confirmed. </span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="http://zeenews.india.com/news/nation/lord-ramas-date-of-birth-scientifically-calculated_796118.html">http://zeenews.india.com/news/nation/lord-ramas-date-of-birth-scientifically-calculated_796118.html</a></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="http://hindunet.org/hindu_history/ancient/ramayan/rama_vartak.html">http://hindunet.org/hindu_history/ancient/ramayan/rama_vartak.html</a></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">ஏழாயிரம் வருடங்களுக்கு முன் கோள்களைப் பற்றிய அறிவுடன் அதிலும் ராகு கேது மற்றும் திதி(ராமநவமி) ஆகியவை பற்றிய தெள்ளிய அறிவுடன் அவ்வளவு முன்னேறிய சமூகம் அங்கே நிலவி இருக்கும் என்றால் , அந்த நிலைக்கு அச்சமூகம் வளர எடுத்துக் கொண்ட காலத்தின் அளவு சுமார் 10000 வருடங்களுக்கு மேலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மகாபாரதத்தில் தமிழனைப் பற்றிய குறிப்புகளும் காணப் படுகிறது. கடைச் சங்கம் தோன்றி 3000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதென்றால் முதற்சங்கம், இடைச் சங்கம் ஆகியவை சுமாராக 10000 வருடங்களில் தோன்றியவையாக இருக்க முடியும். ஆகவே இந்துமதம் 20,000 வருடங்கள் பழமையானது என்பதில் சந்தேகம் இல்லை.</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"> சமஸ்கிருதம் எனும் தேவ பாஷை எப்படி உருவானது ?. </span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">அடுத்த பதிவில் பார்ப் போம்.(கீழே கிளிக் செய்யவும்)</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><a href="http://chandroosblog.blogspot.in/2014/09/1.html">தொடரும்..............................</a></span></div>
</div>
</div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-61642102663776667102014-03-14T00:41:00.000+05:302014-12-30T16:23:35.946+05:30உயிரும் உயிரின் பிரிவும் பாகம் 20<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<a href="http://chandroosblog.blogspot.in/2014/03/19.html">முந்தைய பதிவு</a><br />
<br />
இனவிருத்தி விஷயத்தில் ஆணை பொறுத்த வரையில் இயற்கை அளப்பறிய சக்தியை கொடுத்துள்ளது. ஒரு ஆண் ஒருமுறை வெளியேற்றும் 2 மிலி முதல் 3 மிலி (ஒரு டீஸ்பூன் அளவுள்ள ) விந்து திரவத்தில் சற்றேறக் குறைய 40 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு பெண்ணின் முட்டையை கருவுறச் செய்ய முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். <br />
<br />
அடுத்து ஆண்களின் குறைபாடு, என்பது, ஆண்குறி விறைப்பு, விந்தின் தன்மை,விந்தணுவின் எண்ணிக்கை, விந்தணுவின் இயக்கம் ஆகியவை சார்ந்து இருக்கும். பொதுவாக விந்தணுவின் தன்மையை பாதிக்கும் காரணிகள் விந்துப் பையின் வெப்ப நிலை மற்றும் பரம்பரைக் கோளாறாகும். <br />
<br />
மனிதனுக்கு உடல் முழுவதற்குமான பொதுவான வெப்ப நிலைக் கட்டுப்பாடு (Centralised Temperature Control) உள்ளது. அது உடலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 37 டிகிரி செல்ஸியஸில் வைத்திருக்கும் ஒரிரு டிகிரி கூடினால் காய்ச்சல், ஒரிரு டிகிரி குறைந்தால் ஜன்னி என்று அலாரத்துடன் தன்னைத் தானே ஓரளவுக்கு சரிசெய்து கொள்ளும் வகையில் இருக்கிறது. <br />
<br />
அதெல்லாம் போதாது என்று இன்னும் சிறிய அளவில் விதைப்(Testicles) பைகளுக்கென்று தனியாக ஒரு வெப்ப நிலைக் கட்டுப்பாடும் (Temperature Control) உள்ளது. மனிதனின் பரிணாம வரலாற்றில் அதற்கு ஒரு முன் கதைச் சுருக்கம் உள்ளது. அதை என்னவென்று பார்ப்போம்.<br />
<br />
ஒற்றைச் செல்களின் சங்கமத்தில் இருந்து உருவான இந்த மனித உடலை, அதே போன்றுள்ள பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும்,ஒற்றைச் செல்களும் எளிதில் தாக்கி அழிவுக்கு உள்ளாக்கும் நிலையில் இருந்து தப்பிக்க, பரிணாமத்தின் போக்கில் கையில் எடுத்த ஆயுதம்தான் இந்த "உயர்ந்த வெப்பநிலை". தானே உருவாக்கிய வெப்பநிலையை தானே தாங்கிக் கொள்ளலாம். ஆனால் மற்றைய பூஞ்சைகள் அதற்கு தாக்குப் பிடிக்க முடியாது.<br />
<span class="fullpost">
<br />
உடலுக்கு எவ்வளவுக்கு அதிகமாக வெப்பநிலை தேவையோ அந்த அளவிற்கு அதை நிர்வகிக்க அதிகமான (எரிபொருள்) உணவு உண்ண வேண்டும். அதாவது சாப்பிடுவதைத் தவிர வேறு வேலை ஏதும் பார்க்காமல் இருந்தால் மிக உயர்ந்த வெப்ப நிலையை உருவாக்க முடியும். ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படாது முடியாது. சரி இப்பொழுது எழும்பக் கூடிய முக்கியமான கேள்வி என்னவென்றால், மனிதன் சாதரணமாக உண்ணக் கூடிய உணவினால் அதிக பட்ச பூஞ்சைகள்,செல்களை ஒழிக்க, மனித உடல் வைத்துக் கொள்ளக் கூடிய மிக அதிகபட்ச வெப்ப நிலை என்ன?. அதாவது கஷ்டப் படாமல் தேடக்கூடிய அல்லது கிடைக்கக் கூடிய உணவினால், வைத்துக் கொள்ளக் கூடிய அதிகபட்ச வெப்பநிலை என்னவாக இருக்கும்.? இதை ஆராய்ந்த மனித உடல், 37 டிகிரி ஃபாரன்ஹீட்டை தேர்ந்தெடுத்து உள்ளது. அதனால்தான் மனிதன் தன்னை வெப்ப இரத்த பிராணி என்று சொல்லிக் கொள்கிறான்.<br />
<br />
இன்றைய அறிவியல் மூலம் மனித எடை, அவனுக்கு கிடைக்கும் சராசரி உணவு, மனிதனின் மெட்டபாலிச ரேட், குளுக்கோஸ் உற்பத்தி, பூஞ்சைகளின் வாழ்க்கை முறை, அவைகளின் வாழும் வெப்ப நிலை ஆகியவை மூலம் அந்த ஆப்டிமம் டிகிரி என்னவாக இருக்கும் என்று கம்ப்யூட்டரின் துணை கொண்டு கண்டு பிடிக்கப் பட்டது. அதுவும் 36.7 டிகிரி என்று வந்தது. மனித உடம்பு இயற்கையாகவே வைத்திருக்கும் வெப்ப நிலையும் கிட்டத்தட்ட 37 டிகிரியாக இருப்பதுதான் ஆச்சரியம். மனித உடம்பில் இருக்கும் நிபாவுக்கு <a href="http://chandroosblog.blogspot.in/2010/09/immortality-4.html" target="_blank">(யாரிவர்?) </a> தெரியாத கணக்கும் அறிவியலும் உண்டா என்ன?.<br />
<br />
ஆனால் இப்பொழுது பிரச்னை என்னவென்றால் நமது உடம்பில் தயாராகும் விந்தணுவும் ஒரு வகையில் பூஞ்சை மாதிரி நுண்ணுயிரிதான். அதற்கு இந்த உடம்பின் வெப்ப நிலை ஆகவே ஆகாது. மீண்டும் படிக்கவும் <b><span style="color: red;">அதற்கு இந்த உடம்பின் வெப்ப நிலை ஆகவே ஆகாது </span></b> எனவே அவை உருவாகுவதற்கும் பத்திரப் படுத்துவதற்கும் தனியான வெப்ப நிலையை நிர்வகிக்க வேண்டும். விந்து உருவாகுவதற்கும், உயிர்ப்புடன் இருப்பதற்கும் இந்த அதிகபட்ச உடம்பின் வெப்ப நிலையாகிய 37 டிகிரியை விட சுமார் 5 டிகிரி வரையாவது குறைவாக இருக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இந்த தனித்துவமான விந்துப் பைகள். <br />
<br />
20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாகும். <br />
40–69 வயதில், 60% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாகும்.<br />
70-90 வயதில்,10% ஆண்களுக்குத் தான் ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாகும்.<br />
<br />
இந்த விந்துப் பைகளில் தினசரி 120 மில்லியன் விந்தணுக்கள் உருவாகுகிறது அவை முழுமையாக வளர்ச்சியடைவதற்கு 10 லிருந்து 12 வாரங்கள் தேவைப்படுகிறது. இவ்வளவு நாட்கள் வளர்ந்தாலும் அதனுடைய ஆயுள் என்னவோ அற்பம்தான். ஆணுறுப்பிலிருந்து பீச்சி வெளி யேற்றப் படும் விந்தணுக்கள் அதிகபட்சமாக பெண்ணின் கருப்பையில் உள்ள வெப்ப நிலையில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை உயிருடன் இருக்கும். அதற்குள் அது உயிருள்ள முட்டையை கண்டு பிடித்து அதனுடன் சேர வேண்டும்.<br />
<br />
விந்து பை அதிகமாக வெப்பமடையும் பொழுது தானாக விந்து பை விரிந்து நீளமாக தொங்கி புறத்தோலின் கனத்தை குறைத்து உள்ளே நிலவும் அதிகமான வெப்பத்தை வெளியேற்றுவதுடன், புறத்தோலின் பரப்பளவை அதிகப்படுத்தி அதன் மூலம் வியர்வையை ஆவியாக்கி தனது வெப்ப நிலையை குறைத்துக் கொள்ளும். அதிகமாக குளிர்ச்சி அடையும் போது விந்துப் பைகள் சுருங்கி புறத்தோலின் கனத்தை அதிகரித்து வெப்பத்தை வெளி விடாமலும் குளிர்ச்சியை உள்ளே விடாமலும் ஒரு குறிப்பிட்ட வெப்ப </span>நிலையில் வைத்திருக்கிறது.<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQsHn4owsDapZ5SpESxc5UjCSI3RAeB4ub4nCtQins2UgS39UPi7dc2a7tCjsGy-o6DWm9-QWG2g2-b9Xw-l7IuLQyc2Wl0r7-V5TUa2qP9AMfrmrvebm74Tu7KN6D_F6HordtASyRKtWO/s1600/800px-Hanging_testicles.JPG" height="240" style="margin-left: auto; margin-right: auto;" width="320" /></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">வெப்பமான சூழ்நிலையில். </td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgivRwVnzJizXKd-EvrpH0KAFGfc1rf2k_GgroZAEidozbSVqST3AtjuLRSYkthB2R6phAW6xIaY-s1Q4xk92uZMvD84KOZeLU11UORod_nsdJmGwv_6Lx3ifwLB6RRHru5BlfcQdL4ysyq/s1600/800px-Human_Scrotum.JPG" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgivRwVnzJizXKd-EvrpH0KAFGfc1rf2k_GgroZAEidozbSVqST3AtjuLRSYkthB2R6phAW6xIaY-s1Q4xk92uZMvD84KOZeLU11UORod_nsdJmGwv_6Lx3ifwLB6RRHru5BlfcQdL4ysyq/s1600/800px-Human_Scrotum.JPG" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">குளிர்ச்சியான சூழ்நிலையில்</td></tr>
</tbody></table>
<br />
<span class="fullpost"> <br />
வியர்வையினால் நமது உடம்பு, வெப்ப நிலையை சுமார் நான்கு டிகிரிக்கும் மேல் குறைக்கிறது. புது மண் பாணையும் இதே தொழில் நுட்பத்தில் தான் சூழ்நிலையைக் காட்டிலும் நான்கு டிகிரி குறைவாக தண்ணீரை வைத்திருக்கிறது. பொதுவாக திறந்திருக்கும் தண்ணீரின் வெப்பநிலையும் சற்று குறைவாகத்தான் இருக்கும்.அதிலும் புதுப்பாணையாக இருந்தால் மட்டுமே குறைவான வெப்ப நிலையில் வைத்திருக்கும். பாணையிலுள்ள நுண் துளைகள் வழியே வெளியேறும் தண்ணீர் ஆவியாகும் போது ஆவியாவதற்கு தேவையான வெப்பத்தை பாணையில் இருந்து எடுத்துக் கொள்கிறது. அதனால் பாணைத் தண்ணீர் குளிர்ச்சி அடைகிறது. அது போல் உடம்பு தோலின் மூலம் வியர்வையை வெளியேற்றுகிறது. அவ்வியர்வை ஆவியாகத் தேவையான வெப்பத்தை உடலிருந்து எடுத்துக் கொள்கிறது. அதனால் உடலின் வெப்பம் குறைகிறது. பழைய பாணையில் அந்த நுண்துளைகள் அடைபட்டு விடுவதால் நீரில் குளிர்ச்சி இருக்காது.<br />
<br />
அது சரி, நீர் ஏன் ஆவியாக வேண்டும்?. நீர் மட்டுமல்ல எல்லாத் திரவங்களும் எல்லா வெப்ப நிலைகளிலும் ஆவி ஆகிக் கொண்டேதான் இருக்கிறது. உயர்ந்த வெப்ப நிலையில் அதிகமாகவும் தாழ்ந்த வெப்ப நிலையில் குறைவாகவும் நடக்கிறது. ஒவ்வொரு திரவமும், சாதாரண காற்றழுத்தத்தில் ஒவ்வொரு வெப்ப நிலையிலும் திரவமும், ஆவியும் நீ இவ்வளவு இருக்க வேண்டும் நான் இவ்வளவு இருக்க வேண்டும் என எல்லை பிரித்துக் கொள்கிறது. காற்றில் ஒரு குறிப்பிட்ட டிகிரியில் நீராவி இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. நீர் ஆவியாகி தன் அளவை எட்டி விட்டால் ஆவியாதல் குறைந்து விடும். அப்பொழுதான் நமது உடம்பு வியர்த்தாலும் வியர்வை ஆவியாகாமல், வெப்ப நிலை குறையாமல் “உப்புசம்” என்ற நிலை ஏற்படுகிறது. சிலசமயம் நீடித்த “உப்புச” நிலை ஸ்ட்ரோக்கை உருவாக்கிவிடும்.<br />
<br />
விந்துபை ஒரு பயோ தெர்மல் ஃப்ளாஸ்க் மாதிரி அதன் உள்ளே இருக்கும் விந்தணுவின் வெப்ப நிலையை ஒரே டிகிரியில் வைத்திருக்கும். ஆக ஆணின் உடம்பில் குறைந்த வெப்பநிலை உள்ள பகுதி தொடை இடுக்குதான் அதனால் தான் அங்கு எளிதாக பூஞ்சை தொற்று ஏற்பட்டு விடுகிறது. <br />
<br />
விந்தணுக்கள்(Sperm) விதைப் பையில், உற்பத்தியாகி விந்து (Semen) திரவத்துடன் கலந்து ஒரு நீண்ட சுருண்ட குழாயில் தங்கி இருக்கிறது. கலவியின் போது, உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் சுருண்ட குழாய் நேராக்க முயற்சிக்கும் போது அழுத்தம் ஏறப்ட்டு பீச்சி அடிக்கப்படுகிறது.அவ்வாறு பீச்சி அடிக்கப்பட்ட விந்தணுக்கள் பெண்ணுறுப்பின் உள்ளே சென்று, கர்ப்பபையில் இருக்கும் முட்டையை தேடிச் சென்று அடைவதை ஒரு வீடியோ கேம் உடன் ஒப்பிடலாம். ஒவ்வொரு ஸ்கிரினிலும் ஒவ்வொரு விதமான தடைகள், ஒரு சில தடைகளை வெல்லும் போது வீடியோ கேம் போன்று லைஃபும், ஆயுதமும் கிடைக்கிறது.</span><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="fullpost"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz2Hm6OJQINd8E2kBkK5uHfpLM8AVum5JK1uTYZD3479i7j1YFfy9eUPsjjntelzprK5LNYWNKVJ2qmiICAHXuETxXE4qpBngHPOsJpR96NQ10etDiltaj6FMQcGYywWO4QNsW7co8xdna/s1600/15-cancer-symptoms-men-s4-illustration-of-male-torso.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz2Hm6OJQINd8E2kBkK5uHfpLM8AVum5JK1uTYZD3479i7j1YFfy9eUPsjjntelzprK5LNYWNKVJ2qmiICAHXuETxXE4qpBngHPOsJpR96NQ10etDiltaj6FMQcGYywWO4QNsW7co8xdna/s320/15-cancer-symptoms-men-s4-illustration-of-male-torso.jpg" /> </a></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8qgCIpL-DFR0f9ZC9HbiZvOyp2DPFvn_pD1NH3__NJPSv3yXJqVlhWzMyqRgH5Y_2TCyoQAOAZuSlUqVw0NF5uwxx8lsQN2y66DX7FpuCKbkIiYisxwW6OTcyyQpXADfNVvEsJHtwi-5F/s1600/infertility-sperm-animation_default.gif" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8qgCIpL-DFR0f9ZC9HbiZvOyp2DPFvn_pD1NH3__NJPSv3yXJqVlhWzMyqRgH5Y_2TCyoQAOAZuSlUqVw0NF5uwxx8lsQN2y66DX7FpuCKbkIiYisxwW6OTcyyQpXADfNVvEsJHtwi-5F/s320/infertility-sperm-animation_default.gif" height="400" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">விந்தணுக்கள் உருவாகி விந்துவுடன் கலந்து மூத்திரக்குழாய் வழியாக பீச்சியடிக்கப்படுதல்</td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="fullpost"></span></div>
<span class="fullpost"><br />
ஆணுறுப்பில் இருந்து விந்து பீச்சி அடிக்கப்படும் போது ஏற்படும் அழுத்தத்தினால் செயலிழந்தவை போக மீதம் 25 சதவீதம் விந்தணுக்கள் தான் வலிமையுடன் இருக்கின்றன. அவற்றில் விந்தின் அமிலத்தன்மை மற்றும் வெப்ப நிலை ஆகியவற்றாலும், பெண்ணுறுப்பில் இருக்கும் திரவத்தின் வேதியல் பண்புகளாலும், அழிக்கப்பட்டவை போக 400 அணுக்களே எஞ்சிருக்கின்றன. சாதாரண சூழ்நிலையில் விந்தணுக்கள் கர்ப்பபையின் நுழை வாயிலில் உள்ள சளி போன்ற சுவற்றுப் பகுதியை துளைக்க முடியாது ஆனால் முட்டை உருவாகும் தருணத்தில் மட்டும் ,அவை மென்மையாகி வழிவிடும். அந்தத் தடையை கடந்து சுமார் 400 அணுக்களே செல்ல முடிகிறது. இன்னும் நான்கு நாட்கள் தாக்கு பிடித்து போராட வலிமை உள்ளவையே முட்டையை அடைய முடியும். அவ்வாறு வலிமை உள்ள சுமார் 40 அணுக்களே கடைசியில் போராடி கர்ப்ப பையை அடைகின்றன. </span><br />
<br />
<span class="fullpost">கர்ப்பபைக்குள் சென்றவுடன் அங்கு அதற்கு பூர்ணகும்ப மரியாதையுடன் புதிய சக்தியும் ஒரு சிறப்பான ஆயுதமும் அளிக்கப் படுகிறது. ஆயுதம் என்றால் திரிசூலம், வேல் என்றும், சக்தி என்றால் மின்னலையும் நினைத்துக் கொள்ளக்கூடாது. மைக்ரோ லெவலில் யோசிக்க வேண்டும். சக்தி என்றால் குளுக்கோஸ் சொட்டும், ஆயுதம் என்றால் துப்பாக்கி குண்டில் ஒட்டப் பட்டிருக்கும் கேப் போல் விந்தணுவின் தலையில் தடவப்படும் சிறிய பொட்டு போன்ற மையும்தான். அங்கு தரப்படும் சக்தியினால் புதிய வேகம் எடுத்து, அதன் தலையில் தடவப்பட்ட ஒரு வித வேதியல் கலவையினால் அது முட்டையை துளைத்து உள்ளே செல்ல முடிகிறது. பொதுவாக முதலில் துளைக்கும் அணுவுக்கே வெற்றி கிடைக்கிறது.லட்சத்தில் ஒரு நிகழ்வாக இரண்டு அணுக்கள் கூட வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. மற்றவற்றிற்கு கதவு மூடப்பட்டுவிடும். எஞ்சியவை அழிக்கப் படுகின்றன. முட்டையும் விந்தணுவும் கலந்து ஒரு ஒற்றை செல்லாக மாறுகிறது பின்னர் இது "இரண்டுபடுதல்" மூலம் பெருகி வளர்ந்து குழந்தையாக மாறுகிறது.<br />
<br />
சில சமயங்களில் ஒற்றை அணுவின் மூலம் கருவுற்ற முட்டை இரண்டாக பிளவு பட்டு, தனித்தனியாக வளர்ந்து ஒற்றுமைகள் அதிகமுள்ள இரட்டைக் குழந்தைகளாக பிறக்கின்றன. இவைகள்தான் சர்வ சாதரணமாக காணப் பெறும் ஒரு வகையாகும். ஆனால் லட்சத்தில் ஒரு நிகழ்வாக, ஒரே ஆணின் இரண்டு அணுக்கள் அல்லது வெவ்வேறு ஆண்களின்!!! ஆமாம் வெவ்வேறு ஆண்களின் இரண்டு அணுக்கள் ஒரே முட்டையை துளைத்து வெற்றி பெறும் சந்தர்ப்பமும் ஏற்படுவதுண்டு. அது இரட்டைக் குழந்தைகளில் வேற்றுமைகள் அதிகமுள்ள அபூர்வ வகையாகக் கருதப்படும். <br />
<br />
தொடரும்.........<br />
</span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-58310712506872840482014-02-28T12:20:00.001+05:302014-12-12T00:53:03.788+05:30உயிரும் உயிரின் பிரிவும் பாகம் 18<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<a href="http://chandroosblog.blogspot.ae/2014/02/17.html" target="_blank">முந்தைய பதிவு</a><br />
<div style="text-align: justify;">
நாம் அறிந்தோ அறியாமலோ, காமத்தில் நம்மை வலுக் கட்டாயமாக ஈடுபடுத்தும் அந்த இச்சா சக்தியின், அடிப்படை தேவை புத்திர உற்பத்திதான். மகாபாரதத்தில் பித்ரு பிண்டம் கொடுப்பது, அல்லது நீத்தார் நினைவு என்பது பற்றி பாண்டு எவ்வளவு வருத்தப் படுவான் என்பது மகாபாரதத்தை சிரத்தையுடன் படித்தவர்களுக்குத் தான் தெரியும். அதனால்தான் குழந்தை வேண்டும் முயற்சியில் தனது உயிரையே விட்டான். </div>
</div>
</div>
<div style="text-align: justify;">
<span class=" fullpost"><br />
</span></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;">பித்ரு பிண்டம் கொடுப்பது (திதி) ஒருவகையில் பார்த்தால் இன்னாரின் வாரிசுகள் இப்பூமியில் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை இப்புவியில் இருக்கும் சக மனிதர்களுக்கு மட்டுமல்லாது அதை அவர்களது முன்னோர்களுக்கு தெரிவிப்பதும் அதை அவர்கள் அறிந்து கொள்ளும் ஒருவித நுட்பமும் கொண்ட சடங்காகும். உயிரின் அடிப்படையே சந்ததிகளை உருவாக்குவதும், அதை பாதுகாப்பதும் ஆகும். தன் வாரிசுகள் பூமியில் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக உயிர் இனங்கள் என்னென்ன செய்கின்றன என்பதை எனது முந்தைய பதிவுகளில் காணலாம்.</span><br />
<span style="text-align: left;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">ஒரு எருக்களை செடி கூட தனது விதைகளைப் பரப்புவதற்கு முதலில் காயை வெடிக்கச் செய்து, விதைகளைத் தூவுகிறது. பின்னர் ஒருசமயம், விதைகள் மொத்தமாய் விழுந்து ஒரே இடத்தில் கிடைக்கும் குறைந்த வாய்ப்புகளை மொத்தமாய் பயன்படுத்தி, மொத்தமாய் அழிய வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலாகத் தன் விதைகளில் மயிர்க்கால்களை ஒட்ட வைத்து வெடித்தவுடன், காற்றின் வேகத்தில் தூரங்களை கடந்து புதிய இடங்களில் வெற்றிக் கொடியை நட்டு, இனத்தைப் பரப்புகிறது. இதெல்லாம் ஓரிரவுக்குள் நடந்த மாயாஜாலம் அல்ல .காலங்களை யுகங்களாக விழுங்கிய அறிவியல் செயற்பாடு. </span></div>
<div style="text-align: justify;">
<span class=" fullpost"><br /></span></div>
</div>
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">இனத்தைப் பூமிப் பரப்பின் மீது பரப்புவதில் உயிரினங்கள் ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறது என்பதைப் பற்றியும் <a href="http://chandroosblog.blogspot.in/2011/03/12.html" target="_blank">முந்தைய பதிவுகளில்</a> பார்த்தோம்.</span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">முதலில் குழந்தை எப்படி பிறக்கிறது, அதிலுள்ள சிக்கல்கள் என்ன? தீர்வு என்ன? என்பதை மேலோட்டமாகப் பார்ப்போம். திருமணமாகும் ஆறு ஜோடியில் ஒரு ஜோடிக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் என புள்ளி விவரம் கூறுகிறது. மருத்துவச் சோதனைகள் என்று போய் விட்டால் அதற்கு ஒரு பெரிய அட்டவணையே உள்ளது. மாதவிடாய், முட்டைப்பை, முட்டையின் முழுமை, ஃப்ல்லோப்பியன் குழாய், கர்ப்பப்பையின் பின்வாசல், கர்ப்பப் பையின் நுழைவாசல், பெண்ணுறுப்பு, ஆணுறுப்பு, விந்துப் பை, விந்துக் குழாய், விந்து, உயிரணுவின் தன்மை, என்று பலவகையிலும் பார்க்க வேண்டும். முருகன் மயிலேறி உலகைச் சுற்றி வந்த கதையாகி விடும் .</span></div>
<div style="text-align: justify;">
<span class=" fullpost"><br /></span></div>
</div>
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">ஆகவே அதை விடுத்து விநாயகர் பாணியில் நல்லதையே எண்ணி மேலோட்டமாகச் சில சோதனைகளை செய்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லுங்கள். மருத்துவ ரீதியாக அணைத்து தகுதிகள் இருந்தும் 25 சதவீத பேருக்கு குழந்தை தாமதமாக அல்லது இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அவை அதிகரிப்பதும் கணக்கில் கொள்ளத்தக்கது. </span></div>
</div>
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">மேலோட்டமானவை என்பது கீழ்க் கண்டவைகள்தான்.</span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">1 மாதவிடாயின் சீர்மை </span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">2 விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் இயக்கம்</span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">3 பார்க்கும் வேலையின் தன்மை</span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">4 ஆர் ஹெச்( Rh factor) ஒவ்வாமை</span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">5. பி.எம் ஐ (Body Mass Index) இண்டெக்ஸ்</span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">6 வாழ்க்கை முறை</span></div>
</div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost"><br /></span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">முதலில் மாதவிடாய் பற்றி தெரிந்து கொள்வது நல்லது</span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">பெண்ணுக்கு முட்டைப் பைகள் இரண்டு உள்ளது. மாதம் ஒரு முறை ஒவ்வொன்றி லிருந்தும் மாற்றி மாற்றி ஒவ்வொரு முட்டையாக ஃபலலோப்பியன் குழாய் மூலமாக முட்டை கருப்பையை அடைகிறது. கலவிக்குப் பின் பெண்ணுறுப்பின் வழியாக வரும் கோடான கோடி விந்தணுக்களில் ஏதாவது ஒன்று கருப்பைக்கு வந்து முட்டையை துளைத்து உள்ளே சென்று கருவுறச் செய்கிறது.</span></div>
<div style="text-align: justify;">
<span class=" fullpost"><br /></span></div>
</div>
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span class=" fullpost"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU-2nMssFN9yczddaUcdU2ii2H92hTMGYLniKNjLIZOQJjAfb-hStJpIUAMqo1axM8bnVGXsQVMOg7I2Rsw8Fi-UaMIPOTMpWteHA-aY0bBVT40OU0D1Bc6NFv6aYxE82gxQyk6wkrXed9/s1600/Eggs.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU-2nMssFN9yczddaUcdU2ii2H92hTMGYLniKNjLIZOQJjAfb-hStJpIUAMqo1axM8bnVGXsQVMOg7I2Rsw8Fi-UaMIPOTMpWteHA-aY0bBVT40OU0D1Bc6NFv6aYxE82gxQyk6wkrXed9/s1600/Eggs.jpg" height="248" width="320" /></a></span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost"><br /></span></div>
</div>
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span class=" fullpost"><span id="goog_1069704717"></span><span id="goog_1069704718"></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span class=" fullpost">ஒரு பெண் பிறக்கும் போதே தனது முட்டைப் பையின் இரு பிரிவுகளில், ஒவ்வொன்றிலும் தலா ஒரு மில்லியன் (1,000,000) முழு வளர்ச்சி அடையாத முட்டையின் கருக்களுடன் பிறக்கிறாள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிகபட்சமாக பத்து பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் பெண்ணுக்கு எதற்கு ஒரு மில்லியன் முட்டைகள்? இங்குதான் மனிதன் தன்னை எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் தாரளமாகத் தகவமைத்துக் கொண்டான் என்பதை அறியமுடிகிறது. </span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span class=" fullpost"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span class=" fullpost">எப்பொழுதுமே மனித உடம்பு, தேவைக்கு மேல் 50 சதவீதம் அதிகமான உடலுறுப்புகளுடன் தான் தகவமைக்கப் பட்டுள்ளது. நுரையீரல், கிட்னி, மூக்கு துவாரம், முட்டைப் பைகள், விதைப் பைகள், கண், காது, கை, கால் என எல்லாமே இரண்டிரண்டாக உள்ளது. தேவைக்கு மேல் 50 சதவீதம் அதிகமான வயிறு, 50 சதவீதம் அதிகமான கல்லீரல், 80 சதவீதம் அதிகமான மூளை, 80 சதவீதம் அதிகமான குடல், ஒரு கோடி மடங்குக்கு அதிகமான விந்து., ஒரு மில்லியன் மடங்கு அதிகமான முட்டை என எல்லாமே தேவைக்கு அதிகமாகத் தான் உள்ளது. இந்த வகையில் மனித இனத்திற்கு ஏதாவது ஒரு காலத்தில் (தேவைப் பட்ட) அல்லது தேவைப் படும் போது பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாடாக ஒரு மில்லியன் முட்டைகள் இருக்கலாம். </span></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span class=" fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">பருவம் எய்தும் போது, அதில் ஐந்தில் ஒரு பங்குதான் அதாவது சுமார் 2,00,000 + 2,00,000 மிஞ்சியிருக்கின்றன. மற்றவை ஒருவித நடை முறையை பின்பற்றி அழிக்கப்படுகின்றன. பெண்ணிற்கு கருத்தரிக்கும் காலம் சுமார் 13 வயதிலிருந்து 53 வயது வரை உள்ள மாதவிடாய் காலம் தான். இந்த சுமார் 40 வருடங்களில் வருடத்திற்கு சுமார் 12 முட்டைகள் என்ற விகிதத்தில் சுமார் 500 முட்டைகள் மட்டுமே இன விருத்திக்கு தயார் படுத்தப் படுகிறது. முட்டையின் அளவோ கண்களால் பார்த்தறிய முடியாத அளவுக்கு மிகவும் சிறியது.( .02mm) .முட்டை எப்படி முழுமை அடைகிறது?, எப்பொழுது முழுமை அடைகிறது? என்பது இதுநாள் வரை மர்மமாக இருந்தது. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளார் வேறெரு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது தற்செயலாக முட்டை முழுமை அடைவதை தனது கேமிராவில் பிடிக்க நேர்ந்தது. அவைதான் கீழ்க் கண்ட படங்கள் . வைரமுத்து கூறியதைப் போல் தண்ணீர்க் குடத்தில் தான் பிறக்கின்றோமோ! </span></div>
<div style="text-align: justify;">
<span class=" fullpost"><br /></span></div>
</div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span class=" fullpost"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxte1OgheNadBl6xY6YkkL1HpSy8cFD-ET0ntkckBj-imtHrblxwmQWIx7Dezhh3mnMfZh6aEif3HU1jV-4UF8qYg09UOMFyD1SJuLyOdgDJbeFVsjfXsi22wjpUAJjSijAJx_RS_Pfrz4/s1600/Human+egg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxte1OgheNadBl6xY6YkkL1HpSy8cFD-ET0ntkckBj-imtHrblxwmQWIx7Dezhh3mnMfZh6aEif3HU1jV-4UF8qYg09UOMFyD1SJuLyOdgDJbeFVsjfXsi22wjpUAJjSijAJx_RS_Pfrz4/s1600/Human+egg.jpg" height="152" width="640" /></a></span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class=" fullpost">குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் வெளியேறிய முட்டைகள் தவிர மற்றவை எல்லாம் முழுமை அடையாமல் மாதாந்திர தவணை முறையில் அழிக்கப் படுகிறது. மிச்சம் உள்ள முட்டைகளும் மாதவிடாய் நிற்கும் (மெனோபாஸ் ) காலத்தில் முற்றிலும் அழிக்கப் படுகிறது. குழந்தைகளை வரிசையாக இடைவெளி இல்லாமல் பெற்றுக் கொண்டால் ஒரு பெண் அதிகபட்சமாக 60 (இரட்டைக் குழந்தைகளையும் சேர்த்து) குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம். </span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost"><br /></span></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<span class=" fullpost">இதனால் தெரிவது என்ன வென்றால் குசேலர் 27 குழந்தை பெற்றுக் கொண்டது பெரிய ஆச்சரியமல்ல. ஏனென்றால் ஒரு ரஷ்யப் பெண் 27 பிரசவத்தில் 69 குழந்தைகள் பெற்றதாக கின்னஸ் ஆவணப்படி தகவல் உள்ளது. தமிழ்நாட்டில் 16 குழந்தைகள் பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்து கெளரவித்த வரலாறும் தமிழனுக்கு உண்டு. இந்த விஷயம் தெரியாமல் பெரியார் முட்டாள்தனமாக குசேலர் 27 குழந்தைகள் பெற்றுக் கொண்டது நம்ப முடியாத பொய் எனக் கூறுவதும். அதற்கு மடத்தனமான விசிலடிச்சான் குஞ்சுகள் விசில் போடுவதும் தமிழ் நாட்டில் “பகுத்தறிவின்” வளர்ச்சியைக் காட்டுகிறது,. <!--[if gte mso 9]><xml> <w:WordDocument> <w:View>Normal</w:View> <w:Zoom>0</w:Zoom> <w:TrackMoves/> <w:TrackFormatting/> <w:PunctuationKerning/> <w:ValidateAgainstSchemas/> <w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid> <w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent> <w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText> <w:DoNotPromoteQF/> <w:LidThemeOther>EN-US</w:LidThemeOther> <w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian> <w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript> <w:Compatibility> <w:BreakWrappedTables/> <w:SnapToGridInCell/> <w:WrapTextWithPunct/> <w:UseAsianBreakRules/> <w:DontGrowAutofit/> <w:SplitPgBreakAndParaMark/> <w:DontVertAlignCellWithSp/> <w:DontBreakConstrainedForcedTables/> <w:DontVertAlignInTxbx/> <w:Word11KerningPairs/> <w:CachedColBalance/> </w:Compatibility> <m:mathPr> <m:mathFont m:val="Cambria Math"/> <m:brkBin m:val="before"/> <m:brkBinSub m:val="--"/> <m:smallFrac m:val="off"/> <m:dispDef/> <m:lMargin m:val="0"/> <m:rMargin m:val="0"/> <m:defJc m:val="centerGroup"/> <m:wrapIndent m:val="1440"/> <m:intLim m:val="subSup"/> <m:naryLim m:val="undOvr"/> </m:mathPr></w:WordDocument> </xml><![endif]--> </span></div>
</div>
<div class="MsoNormal" style="line-height: normal; margin-bottom: .0001pt; margin-bottom: 0in; text-align: justify;">
<div style="text-align: left;">
<span class=" fullpost"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-theme-font: minor-bidi;">கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது? <span style="font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-theme-font: minor-bidi;"></span></span></span><br />
<span class=" fullpost"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; mso-ascii-theme-font: minor-bidi; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-theme-font: minor-bidi;"><br /></span></span></div>
</div>
<!--[if gte mso 9]><xml> <w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267"> <w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/> <w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/> <w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/> <w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/> <w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/> <w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/> <w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/> <w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/> <w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/> <w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/> <w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/> <w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/> <w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/> <w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/> <w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/> <w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/> <w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/> <w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/> <w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/> <w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/> <w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/> <w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/> <w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/> <w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/> <w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/> </w:LatentStyles> </xml><![endif]--><!--[if gte mso 10]> <style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
</style> <![endif]--></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<span class=" fullpost"><a href="http://chandroosblog.blogspot.ae/2014/03/19.html" target="_blank">தொடரும்..........................</a></span></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<span class=" fullpost">இரா.சந்திரசேகர்</span></div>
</div>
<div style="text-align: justify;">
<div style="text-align: left;">
<span class=" fullpost">பழனி.</span></div>
</div>
<div style="text-align: justify;">
</div>
</div>
<br /></div>
<br /></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-3068503511597206302014-02-22T22:52:00.000+05:302014-12-12T01:05:42.435+05:30உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 17)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.ae/2011/10/16.html" target="_blank">முந்தைய பாகம்</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களுக்கு சமீபத்தில் திருமணமாகிருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என அறிந்து கொள்ளூம் எளிய வழி.</div>
<br />
<div style="text-align: justify;">
</div>
<span class="fullpost"><div style="text-align: justify;">
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள், அல்லது உங்கள் துணைவர் அல்லது இருவரும் மிகவும் உண்மையான பதிலை எழுதிக்கொள்ளுங்கள். </div>
</span><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
1) உங்கள் துணைவர் உங்களை விட அழகானவரா?. </div>
<span class="fullpost"><div style="text-align: justify;">
2) உங்கள் துணைவர் உங்களை விட செல்வந்தரா?.</div>
<div style="text-align: justify;">
3) உங்கள் துணைவர் சமூகத்தில் உங்களை விட புகழ் வாய்ந்தவரா?.</div>
<div style="text-align: justify;">
4) உங்கள் துணைவரின் குடும்பம் உங்கள் குடும்பத்தை விட செல்வாக்கு மிக்கதா?.</div>
<div style="text-align: justify;">
5) உங்கள் துணைவர் உங்களை விட முன்கோபியா?, (ஆணாக இருந்தால் முகத்தில் பெரிய மீசை உள்ளவரா?) அல்லது சிடுமூஞ்சியா?.</div>
<div style="text-align: justify;">
6) உங்கள் துணைவரைக் கண்டால் பயமா?.</div>
<div style="text-align: justify;">
7) நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் எதிர் பாலினத்தார் மிகவும் அதிகமா? .</div>
<div style="text-align: justify;">
8) உங்கள் துணைவர் உங்களை விட வெள்ளையான தோல் நிறம் கொண்டவரா?.</div>
<div style="text-align: justify;">
9) உங்கள் துணைவர் உங்களை விட செக்ஸில் ஆர்வமும், திறமையும் உள்ளவரா?.</div>
<div style="text-align: justify;">
10) உங்கள் துணைவர் எல்லா விஷயங்களிலும் உங்களை விட தைரியமானவரா?.</div>
<div style="text-align: justify;">
11) நீங்களிருவரும் குடியிருக்கும் (இருந்த) வீட்டில், நெருங்கி உள்ளவர்களில் அதாவது உடன் பிறந்தவர்கள், பிறந்தவர்கள், பெற்றோர், பெற்றோரின் பெற்றோர்கள், ஆகியோரில் உங்கள் துணைவரின் பாலினம் அதிகமாக உள்ளனரா?.</div>
<div style="text-align: justify;">
12) உங்கள் துணைவர் உங்களை விட ஸ்டைலாகவும், சுத்தமாகவும், நேர்த்தியாகவும் உடை அணிபவரா?.</div>
<div style="text-align: justify;">
13) மொத்தத்தில் உங்கள் வீட்டில் ஒரு விஷயத்தைப் பற்றியதில் உங்கள் துணைவரின் முடிவுதான் இறுதியானதா?</div>
</span><br />
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost">நீங்கள் ஆணாய் இருந்து அத்தனை கேள்விக்கும் உங்களது பதில் ஆம் என்றால் உங்களுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளும் ஆண்தான். ஏழு என்றால் முதலில் பிறக்கும் குழந்தை ஆண்தான்.</span><span class="fullpost"><span class="fullpost"> ஏழுக்கும் மேல் ஆம் என்றால் முதலில் பிறக்கும் இரண்டு குழந்தைகளும் ஆண்தான்.</span></span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><span class="fullpost"> </span> <br />
</span></div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><span class="fullpost"> நீங்கள் பெண்ணாய் இருந்து அத்தனை கேள்விக்கும் உங்களது பதில் ஆம் என்றால் உங்களுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளும் பெண்தான். ஏழு என்றால் முதலில் பிறக்கும் குழந்தை பெண்தான்.</span><span class="fullpost"><span class="fullpost"> ஏழுக்கும் மேல் ஆம் என்றால் முதலில் பிறக்கும் இரண்டு குழந்தைகளும் பெண்தான்.</span></span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
என்ன குழந்தை என்பதை பிறகு பார்ப்போம் முதலில் குழந்தை எப்படி பிறக்கிறது சிலருக்கு ஏன் காலதாமதம் ஆகிறது. பிறப்பதற்கு வழிமுறைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.</div>
<span class="fullpost"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.ae/2014/02/17.html" target="_blank">தொடரும்………………………………………</a>.</div>
<div style="text-align: justify;">
</div>
</span></div>
</div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-88139080607892572112012-07-26T08:48:00.000+05:302012-07-27T07:47:33.880+05:30பலராலும் தப்பாக உரை சொல்லப் பட்டுள்ள குறள் 140<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பலராலும் தப்பாக உரை சொல்லப் பட்டுள்ள குறள் 140<br />
<br />
<a href="http://www.thirukkural.com/search/label/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88">http://www.thirukkural.com/search/label/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88</a><br />
<br />
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்<br />
<br />
கல்லார் அறிவிலா தார்.<br />
<br />
கலைஞர் உரை:<br />
<br />
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.<br />
<br />
எனது கருத்து:<br />
<br />
இந்த உரை கொஞ்சம் சொதப்பலாக இருக்கிறது. ஏனென்றால் "உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழ்வது " என்பது பல நூல்களை கற்றோருக்கு இயல்பானதுதான். பலகற்றும் தெளிந்தவருக்கு தனியாக, உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றி ஏன் சொல்ல வேண்டும். அதைத் தனியாகக் குறிப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு இல்லை, ஆனாலும் வள்ளுவர் ஏன் சொல்கிறார் என்று ஆராய வேண்டும்.
<span class="fullpost">
<br />
<br />
மு.வ உரை:<br />
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். எனது கருத்து: இதுவும் கிட்டத்தட்ட அதேமாதிரியான மழுப்பல்தான். "உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர்" இதுவும் எல்லாருக்கும் தெரிந்த நியாயம்தான் இதைப் போய் தனியாக ஒரு குறளில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?<br />
<br />
சாலமன் பாப்பையா உரை:<br />
முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.<br />
<br />
எனது கருத்து:<br />
இவர் நெருங்கி வந்துவிட்டார். இன்றைய காலகட்டத்திற்கு தகுந்த மாதிரி என்பதை விட வள்ளுவரின் உன்மையான கருத்தை உரையாக எழுதியுள்ளார் . சரியான வார்த்தைப் பிரயோகம். வள்ளுவரே வந்து விளக்கமளித்தது போல் இருக்கிறது.<br />
<br />
பரிமேலழகர் உரை:<br />
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)<br />
<br />
எனது கருத்து:<br />
வள்ளுவரை உணர்ந்தவர் போல் பொருள் சொல்கிறார். வார்த்தைகளைச் சரியாகப் பொருத்தி உலகத்தோடு ஒட்ட ஒழுகலை கல்லாதவர் எனப் பொருள் கொள்ளும் முறையை காண்பித்தாலும், "உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து", என்று உயர்ந்தோரை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை . ஆகவே இவரும் கடைசியில் திசை மாறி விடுகிறார்.<br />
<br />
மணக்குடவர் உரை:<br />
அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.<br />
<br />
எனது கருத்து:<br />
இது சுத்தமான மழுப்பல்தான். "அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் " என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் அர்த்தப் படுத்துவது மாதிரி இருக்கிறது. நூல் என்பதற்கு வாரியார் ஒரு விளக்கம் சொல்வார். அதாவது தச்சர்கள் பெரிய மரங்களை (தடிகளை) அறுத்துப் பலகை மற்றும் "சட்டங்கள்" எடுப்பதற்கு நூலைப் பயன் படுத்துவர். அதாவது நூலில் சாயத்தை நனைத்து நீளவாக்கில் பிடித்து ஒரு சுண்டு சுண்டினால் நேர்கோடாக அடையாளம் செய்து மரத் தடிகளை அறுத்து சீர் படுத்துவர். அது போல் மனிதனை சீர்படுத்துவதற்கு புத்தகங்கள் என்ற "நூல் " பயன் படுகிறது அதனால்தான் அந்தச் சொல்லாடல் வழக்கில் உள்ளது. ஆகவே நிறைய நூற்களை கற்றாலே அறிவுடையவராகி விடுவர் என வாரியார் சொல்வார். அப்படியெல்லாம் இருக்கும் பொழுது பலநூல்கள் கற்பதினால் அறிவு கிடைக்காது என்பதை வள்ளுவர் ஒத்துக் கொண்ட மாதிரி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அது போன்ற அறிவு கிடைக்காதவர்கள் இருக்கலாம் அவர்கள் ஆயிரத்தில் ஒருவனாக அல்லது லட்சத்தில் ஒருவனாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்காக வள்ளுவர் குறள் எழுதியிருக்கமாட்டார். ஆகவே மணக்குடவர் உரையும் செல்லாது செல்லாது.<br />
<br />
உத்தம புத்திரரின் உரை<br />
( <a href="http://kuralamutham.blogspot.in/2009/11/140.html">http://kuralamutham.blogspot.in/2009/11/140.html</a>) <br />
கால, தேச மற்றும் வர்த்தமானம் என்னும் நடப்பிற்கேற்ப, மாற்றங்களுக்கு உட்பட்டு, உடன்பட்டு, அனுபவ அறிவுக் கண்களால் உய்த்துணர்ந்து, நல் ஒழுக்க வழி நின்று நயந்தரும் உயர்ந்தோரைச் சார்ந்து, இணங்கிச் செயலாற்றுதலே உலகோடு ஒத்து வாழுதல் எனும் அறிவுடையோர் வாழும் முறைமையாகும்.<br />
<br />
எனது கருத்து: உத்தம புத்திரரின் உரையிலும் மழுப்பல் இழையோடுவதைக் காணலாம். "நல் ஒழுக்க வழி நின்று நயந்தரும் உயர்ந்தோரைச் சார்ந்து, இணங்கிச் செயலாற்றுதலே " இதைச் சொல்வதற்கு வள்ளுவர் தேவையில்லை. எல்லா அறநூல்களின் பால பாடமே அதுதானே.<br />
<br />
Translation: Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well. Explanation: Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.<br />
<br />
குறுகச் சொல்லி பொருள் விளங்கச் சொல்லப்பட்டுள்ளது.சரியான முறையில் அர்த்தம் சொல்லப் பட்டுள்ளது.<br />
<br />
நிபா: இதெல்லாம் சரி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்.<br />
<br />
எனது கருத்து: மிகுந்த அறிவுடையோர் முதல் எல்லோரும் ஏன் இப்படித் தப்பாக அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அதாவது தெய்வப் புலவராகிய திருவள்ளுவருக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக தங்கள் பாணியில் சிறிது மழுப்பி, மாற்றி பொருள் கொள்ளச் சொல்கிறார்கள்.<br />
<br />
வள்ளுவர் தலை சிறந்த பகுத்தறிவாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.ஊழையும் உப்பக்கம் காணாலாம் என்பதிலும், தெய்வத்தான் ஆகாது என்றாலும் விடக்கூடாது என்று சொல்வதாலும் பகுத்தறிவாளர்தான். இன்னொரு புறம் அவரும் ஒன்றல்ல பல இடங்களில் கடவுளை சம்பந்தப் படுத்தி எழுதுவதால் இன்றைய தமிழக பகுத்தறிவுவாதிகளின் கூற்றுப் படி முட்டாளாகவும் கருதப் பட வேண்டியவராவர்.<br />
<br />
ஆனாலும் தமிழகப் பகுத்தறிவுவாதிகள் வள்ளுவரைத் தலையில் தூக்கி வைத்து ஆடுமளவிற்கு , அவரது கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லையே ஏன்?. கருணாநிதி, வள்ளுவர் கடவுளைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் நேரடியாக பொருள் கொள்ளாமல் மழுப்புவதை காணலாம். உதாரனத்திற்கு மூன்று குறள்.<br />
<br />
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்<br />
இறைவன் அடிசேரா தார்.<br />
<br />
கலைஞர் உரை:<br />
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். <br />
<br />
எனது கருத்து: <br />
இங்கு இறைவன் என்ற வார்த்தையைப் பயன் படுத்தாமல் "தலையானவன்" என்று சொதப்புகிறார். இறைவனுக்கு இவரது பாணியில் தலையானவன் என்று புதுப் பெயர் வைக்கிறாரா?. மாற்றுத் திறானாளி என்று பெயர் சூட்டியது போல். <br />
கடவுளை நம்பினோர் கைவிடப்படுவதில்லை என்பதற்கிணங்க இறைவனை வணங்காதவர் பிறவிப் பெருங்கடல் நீந்தார், என்ற அர்த்தத்தை எப்படி எல்லாம் குழப்புகிறார்.<br />
<br />
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி<br />
மிச்சில் மிசைவான் புலம்<br />
<br />
கலைஞர் உரை:<br />
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.<br />
<br />
எனது கருத்து:<br />
இதுவும் ஒரு மாதிரியான மழுப்பல்தான். வள்ளுவர்தான் தெளிவாகச் சொல்கிறாரே "வித்தும் இடல்வேண்டும் கொல்லோ" என்றால் எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்கிறார் வள்ளுவர். ஆனால் கருணாநிதி குழப்புகிறார் "தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?."அப்படி பயன் படுத்தினால் விளைச்சலுக்கு என்ன செய்வான் என்கிற கேள்வி தொக்கி நிற்கிறதே அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.<br />
<br />
அதை இப்படிச் சொல்லியிருந்தால் முழுமை பெறும். "விதைநெல்லையும் விருந்தோம்பலுக்கு பயன் படுத்தினால் அது கடவுளுக்கு செய்யும் தொண்டாக நினைத்து செய்வதால் உன் நிலத்தில் விதைக்காமலே விளையும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்.<br />
<br />
கலைஞர் மிக மோசமாக உரை எழுதிய குறள் ஒன்று உள்ளது.<br />
<br />
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்<br />
இந்திரனே சாலுங் கரி.<br />
<br />
மு.வ உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.<br />
<br />
சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.<br />
<br />
பரிமேலழகர் உரை: ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.<br />
<br />
மணக்குடவர் உரை: நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று. இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.<br />
<br />
கலைஞர் உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப் படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.<br />
<br />
எனது கருத்து:<br />
<br />
ஆக கருணாநிதி திரித்துப் பொருள் கூறியுள்ளார் என்பது வெளிப்படை. "வழிதவறிச் செல்லும் மனிதனுக்கு சான்றாக இந்திரன் விளங்கி " என்று ஏதோ உள்குத்து வைத்து எழுதியுள்ளார். இயற்றியவரின் வழியில் நின்று உரை எழுதுவதுதான் முறை. இவருடைய கொள்கைகளை திணித்து உரை எழுதுவது இயற்றியவருக்குச் செய்யும் துரோகம்.<br />
<br />
சரி நமது குறளுக்கு வருவோம்.<br />
<br />
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றிய பழமொழி உண்டு "ஊரோடு பகைக்கின் வேறொடு கெடும்". உலகத்தில் இருந்து ஊருக்கு வந்துவிட்டார்கள்.<br />
<br />
இதையே எனது அப்பத்தா வேறுவிதமாகச் சொல்வார்கள். "நண்டு திங்க்கிற ஊருக்குப் போயிட்டா நடுத்துண்டு நமக்கு " அதாவது இது நண்டை உணவாகக் கருதாதவர்களின் மத்திய தமிழ் நாட்டு ஊரில் பேசப் படும் பழமொழியாக யோசித்தால் வள்ளுவர் இந்த விஷயத்தை குறளாக படைக்க எடுத்துக் கொண்ட சிரத்தை தெரியும்.<br />
<br />
மனதுக்கும் சமூகத்துக்கும் ஒவ்வாத முட்டாள்தனமான காரியமென்றாலும், தேவை கருதி செய்யப் பழகாதவன் அறிவில்லாதவன் என்று தைரியமாகச் சொல்கிறார். ஆனால் உரை எழுதும் இவர்கள் அர்த்தம் சொல்லும் போது ஏன் மழுப்ப வேண்டும்.ஒரு வேளை எல்லாச் சமயங்களிலும் விதி மீறுபவர்கள் தங்களுக்கு சாதகமாக இந்தக் குறளைப் பயன் படுத்தக் கூடாது, என்பதற்காக சான்றோர்கள் அடக்கி வாசிக்கிறார்களா?.<br />
<br />
இதை டார்வினின் பரிணாமத்தில் வரும் சூழ் நிலைக்கு ஏற்றவாறு தகவமைத்துக் (ஒட்ட ஒழுகல்) கொள்ளுவதற்கான பாடத்தைச் சொல்லும் குறளாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
இதை ஒட்டிய கதை ஒன்று உள்ளது. புதிதாக திருமணம் ஆன, ஆண் தனது மாமனார் ஊர்த் திருவிழாக் கொண்டாட தனது புது மனைவியுடன் சென்றார்.கோயில் திருவிழாவில் புது மனைவியுடன் கலந்து கொண்டு கடவுளை வணங்கினார். அவ்வாறு வணங்கி வரும் பொழுது அவ்வூரில் உள்ள வழக்கப் படி ஒருமரத்தில் உள்ள தெய்வத்தை கல்லால் எறிந்து கும்பிட வேண்டும் என்று அவரது மாமியார் வீட்டார் சொன்ன பொழுது அவருக்கு இது என்ன பைத்தியக் காரத்தனமாக இருக்கிறது. கடவுள் என்பது வணங்குவதற்குத் தானே அவரைப் போய் கல்லால் அடிக்கலாமா என்று கேள்வி கேட்டு மறுத்து விட்டார். ஆனாலும் கல் எறிய வில்லை என்றால் கெட்டதுதான் நடக்கும் எனவே எறிந்து விடுங்கள் என்ற புது மனைவியின் வற்புறுத்தலுக்காக கல்லை எடுத்தார், ஆனாலும் கடைசி நிமிடத்தில், மனது கேட்காமல் கடவுள் இருப்பதாகக் கருதப் படும் அந்த மரத்தை விட்டுவிட்டு பக்கத்தில் இருந்த மரத்தின் மீது கல்லை எறிந்து விட்டு வீட்டிற்கு வந்தார். வரும் பொழுதே அவருக்கு கண் சரியாகத் தெரியாமல் தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தார். இரவில் தெய்வத்தை நினைத்து வருந்தி "கல்லால் அடித்தவனை எல்லாம் ஒன்றும் செய்யாமல், கல்லால் அடிக்க மறுத்து பக்கத்து மரத்தில் எறிந்த எனக்கு கண் பார்வையை பறித்து இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தது என்ன நியாயம் தெய்வமே" என அழுது மன்றாடிக் கேட்டார். தெய்வம் கனவில் வந்து "ஏனப்பா நானே எல்லாரும் கல்லால் அடிக்கிறானுக, இவர்களை எவ்வளவு செய்தும் திருத்த முடியாது என்று நினைத்து அவர்களது வழியிலே வழிபடுபவனுக்கு அருளுவோம் என்று பக்கத்து மரத்தில் உட்கார்ந்து எறிபவர்களை கணக்கெடுத்துக் கொண்டிருக்கும் போது என்னை எப்படி நீ குறி பார்த்துக் கல்லால் அடிக்கலாம் " என்று கேட்டது. தெய்வமே நான் வெளியூர்க்காரன் எனக்கு இந்த விவரம் தெரியாதே என்றானாம். இதுக்குத்தான் நிறையப் படிக்கனும் அதிலும் திருவள்ளுவரை நன்றாகப் படி, அதிலும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பற்றி எழுதியுள்ள குறளை படித்துப் புரிந்து கொள் என்று சொல்லிவிட்டு கண் பார்வையை அருளி விட்டுச் சென்றதாம்.<br />
<br />
அப்பா, நாத்திக வாதிகளே நீங்கள் நீதியைப் (குறளைப்) புரிந்து கொண்டால் சரி அதுக்காக கடவுளாம் கண்தெரியாமப் போச்சாம், என்று விவாதத்திற்கு வராதீர்கள். இதுக்குதான் சொல்வது நாத்திகனுக்கு நீதி சொல்லனும் என்றால் கூட முடிவதில்லை. அப்புறம் எப்படி தேறுவார்கள். நீதியை விட்டுவிட்டு கடவுளுக்கு விளக்கம் கேட்பார்கள். அதனால்தான் உங்களுக்கு வித்தியாசமா வேற கதை வைத்திருக்கிறேன்.<br />
<br />
இப்படித்தான் ஒரு முறை இரவில் வெகுதூரம் பேருந்தில் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. உட்கார இடமில்லை என்றாலும் பரவாயில்லை நின்று கொண்டெ செல்லலாம் என்று கூட்டம் நிறைந்து வந்த பேருந்தில் பின்புறவழியில் ஏறினேன். எனக்குப் பின்னால் ஒருவரும் ஏறினார். பேருந்தும் கிளம்பியது.நான் பேருந்தில் நோட்டமிட்டேன் ஒரு ஐந்தாறு இருக்கைகளுக்கு முன் ஒரு இருக்கை காலியாக இருந்தது. ஆனால் எனக்கு முன் பத்துப் பதினைந்து பேராவது இருப்பார்கள், அவர்கள் நெருக்கியடித்து நின்று கொண்டிருக்கிறார்கள். மூளை ஒருகணம் யோசித்தது. அவர்களே உட்கார முயற்சி செய்ய வில்லை என்றால் அதற்கு ஒரு முன்கதைச் சுருக்கம் இருக்க வேண்டும் எனவே அவ்ர்களது வழியைப் பின்பற்றி இருப்போம் (உலகத்தோடு ஒட்ட ஒழுகல்) என்று நின்று விட்டேன். ஆனல் எனக்குப் பின்னாடி வந்தவர், அந்தக் காலியாக இருந்த இருக்கையை கண்டு, முண்டியடித்து எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்த ஆட்களை நெட்டித் தள்ளிவிட்டு அவசர அவசரமாகப் போய் வெற்றிகரமாக உட்கார்ந்து விட்டார்.<br />
<br />
சில நொடிகளில் உட்கார்ந்த வேகத்தில் எழுந்து "அட அறிவு கெட்டவனுகளா எவனோ சீட்ல வாந்தி எடுத்து வைத்திருக்கிறான் சொல்லக் கூடாதா? என்று அவருக்கு தெரிந்த வகையில் அந்தக் கருமத்தைப் போக்கி கொண்டிருந்தார். அப்பொழுது நின்று கொண்டிருந்தவர்களில் ஒரு பெரியவர் சொன்னார் நாங்களெல்லாம் உட்காராம கேணத்தனமாக நின்று கொண்டிருக்கிறோம் என்று நினைத்தாயோ? என்றார்.<br />
<br />
நல்ல வேளை அங்கே பல பேருந்துகளில் இருப்பது போல் உட்கார இருக்கை இல்லாமல் ஒட்டையாக இருந்திருந்தால் என்ன நிலைமை என்று யோசித்தேன்.<br />
<br />
பிணம் தின்பதை சாஸ்திரமாக ஏற்றுக் கொள் என்கிறான் ஒருத்தன். எப்பொழுது? பேய் ஆட்சி செய்தால், இதுவும் ஒருவகை ஒட்ட ஒழுகல்தான்.<br />
<br />
நன்றி<br />
<br />
இரா. சந்திரசேகர்,<br />
<br />
பழனி. </div>
</span>Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-85060257955668511132012-07-18T10:25:00.001+05:302012-07-31T09:24:33.191+05:30தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.6<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.6<br />
<br />
தமிழகத்தின் கடன் 53,000 கோடி என்பது படித்தவர்களையும், முறையான, நேர்மையான அரசாட்சியில் நம்பிக்கை உள்ளவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும். ஆனால் இன்றைய அரசாள்பவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இதெல்லாம் ஜூஜூபி என்று நிரூபித்துவிட்டார்கள். இன்னும் இரண்டு வருடங்களில் தமிழக மின் துறை தன்னிறைவு அடைந்து மிகுதியான லாபம் ஈட்டும் துறையாக மாறிவிடும். அதைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை வலுவடைந்து போராட்டம் வெடிக்கலாம்.
<span class="fullpost">
<br />
<br />
கடந்த ஆண்டில் வீடுகளுக்கு, 8,678 கோடி ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது. வரும் ஆண்டில் மிதமிஞ்சிய கட்டண உயர்வால் 20,000 கோடி வருவாய் ஈட்டும் அந்த அளவிற்கு ஈவு இரக்கமின்றி கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. 20,000 கோடி வருவாய் இருந்தால் 53,000 கோடி கடன் என்பது எளிதான விஷயம்தானே. இதெல்லாம் கிடக்கட்டும். இதை எழுதினால் மனவழுத்தம் அதிகமாகும். ஆகவே நான் யுபிஎஸ் வாங்கிய கதையை பகிர்ந்து கொள்கிறேன்.<br />
<br />
மின்வெட்டால் ஒரு நாளைக்கு, 8 மணிநேரம் கணிணி உபயோகம் , மின் விசிறி உபயோகம் இல்லாமல் பொழுதைப் போக்குவது பெரும் பாடாய் இருந்தது. இருந்தாலும் மூன்றில் ஒரு பங்கு மின் உபயோகம் மிச்சமாவதால் அமைதி காத்து ஆறு மாதங்கள் இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு என்பது அரசாங்கத்தின் அராஜகமாகத் தெரிந்தது. ஆகவே யுபிஎஸ் வாங்கலாமா அல்லது போர்ட்டபிள் ஜென்செட் வாங்கலாமா என்று யோசித்தேன். முதலில் நமக்குத் தேவையான மின்சாரத்தின் அளவை கணக்கிட வேண்டும். அதை எப்படி கணக்கிடுவது.<br />
<br />
மின்வாரிய கட்டண கணக்கீட்டு அட்டையைப் பார்த்த பொழுது சராசரியாக இரண்டுமாதத்திற்கு ஒரு முறை 400 யூனிட்டுகள் உபயோகிப்பது தெரிய வந்தது. அதாவது ஒரு மாதத்திற்கு 200 யூனிட்டுகள். ஒரு நாளைக்கு சுமார் 7 யூனிட்டுகள் . இதில் பெருந்தீனிக்காரர்களான, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ், ஹீட்டர் இவைகளை ஒதுக்கி வைத்தாலும், ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு, சராசரியாக 2 யூனிட்டுகள் தேவைப் படும்.. அதாவது ஒரு மணி நேரத்திற்கு (2000/8 +250) 300 வாட்ஸ் டெலிவிரி செய்யக் கூடிய சோர்ஸ் தேவைப்படும். இது ஒரு சராசரி என்பதாலும் சமயங்களில் ஒரே நேரத்தில் 2 ஃபேன் (60 X 2) , ஒரு கம்ப்யூட்டர் 250 ,2 ட்யூப் லைட் (2 X 60 ), வேலை செய்ய வேண்டிய சூழல் என்று கணக்கிட்டால் (120 + 250 120 =490 வாட்ஸ்) தேவைப்படுகிறது. தேவைப் பட்டால் ஒரு ஐந்து நிமிடத்திற்கு மிக்ஸியை உபயோகித்துக் கொள்ளக் கூடிய வகையிலும் , பாதுகாப்பு மற்றும் தேவையை கருதி 1000 வாட்ஸ் சப்ளை செய்யக் கூடிய சோர்ஸ் வாங்கவேண்டும்.<br />
<br />
ஜென்செட்டா அல்லது யுபிஎஸ்ஸா எது பெஸ்ட்.?<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4anJpAYbbqhKGTbCpFF2bXMr8tCA9rHz2uaCj6pC09i4sYsLLPy45YQG_7kbEOUl5XIhiPLHLkWRNrzhnwBHxCNdu6gYuhI-pe8qt0fxusWpYg9MeewiRmfjmRxce6x0LxBtIAoD3tVe5/s1600/car_photo_217182_7.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4anJpAYbbqhKGTbCpFF2bXMr8tCA9rHz2uaCj6pC09i4sYsLLPy45YQG_7kbEOUl5XIhiPLHLkWRNrzhnwBHxCNdu6gYuhI-pe8qt0fxusWpYg9MeewiRmfjmRxce6x0LxBtIAoD3tVe5/s320/car_photo_217182_7.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">1200 வாட்ஸ் ஜென்செட்</td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
முதலில் ஜென்செட் பற்றிய கணக்கீட்டைப் பார்ப்போம்.<br />
<br />
ஜென்செட் 500வாட்ஸ்லிருந்து 5000 வாட்ஸ் வரை ரூபாய் 20,000 லிருந்து 70,000 வரை சந்தையில் கிடைக்கிறது. குறைந்த பட்சம் 1 கேவி(1000 வாட்ஸ்) ஜென்செட் வாங்கினால் சுமார் ரூபாய் 30,000 ஆகும். <br />
<br />
<a href="http://www.pricelist.co.in/index.php/office/generators/portable-generators">http://www.pricelist.co.in/index.php/office/generators/portable-generators</a><br />
<br />
ஜென்செட்கள், ஒரு யூனிட் தயாரிக்க எவ்வளவு எரிபொருள் எடுத்துக் கொள்கின்றன என்பதுதான் மிக முக்கியமான விஷயமாகும்.<br />
<br />
A conservative rule of thumb is one gallon of fuel per hour for a 5,000 watt generator. <br />
<br />
அதாவது 5000வாட்ஸூக்கு ஒருமணி நேரத்திற்கு ஒரு கேலன் பெட்ரோல் என்பது ஜென்செட்களின் தலையெழுத்து. <br />
<br />
அந்த வகையில் பார்த்தால் 1000 வாட்ஸ்க்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஒருலிட்டர் எனக் கணக்கிட்டுக் கொள்ளலாம்..<br />
<br />
சிக்கனமாக பயன்படுத்தினால் 8 மணி நேரத்திற்கு குறைந்தது 4 லிட்டர் பெட்ரோல் அல்லது கெரஸின் தேவைப் படும். அதற்கான செலவு சுமார் 300 ரூபாய் . இந்த ரீதியில் கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் எரி பொருளுக்காக செலவிட வேண்டும். மேலும் இயக்கத்தை கட்டுப் படுத்த விவரமான ஆள் தேவை. இரைச்சல், மாசு என்று அதிகப் படியான கவலைதரும் விஷயங்கள் வேறு உள்ளது. ஆகவே வீட்டைப் பொறுத்தவரை, அதாவது மின்வெட்டு நேரங்களில் சராசரியாக மணிக்கு 500 வாட்ஸ் உபயோகத்திற்கு ஜென்செட் என்பது ஒரு குவார்ட்டர் அடிக்கிறதுக்கு ஒயின்ஷாப்பை விலைக்கு வாங்கிய கதை தான். <br />
<br />
மின்சாரத்திற்கான இணைப்பு அறவே இல்லாத இடங்களுக்கு வேண்டுமென்றால், ஜென்செட்டை விட்டால் வேறு வழி இல்லை. மேலும் இதில் ஒரு யூனிட் மின்சாரம் அறுபது ரூபாய் ஆகிவிடுகிறது. ஒருமணி நேரத்தில் 100 ரூபாய் வருமானம் பார்ப்பவர்கள் வேண்டுமென்றால் ஜென்செட் வைத்துக் கொள்ளலாம். இது நமக்கு கட்டுப் படியாகாது. ஆகவே அடுத்த ஏற்பாட்டை பார்க்கலாம். <br />
<br />
யுபிஎஸ்ஸா?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3UD0k0NEVCEjmh7sgm4lu4AsRYNSx2j_5WDbwgDe1HraHS1K5dkl-uDTPhscUAulC1WNJntjW5zFGfIH8nM0GKMa2JZze10oUmt8pHqxr8BH0ICjesLoEv_JLAU_LbuGEbPfK1hn5s9Xz/s1600/ups4.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="155" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3UD0k0NEVCEjmh7sgm4lu4AsRYNSx2j_5WDbwgDe1HraHS1K5dkl-uDTPhscUAulC1WNJntjW5zFGfIH8nM0GKMa2JZze10oUmt8pHqxr8BH0ICjesLoEv_JLAU_LbuGEbPfK1hn5s9Xz/s320/ups4.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">லுமினஸ்</td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8NTXqmelcYuxajc39rK0ExEUAgmzXggpFXyd10B4KJ21TFy6-uIi2FEPqZJKkL-kY1-Yz_dpyNL2rt7ZGuFQWlDVykogQYc3PUiZD5wUjHHZlxIbGi2VisiLm9K7ZhH-e0vUtDZXnAWZd/s1600/ups+1.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8NTXqmelcYuxajc39rK0ExEUAgmzXggpFXyd10B4KJ21TFy6-uIi2FEPqZJKkL-kY1-Yz_dpyNL2rt7ZGuFQWlDVykogQYc3PUiZD5wUjHHZlxIbGi2VisiLm9K7ZhH-e0vUtDZXnAWZd/s320/ups+1.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பவரால் - மகிந்திரா</td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHK42lsxbR_YjWq_I0PhC0tD28eYlvwsEuLRK-j_vPwdX3V7ne5sAAzSpKJ-w9wwKPWeaj9jetplcESpB5rutCYpuhJzIDDFP2p5gumsB_O-3bLYQ0bjUMIfcMnJwhqFNBrXnK0NkcHCS3/s1600/ups2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="171" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHK42lsxbR_YjWq_I0PhC0tD28eYlvwsEuLRK-j_vPwdX3V7ne5sAAzSpKJ-w9wwKPWeaj9jetplcESpB5rutCYpuhJzIDDFP2p5gumsB_O-3bLYQ0bjUMIfcMnJwhqFNBrXnK0NkcHCS3/s320/ups2.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சு-கம்</td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td></tr>
</tbody></table>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPTm4CkdgK_8gEqBdt7RRl135JADwf1xBP7lHsQUmIcpx_tZC7t20wOg9O8rFwubbPRbHTHAEvBumrEVIOKFJsnh02GZzF7ZJuOTV8GpfimVQMNEVyh5LK8yJbklw80FR5hPcISGxGdkxM/s1600/ups3.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="164" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPTm4CkdgK_8gEqBdt7RRl135JADwf1xBP7lHsQUmIcpx_tZC7t20wOg9O8rFwubbPRbHTHAEvBumrEVIOKFJsnh02GZzF7ZJuOTV8GpfimVQMNEVyh5LK8yJbklw80FR5hPcISGxGdkxM/s320/ups3.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மைக்ரோடெக்</td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
நமது தேவை 1000வாட்ஸ் கொடுக்கக்கூடிய சோர்ஸ். சந்தையில் 1000 வாட்ஸ் தொடர்ந்து கொடுக்கக் கூடிய இன்வர்ட்டர் கிட்டத்தட்ட இல்லை எனக் கொள்ளலாம். 850 வாட்ஸ் அல்லது 1500 வாட்ஸ்களில்தான் கிடைக்கும் இன்வர்ட்டர்களில் 99 சதவீதம் 850 வாட்ஸ்தான் . இதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸ் என்பது, மிக அதிகபட்சமாக, பாதுகாப்பாக (in the safer side) ஒரு மணி நேரத்திற்கு இன்வர்ட்டர் வழியாக 850 வாட்ஸ் எடுக்கலாம் என்று அர்த்தம். <br />
<br />
850 வாட்ஸூக்கான இன்வர்ட்டர் 4500 ரூபாயிலிருந்து 5500 ரூபாய் வரை உள்ளது. மின்கலம் 100 ஆம்பியரில் வாங்கினால் 10,000 ரூபாய். ஆக மொத்தம் 15,000 ரூபாயில் முடித்துவிடலாம்.<br />
<a href="http://www.priceindia.in/consumer-electronics/inverter-battery-price/%20" target="_blank">http://www.priceindia.in/consumer-electronics/inverter-battery-price/ </a><br />
<br />
இதில் பிரதானமானது மின்கலம் தான். அதை எப்படி கணக்கிடுவது.சந்தையில் 12 V வோல்ட் மின் கலங்கள்தான் 99 சதவீதம் உள்ளது. நமக்கு தேவையான ஆம்பியரை எப்படி கணக்கிடுவது.?<br />
எனது ஒரு நாளைய தேவை 2 யூனிட்கள் என்று பார்த்தோம் அதாவது 2000 வாட்ஸ். இதை மின்கலத்தின் வோல்ட்டால் வகுத்தால் தேவையான மின்கலத்தின் ஆம்பியர் கிடைத்துவிடும். 2000 Watts/12 Volt= 166.6AH.<br />
<br />
சந்தையில் 100AH, 120AH, 150AH, 165AH, 180AH, 200AH ஆம்பியர்களில் 12 V மின்கலங்கள் கிடைக்கிறது.<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIhapDqr7bN3dFWRl1D4laDlxfXSv9uJ2DdiOabCfwe7EZVGTZrkE1cXIR3_FJn88nJvMnca4k0NCVAfOyyT8zVYnapU3KMTZteEBPIHAJheFB7c-VkvfwiX45wjFI9XdBZMmOuligBAfB/s1600/battery-la.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIhapDqr7bN3dFWRl1D4laDlxfXSv9uJ2DdiOabCfwe7EZVGTZrkE1cXIR3_FJn88nJvMnca4k0NCVAfOyyT8zVYnapU3KMTZteEBPIHAJheFB7c-VkvfwiX45wjFI9XdBZMmOuligBAfB/s1600/battery-la.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">லெட் ஆசிட் பேட்டரி (ஃப்ளாட்)</td></tr>
</tbody></table>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC1HuxFeWjtLgghagysWi2sQ2nzhTWAQ-A-Ye4z5SKWY6MJm0RvJReDM6rSwV6tXKEFIKYzDS8mPbyoJH5e_ZItX6TL4IIHbkZdPsgh1KNUe3JfZcYEGCzBEaNoNnENLzAYz9RamHzpaqr/s1600/battery-135n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="263" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC1HuxFeWjtLgghagysWi2sQ2nzhTWAQ-A-Ye4z5SKWY6MJm0RvJReDM6rSwV6tXKEFIKYzDS8mPbyoJH5e_ZItX6TL4IIHbkZdPsgh1KNUe3JfZcYEGCzBEaNoNnENLzAYz9RamHzpaqr/s400/battery-135n.jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சீல்ட் பேட்டரி</td></tr>
</tbody></table>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<a href="http://www.brightnpowerups.com/home-ups/falcon-800va-12v.html" target="_blank">http://www.brightnpowerups.com/batteries/lead-acid-batteries.html </a><br />
<br />
200(AH) ஆம்பியர் என்று போட்டிருந்தால், 200 ஆம்பியரில் வேலை செய்யும் மின் சாதனம் (லோடு) இணைத்தால் 1மணிநேரம் தாக்குபிடிக்கும் என்று அர்த்தம். அல்லது 1000 ஆம்பியர் லோடு இணைத்தால் 12 நிமிடங்களுக்கு வேலைசெய்யும். <br />
<br />
<u><b>செய்கூலி, சேதாரம்</b></u><br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYdhArBk1K_TXiEEaybNBZSIr7SJaLY0Wi46JaGEoDAZyhIwc1AaIna9KhVYFrUbXBpTzK09ly0mX4MzIdV-y6cPuztcrvmbRWzXRI2JxITFU0I66SoDjVhiDyQSpRzixmnfgfx6CJ2Z9b/s1600/12V_7Ah_Sealed_lead_acid_battery.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="242" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYdhArBk1K_TXiEEaybNBZSIr7SJaLY0Wi46JaGEoDAZyhIwc1AaIna9KhVYFrUbXBpTzK09ly0mX4MzIdV-y6cPuztcrvmbRWzXRI2JxITFU0I66SoDjVhiDyQSpRzixmnfgfx6CJ2Z9b/s320/12V_7Ah_Sealed_lead_acid_battery.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">12ஓல்ட்7ஆம்பியர்</td></tr>
</tbody></table>
<u><b> </b></u> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
கம்ப்யூட்டர் யுபிஎஸ்ஸின் மின் கலம் 12 வோல்ட் ,7 ஆம்பியர்தான் இதனுடைய மொத்த வாட்டேஜ் 84வாட்ஸ்தான். இதில் செய்கூலி, சேதாரம் போனால் நமக்கு கிடைப்பது 60 வாட்ஸ்தான். கம்ப்யூட்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு 250 வாட்ஸ் வேண்டும் 60 வாட்ஸ்ஸில் 15 நிமிடம் தான் வேலை செய்யும்.ஒரு வருடம் ஆகிவிட்டால் ஐந்து நிமிடம்தான் வேலை செய்யும்.<br />
<br />
200 ஆம்பியர் மின்கலம் 200 X 12= 2400 வாட்ஸ் கொடுக்கவேண்டும். அதை 230 வோல்ட்டாக மாற்றும் போது அதில் 15% செலவானது (செய்கூலி, ) போக 2000 வாட்ஸ் இருக்கும். அதிலும் முழுவதுமாக சுரண்டி எடுக்கமுடியாது. 10.5V அல்லது 11 V வோல்ட்க்கு குறையும் வரை எடுக்கலாம். ஆகவே அதில் தங்கியிருக்கும் (சேதாரம்) அந்த இருப்பைக் கழித்துவிட்டால் 1800 வாட்ஸ் நிச்சயம் பயன்படுத்த கிடைக்கும்.<br />
<br />
இன்வர்ட்டர் கள் 850 வாட்ஸ், மற்றும் 1500 வாட்ஸில் இருக்கிறது. ஆனால் 1500 வாட்ஸ் (24 Volt) இன்வர்ட்டர் என்று போய்விட்டால் அதற்கு இரண்டு மின்கலங்கள் தேவைப் படுகிறது. அதனால் விலையும் (2 X 10,000 = 20000) கூடி விடுகிறது.<br />
<br />
நான் கம்ப்யூட்டருக்கு உபயோகிக்கும் யுபிஎஸ்ஸைப் பற்றி யோசித்து அதன் சப்ளை ரேட்டிங்கைப் பார்த்தேன்.. அது 650 வாட்ஸ் என்று போட்டிருந்தது ஆகா இதில் ஒரு 100 ஆம்பியர் சீல்ட் (Sealed) பேட்டரியை இணைத்து விட்டால் போதுமே, ஒரு பேட்டரி என்ன 5000 ரூபாய்தானே என்று கணக்கிட்டேன். எல்லாம் சேர்த்து 7000 ரூபாயில் முடித்து விடலாமே! .பின்னர் அதிக ரேட்டிங்கில் உள்ள கம்ப்யூட்டர் யுபிஎஸ் பற்றி தகவல் எடுத்தேன் 1500 வாட்ஸ் யுபிஎஸ் 2000 ரூபாயில் கம்ப்யூட்டர் விற்பனை யாளர்களிடம் இருந்தது. அதற்கு ஒரு 80+80 ஆம்பியர் சீல்ட் பேட்டரி இரண்டை வாங்கி மாட்டி விட்டால் போதுமே 12,000 ரூபாயில் தேவை நிறை வேறிவிடும்.<br />
<a href="http://www.computerwarehousepricelist.com/productlist.asp?CurPage=1" target="_blank">http://www.computerwarehousepricelist.com/productlist.asp?CurPage=1 </a><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg94vkDCL7beU9Bfp_ZyRa7npJoxlqQPV7qUJon4EGRvD9I0-kkwpazOORryomrVoIx-FH-3i8zJipCaeGBGPQEOBrJr4eRPeULUw88_Ek1vcBA7fA8Bt0_1wzy3K-CJ1alQTcIuh-jW1Cl/s1600/1ab3a0fb-5056-9170-d3718282f89ea755_pr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg94vkDCL7beU9Bfp_ZyRa7npJoxlqQPV7qUJon4EGRvD9I0-kkwpazOORryomrVoIx-FH-3i8zJipCaeGBGPQEOBrJr4eRPeULUw88_Ek1vcBA7fA8Bt0_1wzy3K-CJ1alQTcIuh-jW1Cl/s320/1ab3a0fb-5056-9170-d3718282f89ea755_pr.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
அறிவின் கணக்கை புத்தி ஏற்க மாட்டேன் என்கிறது. ஒரு வேளை அவர்கள் குறைந்த நேர செயல் பாட்டிற்கு அந்த யுபிஎஸ்ஸை செய்திருந்தால் என்ன செய்வது என்று புத்தி சொல்லியது. அதுதான் ஒரு வருடத்திற்கான வாரண்டி இருக்கிறதே தாரளமாக செய்யலாமே என்றது அறிவு. அதெல்லாம் சரி இது பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிரார் என்று பார்த்தபொழுது. (ஆஹா வள்ளுவர் யுபிஎஸ் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறரா என்று கேட்பது தெரிகிறது. ) <br />
<br />
உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்<br />
கல்லார் அறிவிலா தார்.<br />
<br />
ஆகவே எல்லாரையும் போல இன்வெர்ட்டர் வாங்கிக் கொள்வோம் என்று முடிவெடுத்து ஆராய்ச்சியை கைவிட்டேன். கம்ப்யூட்டர் யுபிஸ், பெங்களுரில் கம்ப்யூட்டர் வேர் ஹவுஸில் பலதரப்பட்ட வகைகளில் கிடைக்கும். உங்களுக்கு வசதியும் நேரமும் இருந்தால் செய்து பாருங்கள். <br />
<br />
முடிவெடுத்தவுடன் இது பற்றி இதே தொழிலில் இருக்கும் நன்பரிடம் சொன்ன பொழுது உங்களுக்கு யுபிஎஸ்தானே கவலையை விடுங்கள் என்று சொல்லிவிட்டு போனவர், அரைமணி நேரத்தில் இன்வெர்ட்டர், பேட்ட்ரி, எலக்ட்ரிஷியன் என்று ஆட்டோவில் வந்து இறங்கி விட்டார். ஆகா என்னைக் கேட்கவில்லை, அவர்பாட்டுக்கு மாட்டி விட்டு சென்றார். பணம் (15,000 +500) எப்பொழுது கொடுக்க முடியுமோ அப்பொழுது கொடுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றார். <br />
<br />
இதைத்தான் அன்புத்தொல்லை என்பது. நாம் இவ்வளவு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்.என்ன பிராண்ட் வாங்குவது என்ன பேட்டரி வாங்குவது என்று யோசிக்கவிடாமல் கொண்டு வந்து மாட்டி விட்டு சென்றார். நன்மைதான் செய்வார் என்றாலும் என்னைப் போன்ற விவரமானவர்களிடம்!! ஆலோசனை செய்ய வேண்டாமா?. வயரிங்கும் ஒரு குறிப்பிட்ட அறைக்கும் மட்டும் யுபிஎஸ் பயன் தரும் வகையில் இருந்தது. <br />
<br />
நமது ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை அதற்குள் நண்பர் கொண்டு வந்து வைத்து விட்டார் ஆனாலும் என்ன தொடருவோம்.அடுத்து நான் என்ன செய்தேன் தெரியுமா?<br />
தொடரும்............... <br />
<br />
இரா.சந்திர சேகர்,<br />
பழனி <br />
</span></div>Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-28290305669657398532012-07-04T10:07:00.000+05:302014-12-12T20:43:21.008+05:30தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.5<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.ae/2012/05/4.html" target="_blank">முந்தைய பதிவு</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றகுறையினால் ஒரு நாளைக்கு 8 லிருந்து 12 மணி நேரம் மின்வெட்டு அமுல் படுத்தப் பட்டது. இதனால் மக்கள் இதை சமாளிக்க வேறு வழியில்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
அந்த வகையில் <span style="color: red;">இராமன் ஆண்டால் என்ன இரவணன் ஆண்டால் நமக்கென்ன</span> என்று எதையும் கண்டு கொள்ளாமல் நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளுக்கு 10,000 லிருந்து 30,000 வரை செலவு செய்து யுபிஎஸ் (இன்வர்ட்டர்கள்) வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வியாபாரிகளும், வசதி படைத்தவர்களும் லட்சக் கணக்கில் செலவு செய்து ஜென்செட் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். </div>
<span class="fullpost"></span><br />
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<span class="fullpost">
<div style="text-align: justify;">
இதில் தமிழக மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் ஏற்படும் சங்கடங்களும், பொருளாதார பின்னடைவுகளும் அரசாங்கத்திற்கு தெரிவதில்லை, அதிகாரிகளுக்கும், யுபிஎஸ் பற்றிய மின்சாதன அறிவும், இதில் வீணாகும் தமிழகத்தின் பணத்தைப் பற்றிய அறிவும் , அக்கறையும் இல்லாமல் போய்விட்டது.<span style="color: red;"> புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி</span> என்பது போல் அதிகாரிகள் உள்ளனர். மக்களோ வோட்டைப் போட்டு விட்டு, <span style="color: red;">ஆப்பை பிடுங்கிய குரங்காக</span> விழி பிதுங்கி இருக்கினறனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது நன்பர் "என் மாமன் மின்வாரியத்தில் பெரிய இன்சீனியரா இருக்கார் மின் வெட்டு பத்தி சொல்லியிருந்தா நானும் யுபிஎஸ் பிசினஸ் பண்ணி நாலு காசு பார்த்து இருக்கலாம்" என்று புலம்பினார். அது சரி அவராவது யுபிஎஸ் மாட்டியிருக்காரா என்று கேட்டேன். அவருக்கு ஒருவன் மாட்டி, விட்டு சென்று 5 வருடம் ஆகிறது என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்கள் அதிக அளவில் யுபிஎஸ் வாங்குவது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுது ஒரு நிறைவை (Saturation) எட்டிவிட்டது. இதனால் பெரிதும் பயன் பெற்றவர்கள் வட மாநிலத்தவரே. இந்த யுபிஎஸ், ஜென்செட் மற்றும் பேட்டரி அணைத்தும் (99 சதவீதம்) வட மாநிலங்களி லிருந்துதான் தமிழகத்திற்கு வருகின்றது. இதனால்தான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகத்தில் மட்டும் 2.24 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். அவர்களில் குறைந்தது 2 சதவீதம் என்று வைத்தாலே சுமார் 5,00,000 பேர் யுபிஎஸ்கள் வாங்கியிருக்கலாம். அதன் மூலம் மக்கள் பணம் சுமார் 1000 கோடி ரூபாய் வீணாகி இருக்கிறது. அதிலும் இதில் பேட்டரிக்கு செலவிடும் பணம் என்பது 3 வருட காலத்தில் குப்பையாகி விடும். அதாவது சுமார் 750 கோடி 3 வருடங்களில் குப்பையாகிவிடும். பாக்கி 250 கோடியும் 3 வருடங்களில் குப்பையாகி விடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVf78AU-SpkR4CcXX7wGCSBs_sBYjAb7HQDO552O6W1D_AE-Uq_yMJxIQewHX4ZH5xD0RPSJH4h2JyBrxwycFH-QMoxEjgOJcFOIzDg4UGN9RxUtzRqChT5vxBAAcTizEoxzcurTbkeBR_/s1600/TNEB4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVf78AU-SpkR4CcXX7wGCSBs_sBYjAb7HQDO552O6W1D_AE-Uq_yMJxIQewHX4ZH5xD0RPSJH4h2JyBrxwycFH-QMoxEjgOJcFOIzDg4UGN9RxUtzRqChT5vxBAAcTizEoxzcurTbkeBR_/s640/TNEB4.jpg" height="379" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii9wR5Shn8hQIaaUSIh_euPD8P5_Hsl2jlHz5PuILIuGrWps_BRoc41cAXlx19POAbvK-eSE_u_XMvuNA5TMvz4y_FAaiJE7yUeBZR6oKZvBRwEimiPFjlZtNX8zFvQg-mC_vvyXXU6-9h/s1600/TNEB2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii9wR5Shn8hQIaaUSIh_euPD8P5_Hsl2jlHz5PuILIuGrWps_BRoc41cAXlx19POAbvK-eSE_u_XMvuNA5TMvz4y_FAaiJE7yUeBZR6oKZvBRwEimiPFjlZtNX8zFvQg-mC_vvyXXU6-9h/s640/TNEB2.jpg" height="467" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவே 5 சதவீதமாக இருந்தால் 2500 கோடிரூபாய் மக்கள் பணம் செலவாகி இருக்கும். இதில் ஜென்செட் நிறுவிய வகையில் சுமார் 2500 கோடி செலவாகியிருக்கும். அரசாங்கத்தால் மக்களுக்கு குத்து மதிப்பாக 5,000 கோடி ரூபாய் மின்சாரத்திற்காக அதிகப் படியாக செலவாகி இருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaL9fqE-7DxgRIcNNdJ27lQT0MDUSsrZiRDBEJxPyEq09KwBH-U23rNxsxXL5vw663CcMtuR96EJ-orK62M8B3JPUFij2YdRUOyYsm4Yf7Rv6BHBt25aeFy3iPDFDCpJvV1YgcsNADG6Mi/s1600/TNEB8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhaL9fqE-7DxgRIcNNdJ27lQT0MDUSsrZiRDBEJxPyEq09KwBH-U23rNxsxXL5vw663CcMtuR96EJ-orK62M8B3JPUFij2YdRUOyYsm4Yf7Rv6BHBt25aeFy3iPDFDCpJvV1YgcsNADG6Mi/s640/TNEB8.jpg" height="496" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: red;"><div style="text-align: justify;">
<span style="color: red;">சோழியன் குடுமி சும்மா ஆடாது</span> என்பதற்கிணங்க யுபிஎஸ் ஒன்றும் இலவசமாக வேலை செய்யாது. அந்தக் காலத்தில் நெல் அறுவடை செய்பவர்களுக்கு நெல்தான் கூலியாகக் கொடுக்கப் படும், அது போல் <span style="color: magenta;">யுபிஎஸ், பேட்டரியை சார்ஜ் செய்யும் பொழுதும் , பேட்டரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் பொழுதும் 15+15=30 சதவீதத்தை கூலியாக எடுத்துச் சாப்பிட்டு விடும்.</span>
அது மட்டுமில்லாமல் அதை 24 மணிநேரமும் மின்சாரம் வருகிறதா இல்லையா , வரவில்லை என்றால் மாற்றிக் கொடுக்கும் வாட்ச் மேன் வேலை பார்க்கச் சொல்வதால் அதற்கும் கூலி தரவேண்டும்.</div>
</span>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
லோகத்தில் (தமிழகத்தைத் தவிர)எதுவும் இலவசமா கிடைக்காது என்பதை கார்னாட் தொடங்கி ஐன்ஸ்டீன் வரை தெளிவா எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள் . அது தெரியாம மக்களுக்கு யுபிஎஸ் வாங்கிக் கொடுக்கலாம் என்று ஒரு மந்திரி சொன்னாராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்ற வருடம் 1634 கோடி யூனிட்டுகள் மக்களுக்கு வினியோகிக்கப் பட்டுள்ளதாம். இந்த வருடம் 2000கோடி யூனிட்டுகள் செலவாகலாம். இதில் ஒரு 10 சதவீதம் யுபிஎஸ் மூலம் செலவழிப்பதாலும், அந்த பத்து சதவீதத்தில் 30 சதவீதம் என்பது சுமார் 70 கோடி யூனிட்டுகள் வெட்டியாக யுபிஎஸ் சாப்பிட்டு விடும். ஏற்கனவே நிறுவிய வகையில் 5000 கோடி (செலவினம்1), மக்கள் பாக்கெட்டிலிருந்து செலவழிக்கப் பட்டுள்ள நிலையில், யுபிஎஸ்கள் தின்று தீர்த்த வகையில் கணக்கு தொடர்கிறது. அதன் மதிப்போ வருடத்திற்கு 350 கோடி (செலவினம்2) ரூபாயாகும். இதுவும் மக்கள் தலையில்தான் விழுகிறது. <span style="color: red;">ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி</span> என்ற கதையா எதையும் தாங்கும் இதயம் கொண்ட தமிழன் இருக்கவே இருக்கான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த 5,00,000 யுபிஎஸ்கள் நாள் முழுவதும் 24 மணிநேரமும் இயக்கத்தில் (வாட்ச் மேன் வேலையில்) இருந்தால் தான் அவை பயன்படும். அவை ஒவ்வொன்றும் ஒருமணி நேரத்திற்கு சுமார் 30 வாட்ஸ் மின் சக்தியை செலவழிக்கும். இதனால் ஒரு வருடத்திற்கு</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(500,000 யுபிஎஸ்கள்X 24மணி X30வாட்ஸ், X 360நாட்கள்)/1000 =11,52,00,000 யூனிட்டுகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
11,52,00,000 யூனிட்டுகள் X 5.30ரூபாய்=61,05,60,000</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுமார் 60 கோடி(செலவினம் 3)ரூபாய் வெட்டித் தனமாக செலவு செய்யப் படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனால் மக்களின் பணம் சுமார் 60 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு வீனாக செலவழிக்கப் படுகிறது. ஆக மொத்தத்தில் 3 வருடத்தில் <b>6200 கோடி</b> (செலவினம் 1+(செலவினம் 2 +செலவினம் 3)*3 ) ரூபாய் எந்த விதமான உபயோகம் இல்லாமல் அதிகாரிகளின் மெத்தனத்தால் மக்களால் தண்டமாக செலவழிக்கப் படுகிறது. அதாவது ஒவ்வொரு தமிழனிடமும் சுமார் 1000 ரூபாய் பிடுங்கப் பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் நான் ஏன் அதிகாரிகளை குற்றம் சொல்கிறேன் என்றால் யுபிஎஸ் என்பது மின்சாரத்தை தயாரித்துக் கொடுக்கும் சாதனம் என நினைத்துக் கொண்டார்களோ என்னவோ. யுபிஎஸ்ஸின் பயன்பாட்டால் <span style="color: magenta;">ஏற்கனவே செலவழித்துக் கொண்டிருக்கும் மின்சாரத்திற்கு அதிகமாக 30 சதவீதம் மின்சாரத்தை தண்டம் கட்டி, மாதம் 500 ரூபாய் யுபிஎஸ், மற்றும் பேட்டரி தேய்மானச் செலவுடன் யுபிஎஸ் மூலம் மின்சாரம் எடுக்கிறார்கள் என்பதை மக்கள் வேண்டு மென்றால் அறியாமல் இருக்கலாம் </span>ஆனால் மின்துறை பொறியாளர்களுக்குத் தெரியவில்லை என்றால் யாரைச் சொல்வது. இதையெல்லாம் அதிகாரிகள் முன்கூட்டியே, அதற்கான சரியான முதலீடு மற்றும் திட்டம் என அறிவுறுத்தி செயல் பட்டிருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: red;"><div style="text-align: justify;">
<span style="color: red;"> மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.</span> ஆனால் படிக்காமல் பதவிக்கு வருகிற மந்திரிக்கு வரப் போகிற கமிஷன் தானே தெரியும் வேறென்ன தெரியப் போகிறது. <span style="color: red;">படிச்சவங்களே பாட்டைக் கெடுக்கும்</span> போது படிக்காதவர்கள் கெடுப்பதை பற்றி சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. படித்தவன் , ஒழுக்கம் உள்ளவன், நாட்டுப் பற்று உள்ளவன் அரசியல் வாதியாகவும் அதிகாரியாகவும் வர வேண்டும், அப்பொழுதுதான் நாடு வளமிக்கதாகவும், மக்கள் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.</div>
</span>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிபா: எல்லாத் தொடரையும் அரையும் குறையுமா முடித்த மாதிரி இதையும் முடித்துவிட்டீர்களா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்: இதில் என்ன குறை உள்ளது?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிபா: யுபிஎஸ் யின் அளவு என்ன? யாருக்கு எவ்வளவு தேவை ,அதன் பட்ஜெட் என்ன எப்படி நிறுவுவது.எங்கு வாங்கலாம்? போன்ற விஷயங்கள் இல்லையே</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்: விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதையா இருக்கு, அதை ஏன் வாங்கக் கூடாது வாங்கினால் தமிழனுக்கு எவ்வளவு நஷ்டம் என்று விலாவாரியா எழுதிவிட்டு அதை வாங்குவது எப்படி என்று நானே எழுதலாமா? படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் என்ற கதையாகிவிடாதா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிபா: ஓஹோ நீ எதுக்கு உன் வீட்டிற்கு வாங்கி மாட்டியிருக்கே? ஊருக்குத்தான் உபதேசமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்: அதனுடைய நிறை குறை பற்றி எழுத வேண்டுமென்றால் வாங்கித்தானே ஆகவேண்டும்.<br />
<br />
நிபா: உன்னைப் போல் நிறை குறை ஆராய்ச்சி உள்ளவர்களுக்காவது பயன்படும் விதமாக எழுதலாமில்லையா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><span class="fullpost">
<div style="text-align: justify;">
நான் : நிறையப் பேர், நிறைய எழுதிட்டாங்க அதுவுமில்லாமல் மின்வெட்டும் தீர்ந்து விட்ட இந்த நேரத்தில் வாங்கச் சொல்லி தண்டம் இழுத்து வைக்கக் கூடாது.மந்திரி வேறு சொல்லிவிட்டார் இன்னும் இரண்டு மாதத்தில் மின் வெட்டு தீர்ந்துவிடும் என்று.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிபா: யோவ் ரொம்ப பிகு பண்ணாதே எல்லோரும் எழுதுவதற்கு மேட்டர் இல்லாமல் இருக்கும் பொழுது மாதத்திற்கு ஒரு பதிவு எழுதற உனக்கு ஒரு மேட்டர் சொன்னா எழுது. நீ எப்படி யோசித்து வாங்கினாய் என்ற கதையை எழுது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான்: மேட்டர் இருக்கு, நேரம் இல்லை. கடந்த ஒரு மாதமாக சென்னை மதுரை, பழனி, திண்டுக்கல் என்று சுற்றியதோடு மட்டுமில்லாமல் ஒருவாரத்தில் காரோட்டப் பழகினது என்று பல விஷயங்களால் நேரமே கிடைக்கவில்லை. இதில் விண்டோஸ் 7 , ரிப்பேரான ஹார்டு டிஸ்க் என்று பல பிரச்னைகள் இதெல்லாம் எழுதுனா என்னவாகும்.சரி பார்ப்போம்., </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.ae/2012/07/blog-post.html" target="_blank">தொடரும்....................</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரா.சந்திர சேகர்,</div>
<div style="text-align: justify;">
பழனி.</div>
</span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-60085056992133257002012-05-28T14:38:00.000+05:302014-12-12T20:18:37.825+05:30தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.4<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.4<br />
அல்லது<br />
இண்டக்சன் ஸ்டவ்<br />
<br />
<div style="text-align: justify;">
செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் சென்றால், அவனுக்கு தேவைப் படும் ஆக்ஸிசனை, மின்சக்தியினால் தயாரிக்க உருவாக்கப் பட்ட தொழில் நுட்பத்தை நாசா ஓரங்கட்டி விட்டது. அதை நமது நண்பர் ஸ்ரீதர் மாற்றி யோசித்து, ஆக்ஸிஸனை கொடுத்து அதிலிருந்து மின்சக்தியை தயாரிக்க பயன்படுத்தி விட்டார். <span style="color: magenta;"> <span style="color: cyan;">உலகம் போற்றும் உன்னத கண்டு பிடிப்பாகி விட்டது. சந்தேகமில்லாமல் இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டு பிடிப்பு என்றே கூறலாம்</span></span><span style="color: cyan;">.</span> இந்த விடியோவில் ஸ்ரீதர் கையில் வைத்திருக்கும் புளூம்பாக்ஸ் ஒரு அமெரிக்க வீடு அல்லது இரண்டு ஐரோப்பிய வீடு அல்லது , நான்கு இந்திய வீட்டிற்கு மின்சக்தி அளிக்கக் கூடியதாம். ஆயிரக்கணக்கான சோலார் பேனல் வைத்து தயாரிக்க கூடிய மின்சக்தியை ஐந்தே ஐந்து புளூம் பாக்ஸ் மூலம் தயாரிப்பதையும் பாருங்கள். நல்ல விஷயம் நாலு பேரைச் சென்றடைவதற்கு நாற்பது முறை கூறினாலும் தப்பில்லை என்பதால், சென்ற பதிவிலும் இணத்திருந்தேன். அதில் பார்க்காதவர்களுக்காக இங்கும் பதிவிட்டுள்ளேன்.</div>
<span class="fullpost">
<br />
<br />
<embed allowfullscreen="true" allowscriptaccess="always" background="#333333" flashvars="si=254&contentValue=50092308&shareUrl=http://www.cbsnews.com/video/watch/?id=6816773n" height="279" src="http://cnettv.cnet.com/av/video/cbsnews/atlantis2/cbsnews_player_embed.swf" type="application/x-shockwave-flash" width="425"></embed>
<br />
<br />
</span><br />
<div style="color: magenta;">
<span class="fullpost"><b>Breaking News</b></span></div>
<span class="fullpost">
<br />
<div style="text-align: justify;">
புதிய மின்தடம் அமைப்பதில், தனியார் மின் நிலையத்திற்கு ஆதரவான ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை, மின்சார தீர்ப்பாயம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. விவரங்களுக்கு கீழே சுட்டி கொடுத்துள்ளேன் தட்டிப் பார்க்கவும். இது போல் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கும் ஒரு குட்டு வைத்தால் நன்றாக இருக்கும். அங்கும் இதே பிரச்னைதான்.</div>
<br />
<a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=473365">http://www.dinamalar.com/News_Detail.asp?Id=473365</a><br />
<br />
<div style="color: magenta;">
<b>Breaking voice</b></div>
<br />
<div style="text-align: justify;">
"என்னய்யா இது கதையா இருக்கு, தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம் என்று ஆரம்பித்து மின்வெட்டை முடித்து விட்டு யுபிஎஸ்க்கு வருவீங்கன்னு பார்த்தா மிக்ஸி, ட்யூப் லைட், அடுப்பு, கிரைண்டர் ன்னு போய்க்கிட்டே இருக்கீங்க. விட்டா ஜீரோ வாட்ஸ் பல்புன்னு ஆரம்பிச்சுருவீங்க போல இருக்கு. எப்ப யுபிஎஸ்ஸூக்கு வரப் போறீங்க அதுக்கு முன் மின்வெட்டும் தீர்ந்து யுபிஎஸ்க்கு வேலை இல்லாம போயிரும்."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒன்னுமில்லைங்க இது ஃபோர் கிரவுண்ட் வாய்ஸ்தாங்க. நேருக்கு நேர் பார்த்து <a href="http://chandroosblog.blogspot.com/2010/09/immortality-4.html">நம்ம நிபா </a>.கேட்டுட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்ல வேளை ஞாபகப் படுத்தினார், ஜீரோவாட்ஸ் பல்பை பற்றி, அதையும் விடப் போறதில்லை. ஆனா அதுக்குன்னு ஒரு பதிவு தனியா போடறது ரொம்ப டூமச் ஆயிரும். இந்த ஜீரோ வாட் பல்புன்னு வெட்கமில்லாம சொல்லியே விக்கிறார்கள் நாமும் வெட்கமில்லாமல் அந்தப் பெயரைச் சொல்லித்தான் வாங்க வேண்டியதிருக்கு. உண்மையிலே ஜீரோ வாட் பல்பு 15 லிருந்து 20 வாட்ஸ் எடுத்துக் கொள்ளக் கூடியது. அதைத் தவறுதலாக ஜீரோ வாட் என்று உபயோகத்தில் பயன் படுத்துகிறோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடையில் போய் "கம்ப்யூட்டர் சாம்பிராணி "என்று சொல்லிக் கேட்டு, வாங்க கேவலமாத்தான் இருக்கு என்ன பன்றது, அதை பெயராக்கி விட்டார்கள். ஆனாலும் நான் இப்பொழுதெல்லாம் "சாம்பிராணி வில்லை "என்றுதான் சொல்லுகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;">நிபா :</span> பொய்,பொய் போனவாரம் வெள்ளிக்கிழமை கூட நீ கடையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி என்று சொல்லித்தானே வாங்கினாய்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;">நான்: </span>யோவ் நான் முதலில் வில்லை என்றுதான் சொன்னேன் கடைக்காரருக்கு விளங்கவில்லை, அதனால்தான் அப்படி சொல்ல வேண்டியதாயிற்று</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின் வெட்டை பற்றி சொல்லிவிட்டால் மட்டும் போதாது. அதிலுள்ள மின் சிக்கனம், மின் சேமிப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசும் போது கண்டிப்பாக மின் சாதனங்களைப் பற்றி எழுதித்தான் ஆக வேண்டும். மேட்டரை விட்டு விலகிப் போவது போல் தோன்றினால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;">வினோத் குமாரின் கேள்வி :</span> இண்டக்சன் ஸ்டவூ நல்ல கண்டுபிடிப்பாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில்... அது காந்தத்தை பயன்படுத்துது.. காந்தத்தால் செறிவூட்டப்பட்ட உணவு உடல் நலத்துக்கு கேடுன்னு கேள்விப்பட்டேன்... ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;">நான்:</span> அதெல்லாம் கிடையாது. நமது மூளை கூட எலக்ட்ரான் நியூரான் சமாச்சாரம்தான் அதற்காக நம்மை முழுமையாக காந்தத்தால் இயக்க முடியாதல்லாவா?. நாம் சமைக்கும் உணவு ஃபெரோ மெட்டாலிக் (Ferro metallic) கலவை அல்லது சம்பந்தம் இருந்தால் தான் காந்தத்தால் செறிவூட்டமுடியும். அதுமட்டுமில்லாமல் ஃபெரோ மெட்டாலிக் ஆக இருந்தால் சட்டியிலிருக்கும் போதே கருகிவிடும். அது ஒரு மாதிரியான மின்னோட்டம்தான் அதற்கும் காந்த சக்திக்கும் தொடர்பு இல்லை. அதையும் மீறி ஏதாவது இருந்தால் அது கணக்கில் கொள்ளத் தக்கதல்ல (Negligible) என்பது என் அபிப்பிராயம்.</div>
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmgV8iAJBZoYIiGWRCWbUNW2tsWgI5B15kf4Ue9q7-UEgy2-fXFuzhSafWQvpkvRrdh4lME4hNAPdh9N7JpLbwcFAq-8sqbZROaF-fQABLg3Q5tRLHOXnzidFkiSwbsy8_4hqQmg4qz3pP/s1600/induction-cooker.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmgV8iAJBZoYIiGWRCWbUNW2tsWgI5B15kf4Ue9q7-UEgy2-fXFuzhSafWQvpkvRrdh4lME4hNAPdh9N7JpLbwcFAq-8sqbZROaF-fQABLg3Q5tRLHOXnzidFkiSwbsy8_4hqQmg4qz3pP/s400/induction-cooker.jpg" height="253" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இண்டக்சன் ஸ்டவ்</td></tr>
</tbody></table>
<br />
<br />
<div style="text-align: justify;">
என்னைக் கவர்ந்த மின்சாதனங்களில் இண்டக்சன் ஸ்டவ் உம் ஒன்று. மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு.ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய சாதனம். இதனுடைய சிறப்பையும், பெருமையையும் சொல்லி முடியாது. இதை உபயோகித்த பெண்களுக்குத் தான் தெரியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;">மற்ற நடைமுறையில் உள்ள மின்கம்பிச் சுருள் அடுப்புகளைவிட மின்காந்த அடுப்பு எனப் படும் இண்டக்சன் ஸ்டவ் (85% ) அதிக சக்தி மாற்றம் (The efficiency of energy transfer ) கொண்டது.</span><span style="color: cyan;"> </span>அதாவது நாம் கொடுக்கும் மின்சக்தியில் 85 சதவீதத்தை நமக்கு முழுமையாக பயன் படுத்தக் கூடிய வெப்ப சக்தியாக மாற்றிக் கொடுக்கக் கூடியது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: magenta;">ஆனால் மின்கம்பிச் சுருள் அடுப்புகள் 60 லிருந்து அதிகபட்சமாக 70 சதவீதம் சக்தி மாற்றும் திறமை கொண்டவை. எரிவாயு அடுப்புகளோ அதை விட மிகவும் குறைவு, வெறும் 40% சக்தி மாற்றம் தான் கொடுக்கும்.</span> இவை இரண்டுமே முதலில் பாத்திரத்திற்கும் அடுப்புக்கும் இடையில் உள்ள காற்றை சூடேற்றி, அந்தக் காற்றின் வெப்பத்தின் மூலம் முழுப் பாத்திரத்தையும் சூடேற்ற வேண்டும். பின்னர் பாத்திரத்தின் சூடு உணவை வேகவைக்க வேண்டும். ஆனால் இண்டக்சன் ஸ்டவில் நேரடியாக பாத்திரத்தின் அடிப்பாகம் மட்டும் சூடேற்றப் படுகிறது. கொடுக்கும் சக்தி அப்படியே உபயோகப் படுத்தப் படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இண்டக்சன் அடுப்பு ரூபாய் 1300லிருந்து 5000 ரூபாய்வரை கிடைக்கிறது. இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது. ஒரே ஒரு காயில் மற்றும் சில எளிய பொருட்கள் உள்ளதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் பாகங்களைப் பற்றி அறிந்து கொள்ள கீழே கொடுக்கப் பட்டுள்ள சுட்டியை தட்டிப் பார்க்கலாம் . ஏனென்றால் அடுப்பே 1500 ரூபாய்தான் அது தெரியாமல் சிலர் 2000 ரூபாய் ரிப்பேருக்கு செலவு செய்வார்கள். அட்லீஸ்ட் அதன் பாகங்களை தெரிந்து கொண்டால் கூட போதும்.</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipA55Zaz9gHTz0Yf8Gf1noBmwvYsnw10xeqUksNjH4HPKvTwPa5XGy76hjlMCp2IiBPwAsuD7KTIZvGvMB6CXNsyuLLyHoM3IugU1TLOJu_57DIoR_g7IcxUCkLWLx68Toh_qeRphu5rCa/s1600/DSCN0653.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipA55Zaz9gHTz0Yf8Gf1noBmwvYsnw10xeqUksNjH4HPKvTwPa5XGy76hjlMCp2IiBPwAsuD7KTIZvGvMB6CXNsyuLLyHoM3IugU1TLOJu_57DIoR_g7IcxUCkLWLx68Toh_qeRphu5rCa/s400/DSCN0653.jpg" height="298" width="400" /></a></div>
<br />
மேலும் விவரங்களுக்கு<br />
<a href="http://imajeenyus.com/electronics/20060908_induction_cooker/index.shtml">http://imajeenyus.com/electronics/20060908_induction_cooker/index.shtml</a><br />
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Induction_stove" target="_blank"> http://en.wikipedia.org/wiki/Induction_stove</a><br />
<br />
<div style="text-align: justify;">
மேலும் இந்த தொழில்நுட்பத்தால் என்னென்ன விதமான ஹீட்டிங் முறைகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.ஒரு கம்பிச் சுருளில் மின்சாரம் பாயும் பொழுது அதன் அருகாமையில் ஒரு வித மின்காந்தத் தூண்டல் (Edddy current) ஏற்படுகிறது. அந்தத் தூண்டலுக்கு அருகாமையில் சிக்கும் இரும்பு சம்பந்தப் பட்ட உலோகங்கள், அதற்கு ஒரு வித பயங்கரமான தடையை ஏற்படுத்துவதால் வெப்பமடைகிறது.</div>
<br />
<a href="http://www.ameritherm.com/">http://www.ameritherm.com/</a><br />
<br />
<div style="text-align: justify;">
காலம் கலிகாலம் ஆகிவிட்டது. எல்லாம் தலைகீழாக நடக்கிறது. இந்த அடுப்பில் ஒரு எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. அது என்னவென்றால் " பாத்திரம் அதிக வெப்பமடைந்தால் அதிலிருந்து வெப்பம் அடுப்புக்கு வந்து விடும், ஆகவே அடுப்பு லேசாக சுடலாம்." இப்பொழுது நம்புகிறீர்களா கலி முற்றிற்று என்று. எப்பொழுதும் அடுப்பிலிருந்துதான் வெப்பம் பாத்திரத்துக்குப் போகும் ஆனால் இண்டக்சன் அடுப்பில் மட்டும் பாத்திரத்திலிருந்து வெப்பம் அடுப்புக்கு செல்லுமாம்.</div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNt6vL1c5aXURL5Q8jbghqA6xj9yJ6qmytMec2NkDnKQAg_m-3ijzCnyN8gtN_LFAc5d0XSpqX9OdUTDySd9_riBZ5rCb0Gcxo9qiosSmey2Rg7ruIqKCc_eXxkXRu7W22JpGBTOBdrKsB/s1600/Induction+2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNt6vL1c5aXURL5Q8jbghqA6xj9yJ6qmytMec2NkDnKQAg_m-3ijzCnyN8gtN_LFAc5d0XSpqX9OdUTDySd9_riBZ5rCb0Gcxo9qiosSmey2Rg7ruIqKCc_eXxkXRu7W22JpGBTOBdrKsB/s400/Induction+2.jpg" height="53" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எச்சரிக்கை</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
இண்டெக்சன் அடுப்பு எந்த இடத்திலும் சுடாது.ஆனால் வைக்கும் பொருட்களை சூடேற்றும் திறமை கொண்டது. நெருப்பின் அபாயம் அற்றது. தீச் சுவாலைகள் இல்லாததால் எதிலும் தீப்பற்றாது. மிக விரைவில் சூடேறக் கூடியது. சீரான வெப்பக் கடத்தல் கொண்டது. ஆபத்தில்லாதது. மின் அதிர்ச்சி கொடுக்காது. எளிமையான, அதிநுட்பமான கன்ட்ரோல் கொண்டது.எளிதில் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிலிம்மானது. எடை குறைவானது. பெண்களூக்கேற்ற அடுப்பு இதுதான். ஸ்டவ் வெடிப்புக்கு இனி வழி இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மிகவும் அறிவுள்ளது, சொன்னபடி செய்யக் கூடியது. ஆமாம் பாத்திரத்தை எடுத்து விட்டால் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வைத்து விட்டால் மீண்டும் ஆன் செய்து கொள்ளூம். பாத்திரம் கருக்காது. பாத்திரத்திலிருந்து சிதறி விழும் பொருட்கள் சூடேறாமல் இருப்பதால் அடுப்பை சுத்தம் செய்வது எளிது.குறிப்பிட்ட நேரம் வரை சூடேற்றச் சொல்லி விட்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம்.. நேரம் செட் செய்து விட்டால் தானாகவே அந்த செட் செய்த நேரம் வந்தவுடன் ஆப் ஆகிவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மைக்ரோ வேவ் ஒவன் கூட 65 சதவீத சக்தி மாற்றுத் திறன் கொண்டதுதான். அதிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடேற்ற முடியாது. ஆகவே திறனை மதிப்பிடும் போதும் இண்டக்சன் ஸ்டவ்தான் சிறந்ததாகவும் சிக்கன மானதாகவும் இருக்கிறது. பொதுவாக 1800 வாட்ஸ் மற்றும் 2000 வாட்ஸ் என இரண்டு விதமான வாட்ஸ்களில் கிடைக்கிறது. இங்கே காட்டப் பட்டுள்ள பட்டர் பிளை (ஸ்டாண்டர்டு) 1800 வாட்ஸ் அடுப்பின் இன்றைய (01-05-20012) விலை ரூபாய் 1700 தான்.<span style="color: magenta;"> <span style="color: cyan;">அதாவது சுமார் ஒரு வாட்ஸ் ஒரு ரூபாய்தான்</span></span><span style="color: cyan;">.</span></div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV-PAexO4OGTawTagU4gBDQlllZ0rUhvlKPlL6w8a93ltbrrddu1EjwIiFjFOgntPYhdS2GcMFZqmRIcsQQqt1Ucj2NlByyLP7raZtYKEH39zTxkX5j71C03YU8zSsC9kmAVDPFeqU3IGH/s1600/Induction+stove.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV-PAexO4OGTawTagU4gBDQlllZ0rUhvlKPlL6w8a93ltbrrddu1EjwIiFjFOgntPYhdS2GcMFZqmRIcsQQqt1Ucj2NlByyLP7raZtYKEH39zTxkX5j71C03YU8zSsC9kmAVDPFeqU3IGH/s320/Induction+stove.jpg" height="320" width="213" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பட்டர் பிளை (ஸ்டாண்டர்டு) 1800 வாட்ஸ் </td></tr>
</tbody></table>
<br />
<div style="text-align: justify;">
<span style="color: magenta;"><span style="color: cyan;">இதிலுள்ள ஒரே ஒரு பின்னடைவு இதில் இரும்பு சம்பந்தப் பட்ட (எவர்சில்வர்) பாத்திரங்கள்தான் உபயோகிக்க முடியும். அலுமினியம், ஹிந்தாலியம், தாமிரப் பாத்திரங்கள் சூடேறாது</span>. </span>பாத்திரங்களுக்கான தேவை ஏற்படும் போது அவை வியாபாரத்திற்கு வந்துவிடும். உதாரணமாக ஹிந்தாலியம் குக்கரின் அடிப்பாகம் மட்டும், எவர்சில்வர் தகட்டுடன் ஒட்டப் (Sand-witched) பட்டு இப்பொழுது கிடைக்கிறது.</div>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpGugG4S3lVnRC11dQv09bd7HBPOQOVs2iIWRL4JooB5sAThyOyfOBOGIE2vpWwSXZYr9G00nBHy1YPVCID4pBxkgoXy8K5Bl8DzNksIgflw5sR3f-B-z9Wg3isOzCCD7qLUXYUXGuBd1M/s1600/DSCF3063.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpGugG4S3lVnRC11dQv09bd7HBPOQOVs2iIWRL4JooB5sAThyOyfOBOGIE2vpWwSXZYr9G00nBHy1YPVCID4pBxkgoXy8K5Bl8DzNksIgflw5sR3f-B-z9Wg3isOzCCD7qLUXYUXGuBd1M/s320/DSCF3063.jpg" height="240" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எவர்சில்வர் தகடு ஒட்டப்பட்ட ஹிந்தாலியம் குக்கர்</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
எவர் சில்வர் பாத்திரம் பயன் படுத்தலாம், அடிப்பாகம் கெட்டியாக இருந்தால் நல்லது. அடுப்பின் செராமிக் பிளேட்டோடு சமமாக பொருந்தும் வட்டமான பாத்திரம் தான் சரியான தேர்வாக இருக்கும் (உங்களுக்கு தேவையில்லாத புள்ளிவிவரம்.செராமிக் பிளேட்டில் இருந்து பாத்திரம் 5 எம்எம் வரை கூட விலகி இருக்கலாம்..)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எச்சரிக்கை:</div>
<div style="text-align: justify;">
அடுப்பிற்கும் பாத்திரத்திற்கும் இடையில் எந்த விதமான சிறிதோ, பெரிதோ இரும்பு சம்பந்தப் பட்ட எந்தப் பொருளும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதுதான் முதலில் சூடேறும் பின் அதிலிருந்து தான் பாத்திரத்துக்கு சூடு பரவும் அப்போது சக்தி மாற்றுத் திறன் 85 லிருந்து குறைந்து 5 அல்லது 10 சதவீதமாகி விடும். இடையிலுள்ள இரும்பு பழுத்து விடும். ஆகவே அந்த மாதிரி ஆராய்ச்சியில் இறங்காதீர்கள்.</div>
<div style="color: cyan; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: cyan;">என்னைக் கேட்டால்:</span></div>
<div style="text-align: justify;">
எரிவாயுவை சிலிண்டரில் அடைத்து அதை விநியோகம் செய்வதை
விட அந்த எரிவாயுவை குழாய் மூலம் விநியோகித்து மாவட்ட அளவிலான
தேவைக்கு, மின்சாரம் தயார் செய்யும் நிலையங்களை நிறுவலாம். இந்த
மின்சாரத்தில் இண்டெக்சன் ஸ்டவ்வை உபயோகிக்கலாம். இதனால் வெடிப்பினால் (
Explosion) ஏற்படும் விபத்து மற்றும் பொருட் சேதம் தவிர்க்கப் படலாம்,
மின் அதிர்ச்சி (Electric shock) கொடுக்கும் மின் அடுப்புகளை தவிர்க்கலாம். தீச்சுவாலையற்றதாக (Flame less) இருப்பதால் விபத்து இல்லை விலை மதிப்பற்ற
உயிர்கள் காப்பாற்றப் படுகிறது. , மின் பகிர்மான இழப்பாகிய (Transmission
Loss ) 8,000 கோடி ரூபாய் வருடத்திற்கு மிச்சமாகும், மற்றும் கூடுதலான
சக்தி மாற்றும் திறமை (Energy transfer efficiency. 85% ) கிடைக்கிறது.
ஆகவே இதைப் பற்றிய பரிசார்த்தமான நடைமுறை அறிக்கை (Feasibility report)
தயார் செய்து ஆராயலாம்.</div>
<br />
.<a href="http://chandroosblog.blogspot.ae/2012/07/5.html" target="_blank">...................தொடரும்.</a><br />
<br />
<span style="color: magenta;">நிபா</span>: ஆமா பட்டர் பிளைக்கு ஏதும் காசு வாங்கினாயா? அடுத்து யுபிஎஸ் பற்றித் தானே?<br />
<span style="color: magenta;">நான்: </span>உனக்குத் தெரியாமலா? படுத்தாதய்யா அடுத்து யுபிஎஸ் தான்.ஆனால்..<br /><br />
<a href="http://chandroosblog.blogspot.in/2012/05/1.html">தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.1</a><br />
<a href="http://chandroosblog.blogspot.in/2012/05/2.html">தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.2</a><br />
<a href="http://chandroosblog.blogspot.in/2012/05/3.html" target="_blank">தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3</a><br />
<br />
இரா. சந்திரசேகர்.<br />
பழனி.<br />
<br />
</span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-13084664182618957112012-05-26T17:05:00.000+05:302012-05-29T11:12:35.492+05:30மத்திய அரசின் பொய்யும் புரட்டும்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மத்திய அரசின் பொய்யும் புரட்டும்.<br />
<br />
எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.<br />
<br />
இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும், எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற பூசணிக்காயை எந்த சோற்றுக்குள்ளும் மறைக்க முடியாது.
<span class="fullpost">
<br />
<br />
<a href="http://rsyf.wordpress.com/2012/05/25/petrol-income-2/">http://rsyf.wordpress.com/2012/05/25/petrol-income-2/</a><br />
<br />தினமணியில்கடந்த 2011 அக்டோபர் மாதம் பதிவிடப் பட்டது. அரசின் தந்திரக் கணக்கு First Published : 20 Oct 2011 02:16:41 AM IST<br />
<br />
<a href="http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=494601&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81" target="_blank">அரசின் தந்திரக் கணக்கு</a><br />
<br />இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2010-11ம் ஆண்டுக்கான அறிக்கையில், அந்த நிறுவனத்துக்கு வரிப்பிடித்தங்கள் போக ரூ.7,445 கோடி லாபம் அடைந்திருப்பதைக் காண முடியும்.<br />
<br />அம்பானி குடும்பம் கஷ்டப்பட கூடாதுன்னு நினைக்கும் மத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றி விட்டது. நம்ம மத்திய அரசுக்கு மக்கள் கஷ்டப் படுவதை பற்றி கவலை இல்லை. அம்பானி மல்லையா போன்றவர்கள் கஷ்டப் படக் கூடாதுன்னு அவர்களுக்காகவே ஆட்சி நடத்தும் நம்ம மதிப்புக்குரிய பொருளாதார மேதை மன்மோகன்சிங்கிடமும் அன்னை சோனியாவிடமும் விலையேற்றத்தை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.<br />
<br /><a href="http://kalamarudur.blogspot.in/2012/05/blog-post_25.html">http://kalamarudur.blogspot.in/2012/05/blog-post_25.html</a><br />
<br />இந்த நிறுவனம் அரசுக்கு லாப ஈவுத் தொகையாக மட்டும் ரூ.39,658 கோடியைக் கொடுத்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.<br />
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="fullpost"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIVDiHcNml7gMaBSBOQ8XYHpyiblpKjyiMtFAAgVopra7TNE5BD-PBPvBnHs4IInqMp53jzTrvorJZja1z1zMSvZWbxCQ3mvAr22X3FPiMURu7DX9n1_3DwAZII0JDqJ97t9Pcoh3tkKw6/s1600/%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="227" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIVDiHcNml7gMaBSBOQ8XYHpyiblpKjyiMtFAAgVopra7TNE5BD-PBPvBnHs4IInqMp53jzTrvorJZja1z1zMSvZWbxCQ3mvAr22X3FPiMURu7DX9n1_3DwAZII0JDqJ97t9Pcoh3tkKw6/s320/%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="320" /></a></span></div>
<span class="fullpost">
<br />
<br />தற்பொழுது பெட்ரோல் விலை ஏற்றம் என்பது உலக மகா மொல்லமாரித்தனமாகும். உலகில் பெட்ரோல் விலை தற்பொழுது கடந்த நான்கு மாதங்களில் இருந்ததை விட மிகவும் குறைவாக உள்ளது. மேலும் குறைந்து கொண்டே இருக்கிறது. கீழே கொடுத்துள்ள சுட்டியில் கச்சா எண்ணெயின் விலையை பலவிதமாக அறிந்து கொள்ளலாம். கடந்த 5 வருடத்திற்கு அல்லது கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது கடந்த மூன்று மாதங்களில் ஏற்பட்ட மாற்றம் என அறிந்து கொள்ளலாம்.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-wQeC6mHTnlG4UUTthQlgBHxOxb6e3GR71vlMa8dxDA52yZPVQaqE6c0yFDdWZXuFkaR2MwUMOX8FR1LkvKXTpbd9NM0JQ2wCbjXM2SyFYkqhdl_bxPOiu0GC6qqQO4gArgpjNAg4GakC/s1600/5y_small.gif" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-wQeC6mHTnlG4UUTthQlgBHxOxb6e3GR71vlMa8dxDA52yZPVQaqE6c0yFDdWZXuFkaR2MwUMOX8FR1LkvKXTpbd9NM0JQ2wCbjXM2SyFYkqhdl_bxPOiu0GC6qqQO4gArgpjNAg4GakC/s320/5y_small.gif" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கடந்த ஐந்து வருடங்களுக்கான விலை விவரம்</td></tr>
</tbody></table>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmfgSe_n0tzoN87M1iXGw0x1RCsHUH6M5Zh6Vizl6uOoZFsU8LBNfFzDLirxStGO_dkv6sv3BUXGwH8xbtAzZYO4-DT7WpdnuOWRG0gnCVqvXQVfWpjTW8unh3nd2WMxa5_wovhwRXXQC_/s1600/1q_small.gif" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmfgSe_n0tzoN87M1iXGw0x1RCsHUH6M5Zh6Vizl6uOoZFsU8LBNfFzDLirxStGO_dkv6sv3BUXGwH8xbtAzZYO4-DT7WpdnuOWRG0gnCVqvXQVfWpjTW8unh3nd2WMxa5_wovhwRXXQC_/s320/1q_small.gif" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கடந்த மூன்று மாதங்களுக்கான விலை விவரம்</td></tr>
</tbody></table>
<br /><a href="http://oil-price.net/dashboard.php?lang=en">http://oil-price.net/dashboard.php?lang=en</a><br />
<br /><span style="color: magenta;">இந்த 2008 ஜனவரியில் உலகச் சந்தையில் பேரல் 140 டாலர் விற்றபொழுது கூட இவ்வளவு விலை ஏற வில்லை. ஆனால் தற்பொழுது 90 டாலர்தான் விற்கிறது.</span> இந்த நேரத்தில் ஏற்றுவது ஏன் என்று விளக்கத் தெரியாத பொருளாதார மேதை மன்மோகன் சிங் மத்திய அரசு விலையேற்றத்திற்கு பொறுப்பல்ல என்று கூறுவது முழித்திருக்கும் போது முழியை தோண்டும் கதைதான்.<br />
<br />
அதிலும் மத்திய மந்திரியும், டிவிச் செய்திகளில் உலகச் சந்தையில் விலையேற்றம் என்று கூசாமல் பொய் பேசுகிறார். இதைக் கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த மீடியாக்கள் ஜால்ரா அடிச்சுக்கிட்டு உலகச் சந்தையின் விலையை அறிவிக்காமல் இருப்பது ஏன்?. அவர்களுக்கு தெரியாதா?<br />
<br />இதே நிலைமை நீடித்தால், இந்தியா பொருளாதாரம் சரிவில் சிக்கி, வரலாற்றில் பேசப் படும் அளவிற்கு சீர் கெடப் போகிறது .இன்று கிரீஸூக்கு ஏற்பட்ட நிலை தான் நாளைக்கு நமக்கும்.<br />
<br />
நமது முதல்வர் சொல்வது போல் மக்கள் கலகம் செய்து ஆட்சியை இறக்கவேண்டிய சூழ்நிலை உருவாகப் போகிறது. அதாவது நாட்டில் கலகம் ஏற்படப் போகிறது என்பதை நாசூக்காக சொல்கிறார்.<br />
<br />பெட்ரோல் விலையேற்றம் என்பது ஏதோ ஒரு ரூபாய் அல்லது 2ரூபாய் ஏறுவது இயல்பு ஆனால் தற்பொழுது 7.50 காசு என்பது இமாலய திருட்டுத்தனம் . மக்கள் என்று உணரப் போகிறார்களோ அன்று அரசியல் வாதிகளுக்கு ஆப்பு அடிக்கப் போகிறார்கள்.ரூபாய் மதிப்பு குறைவினால் பயன் அடைவதும் ஸ்விஸ் வங்கியில் டாலரில் டெபாசிட் செய்திருக்கும் அரசியல் வாதிகள்தான்.<br />
<br />
மத்திய அரசின் திருட்டுத்தனத்தை மக்கள்தான் ஒருவருக்கொருவர் சொல்லி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மக்களே நாம் புரட்சி என்று தீவட்டியை தூக்கி அலையக் கூடாது ஏனென்றால் முடியாது. குறைந்த பட்சம் இந்தத் திருட்டுத் தனத்தை நாம் தெரிந்து கொண்டோம் என்ற உண்மையாவது, உணர வைப்போம். நீங்கள் எதை எழுதினாலும், பேசினாலும் இடையில் ஒரு வார்த்தை இந்த ஆதங்கத்தைப் பற்றி முணுமுணுக்காவது செய்யுங்கள். செய்தீ பரவட்டும்.<br />
<br />
இரா.சந்திர சேகர்<br />பழனி.<br />
</span></div>Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-75067262734346415452012-05-21T13:22:00.004+05:302014-12-12T20:07:41.082+05:30தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3 </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
காற்றாலைகளினால் கிடைக்கும் மின்சாரம் 6000 மெகா.வாட் . அதுவும் ஆறுமாதத்திற்குத் தான் முழுவீச்சில் செயல்படும் .அவை அணைத்தும் வணிகமுறையில் தனியாரால் நிறுவப்பட்டது. அதன் விலையும் அதிகமாக வரலாம். தமிழக அரசு அவர்களிடமும் கடன் வாங்கி முறையாகப் பணம் செலுத்தாததால் அவர்களும் நிறுத்தி வைத்துள்ளனர். இன்றைய நிலையில் அவர்களிடம் எற்பட்ட 10,000 கோடி கடன் தொல்லையினால், தமிழக அரசின் வாங்கும் அளவு, 150மெகா வாட் ஆக குறைந்து விட்டது. </div>
<span class="fullpost"><div style="text-align: justify;">
<br /></div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnK_rmg_RN-LrJU7V4SRsyu1skQOUBgLiKWUbP7Pu7aIVOXdRVgpknfdoZawQdin5XqUXT20TCBNPU0D8d4x59ePQ0WNo1o23jhBSc57QXMiGv7bv2ysVyicmiIOIz8KGtak5jPZyPUEkp/s1600/wind+mill.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnK_rmg_RN-LrJU7V4SRsyu1skQOUBgLiKWUbP7Pu7aIVOXdRVgpknfdoZawQdin5XqUXT20TCBNPU0D8d4x59ePQ0WNo1o23jhBSc57QXMiGv7bv2ysVyicmiIOIz8KGtak5jPZyPUEkp/s400/wind+mill.jpg" height="212" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">காற்றாலை மின்சாரம்</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே இன்றைய நிலைமையில் தினமும் 50 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறது. இதுவே வருடத்திற்கு 15,000 கோடி கடனாகி விடும். ஆண்டவன் கூட காப்பாத்த முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த லட்சணத்தில் தற்போதைய முதல்வர் மின்விசிறி (60 watts), கிரைண்டர் ( 450 watts), மிக்ஸி (750watts) என்று, அதற்கான மின் ஆதாரம் இல்லாமல் முட்டாள் தனமாக வழங்குகிறார். நன்றாகப் படித்த சமூக அக்கறையுள்ளவன் (என்னைப் போல் ஒருவன்) முதல்வரானால் இந்தத் தவறுகள் நடக்காது. (ஆமாம் கல்யாணம் ஆகி 30 வருஷமாச்சு ஒரு வீட்டக் கட்ட முடியலை ஆட்சியைப் பிடிக்கப் போறாராம், இது பேக்கிரவுண்ட் நாய்ஸ் கண்டுக்காதீங்க)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjfyOqKPobWsDmJTrztHUsw2ioSoD_vPChv-ROac7RicGSccYViO2RQn1MbR7DX524xq7IXrTde9cqBrbbE3MD3OgEi4ZDqZykwnMCUoJxpP3gUshzc_iwGKUCP2wnHngYjDjkIXRZuKGp/s1600/koodankulam.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjfyOqKPobWsDmJTrztHUsw2ioSoD_vPChv-ROac7RicGSccYViO2RQn1MbR7DX524xq7IXrTde9cqBrbbE3MD3OgEi4ZDqZykwnMCUoJxpP3gUshzc_iwGKUCP2wnHngYjDjkIXRZuKGp/s400/koodankulam.jpg" height="243" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"> கூடங்குளம்.</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கூடங்குளம்:</div>
<div style="text-align: justify;">
தற்போதுள்ள நிலையில் கூடங்குளத்தின் மொத்தமுள்ள இரண்டு உலைகளிருந்து பெறப்போகும் 2000 மெகவாட் மின்சாரத்தில்,</div>
<div style="text-align: justify;">
தமிழ்நாடு .................925 மெ.வாட்</div>
<div style="text-align: justify;">
கர்நாடகம்.............. ..442</div>
<div style="text-align: justify;">
கேரளம் ............... 266</div>
<div style="text-align: justify;">
பாண்டிச்சேரி ........ ...67</div>
<div style="text-align: justify;">
கையிருப்பு........... ...300</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனப் பிரித்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது .உம்மன்சாண்டி(கேரளா) இதிலயேயும் கட்டையைக் கொடுத்து 500 மெ.வாட் கேட்கிறாராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எண் மின் திட்டம் மதிப்பீடு மெகா.வாட் </div>
<div style="text-align: justify;">
கோடியில்</div>
<div style="text-align: justify;">
1 வடசென்னை (நிலை 3) 4800 800</div>
<div style="text-align: justify;">
2 உடன்குடி 2 யூனிட்கள் 9083 1600</div>
<div style="text-align: justify;">
3 செய்யூர் (மத்திய அரசு) 18000 1600 (TN share)</div>
<div style="text-align: justify;">
4 உப்பூர் 9600 1600</div>
<div style="text-align: justify;">
5 உடன் குடி விரிவாக்கம் 4800 800</div>
<div style="text-align: justify;">
6 எண்ணூர்(மாற்று) 3600 650 </div>
<div style="text-align: justify;">
7 தூத்துக்குடி (நிலை-4 ) 4800 800</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
மொத்தம் 50683 7850</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிட்டத்தட்ட 50,000 கோடி செலவில் 8000 மெகாவாட் தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதிலிருந்து, தெரிவது என்னவென்றால் ஒரு மெகாவாட் தயாரிக்க சுமார் ஆறு கோடி ரூபாய் முதலீடு தேவைப் படும் எனத் தெரிகிறது . தயாரிப்புச் செலவு ,ஒரு யூனிட்டுக்கு இரண்டு ருபாயிலிருந்து மூன்று ரூபாய்தான்
.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBXqT431EaOBv8ITRcPkZOIgwBfJR1zMtGWse096iEvQRVG5oMpjQjhvubmlxC-uU-1xG3gOPa9vP5R9jKZdGU6yOSDKNixfaTZBH_zFljRHJT70rSmsUJi5x3IkuF57NQXTx5LCVRGlWn/s1600/car_photo_217182_7.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBXqT431EaOBv8ITRcPkZOIgwBfJR1zMtGWse096iEvQRVG5oMpjQjhvubmlxC-uU-1xG3gOPa9vP5R9jKZdGU6yOSDKNixfaTZBH_zFljRHJT70rSmsUJi5x3IkuF57NQXTx5LCVRGlWn/s320/car_photo_217182_7.jpg" height="213" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">போர்ட்டபிள் ஜென்செட்</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
ஆனால் டொமஸ்டிக் போர்ட்டபிள் ஜென்செட் 1 கிலோவாட் திறனுள்ளது, சுமார் இருபதாயிரத்துக்குதான் விற்கப் படுகிறது,ஆனால் ஒரு யூனிட் மின்சாரத்தின் தயாரிப்பு செலவு 30 ருபாயிலிருந்து 60 ரூபாய் . அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கல்லு மூன்று வேண்டும். டிஜி எனப்படும் டீசல் ஜெனரேட்டர்களில் தயாரிப்புச் செலவு வேண்டுமானால் குறைவாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ஏற்கனவே 72,000 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் அந்த முதலீடு 1,20,000 கோடியாகிவிடும். எல்லாம் திட்டமிட்ட படி நடந்தால் இன்னும் ஆறு மாதங்களில் 2000 மெகாவாட் கிடைக்கலாம். இன்னும் 5 வருடங்களில் தன்னிறைவை எட்டும் என நம்பலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: lime;"><div style="text-align: justify;">
<span style="color: lime;">இதில் கவனிக்கப் பட வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம் மின் பகிர்மான இழப்பில்,கடந்த ஆண்டு மட்டும் 1,349.8 கோடி யூனிட் மின்சாரம் வீணாகியுள்ளது</span>. கிட்டதட்ட மக்கள் பயன்படுத்தும் (1,634 கோடி யூனிட் மின்சாரம்) அளவிற்கு இணையான மின்சாரம் வீணாகுகிறது. இதனால் சென்ற வருடம் 7,167 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை, அரசின் அறிக்கை வெளிப் படுத்தியுள்ளது. அதாவது <span style="color: cyan;">தயாராகும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு விற்கப் படுகிறது, மூன்றில் ஒரு பங்கு பாகம் வீணாகுகிறது, மூன்றில் ஒரு பங்கு இலவசமாக வழங்கப் படுகிறது.</span></div>
</span>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் சுமார் இருபது லட்சம் விவசாய இணைப்புகள் உள்ளதாக அறிக்கையில் உள்ளது. அத்தனை இணைப்புகளும் 3 ஹெச் பி மோட்டார் (2000 வாட்ஸ்) என்று வைத்துக் கொள்வோம், ஒரு நாளைக்கு 5 மணி நேரம் ஓடுவதாக கணக்கிட்டாலும் வருடம் முழுவதும் ஓடினால் கூட 720 கோடி யூனிட்டுகள் தான் செலவாகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
20,00,000 இணைப்புகள் X 5 மணி நேரம் ஒரு நாளைக்கு X 30 நாட்கள் X 12 மாதங்கள் X 2 யூனிட்டுகள் = 720 கோடி யூனிட்டுகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் அறிக்கையில் 1220 கோடி யூனிட்டுகள் செலவாகியுள்ளதாக கூறப் படுகிறது.<u>கணக்கு தெரியாதவன் வீட்டில் நித்தம் சண்டை</u> என்ற கதைதான்.ஒரு இணைப்புக்கு ஒரு மீட்டர் என்றில்லாவிட்டாலும் ஒரு ஊருக்கு ஒரு மீட்டராவது வைக்க வேண்டாமா?.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் :</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் இதையெல்லாம் இங்கு எடுத்துக் கூறுவதன் காரணம், தமிழக மின்வெட்டால் ஷாக் அடித்தது போல் துவளும் நமது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வரப் பெற்றால் நல்லது நடக்கும் என்ற பேராசை தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தனை (8000 ஆயிரம் கோடி)ஆயிரம் கோடிகள் அனாமத்தாக போகும் போது, மின்வாரியத்திற்கும் மட்டுமான தனியான ஆராய்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஏன் சில கோடிகள் செலவழிக்கக் கூடாது. ஒரு 500 கோடியில் இதற்காக, மின்வாரியத்திற்கு தேவையான உயர் நிலை ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் நிறுவி, திறமைக்கு முதலிடம் என்ற வகையில், அர்ப்பணிப்புடன் கூடிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, திறமையான பொறியாளர்களை உருவாக்கலாமே. வெளியேறும் பொறியாளர்கள் கண்டிப்பாக மூன்று வருடம் ராணுவ சேவை முடித்த பின்பே பணி அமர்த்தப் பட வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புளூம்பாக்ஸ் (Bloom Box) போன்றதொரு புதிய கண்டு பிடிப்புக்களுக்கு அடிக்கல் நாட்டலாம். மின் உற்பத்திக்கும் , மின் சேமிப்பிற்கும், மின் சிக்கனத்துக்கும், ஆன புதிய கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புளூம்பாக்ஸ் (Bloom Box) :<a href="http://en.wikipedia.org/wiki/Bloom_Energy_Server" target="_blank"> http://en.wikipedia.org/wiki/Bloom_Energy_Server</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<embed allowfullscreen="true" allowscriptaccess="always" background="#333333" flashvars="si=254&&contentValue=50092308&shareUrl=http://www.cbsnews.com/video/watch/?id=6816773n" height="279" salign="lt" scale="noscale" src="http://cnettv.cnet.com/av/video/cbsnews/atlantis2/cbsnews_player_embed.swf" type="application/x-shockwave-flash" width="425"></embed>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் சென்றால், அவனுக்கு தேவைப் படும் ஆக்ஸிசனை, மின்சக்தியினால் தயாரிக்க உருவாக்கப் பட்ட தொழில் நுட்பத்தை நாசா ஓரங்கட்டி விட்டது. அதை நமது நண்பர் ஸ்ரீதர் உல்டாவாக செய்து ஆக்ஸிஸனை கொடுத்து அதிலிருந்து மின்சக்தியை தயாரிக்க பயன்படுத்தி விட்டார். இந்த விடியோவில் ஸ்ரீதர் கையில் வைத்திருக்கும் புளூம் பாக்ஸ் ஒரு அமெரிக்க வீடு அல்லது இரண்டு ஐரோப்பிய வீடு அல்லது , நான்கு ஆசிய வீட்டிற்கு மின்சக்தி அளிக்கக் கூடியதாம். ஆயிரக்கணக்கான சோலார் பேனல் வைத்து தயாரிக்க கூடிய மின்சக்தியை ஐந்தே ஐந்து புளூம் பாக்ஸ் மூலம் தயாரிப்பதையும் பார்த்திருப்பீர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒன்றுமில்லைங்க கடற்கரையில் மித மிஞ்சி கிடக்கும் மணலைத்தான் பயன்படுத்தி கண்ணாடித் தகடு மாதிரி ஒரு சின்னத் தகடை வச்சு அதில் ஒருபக்கம் பச்சை மை மறுபக்கம் கறுப்பு மை தடவி ஏதோ மேஜிக் பன்றார். அது ஒரு லைட் எரிக்க தேவையான மின்சக்தியை கொடுக்குதாம். அந்த மாதிரி கிட்டத்தட்ட 64 அடுக்குகளை பயன்படுத்தி ஒரு வீட்டுக்கு தேவையான மின்சக்தியை தயாரிக்கலாமாம்.சொல்வதற்கு எளிதாகத்தான் இருக்கிறது. உள்ளே என்ன ரகசியமோ?. அவர் கடந்த 2010 பிப்ரவரியில், பத்து வருடமாக பாதுகாத்த ரகசியத்தை முதன் முதலாக மீடியாவில் பகிர்ந்து கொண்டார்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்ரீதருக்கு, ஒரு தனிமனிதர் ( <a href="http://en.wikipedia.org/wiki/John_Doerr" title="John Doerr">John Doerr</a>) 2000 கோடி ரூபாய் கொடுத்து அவரது கண்டுபிடிப்பை பிஸினஸாக மாற்றும் போது 1,20,000 கோடி செலவழிக்கும் தமிழ் நாடு ஏன் அவரிடம் டீல் பேசக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாம் உருவாக்கும் பல்கலை கழகத்தின் மூலமாக, அமெரிக்காவில் வாழும் ஸ்ரீதருக்கு வாய்த்தது மற்றொருவருக்கு வாய்க்காதா?. அல்லது அதையும் விட சிறந்ததாக கிடைக்காதா?. ஒரு பத்தாண்டுகளில் <span style="color: cyan;">காற்றாலை மின்சக்தி , மலைகளில் மழை நீரைச் சேமித்து அதனால் நீர் மின்சக்தி, சூரிய சக்தி யிலிருந்து மின்சக்தி, கடலலையில் இருந்து மின்சக்தி, இரசாயன மின்சக்தி, என ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கலாமே.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உற்பத்தியை விட சேமிப்பு என்பதுதான் மிகவும் முக்கியமானது. மின் திருட்டைக் குறைக்க அடியாத மாடு படியாது என்பதற்கிணங்க தண்டனையை அதிகப் படுத்தலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரசியல்வாதிகளும், அரசும் ஆடம்பரங்களில் செலவிடும் மின்சாரத்தை மிச்சப் படுத்தலாம். மக்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்களூக்கு அடிக்கடி மின் சிக்கனத்தைப் பற்றிய அறிவுரை கொடுக்க வேண்டும். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலவசமாக எதையும் கொடுக்கக் கூடாது. அதையும் மீறிக் கொடுப்பேன் என்று முட்டாள்தனமாக கொடுத்தால், மின்சாதனங்களைக் கொடுக்க கூடாது. அதையும் மீறி படு முட்டாள்தனமாகக் கொடுத்தே தீர்வேன் என்று திமிரோடு கொடுத்தால் மின்காந்த அடுப்பு, சிறுகுழல் விளக்கு, எக்ஸாஸ்ட் ஃபேன் இவற்றைக் கொடுக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின்சாதனங்களைப் பற்றிய அறிவை பள்ளிப் பாடங்களிலிருந்து தொடங்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதைஎதையோ படிக்கிறார்கள் ஆனால் வீட்டு உபயோக சாதனங்களைப் பற்றிய அறிவே இல்லாமல் இருக்கிறார்கள். வீட்டு உபயோக சாதனங்களைப் பற்றி, படிப்பு முடிவடையும் காலத்திலாவது பாடம் நடத்தலாம். இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது வாடிக்கையாளர் ஒரு மின்வாரிய பொறியாளர். அவரது மனைவியோ அறிவியல் பட்டதாரி, அவர் ஒரு நாள் மிக்ஸி வேலை செய்யவில்லை என கணவரிடம் சரி செய்து கொண்டுவரும்படி எடுத்துக் கொடுத்து விட்டார் அவர் எனது அலுவலகத்துக்கு (ஸ்டுடியோ) அருகில் இருக்கும் மெக்கானிக்கிடம் கொடுக்க வந்தவர் ,மெக்கானிக் இல்லை என்பதால் என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றார். அடுத்து இரண்டு நாட்கள் எனக்கு வேலை. அதற்கடுத்து இரண்டு நாட்கள் அவர் வரவில்லை .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐந்தாவது நாள் இருவரும் சந்தித்தோம், "சார் வீட்டில் பெரிய கலவரமே நிகழ்ந்து விட்டது. இன்றைக்கு ஒன்று, புது மிக்ஸி வாங்கிப் போக வேண்டும் அல்லது பழைய மிக்ஸியை சரி செய்து கொண்டு செல்லவேண்டும் .மெக்கானிக் வேறு இல்லை என்ன செய்யலாம்" என்றார்.என்ன பிரச்னை என்று நாமே பார்த்து விடலாமா என்றேன் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரும்பு பிடிச்ச கையும் சிரங்கு வந்த கையும் சும்மா இருக்காது என்பார்கள், அது போல் வீட்டில் ஏதாவது ரிப்பேர் என்றால் எனக்கு கழட்டிப் பார்த்து, காரணத்தை அறிந்து கொண்டு, மூட்டை கட்டி ஓரமாக வைக்கா விட்டால் எனக்கு தூக்கம் வராது. அதிலும் வெறும் வாயை மெல்லுகிறவனுக்கு அவல் கிடைச்ச மாதிரி மிக்ஸி கிடைத்தால் விடுவேனா?.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<span class="fullpost"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHa9gs5vfQ3BD_yN9Mz3IkmclEWXaj1BGh0XGV6xOhhrrU_wkTE4sdJiHA2wzq-Gz50MWX1wuBtDvj0c640e58NY0PGn-jjnJqfpzeloi3im5lw0aW0-lCRh6Ps2Mjb1J2XnlroK208036/s1600/blueleafeplatinumBig.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHa9gs5vfQ3BD_yN9Mz3IkmclEWXaj1BGh0XGV6xOhhrrU_wkTE4sdJiHA2wzq-Gz50MWX1wuBtDvj0c640e58NY0PGn-jjnJqfpzeloi3im5lw0aW0-lCRh6Ps2Mjb1J2XnlroK208036/s320/blueleafeplatinumBig.jpg" height="272" width="320" /></a></span></div>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<span class="fullpost"><div style="text-align: justify;">
மிக்ஸியை எடுத்து மின் இணைப்பை கொடுத்தேன். ஆகா டெட் ஃபால்ட்!!!.. உடனே மிக்ஸியை திருப்பி அடியில் பார்த்தேன். பார்த்தவுடன் புரிந்தது,. ஓவர்லோட் பட்டனை ரீசெட் செய்துவிட்டு மீண்டும் இணப்புக் கொடுத்து ஆன் செய்த உடன் வேலை செய்தது. என்ன சார் உங்கள் கை பட்டவுடன் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்றார் அசடு வழிய!!!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpNitEusnB3Wp9AJdNVRqMwp_NvC_GFcjvKSh0ohVWuTgjy62rS5DXHZTwpHqOEdBe5XgPjCEzULVaN2eR_qN9B2tE4KwHKcq_sNBaJo_o4nNumNdvPsTXGZPtFisApvhB5Aqjikj3JXix/s1600/mixie+overload+protecto4.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpNitEusnB3Wp9AJdNVRqMwp_NvC_GFcjvKSh0ohVWuTgjy62rS5DXHZTwpHqOEdBe5XgPjCEzULVaN2eR_qN9B2tE4KwHKcq_sNBaJo_o4nNumNdvPsTXGZPtFisApvhB5Aqjikj3JXix/s640/mixie+overload+protecto4.jpg" height="160" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">1.ஓவர் லோட் புரடக்சன் ஸ்விட்ச் அல்லது ரீசெட் ஸ்விட்ச் 2.சாதாரண நிலை,3.ஒவர் லோட் நிலைமை<br />
<br /></td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
மிக்ஸி, ஒரு அதிக கரண்ட் இழுக்கும் குறுகிய கால பயன்பாட்டிற்கு உண்டான சாதனம். அது அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்கு மேல் ஓட்டக்கூடாது. ஆகவே மிக்ஸியின் அடியில் ஓவர்லோட் புரடக்சன் ஸ்விட்ச் ஒன்று இருக்கும். மிக்ஸியின் லோடு அதிகமாகி அதன் காயில் அதிக மின்சாரத்தை இழுத்தால் காயில் வெப்பமாகி கருகி விடாமல் தடுக்க ஒரு ஸ்விட்சு உள்ளது. இதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள், அறிந்து ஞாபகத்தில் வைத்து உபயோகித்து இருப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறி. அதை அறியாமல் காயில் போச்சு என்று மிக்ஸியை மாற்றிய படிப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ட்யூப் லைட்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ5IJmXw4IZfn7ULCzKeXtAErtfVNsVQZd-HuquTnjqyAmVQhWnxL37JKG_iwO9wPX1DOzObqvvTUFgb8B5iezx-hEWhKWgWEkJgyBBtpT9xAjB2hjwuhed9egXEB43b7UuNDWakY5eIKv/s1600/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86+s.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ5IJmXw4IZfn7ULCzKeXtAErtfVNsVQZd-HuquTnjqyAmVQhWnxL37JKG_iwO9wPX1DOzObqvvTUFgb8B5iezx-hEWhKWgWEkJgyBBtpT9xAjB2hjwuhed9egXEB43b7UuNDWakY5eIKv/s1600/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86+s.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ட்யூப் லைட்</td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
"நண்பன்" பாணியில் எனக்கு தெரிந்த சில பழைய, புதிய பொறியியல் பட்டதாரிகளை ட்யுப் லைட் எவ்வாறு வேலை செய்கிறது என்று கலாய்த்த போது மேலோட்டமாகச் சொல்லி சொதப்பினார்கள். அதற்கான வயரிங் எப்படி என்றவுடன் பலர் காணாமல் போய்விட்டார்கள்.</div>
<span class="fullpost">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2_15ruxGN9mUbCbN-rygZhieVnOTh8oAGuCt7_ocaWjZiMmXFxvdpiZXipYhv4o0ies0AysNkiCnHrUJv5kyt6Pv3wjf1z9jjBSNsWhMicQ0HGqrEbBrqHvhV67S46EmakBPZVrCsmJdC/s1600/nanban-movie-latest-photos-02%5B5%5D.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2_15ruxGN9mUbCbN-rygZhieVnOTh8oAGuCt7_ocaWjZiMmXFxvdpiZXipYhv4o0ies0AysNkiCnHrUJv5kyt6Pv3wjf1z9jjBSNsWhMicQ0HGqrEbBrqHvhV67S46EmakBPZVrCsmJdC/s320/nanban-movie-latest-photos-02%5B5%5D.jpg" height="213" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">கலாய்க்கிறது யார்?</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
உண்மையில் ட்யுப் லைட் பல உன்னதமான டெக்னாலஜிகளின் கலவை என்றுதான் கூறவேண்டும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்கப் பட்டது இன்றும் நீக்கமற எல்லா வீடுகளிலும் பயன் பட்டுக் கொண்டிருப்பது, விரைவில் விடுதலை பெறப் போகிறது. அதைப் பற்றியும் அறிந்து கொள்வோம். ஏனென்றால் தமிழ்நாட்டில் நிறையப் பேர் அதைத்தான் சாப்பிடுறானுகளாம்.
ஏதோ சுருக்கமாக எனக்குத் தெரிந்த வகையில் சொல்லுகிறேன். நீங்கள் டெவலப் பண்ணிக் கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMxONSfiA0WNqcaH4VxP7H2ts_aNOGn3iyqxw5dIHsHD3vCHa5clKFZe3oPIip8SZyl7zzvzSn2DCP1jXqifE-YuJvEBpF-KtusXZl0zqoCfM9Eubrm3zHif7owdphce4bHiopHyTEn0EA/s1600/Tube+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMxONSfiA0WNqcaH4VxP7H2ts_aNOGn3iyqxw5dIHsHD3vCHa5clKFZe3oPIip8SZyl7zzvzSn2DCP1jXqifE-YuJvEBpF-KtusXZl0zqoCfM9Eubrm3zHif7owdphce4bHiopHyTEn0EA/s640/Tube+1.jpg" height="384" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
படம் 1</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை ஆன் செய்த உடன் சோக் (1) வழியாக மின்சாரம் சென்று பின் முதல் டங்க்ஸ்டன் சுருள் (2) வழியே சென்று, ஸ்டார்ட்ர் (3) வழியாகச் சென்று இரண்டாவது டங்க்ஸ்டன் சுருள் (4) வழியே சென்று, மின் சுற்று பூர்த்தியாகிறது. இதிலுள்ள ஸ்டார்டரும் சாதாரணமானதல்ல அதுவும் ஒரு சிறந்த கண்டு பிடிப்புதான். இதன் விலையோ பத்து ரூபாய்தான், இதுக்குள்ளேயும் பெரிய டெக்னாலஜி இருக்குது, அதற்கே ஒருதனி பதிவு போடனும். ஆதலால் காலம் கருதி, ஆரம்பித்த மேட்டரை சுருக்கமாக சொல்லி விடுகிறேன். மின் சுற்று பூர்த்தி அடையும் போது ஸ்டார்டர் தன்னுடைய இயல்பில் ஒரு செகண்டுக்கு சிலமுறை தொடர்பை துண்டிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwIj1iQpZ7ty8DdQmQObaO0IHcJfMH3p08qxLdMtti9ChP2Cxw_DKemMiFHd0B53RV5HRYX113n45Mteh42iOTOPd576mLzpUuShH_Ica_QFGLLGaSDPgLMJCIBdkAvf9gCrgViYquV9h7/s1600/Tube+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwIj1iQpZ7ty8DdQmQObaO0IHcJfMH3p08qxLdMtti9ChP2Cxw_DKemMiFHd0B53RV5HRYX113n45Mteh42iOTOPd576mLzpUuShH_Ica_QFGLLGaSDPgLMJCIBdkAvf9gCrgViYquV9h7/s640/Tube+2.jpg" height="384" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
படம்2</div>
<div style="text-align: justify;">
இந்த மின் தொடர்பு துண்டிப்பபானது (Pulses), சோக்கில் (ஆட்டோ ட்ரான்ஸ்பார்மர்) தூண்டப்பட்டு ஒரு அதிக மின் அழுத்த ஓல்ட்டை உருவாக்குகிறது. அதிக மின்அழுத்தம் ஏற்பட்டு விட்டதால், ட்யூபில் உள்ள குறைந்த அழுத்தமுள்ள வாயு, மின்னூட்டம் பெற்று ஒரு கடத்தியாக செயல்படுகிறது. அந்தக் கடத்தியின் மூலம் வெப்பமடைந்த முதல் டங்க்ஸ்டன் சுருள் (2) லிருந்து வெப்பமடைந்த இரண்டாவது டங்க்ஸ்டன் சுருளு( 4)க்கு நேரடியாக குறுக்கு வழியில் மின்சாரம் தாவி, ஸ்டார்டரை மின்சுற்றிலிருந்து ஓரங்கட்டி, ஏற்றிவிட்ட ஏணியை மறந்த கதையாக விலக்கி விடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின்னூட்டம் பெற்ற வாயுவின் மூலம் மின்சக்தியின் ஏற்றம், மற்றும் இறக்கம் நடைபெறும் போது வெளியிடப் படும் புற ஊதாக் கதிர்கள், ட்யூபின் உட்புறத்தில் தடவப் பட்ட இரசாயண பூச்சின் மூலம் கண்ணுக்கு புலப்படும் கதிர் வீச்சாக மாற்றி ஒளிரவைக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ட்யுப் லைட். என்னவோ 40வாட்ஸ் என குறிப்பிட பட்டிருக்கும். ஆனால் அதனுடைய சோக் எப்படியும் 10 லிருந்து 20 வாட்ஸ் எடுத்துக் கொள்ளும் எனவே ட்யுப் லைட்டை மொத்தமாக 60 வாட்ஸ் எனக் கணக்கிட்டு உபயோகியுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எலக்ட்ரானிக் சோக்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkjGu5FTiv57gSBDs9WXD7XRRaMlbXzYKlu2hrDmcWdm6Fu1rlfrdO11yXeXfZM-lI-RGcVlZGUZuu0IMbobkOOj1nazAglNwklysQHMjKLo2xrL0UXJwFk1Gn7AHw_kybEL95cMOftAbP/s1600/choke.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkjGu5FTiv57gSBDs9WXD7XRRaMlbXzYKlu2hrDmcWdm6Fu1rlfrdO11yXeXfZM-lI-RGcVlZGUZuu0IMbobkOOj1nazAglNwklysQHMjKLo2xrL0UXJwFk1Gn7AHw_kybEL95cMOftAbP/s320/choke.jpg" height="120" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சோக், ஸ்டார்டர்</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
இதிலுள்ள சோக், ஸ்டார்டர் இவைகளை இணைத்து அவைகளின் வேலையை ஒரு எளிய எலக்ட்ரானிக் முறையில் செய்யவைத்து எலக்ட்ரானிக் சோக் என்று விற்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNYSBvnFruouQLtYsXefWj_CTabG-9qO0LRWzWTo-GPfPMpUik35i9leaAAxz4qUz2blTpqrBcCUPQmidJVj178XGYB4xu2uXvHGFk7pJ5bji1B3stuwSAfv_SOnmZZ-WVUK72rWhz67kg/s1600/300px-Elektronstarterp.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNYSBvnFruouQLtYsXefWj_CTabG-9qO0LRWzWTo-GPfPMpUik35i9leaAAxz4qUz2blTpqrBcCUPQmidJVj178XGYB4xu2uXvHGFk7pJ5bji1B3stuwSAfv_SOnmZZ-WVUK72rWhz67kg/s1600/300px-Elektronstarterp.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">எலக்ட்ரானிக் சோக்</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் உபயோகத்தால் சிறிய அளவிலான, குறைந்த மின்செலவில் நிறைய ஒளிதரக் கூடிய CFL ட்யூப்கள் 10 வாட்டிலிருந்து கிடைக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjohvfeOzw27EiZWJzMFkAgQEe80MXisS_9zYYk-W5r4jCEw3qDX_TWbJ6E09-xAE28TkwA7V92aTNucNwckmcI0ibBwKnYhSb5PUnBK9ge0Z5mjY6PuyObz-oLaVHYOXf12-g1hebNQ_fZ/s1600/220px-Compact-Fluorescent-Bulb.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjohvfeOzw27EiZWJzMFkAgQEe80MXisS_9zYYk-W5r4jCEw3qDX_TWbJ6E09-xAE28TkwA7V92aTNucNwckmcI0ibBwKnYhSb5PUnBK9ge0Z5mjY6PuyObz-oLaVHYOXf12-g1hebNQ_fZ/s1600/220px-Compact-Fluorescent-Bulb.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">CFL ட்யூப்கள்</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு ட்யுப் லைட் மாட்டுவதற்கு 40,000 ரூபாயாம்!!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதென்ன கொடுமை முருகேசா? (சரவணனுக்கு ஈக்குவலண்ட்). வீட்டில் எது ரிப்பேர் ஆனாலும் தானே பார்த்துக் கொள்வது என்ற மெண்டாலிட்டி சிலருக்கு இருக்கும். நானெல்லாம் இப்ப திருந்திட்டேங்க. இதைப் போய் "நண்பன்" பாணி என்று சொல்லி நக்கலடிச்சீங்க ,பிச்சுப் புடுவேன். இப்படித்தான் ஒருத்தர் ட்யூப் லைட்டை தானே மாற்றுகிறேன் பேர் வழி என்று ஸ்டூலுக்கு கல்லு அண்டைக் கொடுத்து ஏறி மாட்டி விட்டு திரும்பும் போது தடுமாறி கீழே விழுந்து ஆஸ்பத்திரிக்கு போய் காலை 40,000 ரூபாய் கொடுத்து சரி பண்ணிட்டு வந்தாராம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின்காந்த அடுப்பு: Indution Stove, Indution cooktop</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னைக் கவர்ந்த மின்சாதனங்களில் இதுவும் ஒன்று. மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பு.ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய சாதனம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனுடைய சிறப்பையும், பெருமையையும் எழுத தனியாக ஒரு பதிவிட வேண்டும். அப்படியா? . அப்ப அடுத்த பதிவு இன்டெக்சன் ஸ்டவ் தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.ae/2012/05/4.html" target="_blank">....................தொடரும்.</a></div>
</span><br />
<div>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
</div>
<div>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<span class="fullpost"><div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.in/2012/05/1.html">தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.1</a></div>
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.in/2012/05/2.html">தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.2</a></div>
<div style="text-align: justify;">
இரா. சந்திரசேகர்.</div>
<div style="text-align: justify;">
பழனி.</div>
</span></div>
</div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-86863505158405780412012-05-15T21:01:00.000+05:302014-12-12T19:49:04.332+05:30தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.in/2012/05/1.html" target="_blank">முந்தைய பாகம்</a> </div>
<br />
<div style="text-align: justify;">
இலவச மின்சாரம்தான் பெரிய பிரச்னையா? அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன் என்பதற்கிணங்க அரசாங்கம் அளந்து கொடுத்திருந்தா இந்த வம்பு வந்திருக்காது .<b style="color: lime;">1994-95 இல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி (லாபம்) ரூ. 347 கோடி. </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2007-08 ஆம் ஆண்டில் இது 3512 கோடி ரூபாய் பற்றாக்குறையாக மாறியது எப்படி.. 1994 இலும் சரி, 2008 இலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுத்தான் வருகிறது. நட்டத்திற்கு காரணம் <span style="color: yellow;">மின்சார ஒழுங்கு முறை ஆணையமும், தீர்ப்பாயமும் தான்.</span> நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்.</div>
<span class="fullpost">
</span>
<div style="text-align: justify;">
<span class="fullpost"><br /></span></div>
<span class="fullpost">
<div style="text-align: justify;">
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார் மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பு. கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை மாநில அரசிடமிருந்து பிடுங்கி சுய அதிகாரம் பெற்ற அமைப்பான இதனிடம் வழங்கப் பட்டு விட்டன. இதற்கான சட்டம் 1998 இலேயே இயற்றப் பட்டு விட்டது. இதனால் மாநில அரசின் நிலை கொதிக்கும் சட்டியிலிருந்து எரியும் கொள்ளிக்குள் விழுந்த கதையாகி விட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின் சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ.2.14 காசுகள் என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். <span style="color: cyan;">தமிழக மின் வாரியத்தின் 56,000 கோடி ரூபாய் கடனும், அதனைக் கட்டுவதற்கு நாம் தரப்போகும் கூடுதல் கட்டணமும் அரசுக்குப் போகவில்லை. நேரே முதலாளிகளின் பணப் பெட்டிக்குத் தான் போய்ச் சேர்கிறது.</span> நல்லவாயன் சம்பாரிக்க நாற வாயன் திண்ண கதையா போச்சு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ‘ஸ்மார்ட் மீட்டர்’ என்ற மின்சார மீட்டரை அறிமுகப் படுத்த விருக்கிறதாம். காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை என்ன என்பதை இந்த மீட்டரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். அதாவது, வரவிருக்கும் காலத்தில் மின் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கோ, ஒரு நாளுக்கோ கூட நிரந்தரமாக இருக்காது. நித்திய கண்டம் பூரண ஆயுசு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின்சாரச் சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி (இறங்கிக்?) கொண்டிருக்கும். மின்சாரத்தின் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டை தவிர்த்துக் கொண்டு, விலை குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சாரத்தைப் பயன் படுத்துவதன் மூலம் மின் கட்டண செலவைக் கட்டுப்படுத்த முடியுமாம் . அலை எப்ப ஓயரது தலையை எப்ப முழுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் தகவலுக்கு </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://www.vinavu.com/2012/04/06/shocking-trurths/%20" target="_blank">http://www.vinavu.com/2012/04/06/shocking-trurths/ </a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்மார்ட் மீட்டர்: </div>
<div style="text-align: justify;">
இருக்கிற வாடிக்கையாளர்களுக்கு மாட்டுவதற்கே சாதாரண மீட்டர் இல்லையாம். கிட்டதட்ட 25% வாடிக்கையாளருக்கு மீட்டர் மாட்ட வில்லை . இதுல ஸ்மார்ட் மீட்டராம். கூரை ஏறி கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.
பல வீடு, கடைகளில் மீட்டர் இல்லாமல் சராசரிக் கட்டணம் வசூல் செய்யப் படுவதால் மின்சாரம் அளவில்லாமல் தாறுமாறாக உபயோகிக்கப் படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்காகவே சிலர் மீட்டரை சேதப் படுத்திவிட்டு ( அதற்கென்று சில டெக்னிக் உள்ளது. போலும்! ஐயோ எனக்குத் தெரியாதுங்க) வேண்டிய மட்டும் உபயோகித்து விட்டு சராசரிக் கட்டணம் கட்டி விடுகிறார்கள். மீட்டர் ரீடிங்க் எடுக்க வரும் (சில தகுதியற்ற ) ஆட்கள் மீட்டர் ஒழுங்காக செயல் படுகிறதா என்பதை தீர்மானிக்க முடியாத திறமை யற்றவர்களாக இருப்பதால் ரீடிங்கை மட்டும் குறித்துவிட்டு பல்லாக்கு தூக்குவது மட்டும்தான் என்வேலை, எனும் மனப்பாங்குடன் செல்கிறார்கள். இதனால் மீட்டர் ஓட வில்லை என்பதை நிர்வாகம் தெரிந்து கொள்ள எட்டு மாதங்கள் ஆகிவிடுகிறது. புதிய மீட்டர் கையிருப்பு இல்லாததால் அது வந்து மாட்டுவதற்குள் ஒன்றரை வருடம் ஆகி விடுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்மார்ட் மீட்டரின் விலை தற்பொழுது 1500 முதல் 5000 வரை உள்ளது. அதற்கான மோடம், நெட் ஒர்க் , மற்றும் சாப்ட்வேர் என்று அதற்கான முதலீடு அதிகமாகிவிடும். ஸ்மார்ட் மீட்டர் சிக்கனமானது சிறப்பானது என்கிறார்கள் இப்படி சொல்லித்தான் ஏமாற்றுகிறார்கள். இதே போல்தான் பெட்ரோல் விலை நிர்ணயம் தனி ஆணையத்திடம் விடப்பட்டதால் விலையேற்றத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல இது சர்வதேச அன்றாட நிர்ணய விலை என்று கூறி விட்டார்கள். கொலைக்கே அஞ்சாதவன் பழி பாவத்துக்கா அஞ்சுவான்?. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் விலை குறைவதற்கான வாய்ப்பே இல்லை. ஆகவே மின்சாரத்திற்கு அன்றாட விலை உயர்வு மட்டும் உறுதிதான். நாளடைவில் மக்களிடம் முன் அனுமதி பெறாமல் அவர்களது பணத்தை பிடுங்கும் முறையான (ப்ரீபெய்ட்) முழித்து இருக்கும் போது முழியைப் பிடுங்குவதில் இதுவும் ஒன்றாகிவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏற்கனவே செல்போன், டிவி சேனல் காரர்கள் மக்களிடம் பணத்தை கறப்பது போல் இதுவும் தனியார் கம்பெனிகளின் சுரண்டலுக்காக வகுக்கப் பட்ட திட்டம். ஸ்மார்ட் மீட்டருக்கான செலவு கிட்டதட்ட 5000 கோடியாகும். இதுவும் மக்கள் பணம்தான். தனக்குத்தானே செலவு செய்து சூனியம் வச்சு கிட்ட கதைதான். இஞ்சி இலாபம் மஞ்சளில். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை மக்களின் பணத்தில் நிறுவிவிட்டு பணம் வசூலிப்பதை தனியாரிடம் ஒப்படைத்து, அரசு ஊழியர்களின் வேலைப் பளுவை குறைத்துவிட்டு, தனது கல்லாவை நிரப்பி விடுவார்கள் அரசியல்வாதிகள். ஏதாவது பிரச்னை என்றால், விவரம் கேட்க முடியாது. டோல்ஃப்ரீ நம்பரில் கேட்டால் கம்ப்யூட்டர் பேசும். அதுக்கு ஒன்றை அமுக்கவும் இதுக்கு இரண்டை அமுக்கவும் என்று கடுப்பை ஏற்றுவார்கள். மக்கள் படாத பாடு பட்டு சேர்க்கும் காசை உட்கார்ந்த இடத்திலிருந்ததோ அல்லது சொகுசாக உலகைச் சுற்றிக் கொண்டோ சுரண்டுவார்கள். உழைக்கிறவனுக்கு ஒரு காசு நாட்டாமை பண்றவனுக்கு நாலு காசு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த </div>
<div style="text-align: justify;">
வகுத்தலும் வல்லது அரசு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே அரசின் இலக்கணத்தை வகுத்துள்ளார். சரியாகத் திட்டமிட்டு அதற்காக வரியாகப் பெறப் பட்ட பணத்தைக் காத்து அதை சிக்கனமாக சிறப்பாக மக்களுக்கு செலவழிப்பது தான் அரசாள்பவனின் கடமை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் இன்று நடப்பதோ வேறு, எல்லாவற்றையும் ஒப்பந்த முறையில் தனியாரிடம் விட்டுவிட்டு வரியையும் அவனே வசூலிக்க வகை செய்து விட்டார்கள். பின் எதற்கு அரசும், அரசு ஊழியர்களும். தனக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் பேசி கமிஷன் வாங்கி தனது ஸ்விஸ் வங்கிக் கணக்கில் போடுவதற்குத்தான் அரசு (அரசியல் வாதிகளும் அரசு ஊழியர்களும்) என்ற நிலையை நோக்கிச் செல்கிறது இன்றைய அரசு இயல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலவச டிவியின் விளைவுகள்: </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருணாநிதியின் குடும்பநல கேபிள் திட்டத்திற்காக, ஒரு டிவி சுமார் 2265 ரூபாய் மதிப்பில் 1.5 கோடி டிவிக்கள் சுமார் 3687 கோடி அரசுப் பணத்தில் மக்களுக்கு வழங்கப் பட்டது . இதனால் கருணாநிதியின் குடுபத்திற்கு கேபிள் டிவி மூலம் 4000 கோடி ரூபாய் 3 வருடங்களுக்கு உறுதிப் படுத்தப் பட்ட வருமானம் ஆகிவிட்டது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்து புண்ணியம் தேடிக் கொண்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் பாதி டிவிக்கள் உபயோகத்தில் இருப்பதாக கருதப் பட்டாலும்</div>
<div style="text-align: justify;">
80,00,000 X 50 = 400,000,000 வாட்ஸ் (நினைவில் கொள்க வழங்கப் பட்ட பாதி டிவிக்குத்தான்).
தேவைப் படுகிறது. அதாவது 400 மெ.வாட்ஸ் மின்சாரம் அதிகமாகத் தேவைப் படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதைத் தயாரிக்க 2400 கோடி ரூபாய் வேண்டும். ஆக கருணாநிதி அரசுப் பணத்தை 3687 +2400 = 6087 கோடி செலவு செய்து தனது குடும்பத்திற்கு வருடத்திற்கு 4000 கோடி நிலையான வருமானத்தைத் தேடிக் கொண்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஊரை அடிச்சு உலையில் போட்ட கதையாக இருக்கிறது. ஆனால் கேணைத்தமிழன் இன்னும் நம்புகிறான் இவர் நல்லவர், வல்லவர் என்று. ஆடு வெட்டுகிறவனைத் தானே நம்பும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2093442.ece%20" target="_blank">http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2093442.ece </a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.ae/2012/05/3.html" target="_blank">தொடரும்..(அடுத்த பாகம்.).................. </a></div>
<div style="text-align: justify;">
இரா. சந்திரசேகர்.</div>
<div style="text-align: justify;">
பழனி.
</div>
</span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-47596416470495955322012-05-11T12:07:00.001+05:302014-12-12T20:09:52.720+05:30தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம். 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
முதலில் மின்வெட்டு பற்றிய சில தகவல்களை அறிவோம். பின்னர் யுபிஎஸ்(UPS) பற்றி ஆராய்வோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழக மின் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="color: lime;">
<div style="text-align: justify;">
<b>தமிழகத்தின் </b><b>தற்போதைய தேவை 11500 மெ.வாட், ஆனால் உற்பத்தியோ 7500 மெ.வாட் ஆகவே 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. </b></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
அடுத்த ஐந்தாண்டுகளில், தற்போதுள்ள, 11,500 மெகாவாட்டிலிருந்து, 18 ,311 மெகாவாட் வரை மின்சாரத் தேவை உயரும். ஐந்தாண்டுகளில், தமிழகத்தில் மின்சார உற்பத்தியின் அளவு, 20,152 மெ.வாட் ஆக உயரும் என, தமிழக மின்வாரியம் கணக்கிட்டுள்ளதாம். என்னைக்கு அத்தைக்கு மீசை முளைச்சு சித்தப்பான்னு கூப்பிடறது.
<span class="fullpost">
<b> </b>
<b style="color: cyan;">இது வரை 53,000 கோடி கடன் ஏற்பட்டுள்ள நிலைமை</b>யிலும் கூட தமிழகத்தில் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு சமமாக, இலவச மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளதாக, தமிழக மின்துறை தெரிவித்துள்ளது. (விளங்குமா தமிழ்நாடு)</span></div>
<span class="fullpost"><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகத்தில் 2.24 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில், 19.72 லட்சம் விவசாய இணைப்புகளும், 14.45 லட்சம் குடிசை இணைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆண்டுக்கு, விவசாய இணைப்பு ஒன்றிற்கு, 250 ரூபாயும், குடிசை இணைப்பிற்கு, 120 ரூபாயும், தமிழக அரசின் மானியமாகக் கிடைக்கிறது. இந்த இணைப்புகளுக்கு, மீட்டரும் கிடையாது; மின் கட்டணமும் கிடையாது. அடப் பரதேசிகளா, ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டாமா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின் பகிர்மான இழப்பில், 1,349.8 கோடி யூனிட் மின்சாரம் வீணாகியுள்ளது, இதனால் 7,167 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை, அரசின் மனு வெளிப்படுத்தியுள்ளது. ( அடக்கண்றாவி! கழுதை பெறது கால்பணம் சுமைகூலி முக்காப் பணமா)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின் கட்டணம் செலுத்தும் வீடுகளுக்கு, 1,634 கோடி யூனிட் மின்சாரம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டில் வீடுகளுக்கு, 8,678 கோடி ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது.
யூனிட்டுக்கு, 5.31 ரூபாய் செலவழிப்பதாக, தமிழக மின்துறை நிதி நிலை அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டில்,6,478 கோடி ரூபாய்க்கு 1,220 கோடி யூனிட் மின்சாரம் விவசாயத்திற்கு, இலவசமாக தரப்பட்டுள்ளது. அதாவது, பணம் கட்டும் நுகர்வோருக்கு வழங்கும் மின்சாரத்திற்கு இணையாக, இலவச மின்சாரம் தரப்படுகிறது. இதற்கு, அரசின் சார்பில், 219 கோடி ரூபாய் மட்டுமே மானியத் தொகையாகக் கிடைத்துள்ளதால், இலவச விவசாய மின்சாரம் மூலம், தமிழக மின் வாரியத்திற்கு, 6,259 கோடி ரூபாய் செலவு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் தகவல்களுக்கு
<a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=346355">http://www.dinamalar.com/News_Detail.asp?Id=346355</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குடிசைகள் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு என்பது, மின் வாரியத்திற்கே இன்னும் தெரியாது. அங்கு மீட்டர்கள் இல்லாததால், கணக்கிட முடிய வில்லை. எண்ணிச் செய்கிறவன் கெட்டி எண்ணாம செய்கிறவன் மட்டின்ன கதையா இவ்வளவு இன்சீனியர்களும் மட்டியா?. எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.
விவசாய மின்சாரம் மட்டும் உயரழுத்த டிரான்ஸ்பார்மர்கள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது என, மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆக, 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் மின் வாரியம், இவ்வளவு தொகைக்கு இலவச மின்சாரம் வழங்கினால், வரும் காலங்களில் இலவச மின்சார நஷ்டத்தை சரி செய்ய முடியாத நிலை ஏற்படும். மின் வாரியத்தில் பணம் கட்டி மின்சாரம் பெறும் நுகர்வோர் மீது, கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.என்னத்த சொல்லி என்ன பண்றது.உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா? போடு வரியை. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணிக்குன்ன கதையா இருக்கவே இருக்கானுக கேணைத் தமிழகமக்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<b><div style="text-align: justify;">
<b> தனியாரின் கொள்ளை:</b></div>
</b>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த 53,000 கோடியில், தனியார் கொள்ளை 15,000 கோடியாவது தேறும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
6500 கோடிஇலவச மின்சாரம் X 6வருடம்= 39000 கோடி + தனியார் கொள்ளை 15000 கோடி =54000 கோடி கடன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எடுத்துக் காட்டாக நாகை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள பிள்ளைப் பெருமாள் நல்லூரில் ஆந்திராவின் டாக்டர் சி.பிரதாப்ரெட்டி குழுமத்திற்கு மின் உற்பத்தி நிலையம் அமைத்துக் கொள்ள இசைவு வழங்கப்பட்டது. பிள்ளைப் பெருமாள் நல்லூர் மின் உற்பத்திக் குழுமம் என்ற பெயராலேயே பிரதாப் ரெட்டி குழுமத்தினர் அந்நிலையத்தை நிறுவினர். ரெட்டி லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் முதலாளிதான் இந்த பிரதாப்ரெட்டி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<b><div style="text-align: justify;">
<b><span style="color: cyan;">இந்த பிபிஎன் நிறுவனத் திடமிருந்து ஒரு யூனிட் 17 ரூபாய் 80 காசுக்கு மின்சாரம் வாங்குகிறது தமிழக அரசு. மின்சார வாரியத்தின் சொந்த உற்பத்தி நிலையங்களில் 1 யூனிட் உற்பத்தி விலை 2 ரூபாய் 15 காசு என்பதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கொள்ளையின் அளவு புரியும்.</span></b>
கடந்த ஆண்டு முழுவதும் இந்நிறுவனம் மின்சார வாரியத் திற்கு விற்றது 24.4 கோடி யூனிட் மின்சாரம். ஒப்பந்தபடி இந்த மின்சாரம் 35 நாள்கள் உற்பத்திக்குச் சமமானது.
எஞ்சிய 330 நாள்களுக்கு இந்த நிலையம் உற்பத்தியே செய்ய வில்லை என்றாகிறது. ஆயினும் சும்மா இருந்த நாள்களுக்கு நிலைக் கட்டணமாக 330.04 கோடி ரூபாயைத் தட்டிச் சென்றது.
இது போல் ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1006 கோடி ரூபாயை உற்பத்தி இல்லாத காலங்களுக்கு நிலைக் கட்டணமாக மின்சார வாரியம் வழங்கி யுள்ளது. (எரியிற வீட்டில் பிடுங்கிறது ஆதாயமாம்).</div>
</b>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்த ஐந்தாண்டுகளின் பற்றாக்குறையை சமாளிக்க, தினமும் 4000 மெகாவாட் மின்சாரம், தனியாரிடம் கொள்முதல் செய்ய, டெண்டர் விடப்பட்டுள்ளதாம். (இன்னைக்கு இலை அறுக்கிறவன் நாளைக்கு குலை அறுக்கத்தான் செய்வான். கிழிந்தது தமிழகத்தின் பொருளாதாரம்).</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், முடைக் காலத்தில் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களிடம் அவ்வப்போது வாங்கிக் கொண் டதற்கும் மட்டும் கடந்த ஆண்டு 8884.4 கோடி ரூபாய் மின்வாரியம் வழங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டது. மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை கட்டுப் படுத்தியிருந்தாலே இந்த இழப்பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<b style="color: cyan;"><div style="text-align: justify;">
<b>மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் , மின்சார தீர்ப்பாயமும்</b> எவ்வாறு தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்குத் துணைபோய் மின்வாரியத்தை கடன் சேற்றில் சிக்க வைக்கின்றன என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டைப் பார்க்கலாம். (அவன்தம்பி அங்கதனுக்கு பங்கில்லாமலா போயிரும்) . கள்ளனும், தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம் அல்லவா.</div>
</b>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்திய போது பன்னாட்டு, வடநாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறு வனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.80 முதல் ரூ.2.50 வரை கட்டணச் சலுகை வழங்கி அறிவித்தது. பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு ,அதை பிடுங்கித் திண்ணுச்சாம் அநுமாருன்னு கதையா கார்ப்பரேட் நிறுவனங்கள் இச்சலுகைகளால் கொழிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறு கட்டணச்சலுகை வழங்குமாறு தமிழக அரசும் கோரவில்லை; அந்த நிறுவனங்களும் கோரவில்லை. மக்கள் கருத்தும் கோரப்படவில்லை. ஆற்றின் போக்கே அரசன் போக்கு என தானடித்த மூப்பாக தகவல் தொழில் நுட்பக் குழுமங்களுக்கு இக் கட்டணச் சலுகையை வாரி வழங்கியது ஆணையம். (தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்தான்). </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒழுங்குமுறை ஆணையம் தான் இவ்வாறு என்றால் மின்சாரக் கட்டணம் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் உச்ச அமைப்பான மின்சாரத் தீர்ப்பாயமும் அதற்கு மேல் இருக்கிறது. பிரதாப் ரெட்டியின் பிபிஎன் நிறுவனம் தனக்கு மின்சார வாரியத்திலிருந்து 189 கோடி ரூபாய் பணம் நிலுவையுள்ளது என வழக்குத் தொடர்ந்தது.<span style="color: magenta;">அவ் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பிபிஎன் குழுமம் கேட்டதை விடப் பல மடங்கு அதிகமாக இழப்பீட்டை கணக்கிட்டு ரூ 1050 கோடி வழங்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணையிட்டது. </span>(ஆறு போவதே போக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு.) குதிரை தள்ளி விட்டதுமில்லாமல் குழியும் பறிச்சுச்சாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது என்ன கொடுமை இதுக்கு மேல இருக்கு. வீடியோகான் நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் போட்டு, ஏதோ காரணத்தால் ரத்து செய்து விட்டது. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுவுற மாதிரி அழு.து கேஸ்ஸ போடுன்னு பேசிக்கிட்டாய்ங்க போல. அவனும் இங்கேயெல்லாம் கேஸ்ஸப் போடாம சிங்கப்பூரில் சர்வதேச நீதி மன்றத்தில் நம்ம சிதம்பரம் மூலம் கேஸ்ஸப் போட்டு 3000 கோடி நஷ்ட ஈடு கேட்டானுக. அதுதான் அவனுக செய்த தப்பு பேசாம நம்ம ரெட்டி மாதிரி தீர்ப்பாயத்தில் போட்டிருந்தா ஒரு 6000 கோடியாவது கிடைச்சிருக்கும் .அங்க வெறும் 125 கோடிதான் கொடுக்கச் சொன்னாங்களாம். அதனால ரெட்டிவழியைப் பின் பற்றி வீடியோகானும் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கே வந்துட்டானுக. இவனுக தீர்ப்பாயத்திற்கு போனா 6000 கோடி கிடைக்கும் ஆனா ஏன் போகலைன்னு தெரியலை. எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்போ போங்க.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிதம்பரம் ஒரு தமிழனாம். அன்னம் இட்ட வீட்டிலே கண்ணம் இடுறவனுக, உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணுறவனுக வம்சம் விளங்குமா? இவனைத் தலையில் வைத்து ஆடுறானுக தமிழனுக.(இருக்கிறவன் ஒழுங்கா இருந்தா தானே சிரைக்கிறவன் செம்மையா சிரைப்பான்.)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்போதும் பிபிஎன் உள் ளிட்ட நான்கு தனியார் நிறு வனங்கள் மின்சாரம் வழங்கு வதை நிறுத்தி வைத்திருப்பதால் மின்வெட்டு இன்னும் கூடுதல் ஆகிறது. இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிஞ்ச கதையாவில்ல இருக்கு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் தகவல்களுக்கு</div>
<div style="text-align: justify;">
<a href="http://suransukumaran.blogspot.in/2012/03/blog-post_13.html">http://suransukumaran.blogspot.in/2012/03/blog-post_13.html </a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொடரும்.....................</div>
<div style="text-align: justify;">
இரா. சந்திரசேகர்.</div>
<div style="text-align: justify;">
பழனி. </div>
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.in/2012/05/2.html">தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.2</a>
</div>
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.in/2012/05/3.html">தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3</a>
</div>
<div style="text-align: justify;">
<a href="http://chandroosblog.blogspot.in/2012/05/4.html"></a><a href="http://chandroosblog.blogspot.in/2012/05/4.html">தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.4</a></div>
</span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-50013608617606073212012-04-30T20:25:00.002+05:302013-09-15T22:09:37.452+05:30சதுரங்கம் வரலாறும், மூலமும். 8<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பாகம் 8<br />
<br />
<div style="color: red;">
வினோத்குமாரின் கேள்வி:</div>
சூரியனுடன் இனைந்து இயங்கினாலும்,சனி புதன் சேர்ந்து சாதகரின் 7ம் வீட்டில் இருந்தா சாதகருக்கு அலி தன்மையை கொடுக்கும்னு படிச்சு இருக்கேன், இயல்பில் புதன் அலி கிரகம் தானே. அப்படி பார்த்தால் அலி தன்மை திருமண பொருத்தத்தில் தவிர்க்க முடியாத இடம் பெறும் அல்லவா?.<br />
<br />
பதில்:<br />
உண்மையில் சனிக்கிரகமும் அலிக் கிரகம்தான். இதில் புதன் உப்புக்கு சப்பாணிதான். இதில் ஒரு விஷயம் ஏற்கனவே கூறியுள்ளேன் புதன் எந்த கிரகத்தோடு சேருகிறதோ அதன் குணங்களைதான் இதுவும் கொடுக்கும். ஒரு வேளை ஆதலால்தான் இந்த டபுள் இம்பாக்ட் ஆக இருக்கலாம். ஆனாலும் அலித்தன்மையை இந்த ஒரு கட்டத்தின் நிலைமைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கமுடியாது <br />
<span class="fullpost">
<br />
<br />
<span style="color: red;">வினோத்குமாரின் கேள்வி:</span><br />
ஆட்டத்தில் மிக முக்கியமான காய்கள் சிப்பாய்கள் .. நான் சிப்பாய்கள் தான் சனியா என கேட்டதற்கு காரணம், மெதுவாக ஆனால் வலுவாக நகரும்.எட்டாம் வீட்டை அடைந்தால் மிக வலுவான மந்திரியாக உருவெடுத்து , எதிராளிக்கு மரணம் தரும் . என்றெல்லம் இருப்பதால்தான். நீங்கள் சனியை யானையாக உருவகப படுத்தியது தவறுதானே?.<br />
<br />
பதில்:<br />
ஜோதிடத்தைப் பொறுத்த வரை கோச்சாரத்திலும், இலக்கினத்திலும் முக்கிய பங்காற்றுவது சனிதான். கோச்சாரத்தில் ஏழரைச்சனி என்று பெயர் பெற்றவனை, ஆயுளுக்கு காரணமானவனை, சனியன் என்று அன்றாட வாழ்வில் பெயர் எடுத்தவனை, சதுரங்கத்தில் முக்கியமான ஆளாகக் கருதிச் சேர்க்கவில்லை என்றால் சதுரங்கம் முழுமை அடையாது. ஆகவேதான் சனி சிப்பாய் அல்ல என்றேன். நீங்கள் கூறுவது போல் செஸ்ஸில் சிப்பாய்க்கு அவ்வளவு மதிப்பு கிடையாது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் பொதுவாக சிப்பாய்கள்தான் எளிதாகப் பலி கொடுக்கப் படுகிறார்கள்.<br />
<br />
அதுமில்லாமல் சிப்பாய்க்கு எண்மதிப்பு ஒன்றுதான். ஆனால் யானைக்கோ மதிப்பு ஐந்து. தளபதிக்கு(9) அடுத்த மதிப்பு யானைக்குத்தான்(5). ஆகவேதான் ஆயுள்காரகனாகிய சனீஸ்வரனுக்கு யானையின் சிறப்பிடம் வழங்கப் பட்டுள்ளது.. சிப்பாய்க்கு தகுந்த ஆட்கள் இருக்கிறார்கள் பின்னர் விளக்கம் தருகிறேன்.<br />
<br />
</span><br />
<div style="color: red;">
<span class="fullpost">வினோத்குமாரின் கேள்வி: </span></div>
<span class="fullpost">
சூரியன் ஆண்டுக்கு ஒரு சுற்று என்பதால் ராஜா ஒரு முவ் என்றால் . ராஜா, சிப்பாய், குதிரை தவிர மற்றதெல்லாம் அளவில்லாத முவ் தானே இது எப்படி ?.<br />
பதில்:<br />
சனியின் சுழற்சி காலம் 30 வருடங்கள். இவையெல்லாம் எட்டு கட்டங்களுக்கும் அதிகமாக இருப்பதால் எல்லை வரை செல்கின்றன. செவ்வாய் 4 வருடங்கள் என்பதால் அதன் இயக்கம் நான்கு கட்டங்களுக்குள் அமைந்து விடுகிறது. சுக்கிரனின் சுழற்சிக்காலம் ஒரு வருடமாக இருந்தாலும் அதனுடைய இயக்கம் பிற்காலத்தில் மாற்றப் பட்டிருக்கும்.<br />
<br />
<div style="color: red;">
கேள்வி: </div>
உங்கள் கூற்றுப் படி ஜோதிடத்தில் திருமணத்திற்கு காரகன் எது? அது சதுரங்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது.?.<br />
<br />
பதில்:<br />
திருமண பொறுப்பாளன் அல்லது களஸ்திர காரகனான சுக்கிரனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எப்படி திருமணப் பொருத்தம் பார்க்க முடியும். பையன்கள் யாராவது அழகான பெண்களுடன் பழகுவதைப் பார்த்துவிட்டால் போதும், உனக்கென்னடா சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான் என்பார்கள். பெண்கள் சம்பந்தப் பட்ட விஷயம் என்றால் சுக்கிரனுக்குப் பங்குண்டு. சுக்கிரன் தனது ஆட்சி வீடுகளில் ராஜாவுக்கும், மந்திரிக்கும் இடத்திலும், வலத்திலும் (ரிஷபமும், துலாமும்) மதகுருவாக உட்கார்ந்து சண்டையில் உதவியாக இருக்கிறார். சூரிய சந்திரர்களுக்கு அடுத்த இடம் கொடுக்கப் பட்டதில் இருந்து அவரின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ளலாம். (புராணங்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் யுத்தத்தில் சுக்கிராச்சாரியார் என்பவர் அசுர குருவாக இருந்து அசுரர்களுக்கு துணையாக இருப்பார்..)<br />
<br />
<div style="color: red;">
கேள்வி: </div>
அது சரி மற்ற காய்களுக்கும் கிரகங்களுக்கும் எப்படி ஒப்பிடுவீர்கள்?.<br />
பதில்:<br />
புதன் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஏனெனில் அது சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், அதனுடைய சுழற்சிக் காலமாகிய 88 நாட்களும், அதனுடைய உருவ அமைப்பும் காரணமாகும் அடிக்கடி அஸ்தங்கத்தில் மாட்டிக் கொள்வதாலும், வக்கிரத்தில் சஞ்சரிப்பதாலும், சமயத்தில் மறைவிடத்தில் (12ஆம் இடம்) வருவதாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது புதன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை.
இனி யுத்தத்திற்கு தேவையானவர்கள் எல்லாம் சண்டைக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும். அதிலும் ஈவு இரக்கமற்ற கொடியவர்கள்தான் சண்டையில் ஜெயிக்க முடியும். ஜாதகத்தில் அந்த மாதிரி பாபர்கள் லிஸ்ட்டில் உள்ளவர்கள் தான் செவ்வாயும், சனியும்.<br />
<br />
<div style="color: lime;">
செவ்வாய்: </div>
திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்தான் மிக முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. பெண் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். அதுமட்டுமில்லாமல் பெண் ஜாதகத்தில் சூரியனோடு செவ்வாய் ,சனி ஆகியவை எந்தக் கட்டத்திலும் சேர்ந்து இருந்தால், அதற்கு தகுந்த கணவனை தேட வேண்டுமாம். அதாவது அந்த செஸ் போர்டில் ராஜா, குதிரை, யானை இருந்தால் விளையாடும் போது கவனம் தேவை, இல்லாவிட்டால் எளிதில் தோற்று விடுவீர்கள்.
செவ்வாயின் நிறம் சிவப்பு அதனால் குதிரையாக கற்பிதம் செய்தது நூற்றுக்கு நூறு சரி. அதிலும் அதன் தோஷ இடங்கள் ஆகிய 2,4,7,8,12 என்னும் ஐந்து இடங்கள் குதிரையின் இயக்கத்திற்கு ஒத்து வருகிறது. ஆகவே செவ்வாய் அதன் ஆட்சி வீடுகளில் (மேஷ, விருச்சிக) ராஜா, மந்திரி, குரு ஆகியோருக்கு இடமும் வலமும் நின்று யுத்தத்தில் கலந்து கொள்கிறது. அதன் சுழற்சி வருடங்கள் நான்கு, அது போல் அது செல்லும் கட்டங்களும் நான்கு.<br />
<br />
<div style="color: lime;">
வியாழன்: </div>
வியாழன் திருமண பொருத்தங்களில் அவ்வளவாக கணக்கில் கொள்ளப் படுவதில்லை. ஏனெனில் அவர் ஒருவகையில் சகலத்துக்கும் பொறுப்பானவராகுகிறார். ஆதலால் திருமணத்தில் அவரது பார்வை மட்டுமே கணக்கிடப் படுகிறது. அதைத்தான் ”வியாழ நோக்கம்” என்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு பின் ஏற்படும் குழந்தை பாக்கியத்திற்கு அவர் காரகனாக இருக்கலாம் ஆனால் திருமணம் ஆகிய பொருத்தத்தில் (யுத்தத்தில்) அவருக்கு வேலை இல்லை. அதிலும் இவர் ”ரொம்ப நல்லவர்” ஆதலால் இவர் ”அதுக்கு சரிப்பட மாட்டார்” ஆதலால் மீனமும், தணுசும் கணக்கில் வரவில்லை. பார்வையோடு சரி.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfEskljyUxVcrgw1l0OgGfVcn13CSxWhKulQxNnkAzvKVFl4SjcmUzodyhg-dlIy4MgCPuauSfnxw-Y3bbVd7b73b-AlbKpxkPHUMgAxrv9k_R4fAuFK1jdPHmX2TBqMW3KiVOnwlMFsmj/s1600/Animation1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfEskljyUxVcrgw1l0OgGfVcn13CSxWhKulQxNnkAzvKVFl4SjcmUzodyhg-dlIy4MgCPuauSfnxw-Y3bbVd7b73b-AlbKpxkPHUMgAxrv9k_R4fAuFK1jdPHmX2TBqMW3KiVOnwlMFsmj/s400/Animation1.jpg" width="400" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="color: lime;">
சனி: </div>
திருமண பொருத்தம் பார்ப்பதெல்லாம் அப்புறம், முதலில் ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் பார்க்க வேண்டிய விஷயம் ஆயுள்.<br />
ஜோதிடர்களே! முதலில் ஜாதகத்தை எடுத்தவுடன் ஆயுள் ஸ்தானத்தையும், ஆயுள் காரகன் (சனி), ஆயுள் ஸ்தானாதிபதி, லக்னாதிபதி ஆகியோரைப் பார்த்து அதன் பலம் பலவீனத்தை கணித்து மனதில் வைத்து அதன்படி சொல்லுங்கள். அதைப் பார்க்காமல் தான் சிலபேர், ஒரு திரைப்படத்தில் சார்லி பலன் சொல்லி அடி வாங்கியதைப் போல் வாங்குகிறார்கள்.<br />
<br />
ஆயுளுக்கு காரகன் (பொறுப்பேற்பவன்) சனிதான். சுபாவத்தில் கெட்டவன். சண்டைக்கு உகந்தவன், பாபி.
இவருக்கு மந்தன், காரி, ஈஸ்வரன் என்றெல்லாம் பேருண்டு. வான வெளியில் பெரிய கிரகமாகவும் கடைசி கிரகமாகவும் உள்ளவர். (செஸ் போர்டிலும் கடைசியாக உள்ளது) கரிய நிறத்தவன், உருவத்தில் பெரியவன். இந்த இரண்டு குணாதிசயங்கள் உள்ள ஒரே ஒரு மிருகம் யானைதான். அதனால்தான் சனிக்கு யானையை உருவகப் படுத்தி ஆட்டத்தில் நிற்க வைத்து விட்டனர். இதை யாராலும் மறுக்க முடியாது. இவர் சூரிய சந்திரர்களுக்கு இடமும் வலமும் கடைசியில், தனது ஆட்சி (கும்பம், மகரம்) வீடுகளில் அமர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்கிறார்ர்ர். (அவன், இவன் என்று சொல்லி அனாவசியமாக கோபத்தை கிளறக் கூடாது பாருங்கள்). அதனுடைய இயக்கமும் யானையைப் போல் மெதுவாக, ஸ்டெடியாக இருக்கிறது.
இரு ஜோதிடக் கட்டங்களை கும்பம், மகரம் ஆகிய இரு ராசிகளுக்கும் இடையில் பிரித்து ஒரு நேர் கோட்டில் அமைத்து அப்படியே எதிரெதிர்த் திசையில் நேராக அடுக்கினால் செஸ் போர்டுதான்.<br />
<br />
<br />
<object style="height: 390px; width: 640px;"><param name="movie" value="http://www.youtube.com/v/3vvkolFva9g?version=3&feature=player_detailpage">
<param name="allowFullScreen" value="true">
<param name="allowScriptAccess" value="always">
<embed src="http://www.youtube.com/v/3vvkolFva9g?version=3&feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object><br />
<br />
<br />
<div style="color: red;">
கேள்வி: </div>
சூரிய,சந்திரர்களையும் கிரகங்களையும் அதன் ஆட்சி வீடுகளையும் செஸ்ஸில் ராஜா, மந்திரி(க்யூன்), குரு(பிஷப்) நைட்(குதிரை), ரூக் (யானை) ஆகியோருக்கும் அவரது இருப்பிடங்களுக்கும் ஏறத்தாழ சரியாக ஒப்பிட்டு சொல்லிவிட்டீர்கள். இந்த சிப்பாய்களுக்கு எங்கிருந்து, யாரை அழைத்து வந்து ஒப்பிடப் போகிறீர்கள்?.<br />
<br />
பதில்:<br />
அவர்களும் ஜோதிடத்தில் தான் உள்ளார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் உபகிரகம் (பான்) என்கிற அமைப்பு உண்டு. அதனுடைய உண்மையான அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை. ஒரு வேளை வால் நட்சத்திரங்களாக இருக்கலாம். ”உபகிரகம்” என்கிற வெறும் வார்த்தை பிரயோகத்தை வைத்துக் கொண்டு விவாதத்திற்கு வராதீர்கள், ஏனென்றால் "உபகிரகம்" என்பது இவர்கள் வசதிக்கு ஏற்படுத்திய வார்த்தை.<br />
<br />
சூரியனுக்கு காலன்,<br />
சந்திரனுக்கு பரிவேடன்,<br />
புதனுக்கு அர்த்தப்பிரகரணன்<br />
சுக்கிரனுக்கு இந்திரதணுசு,<br />
செவ்வாய்க்கு தூமன்,<br />
குருவுக்கு எமகண்டன்<br />
சனிக்கு குளிகன்<br />
<br />
ஆகியோர்தான் சிப்பாய்கள். அவர்களுக்கு அதிக வலிமை இல்லைதான், ஆனால் அவர்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கு சென்றால்தான் வில்லங்கம். மரணத்தையோ மரணத்திற்கு ஒப்பான கண்டத்தையோ கொடுப்பார்கள் என்பது ஜோதிடத்தின் பாலபாடம்.
இந்த சிப்பாய்கள் எதிரியின் கோட்டைக்குள் நுழைந்துவிட்டால் அதாவது (எட்டாம் இடத்திற்கு வந்துவிட்டால்) அவர்களுக்கு பதவி உயர்வு (Promotion) உண்டு. அது போல் செஸ்ஸில் பான் எட்டாம் இடத்திற்கு சென்றுவிட்டால் மந்திரியின் அதிகாரம் தரப்படும்.
ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் மாந்தி எனப்படும் குளிகன் அமர்ந்தால் அதுவும் தோஷமாக கருதப்படும்.ஆகவே சிப்பாய்களின் இருப்பிடம் நியாயப் படுத்தப் பட்டது.<br />
<br />
<div style="color: red;">
கேள்வி: </div>
விளையாட்டின் முடிவிற்கும், திருமணப் பொருத்தத்திற்கும் எப்படி முடிச்சுப் போடுவீர்கள்?.<br />
<br />
பதில்:<br />
வெள்ளைக்காய் ஆணாகவும், கறுப்புக்காய் பெண்ணாகவும் உருவகப் படுத்திக் கொண்டு விளையாடும் போது, முதல் நகர்த்தலில் வெள்ளைக்காய்க்கு முன்னுரிமை கொடுத்து விளையாட்டு டிராவில் முடிந்தாலும், வெள்ளைக்காய் ஜெயித்தாலும் இரு ஜாதங்களும் சேரும் என்பதுதான் முடிவு. வெள்ளைக்காய் தோற்றால் அது பொருந்தாது. அதாவது மனை என்னும் குடும்பத்தில் பெண்ணின் கை ஓங்கியிருந்தால் அது சரியான குடும்ப அமைப்பாக இருக்காது என்பது ஜாதகம் கண்டு பிடித்த காலத்தில் ஏற்பட்ட மரபு. அந்தக் கால சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டால் இதில் ஆணாதிக்கமோ என்ற கேள்விக்கே இடமில்லை.<br />
<br />
<div style="color: red;">
கேள்வி: </div>
சதுரங்கத்தில் உள்ள கேஸ்லிங்க் (castling) என்பதற்கு ஜோதிட விளக்கம் என்ன?<br />
பதில்:<br />
தர்ம கர்மாதி யோகம் என்பதைப் பற்றி 1665 இல் இயற்றப் பட்ட "ஜாதக அலங்காரம்" கூறுவதைப் பார்ப்போம்.<br />
<br />
மாதேகே டன்மயோக வகைகன்ம மன்னனோடு<br />
தாதையுங்கூடி எந்தத் தலத்தினிருந்த போதும்<br />
ஓதிய ஒருவர் வீட்டில் ஒருவர் மாறாயிருந்த<br />
போது மாறாத செல்வம் பொருந்திடும் ராஜயோகம்.<br />
<br />
அதாவது 9ஆம் 10 ஆம் அதிபதிகள் இணைந்து எங்கிருந்தாலும் அல்லது ஒருவர் வீட்டில் ஒருவர் மாறியிருந்தாலும், அச்சாதகன் குறைவிலாத நல்லவழியில் ஈட்டிய செல்வத்தைப் பெற்று இராஜ யோகத்தோடு வாழ்வான். இதைத்தான் பரிவர்த்தனை யோகம் எனவும் சொல்வர். பரிவர்த்தனை என்றால் (இடத்தை) கொடுத்து வாங்குதல் எனப்படும்.<br />
<br />
மேலும் இரு கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றிக் கொள்வதை பரிவர்த்தனை யோகம் என்பார்கள்.அதாவது 1,2,9,10,11 க்குடையவர்கள் தங்கள் இராசி வீடுகளை பரிவர்த்தனை செய்து கொள்வதாகும். உதாரணமாக சூரியனின் ஆட்சி வீட்டில் சனியும், சனியினது ஆட்சி வீட்டில் சூரியனும் இருந்தால் அது பரிவர்த்தனை யோகம் எனப் படும். இதனால் அதிகப் பலம் பெறுவார்கள். யோக ஜாதகம் என்பர். செஸ்ஸில் யோகம் என்பது வெற்றிக்கான வாய்ப்புகளென்றுதான் அர்த்தம். அந்த வகையிலான ஒரு நகர்த்தலாக இருக்கும்.<br />
<br />
மேற்க் கூறிய விளக்கங்களால் இந்தியாவின் சதுரங்கம்தான் இன்று உலகெங்கும் விளையாடப் படுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும் சதுரங்கத்தின் தோற்றுவாய் ஜோதிடம்தான் என்பதும், அந்த ஜோதிடத்தை உலகிற்கே அளித்தது இந்தியாதான் என்பதும் உறுதி செய்யப் படுகிறது.<br />
<br />
தொடர் முற்றும்.<br />
<br />
நன்றி.<br />
<br />
இரா. சந்திரசேகர்,<br />
பழனி.
</span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-77561621525103083562012-04-25T21:22:00.000+05:302013-09-15T22:12:28.737+05:30சதுரங்கம் வரலாறும், மூலமும். 7<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://chandroosblog.blogspot.in/2012/04/6.html" target="_blank">Previous</a><br />
ஆராய்ந்து பார்த்தால் சீட்டுக் கட்டும் ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கும். ஒரு வருடத்தின் நாட்களாகிய 364 ஐ சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்களால் வகுத்தால் (13 மாதம் ) வருகிறது. சீட்டுக்கட்டில் ஒவ்வொரு வகையிலும் 13 சிட்டுக்கள் உள்ளது. வருடத்தின் மொத்த வாரங்களை கணக்கிட்டால் 52, இது மொத்த சீட்டுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். ஒரு மாதத்திற்கு நான்கு வாரங்கள் இருப்பது போல், சீட்டின் வகைகள் நான்கு. மற்றபடி ராஜா-சூரியன், ராணி-சந்திரன், ஜாக்-சுக்கிரன், ஜோக்கர்-சனி. இதனுடைய தோற்ற காலத்தின் வரலாற்றை நோக்குங்கால் இதுவும் ஜோதிடத்தையும், சதுரங்கத்தையும் பின்புலமாகக் கொண்டு உருவான விளையாட்டுதான் எனத் தெரியவரும்<br />
<br />
<span class="fullpost">
</span>
<div style="color: red;">
<span class="fullpost">வினோத்குமாரின் கேள்வி:</span></div>
<span class="fullpost">
சூரியன் ராசா<br />
சந்திரன் மந்திரி<br />
சுக்கிரன் தளபதி<br />
சனி சிப்பாய்<br />
செவ்வாய் குதிரை<br />
ராகு கேது இல்லை<br />
புதன் இல்லை.<br />
யானை .. யார்
குருவாக தான் இருக்க வேண்டும்...என நினைக்கேரன்..
என் புரிதல் சரியா?.<br />
<br />
இன்னொரு கேள்வி .. சூரியன் சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் ஏன் இரண்டாக உள்ளது..?
2 யானை , 2 தலைபத் i 2 குதிரை . ஏன்? ..<br />
<br />
<span style="color: magenta;">பதில்:</span>
உங்களின் வரிசையில் சிறிய திருத்தம்.<br />
சூரியன்-ராசா<br />
சந்திரன்-தளபதி<br />
சுக்கிரன்-மந்திரி(மதகுரு)<br />
செவ்வாய்-குதிரை<br />
சனி-யானை<br />
<br />
புதனுக்கும் குருவுக்கும் திருமணப் பொருத்தத்தில் இடமில்லை. புதனுக்கான விளக்கம் ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது.<br />
<a href="http://chandroosblog.blogspot.in/2012/04/6.html%20" target="_blank">http://chandroosblog.blogspot.in/2012/04/6.html </a><br />
<br />
குருவுக்கான விளக்கம் பின்னர் தருகிறேன்.
ஜோதிடத்தில் ராசியை, வீடு என்றும் குறிப்பிடுவதுண்டு. ஒவ்வொரு கிரகங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து உச்ச ,நீச, ஆட்சி வீடு எனக் கூறப்படும்.<br />
<br />
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="fullpost"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlpnWfhSTh4U_6_0h20bFqNfAxFWVWAAN41NuCH0O4oeRjc4LdJNBqW7gp9C5Ri7awTOnBPqO6gB21BIloal5klSUOdFZShIqKsN4EolZSen8Lnml6JT9xTAkWIN6M20KfEQ-ZHlUikHN0/s1600/Ruling.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlpnWfhSTh4U_6_0h20bFqNfAxFWVWAAN41NuCH0O4oeRjc4LdJNBqW7gp9C5Ri7awTOnBPqO6gB21BIloal5klSUOdFZShIqKsN4EolZSen8Lnml6JT9xTAkWIN6M20KfEQ-ZHlUikHN0/s400/Ruling.jpg" width="400" /></a></span></div>
<span class="fullpost">
<br />
கிரகங்கள் எல்லாமே நீள் வட்டப் பாதையில் சுற்றுவதை அறிவோம். அதிலும் பூமி வரிசைக் கிரமத்தில் மூன்றாவதாக உள்ளதாலும், மற்ற கிரகங்கள் எல்லாமே பூமியைப் பொறுத்து, ஒரு சமயம் மிக அருகிலும் (உச்சம்) அதற்கு நேர் எதிரான நிலையில் தூரத்தில் (நீசம்) அமைவதும் இயல்புதான்.<br />
<br />
செவ்வாய் கிரகம் நமக்கு(பூமிக்கு) அருகில் இருக்கும் பொழுது சுமார் 4 கோடி மைல் தொலைவிலும் அதிக பட்ச தூரம் என்று வரும் பொழுது சுமார் 22 கோடி மைல் தொலைவிலும் இருக்கிறது. நீச (Aphelion) நிலையில் இருக்கும் பொழுது உச்ச (Perihelion) நிலையைப் போல் சுமார் 5 மடங்கு தூரத்தில் இருக்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJc96BG7i10vFPrTOwgrYrehyM-Iv7U81KlsOpangvMI-IHoAA7te-ITjbVSDvA134TR9ax9doV4HrcF1u8NdoegH1d7BV5L3sJXfCgKM-sI2Bw04dUERFIwUWMu7fIieFz8W51wANFiTj/s1600/Mars_opposition.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="152" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJc96BG7i10vFPrTOwgrYrehyM-Iv7U81KlsOpangvMI-IHoAA7te-ITjbVSDvA134TR9ax9doV4HrcF1u8NdoegH1d7BV5L3sJXfCgKM-sI2Bw04dUERFIwUWMu7fIieFz8W51wANFiTj/s400/Mars_opposition.gif" width="203" /></a></div>
<br />
ஆனால் சந்திரன் பூமியையும், பூமி சூரியனையும் ஏறத்தாழ (low eccentricity) வட்டப்பாதையில் சுற்றுவதால், இவைகளின் உச்ச, நீச தூரத்திற்கிடையே வித்தியாசம் மிகமிகக் குறைவாக இருக்கும். சுமார் 1/8 (அரைக்கால்) பங்குதான். அதாவது பூமிக்கும் -செவ்வாய்க்கும் இருக்கும் வித்தியாசத்தில் 40ல் ஒரு பங்குதான்.<br />
<br />
ஜோதிடப் படி பூமியை மையமாக வைத்துப் பார்க்கும் போது சூரியன் அனேகமாக ஒரு வட்டப்பாதையில் சுற்றுவது போல்தான் தெரியும். ஆதலால் சூரியனையும் சந்திரனையும் தவிர்த்து மற்ற எல்லா கிரகங்களும் ஒரு நேரத்தில் பூமிக்கு மிக அருகிலும் மற்றொரு சமயத்தில் மிக தூரத்திலும் இருக்கும்.<br />
<br />
சூரியனும் சந்திரனும் பூமியை ஒரு சுமாரான (low eccentricity) நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால்தான் ஆட்சியாக ஒரே ஒரு வீடு கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் மற்ற கிரகங்களை கணக்கிடும் போது அவைகளுக்கு அதி பயங்கர நீள்வட்டத் தன்மை உள்ளது.<br />
கீழே உள்ள படத்தில் சந்திரன்,சூரியனின் பாதைகள் வட்டமாகத் தெரியும், ஆனால் பூமியை மையமாகக் கொண்டு எல்லாவற்றையும் சுழல்வதாகக் கற்பனை செய்து பாருங்கள்,அப்பொழுதுதான் உச்சம், நீசம் பற்றி புரியும்.
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTw993rUN83zCEQgmZUtiu3rUCzm3hAO36IsSKo0seyWBbC_0ykigCud71pcADI7gBfZW8zLJYKZntZi2M6w8a1dG0H5DbFK2ckZRlQXPyV6vNgrE8W6vTBKT7nBuY8UH7W__HkKK4p24q/s1600/%25E0%25AE%25A8%25E0%25AE%25A8%25E0%25AE%25A8%25E0%25AE%25A8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTw993rUN83zCEQgmZUtiu3rUCzm3hAO36IsSKo0seyWBbC_0ykigCud71pcADI7gBfZW8zLJYKZntZi2M6w8a1dG0H5DbFK2ckZRlQXPyV6vNgrE8W6vTBKT7nBuY8UH7W__HkKK4p24q/s400/%25E0%25AE%25A8%25E0%25AE%25A8%25E0%25AE%25A8%25E0%25AE%25A8.jpg" width="400" /></a></div>
<br />
அவ்வாறு ஆட்சிவீடு அளிக்கும் போது சூரியனுக்கு சிம்ம ராசியையும் சந்திரனுக்கு கடக ராசியையும் வீடாக கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு அடுத்து புதனுக்கு இரண்டு வீடும் சுக்கிரனுக்கு இரண்டு வீடும் அது போல் செவ்வாய், வியாழன், சனி ஆகியோருக்கும் தலா இரண்டு வீடு கொடுக்கப் பட்டுள்ளதை கீழே உள்ள படத்தைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.<br />
<br />
ஆட்சி வீடு படம்
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSfme0Z3IZvgCoeKhoy3M1ff7zUb2_Xt8cNbOxwBrONulwzXDGkVoayvNTsJqq6E_2Op2lMkBCRYKTSIjqVdel0eVzC69xMr2wvkpy5vZwEjFqtpbSLXIV2RmuzGO-ynWfF9A-uCy0sgxJ/s1600/Rule+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSfme0Z3IZvgCoeKhoy3M1ff7zUb2_Xt8cNbOxwBrONulwzXDGkVoayvNTsJqq6E_2Op2lMkBCRYKTSIjqVdel0eVzC69xMr2wvkpy5vZwEjFqtpbSLXIV2RmuzGO-ynWfF9A-uCy0sgxJ/s400/Rule+1.jpg" width="399" /></a></div>
அதாவது 12 வீடுகளை, ஐந்து கிரகங்களுக்கு தலா 2 வீடும் சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு வீடும் ஆக கொடுக்கப் பட்டுள்ளது. இதிலிருந்தே தெரிவது என்னவென்றால், சூரியனையும் (நட்சத்திரம்) சந்திரனையும் (உபகோள்) மற்ற கிரகங்களில் இருந்து ஏதோ ஒருவகையில் வேறுபடுத்தி வைத்துள்ளனர். இதனால் சந்திரனையும் "கிரக" லிஸ்ட்டில் இருந்து விலக்கி விடலாம் என்பதை பகுத்தறிவு வாதிகள் புரிந்து கொள்ளட்டும்.<br />
<br />
செஸ்ஸில் ராஜா, மந்திரி ஆகியோர் ஒவ்வொருவர்தான் உள்ளனர். ஆனால் மதகுரு,(சுக்கிரன்) குதிரை,(செவ்வாய்) யானை(சனி) ஆகியோர் இரண்டு பேர் உள்ளனர்.
இதில் பிரதானமாக சூரியன் ராஜாவாகவும் சந்திரன் மந்திரியாகவும் கற்பிக்கப் பட்டதில் யாருக்கும்மாற்று கருத்து இருக்க முடியாது. மாற்றுக் கருத்து இருந்தால் கீழே உள்ள விளக்கத்தினால் மாற்றிக் கொள்ளவும்.<br />
<br />
ஜாதகத்தில் லக்னத்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.
லக்னம் என்பது முற்றிலும் சூரியனைச் சார்ந்துள்ளது. <span style="color: magenta;">சூரியன், லக்னம், ஆகிய இரண்டும் பூமியில் ஜாதகரின் பிறந்த இடத்தைப் பொறுத்து சூரியனின் நிலையை நேரடியாகவும், ராகு, கேது மறைமுகமாகவும், துல்லியமாகவும் குறிப்பிடுகின்றது.</span> சூரியனின் துல்லியமான நிலையை கணக்கிடத்தான் ( அது ஒரு *ஹைடெக் சமாச்சாரம் ) லக்னம், ராகு, கேது ஆகிய மூன்றும் பயன்படுத்தப் படுகிறது என்பது ஜோதிடத்தில் தெளிவுள்ளவர்களுக்குப் புரியும். வாழ்க்கையின் முழு பலனும் லக்னத்தை வைத்துத் தான் சொல்லப் படுகிறது. அதாவது உயிர், உடல் ஆகியற்றை லக்னம் குறிப்பிடுகிறது.<br />
<br />
*<a href="http://chandroosblog.blogspot.in/2010/06/blog-post.html">http://chandroosblog.blogspot.in/2010/06/blog-post.html</a>.<br />
<br />
<span style="color: magenta;">இது போன்ற துல்லிய கணக்கீடுகள் சூரியன், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்களுக்கு கிடையாது.</span> ஆகவே சூரியன்தான் ராஜா, சந்திரன்தான் மந்திரி. ஜாதகத்தில் சூரிய, சந்திரர்களுக்கு ஆட்சி வீடாக தலா ஒரு வீடுதான் (கடகம் ,சிம்மம்) கொடுக்கப் பட்டுள்ளது. ஆகவேதான் செஸ்ஸில் ராஜா, தனது சிம்மம் ஆகிய ஒற்றை வீட்டில் இருந்து ஆட்சி செய்கிறார் அல்லது யுத்தம் செய்கிறார். சூரியனின் சுழற்சி ஒருவருடம் என்பதால் அது ஒரு கட்டம்தான் நகர்த்த முடிகிறது.<br />
<br />
சூரியனுக்கு அடுத்ததாக சந்திரனுக்குத்தான் ஜாதகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.
அறிவையும் ஆரோக்கியத்தையும் குறிப்பிடுவது இராசிதான். இராசி என்பது முற்றிலும் சந்திரனைச் சார்ந்துள்ளது. அதனால்தான் சந்திரனை ”மதி” என்றும் கூறுகிறார்கள். <span style="color: magenta;">சந்திரன், ராசி, ஆகிய இரண்டும் பூமியைப் பொறுத்து சந்திரனின் நிலையை நேரடியாகவும், ராகு, கேது, மறை முகமாகவும் சந்திரனின் நிலையைத்தான் குறிப்பிடுகின்றது .</span> சந்திரனின் துல்லியமான நிலையை கணக்கிடத்தான் இராசி, ராகு கேது ஆகிய மூன்றும் பயன்படுத்தப் படுகிறது. ஆகவே சந்திரன்தான் மந்திரி. சந்திரன் தனது ஒற்றை வீடாகிய கடகத்தில் நின்று ஆட்சி செய்கிறார் அல்லது யுத்தம் செய்கிறார். ஒருவருடத்தில் 13 முறை சுற்றி விடுகிறார்.<br />
<a href="http://chandroosblog.blogspot.in/2012/04/8.html" target="_blank">தொடரும்............</a><br />
இரா.சந்திரசேகர்,<br />
பழனி. </span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-70084958615089103472012-04-19T19:49:00.000+05:302012-05-28T22:45:24.545+05:30இப் போ "தை" க்கு இருக்கட்டும் சித்திரை.2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
குஜால் மற்றும் வினோத்குமாரின் மறு மொழிகளுக்கான பதில்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியாவின் காலண்டர்தான் உலகிலேயே மிகவும் பழமையானது. இந்தியரின் வானியல் திறமைக்கு இந்தக் காலண்டரும் ஒரு சாட்சிதான். நாம்தான், எல்லாரையும் விட வானியலில் 3000 வருடங்கள் முன்னேறியவர்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதிலும் நாம் எடுத்துக் கொண்டதோ கலியுகத்தை மட்டுமே.
</div>
<span class="fullpost">
</span><br />
<div style="text-align: justify;">
<span class="fullpost">மேலும் விவரங்களுக்கு</span></div>
<span class="fullpost">
<div style="text-align: justify;">
<a href="http://senthilarumugam.tripod.com/id10.html">http://senthilarumugam.tripod.com/id10.html</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அக்காலத்தில் பாமரனுக்கும் பாராளுபவனுக்கும் வானியல் விளக்கங்களைக் கூறி அன்றைய நாள் எப்படிப் பட்டது, என்ன வருடம், என்ன மாதம், என்ன தேதி, என்ன கிழமை, என்று கூறுவதற்கு ஒரு ஆள் தேவைப் பட்டான். அதற்காகவே ஒரு குழுவினர் இருந்தனர். அவனும் தனது முன்னோர்களின் வாய்மொழியில் பின் பற்றப்பட்ட காலண்டரை தினசரி அப்டேட் செய்து கண்கானித்து அவனே ஒரு நாட்காட்டியாகவும், (Event Manager) ஈவண்ட் மேனேஜராகவும் செயல்பட்டான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உதாரணமாக, ஒருவர் கணபதி பூஜை செய்து இந்தப் பதிவை இடுகிறார் என்றால், அந்த செயலின் முதல் பூஜையாக ஸங்கல்பம் என்பது அமையும். ஸங்கல்பம் என்பது இறைவனிடம் இந்த கணபதி பூஜையின் வாயிலாக பலனை அடையக் கேட்கப்படும் மந்திரமாக அமைகின்றது. அடுத்தமுறை விஷேசங்களில் கலந்து கொள்ளும் போது கவனியுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த மந்திரம், விக்னங்கள் எனும் வினைகளை நீக்கும் விநாயகரை வழிபடும் ஸ்லோகமாகிய "ஓம் சுக்லாம் பரதம் ..... சாந்தயே" என்ற மந்திரத்தோடு ஆரம்பிப்பார்கள் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து வருடம்,மாதம் ,கிழமை, திதி, நட்சத்திரத்தையும் (மொத்தத்தில் காலத்தையும்) அடுத்து பூகோள ரீதியாக இடத்தையும் குறிப்பிடுவார்கள், உதாரணத்திற்கு இன்றைய நாளுக்கான மந்திரமும் விளக்கமும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;">"சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே</span> </div>
<div style="text-align: justify;">
இந்த இனிய நல்ல வேளை ,பிரம்மனின் இரண்டாவது பரார்த்தத்தில்</div>
<div style="color: red; text-align: justify;">
ஸ்வேத வராஹ கல்பே </div>
<div style="text-align: justify;">
முப்பத்தாறு கல்பங்களில் முதல் கல்பமாகிய ஸ்வேத வராஹ கல்பத்தில்</div>
<div style="color: red; text-align: justify;">
வைவஸ்வத மன்வந்த்ரே </div>
<div style="text-align: justify;">
பதினான்கு மன்வந்திரங்களில் ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் .</div>
<div style="color: red; text-align: justify;">
அஷ்டாசாவிகும்சதி தமே</div>
<div style="text-align: justify;">
71 சதுர்யுகங்களில் 28வது சதுர்யுகத்தில்</div>
<div style="color: red; text-align: justify;">
கலி யுகே 5113</div>
<div style="text-align: justify;">
நான்காவது யுகமாகிய கலியுகத்தில் 5113வது வருடத்தில் . (2012)</div>
<div style="color: red; text-align: justify;">
ப்ரதமே பாதே </div>
<div style="text-align: justify;">
பிரபஞ்சத்தின் முக்கியமான பகுதியில்</div>
<div style="color: red; text-align: justify;">
ஜம்புத்வீபே</div>
<div style="text-align: justify;">
ஏழு தீபகற்பங்களில் முதல் தீபகற்பமாகிய ஜம்பூ த்வீபத்தில் (நீரால் சூழப்பட்டுள்ள, நாம் வசிக்கும் இந்திய தீப கற்பத்தில்),</div>
<div style="color: red; text-align: justify;">
பாரத வருஷே </div>
<div style="text-align: justify;">
ஒன்பது வர்ஷத்தில் முதல் வர்ஷமாகிய பாரத வர்ஷம், (இதுவும் இடம் பற்றியதே)</div>
<div style="color: red; text-align: justify;">
பரத கண்டே </div>
<div style="text-align: justify;">
ஒன்பது கண்டங்களில் முதல் கண்டமாகிய.பரத கண்டத்தில்,</div>
<div style="color: red; text-align: justify;">
மேரோர்: தக்ஷ’ணே பார்ச்வே </div>
<div style="text-align: justify;">
மேரு எனும் இமயமலையின் தெற்கு புறத்தில்.</div>
<div style="color: red; text-align: justify;">
சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே</div>
<div style="text-align: justify;">
மேற்கண்ட பிரம்ம காலம் தொடங்கி, பரத கண்டத்தின் தெற்கு புறத்தில், பூஜை செய்யும் கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில், தற்காலமாகிய </div>
<div style="color: red; text-align: justify;">
நந்தன.. நாம ஸம்வத்ஸரே </div>
<div style="text-align: justify;">
26 வது வருடமாகிய ..நந்தன.. எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில்,</div>
<div style="text-align: justify;">
(உத்தர/தக்ஷ¢ண) <span style="color: red;">உத்தராயனே </span></div>
<div style="text-align: justify;">
உத்த்ராயண காலத்தில்</div>
<div style="text-align: justify;">
(வஸந்த/ க்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) <span style="color: red;">வஸந்த ருதௌ</span> </div>
<div style="text-align: justify;">
வஸந்த ருது எனப்படும் வஸந்தகால பருவத்தில்</div>
<div style="color: red; text-align: justify;">
சித்திரை மாஸே</div>
<div style="text-align: justify;">
சித்திரை மாதத்தில்</div>
<div style="text-align: justify;">
(சுக்ல/ கிருஷ்ண) <span style="color: red;">கிருஷ்ணபட்க்ஷ திரயோதசி</span></div>
<div style="text-align: justify;">
தேய்பிறையில் திரயோதசி திதியில்</div>
<div style="color: red; text-align: justify;">
சுபதிதௌ வாஸர: </div>
<div style="text-align: justify;">
(பானு/ இந்து/பௌம/ ஸெளம்ய / குரு/ ப்ருகு/ ஸ்திர) <span style="color: red;">குரு வாஸர யுக்தாயாம்</span></div>
<div style="text-align: justify;">
சுபயோக சுபதினமான வியாழக்கிழமையில் (19-04-2012)</div>
<div style="text-align: justify;">
.<span style="color: red;">உத்திரட்டாதி...... நக்ஷத்ர ஸம்யுக்தாயாம்</span> </div>
<div style="text-align: justify;">
உத்திரட்டாதி நட்சத்திரத்தில்</div>
<div style="color: red; text-align: justify;">
சுப நக்ஷத்ர சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்" </div>
<div style="text-align: justify;">
இந்தப் பதிவு இடப்பட்டது. என்று முடித்து, யார் இந்த கணபதி ஹோமத்தைச் செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு, அந்த ஹோமத்தினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும். </div>
<div style="text-align: justify;">
மேலும் விளக்கமறிய</div>
<div style="text-align: justify;">
<a href="http://natarajadeekshidhar.blogspot.in/2010/04/3.html">http://natarajadeekshidhar.blogspot.in/2010/04/3.html </a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறு பரம்பரை பரம்பரையாக சில குடும்பத்தினர் அப்டேட் செய்து பஞ்சாங்கம் வெளியிடுகிறார்கள். மேலும் நீங்களே பஞ்சாங்கம் தயாரித்துக் கொள்வதற்கான அட்டவணைகளும் தற்பொழுது வந்துவிட்டன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திண்டுக்கல்லைச் சேர்ந்த இரா.அருள்வேல் என்பவர் கூட மூன்று புத்தகங்கள் வெளியிட்டு உள்ளார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=315713">http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=315713</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலத்தை இவ்வளவு தெளிவாக கணிதம் செய்து இருப்பவன், இவர்கள் கூறும் அயனாம்சத்தையும் தெளிவாக கண்டு அதற்கான கணக்கீடுகளையும் அப்டேட் செய்துள்ள விதமறிய பஞ்சாங்கம் வாங்கிப் படித்துப்பாருங்கள் . இவர்களது கணிதம் துல்லியமானது என்பதை அறிய கிரஹணங்கள் பற்றிய குறிப்புகள் ஒன்றே போதும், நிகழும் நேரம் மற்றும் எடுத்துக் கொள்ளும் காலம் (Duration) ஆகியவற்றை வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு (பல) வருடத்திற்கு முன்பே கணித்துக் கூறும் திறமை ஒன்றே போதும் பஞ்சாங்கத்தின் நம்பகத்தன்மை பற்றி தெரிந்து கொள்ள. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலண்டரைப் பற்றி அறியாத மூடன்தான் தனது இஷ்டத்திற்கு தகுந்தாற் போல் வருடப் பிறப்பை மாற்றுவான். இப்பொழுது "தை " மாதம் என்பார்கள். பின்பு சங்ககாலத்தில் "தயா "என்று இருந்ததை ஒரு குள்ள நரிக் கூட்டம் "தை" என்று மாற்றி விட்டது என்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<a href="http://valavu.blogspot.in/2007/01/blog-post.html">http://valavu.blogspot.in/2007/01/blog-post.html</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிளாக்கில் பூமியின் அச்சுக்கு ஏற்படும் பம்பர சுழற்சியைப் பற்றியும் அது 25783 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்றும் அதனால் காலம் சிறிது சிறிதாக முன் செல்கிறது எனவும் கூறப் படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJKMMUj9ddtn0d6VfHYVT6HCTxOZaovVWgAtpfc38MCwbGq7MjgPVSDD-lV3FyZnb59_KKLtjeKCOmR1C2L5E6eajmEooAGNFOadn-GLjPnzERg5u8DSTiYHpPV6YIQfD6f3Zq3Fa8eW-F/s1600/220px-Earth_precession.svg.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="251" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJKMMUj9ddtn0d6VfHYVT6HCTxOZaovVWgAtpfc38MCwbGq7MjgPVSDD-lV3FyZnb59_KKLtjeKCOmR1C2L5E6eajmEooAGNFOadn-GLjPnzERg5u8DSTiYHpPV6YIQfD6f3Zq3Fa8eW-F/s400/220px-Earth_precession.svg.png" width="220" /></a></div>
<div style="text-align: justify;">
அதனால்தான் 2200 வருடங்களுக்கு முன்பு தையாக இருந்தது இன்று சித்திரையாகிவிட்டது என கூறப்படுகிறது. அப்படியானால் இன்னும் கொஞ்சம் முன்னால் போய் 25783 வருடங்களுக்கு முன் இதே மாதம் சித்திரையாகத் தானே இருந்திருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே குஜ்ஜாலின் objection if any,overruled.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" separator"="" style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-suCS2d6JZ1-NF2iffWgnkFhWWakwGDdOGNdfhma1jWH3p9xL7hFCLnOPpMCZjco5pcHK3iNkTNVgzA5I_CLLOp0r8XBL_ofOLF7zdL1iQIHRqTDcQtbyTffEqPUixWD5Y2ZYYr7T4Dcf/s1600/AxialTiltObliquity.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="311" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-suCS2d6JZ1-NF2iffWgnkFhWWakwGDdOGNdfhma1jWH3p9xL7hFCLnOPpMCZjco5pcHK3iNkTNVgzA5I_CLLOp0r8XBL_ofOLF7zdL1iQIHRqTDcQtbyTffEqPUixWD5Y2ZYYr7T4Dcf/s400/AxialTiltObliquity.png" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJKMMUj9ddtn0d6VfHYVT6HCTxOZaovVWgAtpfc38MCwbGq7MjgPVSDD-lV3FyZnb59_KKLtjeKCOmR1C2L5E6eajmEooAGNFOadn-GLjPnzERg5u8DSTiYHpPV6YIQfD6f3Zq3Fa8eW-F/s1600/220px-Earth_precession.svg.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> </a></div>
<div style="text-align: justify;">
எது எக்கேடு கெட்டாலும் பூமத்திய ரேகை இடம் மாறுவதற்கான வாய்ப்பு கிடையாது. ஆகவே காலக் கணிதத்தில் தவறு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<a href="http://en.wikipedia.org/wiki/Axial_precession%20%20">http://en.wikipedia.org/wiki/Axial_precession </a>சொல்லுகிறது</div>
<div style="text-align: justify;">
A 12th century text by Bhāskara II[9] says: "sampāt revolves negatively 30000 times in a Kalpa of 4320 million years according to Suryasiddhanta, while Munjāla and others say ayana moves forward 199669 in a Kalpa, and one should combine the two, before ascertaining declension, ascensional difference, etc."[10] Lancelot Wilkinson translated the last of these three verses in a too concise manner to convey the full meaning, and skipped the portion combine the two which the modern Hindi commentary has brought to the fore. According to the Hindi commentary, the final value of period of precession should be obtained by combining +199669 revolutions of ayana with −30000 revolutions of sampaat to get +169669 per Kalpa, i.e. one revolution in 25461 years, which is near the modern value of 25771 years.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துருவ நட்சத்திரம் என்று ஒன்று இருப்பதால் அதை வைத்து இந்த பம்பர சுழற்சியையும் ஜோதிடர்கள் 5000 வருடங்களுக்கு முன்பே தங்கள் கணக்கீட்டில் வைத்துள்ளனர். அயாணாம்சம் என வைத்து அதற்கான திருத்தத்தையும் வைத்துள்ளனர். தங்கள் கணிதத்தில் இவர்கள் கூறும் பம்பர சுழற்சியினால் சுமார் 12,000 வருடங்களுக்கு ஒரு முறை தென் துருவத்தில் நிகழும் வெட்பதட்ப நிலை வட துருவத்திலும், வடதுருவத்தில் நிகழும் வெட்ப தட்ப நிலை தென்துருவத்திலும் மாறி மாறி நிகழும். சிலர் இதைத் தவறாக புரிந்து கொண்டு தென் துருவம் வடதுருவமாக மாறிவிடும் என்பார்கள். அப்படியெல்லாம் பூமி தலைகீழாக மாறுவதில்லை. ஆகவே பஞ்சாங்கம் தவறென்பதற்கும் வழி இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே வினோத்குமாரின் objection overruled. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரா.சந்திரசேகர்,</div>
<div style="text-align: justify;">
பழனி.<br />
<div class="post-title entry-title">
<a href="http://chandroosblog.blogspot.in/2012/04/blog-post.html">இப் போ "தை" க்கு இருக்கட்டும் சித்திரை.1</a></div>
</div>
<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
</div>
</span></div>Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-90384267637113271452012-04-15T00:37:00.004+05:302015-01-14T00:12:13.644+05:30இப் போ "தை" க்கு இருக்கட்டும் சித்திரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
<br />
உலகில் மக்கள் புத்தாண்டை, ஜனவரியை ஒட்டித்தான் கொண்டாடுகிறார்கள். தமிழன் சித்திரையில் கொண்டாடுகிறான். ஜனவரியை ஒட்டி நிகழும் வானியல் நிகழ்வு என்று பார்க்கும் போது அதுவும் சூரியன் சம்பந்தப்பட்ட தாகத்தான் இருக்கிறது.<br />
<br />
அயணம் என்பதுதான் தமிழில் பயணம் என்று மாறிவிட்டது. இராம அயணம்=இராமாயணம் -இராமனின் பயணம்.
<span class="fullpost">
<br />
<br />
சூரியனின் உத்ராயணம்- வடக்கு நோக்கிய பயணம், தெட்சினாயணம் தெற்கு நோக்கிய பயணம்.
<br />
</span><br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1q5EH1BZtaWFo2NLnVWsBmJ8JTEPv8pwumgm0avT7LvqkJoFi7bDAFLnMz9OVvyXOkKjmO8XP8D2Mx3ZVjqIE4bMgrSwLaT8PHLAZ05wkn0BLlWKKlv1-6Hja_Ha3Sj6ZR4JFGQFeAVEV/s1600/+Rasi+Star.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1q5EH1BZtaWFo2NLnVWsBmJ8JTEPv8pwumgm0avT7LvqkJoFi7bDAFLnMz9OVvyXOkKjmO8XP8D2Mx3ZVjqIE4bMgrSwLaT8PHLAZ05wkn0BLlWKKlv1-6Hja_Ha3Sj6ZR4JFGQFeAVEV/s400/+Rasi+Star.jpg" height="400" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">உத்ராயணம், தெட்சினாயணம், சித்திரைமாதம். மேஷராசி, 0 டிகிரி</td></tr>
</tbody></table>
<span class="fullpost">
<br />
சூரியன் தெட்சிணாயண பயணத்தை முடித்துவிட்டு தை மாதத்தில் உத்ராயணத்தை தொடங்கும் விழாவைத்தான் மகர சங்கராந்தி என்று கூறுகிறார்கள். அதாவது சூரியன் மகரராசியில் நுழைவதைத்தான் சங்கராந்தி எனக் கூறப்படுகிறது. தெட்சிணாயணத்தை முடிக்க ஆறு மாதங்களாகும். உத்ர, தெட்சிண என்றால் முறையே வடக்கு, தெற்கு என நமக்கு தெரியும்.சூரியன் கடகராசிக்கும் மகர ராசிக்கும் இடையே ஊசலாடினாலும் அதன் நிலையான இடம் பூமத்திய ரேகைதானே?. அதனால்தால் பூமத்திய ரேகையில் மேஷராசியில் நுழைவதைத்தான் வருடப் பிறப்பாக கருதலாமே?.<br />
<br />
இங்கு சூரியனது பயணத்தை மேற்கூறியவாறு கூறினால் இதுவும் பார்ப்பண அசிங்கக் கதை என்று தமிழக பகுத்தறிவுவாதிகள் உளற ஆரம்பித்து விடுவார்கள்.<br />
<br />
பூமி தன்னைத்தானே சுழலும் சுழற்சியின் அச்சும், பூமி சூரியனை சுற்றும் பாதையின் தளமும் ஒன்றுக்கொன்று செங்கோணமாக இல்லாமல் சுற்றும் பாதையின் தளத்திற்கு 23.44 பாகை சாய்வாக உள்ளதால் பருவகாலம் ஏற்படுகிறது.<br />
<br />
பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே 23.44 பாகையில் அமைந்த ரேகையை கடகரேகை என்றும் பூமத்திய ரேகையிலிருந்து தெற்கே 23.44 பாகையில் அமைந்த ரேகையை மகரரேகை என்றும் கூறுவார்கள்.<br />
<br />
ஜாதகக் கட்டங்களில் கடக, மகர ராசி எனக் குறிப்பிடப்படுவதும் அதையொட்டித்தான். ஒரு வருட சுழற்சியின் போது பூமி, கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடையே உள்ள பகுதிகளை சூரியனுக்கு நேர்குத்தாக அமைத்து கொள்வதைத்தான் சூரியனது பயணம் என்கிறோம்.
<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEshLJyCKXZeQLuZNAYx8ioSdRDVyYnXSQ3vbz5Ooa8y3Ve8jBR9u9NSbUqx4sSTb57WsmGc0itzXBwS4031m6Q4L_YbpJbgas5jUXBGFba9IqmXDKoh0nPFQbENB3LcADiKDOwKTHYDQb/s1600/Uthrayanam+copy.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEshLJyCKXZeQLuZNAYx8ioSdRDVyYnXSQ3vbz5Ooa8y3Ve8jBR9u9NSbUqx4sSTb57WsmGc0itzXBwS4031m6Q4L_YbpJbgas5jUXBGFba9IqmXDKoh0nPFQbENB3LcADiKDOwKTHYDQb/s400/Uthrayanam+copy.jpg" height="154" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">படத்தை கிளிக் செய்து பார்க்கவும்.</td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td></tr>
</tbody></table>
</span><br />
<div class="separator" style="clear: both;">
<span class="fullpost"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1q5EH1BZtaWFo2NLnVWsBmJ8JTEPv8pwumgm0avT7LvqkJoFi7bDAFLnMz9OVvyXOkKjmO8XP8D2Mx3ZVjqIE4bMgrSwLaT8PHLAZ05wkn0BLlWKKlv1-6Hja_Ha3Sj6ZR4JFGQFeAVEV/s1600/+Rasi+Star.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br />
</a></span></div>
<span class="fullpost">
படத்தில் Tropic of Cancer என்பது கடகரேகை, என்பது Tropic of Capricorn மகரரேகை. Equator என்பது பூமத்திய ரேகை.<br />
<br />
ஒரு வருடத்தில் இந்த பயணத்தில் சூரியன் பூமத்திய ரேகையை இருமுறை (Equinox மார்ச் 20, செப்டம்பர் 22) ஆகிய சம பகலிரவு நாட்களில் கடக்கிறது.<br />
<br />
மகர, கடக ரேகையை ஒருமுறையும் (Soltice டிசம்பர் 21, ஜூன் 21) கடக்கிறது. <br />
<br />
ஆங்கிலேயர்கள் மகர Soltice ஒட்டி தங்களது புத்தாண்டை வைத்துக் கொண்டனர்.<br />
தமிழர்கள் நட்சத்திரத்தை வைத்து கணக்கிடப்படும் (Sidereal vernal equinox April 14). ஐ ஒட்டி , அதாவது பூமத்திய ரேகையிலிருந்து, அதாவது 0 டிகிரியிலிருந்து சூரியன் பயணத்தை ஆரம்பிக்கும் போது தங்களது புத்தாண்டை வைத்துக் கொண்டனர். ஆகவே சித்திரை மாதத்தில் (Sidereal vernal equinox April 14). புத்தாண்டை வைத்துக் கொள்வதில் ஒரு நியாயம் உள்ளது. (starting from 0 position).<br />
<br />
நட்சத்திரத்தை வைத்து கணக்கிடுதல் என்பது ஒரு ஹைடெக் சமாச்சாரம் அதாவது சூரிய மண்டலத்தை வெளியிலிருந்து பார்வையிட்டு கணக்கிடு வதற்கு ஒப்பானது.<br />
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Sidereal_astrology">http://en.wikipedia.org/wiki/Sidereal_astrology</a><br />
<br />
நமது பகுத்தறிவுவாதிகளுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்ல ஆளும் இல்லை சொன்னாலும் புரியாது. கடகம் , மகரம் என்றால் அலர்ஜி. அதிலும் சங்கராந்தி என்றால் பேயே பிடித்துவிடும். <br />
<br />
அதிலும் ஆயிரமாயிரம் வருடங்கள் பின்பற்றும் ஒரு வழிமுறையை நமக்கு நன்மைகள் ஏற்படும் போது மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இப்படி மாற்றிவைப்பதால் குழப்பம்தான் மிஞ்சும் பைசா பிரயோசனமில்லாத வேலை. இமாலயத் தவறென்றால் கூட திருத்திக் கொள்ளலாம். இதில் தவறென்று ஏதுமில்லை.<br />
<br />
தவற்றை யெல்லாம் திருத்தலாம் என்றால் முதலில் 1,70,000 கோடியை அரசாங்க கஜானாவில் கட்டி விட்டு தவறுக்கு மண்ணிப்பு கேட்க வைப்போம். இப்பொழுது அதுதானே மிகவும் முக்கியம்.அப்புறம் தைக்கு மாற்றிவிடலாம்.என்ன தமிழர்களே தவறுகளை களை எடுக்கலாமா? அதுவரை (இப் போதைக்கு) (இப்போதைக்கு) இப்போ "தை"க்கு இருக்கட்டுமே சித்திரை. இன்னும் காலண்டர் பற்றிய தெளிவுக்கு <a href="http://chandroosblog.blogspot.ae/2012/04/2.html" target="_blank">இங்கே கிளிக் செய்யவும்</a></span></div>
<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
</div>
<div dir="ltr" style="text-align: justify;" trbidi="on">
<span class="fullpost">இரா.சந்திரசேகர்,<br />
பழனி.</span></div>
</div>
</div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-30240139954843982692012-04-07T17:00:00.001+05:302013-09-15T22:51:47.240+05:30சதுரங்கம் : வரலாறும், மூலமும் ( பாகம் 6)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://chandroosblog.blogspot.in/2012/03/5.html"> Previous</a><br />
பாகம் 6<br />
சென்ற பதிவில்<br />
<div style="color: magenta;">
வினோத் குமார் என்பவரின் கேள்வி: </div>
ஜோதிடத்தில் உள்ள உச்சம், நீசம், வக்கிரம் போன்றவை சதுரங்கத்தில் இருக்கிறதா ?<br />
<br />
பதில்:<br />
விளையாட்டு, ஆட்சி நிலையில் ஆரம்பிக்கப் படுகிறது. உச்சத்தில் (அதிகபட்ச இட மதிப்பு) வெற்றியும், நீசத்தில் (மிகக் குறைந்த பட்ச இடமதிப்பு) தோல்வியும், வக்கிரத்தில் தற்காப்பு ஆட்டமும் எனக் கொள்ள வேண்டும். பொதுவாக சதுரங்க ஆட்டத்தின் பிரச்னைகள் பாதி மூவைக் கொண்டு ஆராயப் படும் விதம் அறிவோம். அது போன்றுதான் ஜாதகப் பொருத்தமும். சதுரங்கத்தில் ஆரம்பம், இடை, முடிவு என்று ஆட்டங்கள் பலவிதமாக அலசப்படுகிறது. (Opening Game, Middle Game, End Game,)<br />
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/User:Sentriclecub/Gothic_Chess_openings_middlegame_and_endgame">http://en.wikipedia.org/wiki/User:Sentriclecub/Gothic_Chess_openings_middlegame_and_endgame</a><br />
<span class="fullpost"><br />
பொதுவாக ஜாதகம் என்பது பாதி விளையாடிய விளையாட்டின் நிலைமை எனக் கொள்ள வேண்டும். இந்த கேம்மில் யார் ஜெயிப்பார்கள் என்று அலசுவதே ஜாதகப் பொருத்தம் பார்ப்பதுதான். பொதுவாக நீங்கள் பார்த்திருக்கலாம், செஸ் பற்றிய புத்தகங்கள் எல்லாம் செஸ்ஸை எப்படி விளையாடுவது என்பதைப் பற்றி இருக்காது. ஏனென்றால் அதன் விதிகள் மிகவும் எளிமையானவை அதை இரண்டு பக்கங்களில் முடித்துவிடலாம்.<br />
<br />
ஆனால் செஸ் புத்தகங்கள் முற்றிலும், 99 சதவீதம், பாதி விளையாடிய, பலவிதமான விளையாட்டின், திருப்பு முனைகளால் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் தீர்வுகள் <b>(Chess problems and solutions)</b> பற்றியவையாகத்தான் இருக்கும்.<br />
<br />
<span style="color: magenta;">கேள்வி:</span><br />
உங்கள் கருத்தின் தேவைக்கு தகுந்த மாதிரி அறிவியலை மாற்றிக் கொள்வீர்களா? ஒரு நேரம் சூரிய மைய சித்தாந்தம் தான் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது என்கிறீர்கள் மற்றொரு நேரத்தில் பூமி மையச் சித்தாந்தத்தை கலந்து சொல்கிறீர்கள் எதை எடுத்துக் கொள்வது.?<br />
<br />
பதில்:<br />
இதில் என்னுடைய திணிப்பு, மறைப்பு என்று எதுவுமில்லை. உங்களுக்கு ஜாதகம் தெரியும் என்றால் இந்த விஷயம் எவ்வளவு உண்மை என்பது சொல்லப்பட்ட விஷயத்தில் தெளிவாகி இருக்க வேண்டும். ஜோதிட அறிவியலைத்தான் உள்ளது உள்ளபடி எடுத்தாண்டுள்ளேன். மேலும் அவற்றிலுள்ள அறிவியலை எடுத்து விளக்கியுள்ளேன். <br />
<br />
நாம் ஒன்றும் இந்த சூரிய மண்டலத்தின் மேலே இருந்து பார்வையிடும் பார்வையாளர்கள் அல்லவே? நாம் இந்த சூரிய மண்டலத்தின் உள்ளே, அதுவும் பூமியின் மேற்பரப்பில் தானே இருக்கிறோம். அதிலும் ஜோதிடம் என்பது அக்காலத்தின் தேவையை ஒட்டி, மனிதனை மையப் படுத்தி உருவாக்கப் பட்ட அறிவியல், ஆகவே நாம் கணக்கிட வேண்டியது மனிதனை மையமாக கொண்ட, பூமி மையச் சித்தாந்தம் தான். மனிதனுக்கு, மனிதன் சொல்லி எளிதில் விளங்கிக் கொள்வதற்காகத் தான் பூமி மையச் சித்தாந்தம். <br />
<br />
"சூரியமண்டல பார்வையாளர்" களுக்கு கிழக்கு, மேற்கு என்று நாம் திசை சொல்லிக் கொள்வது படு கேலிக் கூத்தாகத் தெரியும். ஆனால் நமது அன்றாட வாழ்வில் கிழக்கு, மேற்கில் எந்த சிக்கலும் இல்லையே அது போன்றுதான் பூமி மையச் சித்தாந்தத்தினால் எந்தச் சிக்கலும் இல்லயே. எல்லாமே ஏதோ கற்பனையில் தோன்றியதை எழுதி வைத்தவை அல்ல. ஒவ்வொன்றும் பலநூறு வருடங்கள் தினசரி கவணிக்கப் பட்டு ஆவணப்படுத்தப் பட்டவைதானே. தவறு இல்லாத வரை எந்தச் சித்தாந்தமாக இருந்தால் என்ன? அது மட்டுமில்லாமல் நமது முன்னோர்கள் இரண்டு விதமான சித்தாந்தங்களையும் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளது. அதை தேவைப்பட்டால் இன்னொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம். <br />
<br />
<span style="color: magenta;">கேள்வி: </span>அது சரி, புதன் அஸ்தங்கத்தில் சிக்கிவிடும் என்றால் என்ன?. <br />
<br />
அஸ்தி என்றால் சாம்பல். அஸ்தமனம் என்றால் எரிந்து மறைவது. ஆகவே அஸ்தங்கம் என்றால் எரிதல் எனப் பொருள் கொள்ளலாம். எந்த கிரகமாவது சூரியனின் திசையில் சூரியனுக்கு முன்பாகவோ பின்புறமாகவோ குறிப்பிட்ட டிகிரிவரை நின்றால் அவர்கள் அல்லது அவர்களது சக்தி சூரியனால் எரிக்கப்பட்டு விடும். அதாவது சூரியனின் சக்திக்கு முன் அவர்கள் சக்தி எடுபடாது. <u><b style="color: lime;">இதைத்தான் சூரியனின் நட்சத்திர அந்தஸ்து என்பேன்</b><span style="color: lime;">.</span></u> இதில் முக்கியமான விஷயமே இந்த எரிக்கும் குணாதிசயம்தான். இது வேறு எந்த கிரகத்துக்கும் கிடையாது. "கிரகம்" என்பது ஜோதிடத்தைப் பொறுத்தவரை "வானியல் சார்ந்த பொருள்" என்பதுதான் சரியான விளக்கம். <u style="color: yellow;"><b>இது புரியாத அரை வேக்காட்டுப் பகுத்தறிவு வாதிகள் சூரியனை கிரகமாக வைத்திருக்கிறார்களே என்று முட்டாள்தனமாக, கழுதையாய் கத்துகிறார்கள். இவர்களுக்கு யார் எடுத்துக் சொல்லி புரிய வைப்பது எனத் தெரியவில்லை</b></u><span style="color: yellow;">.</span><br />
<br />
அது மட்டுமல்ல ஜோதிடத்தை கண்டுபிடித்தவன், ஒவ்வொரு கிரகத்தின் அளவுக்குத் தகுந்தவாறு குறிப்பிட்ட டிகிரி வரை தான் சூரியனின் சக்தி மறைக்கும் என்பதையும் அளந்து சொல்லியுள்ளான். எத்தனை டிகிரி என்பது கிரகத்தின் அளவு, மற்றும் தூரம் ஆகியவற்றைப் பொறுத்து கணக்கிட்டு கூறியுள்ள பாங்கை நோக்கும் போது இது தெய்வீக வாய் மொழியோ எனக் கூட எண்ணத் தோன்றுகிறது. <br />
<br />
செவ்வாய் 17 டிகிரி,<br />
புதன் 13 டிகிரி,<br />
குரு 11 டிகிரி,<br />
சுக்கிரன் 8 டிகிரி,<br />
சனி 15 டிகிரி,<br />
சந்திரன் 12 டிகிரி,<br />
<br />
புதனுக்கு அஸ்தங்கம் மட்டுமல்ல அடிக்கடி வக்கிரத்திலும் சஞ்சரிப்பதால் அதை விளையாட்டில் எடுத்துக் கொள்ளவில்லை போலும்.<br />
<br />
<span style="color: magenta;">கேள்வி:</span><br />
யுத்தகளத்திற்கு ராஜா சரி, ஆனால் இங்கு எப்படி ராணி வந்தார்.? சூரிய, சந்திரர்கள் ஆண்கள்தானே?. <br />
<br />
பதில்:<br />
ஆதியில் இந்தியரின் செஸ் விளையாட்டுப்படி அது ராணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை ஒரு சிறிய ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் எந்த அரசனாவது யுத்தகளத்திற்கு ராணியை அழைத்துச் செல்வானா? அல்லது ராணி யுத்தத்தில் பங்கு பெறுவார்களா? அரசன் போர்க்களத்தில் தோற்று விட்டான் என்று தெரிந்தாலே அரன்மனையில் தீக்குளிக்கும் வழக்கமுடையோர், இந்நாட்டவர், அவர்களை போர்க்களத்தில் போராடுவது போல் சித்தரிப்பது விளையாட்டை தத்து எடுத்தவன், இட்டுக் கட்டிய கதை என்பது தெளிவாகப் புரியவில்லையா?. "யுத்தக்களத்தில் பெண்கள்" என்பது பண்டைய மரபுக்கு ஒத்து வராத ஒன்று. (தவிர்க்க முடியாத விதி விலக்குகளை உதாரணம் காட்டி மொக்கையா விவாதத்திற்கு இழுக்காதீர்கள்). அதிலும் ராஜாவை விட ராணிக்கு அதிகாரம் அதிகம் தரப்படுவது இந்திய மரபுக்கு முரணானது. ஆகவே அது ராணி அல்ல உண்மையில் அது தளபதி அல்லது மந்திரியாகத்தான் இருக்கமுடியும். அவருக்குத்தான் யுத்தகளத்தில் ராஜாவை விட அதிக அதிகாரம் உள்ளது. ராஜா ஒருவர்தான் இருக்கமுடியும் அது போல் மந்திரியும் ஒருவர்தான் இருக்கமுடியும்.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="fullpost"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW_IT24hWx_LRXXtw3klHJYZQAmhk5Wwunx4jjvntdQ1OPFWRaHHauXFUAVpkKb2D6PLhw5NATVNTjsGzqDK43ul01TNyI3s1EzD0PV9xWuSSohY4DquT8i8lOzsrnH8bbc-u0slt2H6Wd/s1600/card+system.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="165" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW_IT24hWx_LRXXtw3klHJYZQAmhk5Wwunx4jjvntdQ1OPFWRaHHauXFUAVpkKb2D6PLhw5NATVNTjsGzqDK43ul01TNyI3s1EzD0PV9xWuSSohY4DquT8i8lOzsrnH8bbc-u0slt2H6Wd/s400/card+system.jpg" width="400" /></a></span></div>
<span class="fullpost"><br />
வெளி நாட்டினர் தங்களது சீட்டுக் கட்டில் ராணியை வைத்து இருப்பதால் செஸ் ஆட்டத்திலும் மந்திரிக்கு பதிலாக ராணி என மாற்றி விட்டனர் போலும். நல்லவேளை ஜோக்கர் என்று யாருக்கும் பெயர் மாற்றவில்லை. மதகுரு என்பவருக்கு எல்லா மனித இனங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப் படுவதால் இங்கும் அவர் பிஷப் என பெயர் மாற்றம் பெற்றார். அது மட்டுமில்லாமல் ராஜாவின் தலையில் சிலுவையும் வைத்து விட்டனர். உண்மையில் ராஜாவின் தலையில் சூரியனும் மந்திரியின் தலையில் பிறைநிலவும் இருக்க வேண்டும்.<br />
<br />
ஆராய்ந்து பார்த்தால் சீட்டுக் கட்டும் ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம். ஒரு வருடத்தின் நாட்களாகிய 364 ஐ சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்களால் வகுத்தால் (13 மாதம் ) வருகிறது. 13 என்பது சீட்டுக்களின் எண்ணிக்கை. ஒருவருடத்தின் மொத்த வாரங்களை கணக்கிட்டால் 52, இது மொத்த சீட்டுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். மற்றபடி ராஜா-சூரியன்,ராணி-சந்திரன், ஜாக்-சுக்கிரன்,ஜோக்கர்-சனி. இதனுடைய தோற்ற காலத்தின் வரலாற்றை நோக்குங்கால் இதுவும் சதுரங்கத்தை ஒட்டி வருகிறது. <br />
தொடரும்........................................</span><br />
<span class="fullpost">இரா.சந்திரசேகர்,</span><br />
<span class="fullpost">பழனி. </span><br />
<span class="fullpost"><a href="http://chandroosblog.blogspot.in/2012/04/7.html" target="_blank">அடுத்த பாகம் 7 </a></span><br />
<a href="http://www.blogger.com/blogger.g?blogID=3655102417034676467" target="_blank"></a><span class="fullpost"><br /></span></div>
Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-17373898150716466872012-03-26T23:44:00.001+05:302012-03-27T10:50:01.047+05:30கமலஹாசனும் அந்தாதியும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல், முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி, ஆகிய இரு சமஸ்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. அந்தாதியிலும் அந்தாதி இருப்பதைப் பார்க்கலாம். அதாவது அந்தம் ஆரம்பத்திலும் ஆதி முடிவிலும் இருக்கிறது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி, அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு, பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கும், தொடர்பு மாறாமல் பாடுவதற்கும் வசதியாக உள்ளது. ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக (ஆதி) அமையும் இலக்கண முறை அந்தாதி ஆகும்</div><div style="text-align: justify;"><br />
</div><span class="fullpost"> <br />
<br />
</span><br />
<div style="text-align: justify;"><span class="fullpost">சில வகை அந்தாதிகள்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஒலியந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">பதிற்றந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">நூற்றந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">கலியந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">கலித்துறை அந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">வெண்பா அந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">யமக அந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">சிலேடை அந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">திரிபு அந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">நீரோட்ட யமக அந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">துன்னிய மாந்தர் அஃதென்ப</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே[2]</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி </span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">பக்திப் பாடல்களில் அபிராமி அந்தாதி பிரபலமானது. அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. </span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. அங்கு கோவிலில் (சுப்ரமணி அய்யர்) அபிராமியின் பட்டராக இருந்தார். அக்காலத்தில் பஞ்சாங்கம் தெரிந்தவர்தான் பட்டராக இருக்க முடியும். இவருக்கு அபிராமியின் மீது தீராத பக்தி, அப்பக்தியினால் சிலசமயம் பித்தனாகக் காட்சி அளிப்பார். அதைப் பயன்படுத்தி அவரை ஒழித்துக் கட்ட நினைத்தனர் அவரது சக பட்டர்கள். அப்பகுதியை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி ஒரு நாள் அக்கோவிலுக்கு சிவனை தரிசிக்க வந்தார். மன்னரிடம், இவர் ஒரு திமிர் பிடித்தவர் வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள் என்றனர் சக பட்டர்கள். மன்னரும் அன்று அமாவாசை என்பதை அறிந்திருந்தும், அன்னையை மெய்யுருகி வணங்கிக் கொண்டிருக்கும் பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அவர் அன்னையின் முகத்தைப் பார்த்து கொண்டே பௌணர்மி என்று கூறினார். மன்னர் மீண்டும் கேட்டார். மீண்டும் அதே பதில். இதைக் கேட்ட மன்னர் கோபமுற்று இன்று இரவு முழு நிலவு வரவில்லை என்றால் இவரை அக்னிக் குண்டத்தில் இறக்கி விடுங்கள் என்றார். மாலை அக்னிகுண்டம் ரெடியானது அவரைச் சங்கிலியால் கட்டி இறக்கத் தயாரானார்கள் . அப்பொழுதும் அன்னையை நினைத்து அந்தாதி வகையில் பாட ஆரம்பித்தார். அவர் 79 வது பாடல் பாடும் பொழுது அன்னை அபிராமி, தனது வைரக் காதணியை கழற்றி எறிய அது வானில் முழு நிலவு போல் ஜொலித்ததாம். அதன் பின் அபிராமி, பட்டருக்குக் காட்சியளித்து 100 பாடல்களையும் பாடச் சொன்னாராம். அதுதான் பின்னாளில் அபிராமி அந்தாதி எனப் புகழ் பெற்றது. மாதிரிக்கு இங்கு 23,24,25 பாடல்களை கொடுத்துள்ளேன் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டந்தன்னை</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">உள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">கள்ளே களிக்கும் களியே அளிய என் கண் <span style="color: yellow;">மணியே</span>. 23</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="background-color: white; color: yellow;"></span> <span style="color: yellow;">மணியே</span>மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">அணியே அணியும் அணிக்கழகே அனுகாதவர்க்குப்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த <span style="color: yellow;">பின்னே</span>. 24</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="color: yellow;">பின்னே</span> திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">சரி திரைப்படத் துறையில் பயன் படுத்திய விதம் பார்ப்போம் </span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">பாலச்சந்தர் இயக்கிய மூண்று முடிச்சு என்ற படத்தில், கமலஹாசன், ஸ்ரீ தேவி,ரஜினிகாந்த் ஆகியோருக்காக ஒரு பாடல் காட்சி அமைத்திருப்பார். அதில் காட்சி அமைப்பும்,அதனுடன் பாடல் அமைந்த விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. பாடல் என்னவோ சோகத்தில் முடிந்தாலும், தமிழின் யாப்பிலக்கண விதிகளில் ஒன்றான அந்தாதி வகையில் அந்த பாடல் அமைந்துள்ளதுதான் அந்தப் பாடலின் விசேஷம். மேலும் அதை ஒரு போட்டிப் பாடல் வகையில் கண்ணதாசன் அமைத்திருப்பார். சீரந்தாதியின் விதிப்படி கமலஹாசன் ஆரம்பிக்க அவர் முடிக்கும் வார்த்தையில் ஸ்ரீதேவி ஆரம்பிக்க வேண்டும். அதுபோல் ஸ்ரீதேவி முடிக்கும் வார்த்தையின் ஆரம்பத்தில் மீண்டும் பாடல் ஆரம்பிக்க வேண்டும். இதுதான் போட்டியின் விதி பாலச்சந்தரைத் தவிர யாருக்கும் இந்த மாதிரி சிந்தனை வரவே வராது.</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">பாடல் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கும். ஸ்ரீதேவி "மணவினைகள்" என்று முடித்துவிட்டு கமலஹாசனை ஊம், அடுத்துப் பாடுங்கள் என்ற பொழுது ஹீரோவுக்கு பாடல் வராது. சிரித்து மழுப்பி வார்த்தைகளை தேடும் பொழுது, தவறி ஆற்றில் விழுந்து விடுகிறார். </span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><object style="height: 390px; width: 640px;"><param name="movie" value="http://www.youtube.com/v/7Q55nVGOofo?version=3&feature=player_detailpage"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/7Q55nVGOofo?version=3&feature=player_detailpage" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></object></span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">இதை மாத்தி யோசிக்கும் பொழுது வேறுவிதமாகத் தோன்றுகிறது. இதே போன்ற ஒரு காட்சியில் வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தில் ஒருமுறைக்கு இருமுறை ராகத்தைக் கேட்டு பின்னர் சமாளித்து பாட்டைப் பாடி விடுவார். </span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><object height="360" width="640"><param name="movie" value="http://www.youtube.com/v/JiW8qxUrzZ8&hl=en_US&feature=player_embedded&version=3"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/JiW8qxUrzZ8&hl=en_US&feature=player_embedded&version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="360"></embed></object></span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஆனால் இங்கே பாடலை முடிக்க முடியாமல் சமாளித்தும், முடியாததால், "ஆஹா தமிழில் நாம் தவறி விட்டோமோ என்று தற்கொலை செய்து கொண்டாரோ எனக் கூட எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இத்துடன் கிளைமாக்ஸ் முடிந்து விடவில்லை.</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">காதலனைக் காப்பாற்றும் படி வில்லனைக் கேட்டால், அவன் எப்படி காப்பாற்றுவான்?. ஆனால் வில்லன் என்றாலும் சாதாரண வில்லனல்ல (யந்திரனை நினைவு படுத்துகிறார்) ஹீரோவால் முடிக்க முடியாத வரிகளை வில்லன் அதே போட்டிப் பாடல் விதியை பின் பற்றி பாடலை முடிப்பதுதான் கிளைமாக்ஸ்.</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">நீங்கள் பாடலை (MP3 ல்) மட்டும் கேட்டால் வில்லனின் கடைசி வரிகள் இருக்காது என்று நினைக்கிறேன். படத்தோடு பார்த்தால்தான் வில்லனின் புலமையும் தெரியும். பாடலைப் படித்துப் பாருங்கள். இப்பாடல் இசை நயத்திற்காக ஒவ்வொரு வரிகள் இரண்டு தடவை பாடப் படுவதை பார்த்துக் கொள்ளுங்கள்.</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஆண்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் </span></div><div style="text-align: justify;"><span class="fullpost">வசந்த கால நதிகளிலே வைரமணி <span style="color: cyan;"> நீரலைகள் </span></span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="color: cyan;">நீரலைகள்</span> மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் </span></div><div style="text-align: justify;"><span class="fullpost">நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் <span style="color: cyan;">நினைவலைகள் </span></span></div><div style="text-align: justify;"><span class="fullpost">பெண்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="color: cyan;">நினைவலைகள்</span> தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் <span style="color: cyan;">கனவலைகள்</span> </span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="color: cyan;">கனவலைகள்</span> வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள் </span></div><div style="text-align: justify;"><span class="fullpost">நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் </span></div><div style="text-align: justify;"><span class="fullpost">கனவலைகள் வளர்வதற்கு காமனவன் <span style="color: cyan;">மலர்க்கணைகள் </span></span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஆண்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="color: cyan;">மலர்க்கணைகள் </span>பாய்ந்து விட்டால் மடி இரண்டும் <span style="color: cyan;">பஞ்சனைகள் </span></span></div><div style="text-align: justify;"><span class="fullpost">மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள் </span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="color: cyan;">பஞ்சனையில்</span> பள்ளிக் கொண்டால் மனம் இரண்டும் <span style="color: cyan;">தலையணைகள்</span></span></div><div style="text-align: justify;"><span class="fullpost">வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் </span></div><div style="text-align: justify;"><span class="fullpost">நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள் </span></div><div style="text-align: justify;"><span class="fullpost">பெண்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="color: cyan;">தலையணையில்</span> முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள் </span></div><div style="text-align: justify;"><span class="fullpost">தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் <span style="color: cyan;">புதுக் கலைகள் </span></span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="color: cyan;">புதுக்கலைகள்</span> பெறுவதற்கு பூமாலை <span style="color: cyan;">மணவினைகள்</span></span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஊம் ம்ம்ம் ஊம்ம்ம் ...........பூமாலை மணவினைகள்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஆண் .............................</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஆண் (வில்லன்<span style="color: black;">)</span></span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="color: cyan;">மணவினைகள்</span> யாருடனோ மாயவனின் <span style="color: cyan;">விதிவகைகள்</span></span></div><div style="text-align: justify;"><span class="fullpost">மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><span style="color: cyan;">விதிவகையை</span> முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">அதன் பின்னரும் படத்தைப் பார்த்ததால் சில எண்ணங்கள் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கதையின் நாயகி அந்த வில்லனை மன்னித்து மகனாக ஏற்றுக் கொள்கிறாள். சிலர் சொல்வார்கள் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக அவனின் தந்தையை மணந்து கொண்டாள் என்று. எனக்கென்னவோ அவள் இவ்வாறு நினைத்திருக்கலாம். காமத்தினால் நண்பனின் மரணத்தை வேடிக்கை பார்க்கும் வில்லனாக இருந்தாலும் கவிதையை முடிக்கும் புத்திசாலித் தனம் இருப்பதால் மகனாக ஏற்றுக் கொண்டாளோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால் கவிதை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக நல்ல குணங்கள் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் புத்திசாலித் தனத்துக்கு கேரண்டியாவது இருக்கும்.</span></div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">ஆகவே மக்களே உங்கள் உணர்ச்சிகளின் பெருக்கை கவிதையாய் செய்யுங்கள். சிலருக்கு கவிதை தானாக வந்து விடும். ஆனால் கவிதை வரவில்லை என்று தெரிந்த பின்பும் எழுதி மற்றவர் கழுத்தை அறுக்காதீர்கள். கவிதை மோசமானால் உங்களது கெட்ட குணங்களோடு, அறிவீனமும் தெரிந்து விடும்.</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">முடிந்தால் இதையும் படித்து விடுங்கள் .</span></div><div class="p-head"><h2 class="post-title entry-title"><span class="fullpost"><a href="http://chandroosblog.blogspot.in/2010/10/blog-post_25.html">கவிதையின் தேவை என்ன அல்லது கவிதை உருவான வரலாறு என்ன?</a></span></h2><h2 class="post-title entry-title"><span class="fullpost"> </span></h2><span class="fullpost"><small class="p-time"> <b class="day"></b></small>இரா.சந்திரசேகர்,</span></div><div style="text-align: justify;"><span class="fullpost">பழனி.</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div><div style="text-align: justify;"><span class="fullpost"><br />
</span></div></div>Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.com2